Friday, 29 January 2016

தேர்தல் பணியில் இருந்து விதிவிலக்கு தேர்தல் அதிகாரியிடம் 'ஜாக்டா' மனு

சென்னை: 'வயது முதிர்வு மற்றும் நோய்வாய்பட்டவர்களுக்கு, தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'ஜாக்டா' சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் இளமாறன் கூறியதாவது:

வயது முதிர்வு, நோய் வாய்பட்டவர்களுக்கு, தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தேர்தலுக்கு முந்தைய நாள் காலை, 11:00 மணிக்கு ஓட்டுச்சாவடிக்கு சென்று, மறுநாள் இரவு, 11:00 மணிக்கும் மேலாக தொடர் பணியில் ஈடுபடுவதால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான உணவை, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
தேர்தல் தொடர் பணிக்கு ஆசிரியர்களுக்கு பதிலாக, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் நிரந்தர பணியாளர்களை நியமிக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தோம். தலைமை தேர்தல் அதிகாரியும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


முதல்வர் அலுவலகத்தில் மனு

'ஜாக்டா' குழு சார்பில், முதல்வர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பிப்., 14ல், சென்னை, சேப்பாக்கத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ள, 'ஆசிரியர்கள் போராட்டம் ஏன்?' கருத்தாய்வு மாநாடு நடத்த உள்ளோம். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், 'புதிய ஓய்வூதியம் ரத்து, ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும்' என்ற அறிவிப்பை வெவளியிட வேண்டும். ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC : 2016ம் ஆண்டிற்கான தேர்வுகள் (ANNUAL PLANNER)அட்டவணை வெளியீடு






குரூப்.4- ல் 4,931 பணியிடங்கள் உட்பட 5,513 இடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டில் தமிழக அரசின் 33 துறைகளில் காலியாக உள்ள 5,513 பணியிடங்கள் நிரப்பப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார். இதில் குரூப்-4 பிரிவில் 4,931 இடங்களும் அடங்கும்.
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சியின் 2016-ம் ஆண்டிற்கான தேர்வுகள்
அட்டவணையை அதன் தலைவர் கே.அருள்மொழி இன்று சென்னையில் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், 'தமிழக அரசின் 33 துறைகளில் காலியாக உள்ள 5513 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல்முறையாக சுற்றுலா வளர்ச்சித்துறையில் 5 அதிகாரி பணியிடத்தில் 5 காலியிடங்களும், எல்காட் நிறுவனத்தில் 12 துணை மேலாளர் பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. குருப் 3 பிரிவில் நேர்காணல் இல்லாத பணியில் 36 பணியிடமும், குருப் 4 பிரிவில் 4,931 காலியிடங்கள் என 5513 பணியிடங்கள் நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு குரூப் 1 பிரிவில் 29 துணை ஆட்சியர் பணியிடங்களும், 8 வணிகவரித்துறை உதவி ஆணையர், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், 1 மாவட்டப் பதிவாளர் உட்பட 45 பணியிடங்களும், 65 உதவி சிறை அலுவலர் பணியிடமும், வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியில் 172 பணியிடமும் நிரப்பப்பட உள்ளன.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய 9 தேர்வுகள் மழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டன. அவற்றிக்கான தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி பதவி ஏற்றது முதல் 3 மாதங்களில் 12 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு 6054 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இந்த ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் அடங்கிய குருப் 2 தேர்வில் நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகள் என பல்வேறு காலியிட விவரங்கள் வர வேண்டி உள்ளது என்று கூறினார்.
மேலும், புதிய திட்ட அறிக்கையை விவரங்களை அறிய டி.என்.பி.எஸ்.சி இணையதளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என்று தெரிவித்துள்ளார்.


Thursday, 28 January 2016

பரிசுத் தொகை அதிகரித்தும் தமிழில் படைப்பாற்றல், பேச்சாற்றல் போட்டிகளில் பங்கேற்க தயங்கும் மாணவர்கள்

தமிழில் படைப்பாற்றல் மற்றும் பேச்சாற்றல் போட்டிகளில்மாணவர்கள் பங்கேற்க தயக்கம் காட்டி வருவது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.


தமிழில்படைப்பாற்றல் மற்றும் பேச்சாற்றலை மாணவர்கள் மத்தியில்வளர்க்கும் வகையில், கல்லூரி மாணவர்களுக்கு புதன்கிழமையும், பள்ளி மாணவர்களுக்கு வியாழக்கிழமையும்,தமிழகம் முழுவதும் போட்டிகள் நடத்தப்பட்டன.மாவட்ட அளவிலான இந்த போட்டிகளில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.10ஆயிரமும், 2ஆம் இடத்துக்கு ரூ.7ஆயிரமும் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவர்கள், மாநில போட்டிக்கு பரிந்துரைசெய்யப்படுவார்கள் என்றும், அதில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.15 ஆயிரம், ரூ.12 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பேச்சுப் போட்டிக்கு, கல்லூரிகள் சார்பில் 15 பேர், பள்ளிகள் சார்பில் 17 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அதே போல் கட்டுரைப் போட்டியில் 13 பேர் (கல்லூரி), 19 பேர் (பள்ளி), கவிதைப் போட்டியில் 13 பேர் (கல்லூரி), 17 பேர் (பள்ளி) கலந்து கொண்டனர். இதில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 14 பேர் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.மழலையர் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழில் படைப்பாற்றலையும் பேச்சாற்றலையும் வளர்க்க நடத்தப்படும் போட்டிகளில் குறைவான மாணவர்கள் பங்கேற்றது போட்டி நடுவர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள்செயல்பட்டு வரும் நிலையில், பள்ளிக்கு ஒரு மாணவர் வீதம் பங்கேற்றாலும் கூட, குறைந்தபட்சம் 200 பேர் வந்திருக்கலாம்.

போட்டிக்கான பரிசுத் தொகை கடந்த காலங்களில் ரூ.1000, ரூ.500 வீதம் வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், மாணவர்களின் எண்ணிக்கைஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது.இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த வகை போட்டிகளுக்கு, முன்கூட்டியே தயார் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. போட்டி நடைபெறும்இடத்தில் தலைப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம், மாணவர்களின் சமயோஜித அறிவுத்திறன் மேம்படும்.

மேலும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயல்படும் திறனும் அதிகரிக்கும்.பரிசுத்தொகையும் கூடுதலாக இருப்பதால், ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மாணவர்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்பதில் அந்தந்த தலைமையாசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

பள்ளிக்குழந்தைகள் -கவனம் தேவை

Friday, January 29

ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளை...கவனமா கையாளுங்க! ஆசிரியர்கள், நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

 "பள்ளிகளில், குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும்; பள்ளிதோறும், ஆலோசனை கமிட்டி ஏற்படுத்த வேண்டும்' என, திருப்பூரில் நடந்த, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தில், அறிவுறுத்தப்பட்டது.


நேற்று முன்தினம், திருப்பூர் கதிரவன் மெட்ரிக் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு மாணவன் ஸ்ரீசிவராமை, ஆறாம் வகுப்பு மாணவன் கல்லால் தாக்கி கொலை செய்தான். இச்சம்பவத்தை அடுத்து, பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அவசர ஆலோசனை கூட்டம், குமார் நகர் "இன்பேன்ட் ஜீசஸ்' பள்ளியில் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார்; மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் (பொறுப்பு) ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார்.


கலெக்டர் ஜெயந்தி பேசுகையில், ""குழந்தைகளிடம் அன்பும், ஆதரவும் காட்ட வேண்டும்; ஆசிரியர்களை முழுமையாக நம்பி, குழந்தைகளை பெற்றோர் அனுப்புகின்றனர். குழந்தைகளை, ஆசிரியர்கள் பாதுகாக்க வேண்டும். மாணவர்களிடம் அன்பாக பழகும் ஆசிரியரை தலைவராக கொண்டு, பள்ளிதோறும் ஆசிரியர்களை கொண்ட ஆலோசனை கமிட்டி அமைக்க வேண்டும். அக்கமிட்டி மூலம் மாணவர்களுக்கு வாரந்தோறும் "கவுன்சிலிங்' தர வேண்டும். பள்ளியில், மறைவிடம் இருக்கக்கூடாது. திறந்தவெளி கிணறு இருந்தால் உடனடியாக மூட வேண்டும். குறும்பு செய்யும் மாணவர்களை கண்டறிந்து, தனியாக "கவுன்சிலிங்' தர வேண்டும்,'' என்றார்.


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அசோக்குமார் பேசுகையில், ""குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளை பெற்றோரும், ஆசிரியர்களும் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும். அவர்களை ஒருமுகப் படுத்துதல் முக்கியம். "படி படி' என, துன்புறுத்தாமல், படிக்க வைக்கும் சூழலை உருவாக்க வேண்டும். நகைச்சுவையாக கல்வி கற்பிக்க வேண்டும்,'' என்றார்.


நீதிபோதனை வகுப்பு தேவை

உளவியல் நிபுணர் அருள்வடிவு பேசுகையில், ""குழந்தைகளின் குடும்ப பின்னணி, பெற்றோர், உறவினர் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வது, குழந்தையை பற்றி அறிந்து கொள்ள உதவும். இன்றைய குழந்தைகள், பாடப்புத்தகங்களை தவிர, மற்ற புத்தகங்களை படிப்பதில்லை. நீதி போதனை வகுப்பு நடத்தி, பிரச்னை ஏற்படும்போது, அதற்கான தீர்வு என்ன என்பதை விளக்க வேண்டும். நற்பண்புகளை வளர்க்க வேண்டும். குழந்தைகளின் முன், பெற்றோர் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்; தகாத வார்த்தை பேசினால், அவர்கள் மனதில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தும்,'' என்றார். கூட்டத்தில், தனியார் பள்ளிகளை சேர்ந்த முதல்வர்கள், தாளாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.



"விளையாட அனுமதியுங்க' மனநல மருத்துவர் ரமேஷ் பரமானந்தம் கூறியதாவது: இதுபோன்ற சம்பவத்துக்கு பெரிதும் காரணம், "டிவி' மற்றும் சினிமா போன்றவற்றில் வெளிப்படும் வன்முறைகளே. குழந்தைகளை வெளியே விளையாட பெற்றோர் அனுமதிப்பதில்லை. கீழே விழுந்து காயமேற்படும் என கூறி, வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வற்புறுத்துகின்றனர். இதனால், "டிவி', மொபைல்போனுக்கு, குழந்தைகள் அடிமையாகி, நேரத்தை செலவிடுகின்றனர். தற்போது, கார்ட்டூன் சேனல்களில் கூட வன்முறை, சண்டை காட்சிகள் வந்து விட்டன. மொபைல் போன்களிலும் சண்டைகள், துப்பாக்கி சுடுதல் என, வன்முறை விளையாட்டுகள் அதிகமுள்ளன. இது, குழந்தைகளின் மனதில் வன்முறை குணத்தை ஏற்படுத்தும்.


குழு விளையாட்டுகளில் ஈடுபடும்போது, வெற்றி, தோல்வியை சகஜமாக எடுக்கும் மனநிலை; விட்டுத்தரும் மனப்பாங்கு வரும். வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற குணம், வெறியாகும் மாறும் போதே, இது போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன. எதையும் அன்பாக கற்றுத்தர வேண்டும்; ஆக்ரோஷம் என்பது ஆரோக்கியம் அல்ல.இவ்வாறு, அவர் கூறினார்.


தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: பள்ளி நேரம் முடிந்ததும், ஆள் நடமாற்ற பகுதியில், "ஒன் டு ஒன்' என, மாணவர்கள் தங்களுக்குள் மோதும் போக்கு உள்ளது. இதற்குமுன், பள்ளிகளில் நன்னெறி கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டன; தற்போது கிடையாது.

பெற்றோரின் பொறுப்பற்ற தன்மை, ஆசிரியர்களின் கவனமின்மை ஆகியன, மாணவர்களை தடம் மாற வைக்கிறது. ஒழுக்க கல்வி, விளையாட்டு நேரங்களிலும், மாணவர்கள் படிக்க வைக்கின்றனர். அதனால், மாணவர் மனதில் விட்டுக் கொடுக்கும் தன்மை, ஒழுக்க முறைகள் மறைந்து வருகின்றன. கல்வித்துறை, மறுகோணத்தில் சிந்தித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

 பாஸ்போர்ட் முன்பதிவு தேதியை இனி விண்ணப்பதாரரே தேர்வு செய்யலாம் : மண்டல அலுவலர் தகவல்

'பாஸ்போர்ட்டிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, முன்பதிவு தேதியை விண்ணப்பதாரரே தேர்வு செய்யலாம்,'' என, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பொதுமக்கள் நலன் கருதி, பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது சில விதிகளை தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.
பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி மற்றும் இடத்தை மாற்ற விரும்புவோர், புதிய விதியின்படி பிறந்த தேதிக்கான பிறப்பு சான்றிதழ் மற்றும் அதற்கான அபராதம் செலுத்தி மாற்றலாம். பிறந்த இடம் மாற்ற கோருவோர், சரியான பிறந்த இடம் வேறு மாநிலத்தில் அமைந்திருப்பின், அதற்கான நீதிமன்றம் உத்தரவு, அனைத்து கல்வி சான்றிதழில் பிறந்த இடம் மாற்றம் செய்த பின், தவறான பிறந்த தேதி குறிப்பிட்ட காரணத்தை அறிய போலீஸ் அறிக்கைக்குட்பட்ட பிறகு, சரியான பிறந்த இடம் குறிப்பிட்டு புதுப்பித்தால் பாஸ்போர்ட் பெறலாம்.

ஒரே முகவரியில் பெறப்பட்ட ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பான் கார்டு சமர்ப்பித்தால், ஆன்லைன் மூலம் ஆவணங்களை சரிபார்த்த பிறகு முதலில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு, பிறகு போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படும். இந்த பாஸ்போர்ட் பெறுவோர் படிவம் 1ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் போது, முன்பதிவு தேதி, முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை என்ற முறையில் வழங்கப்பட்டது. ஜன., 27 முதல் முன்பதிவு தேதியை விண்ணப்பதாரர்களே தேர்வு செய்யலாம். டிஜிட்டல் மயமாக்கத்தால் காவல் விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்வது 34 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதையும் விரைவுபடுத்திட அலைபேசி அல்லது மடிக்கணினி மூலம் காவல் விசாரணையை அனுப்ப வழி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு 1.20 கோடி பாஸ்போர்ட் மற்றும் அதை சார்ந்த சேவை வழங்கப்

பட்டுள்ளது, என்றார்.


 ஒரே நேரத்தில் இரட்டை டிகிரிக்கு யு.ஜி.சி., தடை

இனி, ஒரே நேரத்தில், இரண்டு பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என, கல்லுாரிகளுக்கு பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது.

கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர்கள் தினசரி வகுப்பில் படித்து கொண்டே, திறந்தவெளி பல்கலை அல்லது வேறு பல்கலைகளில், தொலைதுார கல்வியில் மற்றொரு பட்டம் படிப்பது வழக்கம். அதே போல், ஒரு தொலை துார கல்வி பட்டம் படித்து கொண்டே, வேறு பல்கலையில் இன்னொரு தொலைதுார பட்டமும் படிப்பர்.இதனால், மூன்று ஆண்டுகளில் அவர்களுக்கு, இரண்டு பட்டப்படிப்பு சான்றிதழ்கள் கிடைக்கும். எந்த வேலைக்கு என்ன தகுதி தேவையோ, அந்த சான்றிதழை பயன்படுத்தி பணிக்கு சேர்ந்து விடுவர்.

தற்போது, 'இதுபோன்ற இரட்டை பட்டப் படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டாம்' என்று, யு.ஜி.சி.,எச்சரித்துள்ளது. இதுகுறித்து யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பல சட்ட மற்றும் அரசு அமைப்புகளிடம் யு.ஜி.சி., கருத்து திரட்டியதில், இரண்டு டிகிரி முறைக்கு எதிரான கருத்துகள் வந்துள்ளன. எனவே, ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்கள் பெற்றால், அதற்கான அங்கீகாரத்தில் சிக்கல் எழ வாய்ப்புள்ளது. எனவே, கல்லுாரிகள், இரண்டு பட்ட முறையில் மாணவர்களை சேர்க்கவோ அல்லது ஊக்கப்படுத்தவோ வேண்டாம்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால், ஏற்கனவே படித்தவர்களின் நிலை என்ன என, பட்டதாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.இந்த குழப்பம் குறித்து, தரமான கல்விக்கான கூட்டமைப்பு ஆலோசகர் பேராசிரியர் சுவாமிநாதன் கூறியதாவது:உயர் கல்வியில் மேலாண்மை செய்யும், என்.சி.டி.இ., - ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் யு.ஜி.சி., போன்றவை, பட்டப்படிப்பு தொடர்பாக, பொதுமக்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்க வேண்டும். தங்கள் விருப்பத்துக்கு மாணவர்களை பட்டப்படிப்பில் சேர்த்துக்கொண்டு, அவர்கள் பணத்தையும், நேரத்தையும் செலவிட்டு பட்டம் பெற்ற பின், அவ்வப்போது உத்தரவை மாற்றி விடுவதால், பட்டதாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.


எனவே, குறைந்தது, 20 ஆண்டுகளுக்கு இதுதான் விதிமுறை என, தொலைதுார பார்வையுடன் முன்னோடியான விதிமுறைகளை வகுத்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


 அகஇ - ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை கொண்டு 01.02.2016 அன்று பள்ளிகளை நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

அகஇ - ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை கொண்டு 01.02.2016 அன்று பள்ளிகளை நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு



 பள்ளிக் கல்வித் துறை-இளநிலை உதவியாளர் நியமனம்: நாளை கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறையில் 98 இளநிலை உதவியாளர் பணியிடத்துக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு சனிக்கிழமை (ஜன.30) பணி நியமனத்துக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

 தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை-6 என்ற முகவரியில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இந்த கலந்தாய்வில் பங்கேற்க வரும் தகுதி பெற்றவர்கள், தேர்வாணையத்திலிருந்து பெறப்பட்ட அறிவிப்பு கடிதத்தையும், தேர்வு நுழைவுச் சீட்டையும் எடுத்து வரவேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.



 டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வி.ஏ.ஓ. தேர்வுக்கான கலந்தாய்வு; 1-ந் தேதி சென்னையில் நடக்கிறது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2013-2014-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 14-ந் தேதி நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் அதே ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி வெளியிடப்பட்டது.


மூன்றாம் கட்ட கலந்தாய்வுக்கு 17 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான மாவட்ட ஒதுக்கீடு 1-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல், சென்னை, பாரிமுனை பஸ் நிலையம் அருகில் உள்ள பிரேசர் பாலச்சாலை, வ.உ.சி நகரில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவெண்கள் அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி பெற்றவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. மதிப்பெண்கள், தரவரிசை, இடஒதுக்கீடு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதி மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பதாரர் அனுமதிக்கப்படுவர். அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. தகவல்கள், தவறாக இருக்கும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்படும். கலந்தாய்விற்கு வரத் தவறுபவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

எல்.ஐ.சி.யின் பள்ளி மாணவர்களுக்கான பொது மருத்துவ முகாம்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல்.ஐ.சி.யின் பள்ளி  மாணவர்களுக்கான மாதந்திர  பொது  மருத்துவ  முகாம்  நடை பெற்றது. முகாமிற்கு வந்திருந்தோரை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.   எல்.ஐ.சி.யின் கிளை மேலாளர் மோகன சுந்தரம் தலைமை தாங்கினார்.எல்.ஐ.சி.யின் வளர்ச்சி அதிகாரிகள் தமிழரசு ,பெரியசாமிமுன்னிலை வகித்தனர்.


மருத்துவர் ஏழுமலை பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் பரிசோதித்தனர்.மாண வர்களிடம் உடல் சார்ந்த நோய்களை கண்டுபிடித்து அவற்றை உடனுக்குடன் எடுத்து கூறினார்கள்.மாணவர்களின் பெற்றோர்களுக்கும் நோய்களின் தீவிரம் குறித்து எடுத்த சொல்லப்பட்டது.
பொதுவாக பல் சம்பந்தமான நோய்கள்,விட்டமின் குறைபாடு தொடர்பான நோய்கள்,தைராய்டு தொடர்பான தகவல்கள் அவற்றை எவ்வாறு சிறு வயது முதலே சரி செய்வது,நோய் வருமுன் காப்பது என்பன போன்ற பல்வேறு உடல்நோய்கள் தொடர்பான தகவல்கள் எடுத்து சொல்லபட்டது.முகாமின் நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

காதல் திருமணம், விவாகரத்து போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, ஆசிரியர் பணி இல்லை!

காதல் திருமணம், விவாகரத்து போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, ஆசிரியர் பணி இல்லை' என, தனியார் கல்வி நிறுவனங்கள் நிபந்தனை விதிக்க துவங்கி உள்ளன.காதல் விவகாரங்களால், மாணவ, மாணவியர் பாதிக்கக் கூடாது; பள்ளிக்கும் அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காக, பல தனியார் பள்ளிகள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளன. மாணவ, மாணவியருக்கு ஒழுக்கம், குருகுல கல்வி முறை, கண்டிப்பான விதிகளை போதித்து, முறைப்படுத்தவும் முடிவு செய்துள்ளன.இதன் ஒரு கட்டமாக, குடும்ப பிரச்னைகள் உள்ள பட்டதாரிகள், காதல் திருமணம் செய்தவர்கள், விவாகரத்துசெய்த பட்டதாரிகள், கலப்பு திருமணம் செய்தவர்ககளுக்கு, ஆசிரியர் வேலை வழங்கவேண்டாம் என, முடிவெடுத்து உள்ளன.


பல தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், இந்த முடிவை எடுத்துள்ளதால், காதல் திருமணம் செய்த பட்டதாரிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.சென்னையில் உள்ள பிரபல கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைநிறுவனத்தின், குரோம்பேட்டை மற்றும் ஆலப்பாக்கம் பள்ளிகளுக்கு, ஆசிரியர் தேர்வு துவங்கி உள்ளது.அதில், வேலைவாய்ப்புக்கான நிபந்தனைகளில், 'விண்ணப்பிக்கும் பட்டதாரிகள், துணையை பிரிந்து வாழ்பவராகவோ, காதல் திருமணம் செய்தவராகவோ, குடும்பத்தில் ஒற்றுமை இல்லாதவராகவோ இருக்கக் கூடாது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பணி நீக்கம்:

சென்னை, ராயபுரம் அரசு உதவிபெறும் பள்ளியில், தமிழ் ஆசிரியர் ஒருவர், அங்கே பணியாற்றிய ஆசிரியையை காதல் திருமணம் செய்தார். அதனால், அவருக்கு, ஆறு மாதமாக சம்பளம் வழங்க மறுத்ததுடன், அவரை பணியில் இருந்தும் நீக்கினர். இதை எதிர்த்து நடந்த போராட்டத்துக்கு பின், மீண்டும் அவர் பணியில் சேர்க்கப்பட்டார்.

Wednesday, 27 January 2016

அரசு இ-சேவை விவரங்களை அறிய புதிய கைபேசி செயலி அறிமுகம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் அனைத்து மண்டலம், பகுதி, கோட்ட அலுவலகங்கள், சென்னை. மதுரை,திருச்சி, கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என 465 இடங்களில் அரசு இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இம்மையங்களில் வருவாய்த்துறை தொடர்பான சான்றிதழ்களுக்கு ரூ.50-ம், சமூகநலத்துறை உதவித் திட்டங்களுக்கு ரூ.100-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இ-சேவை மையங்களில் சொத்து வரி, தொழில் வரி கம்பெனி வரியையும் செலுத்தலாம். தற்போது இம்மையங்களில், மின் கட்டணங்களை செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.இவை தவிர, மத்திய அரசின் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் தொடர்பான சேவை, அரசுப் பணியாளர் தேர்வாணய தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், தற்போது, இ-சேவை மையம் தொடர்பான தகவல்களை கைபேசியில் தெரிந்துகொள்ளும் வகையில் ‘TACTV’ என்ற பெயரில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி ஆண்ட்ராய்டில் இயங்கும் கைபேசிகளில் மட்டும் செயல்படும். இந்த செயலியை பொதுமக்கள் ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இதைப் பயன்படுத்தி, இ-சேவை மையங்களின் முகவரி, வரைபடம், அருகில் உள்ள மையத்துக்கு செல்லும் வழி, சேவைகள், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Jan 27, 2016

ஆதரவற்ற குழந்தைகளை குறித்து 1098-க்கு தகவல் தெரிவிக்கலாம்: சென்னை ஆட்சியர்

பொது இடங்களில் காணப்படும் ஆதரவற்ற குழந்தைகளை குறித்து 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:


உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின் படி அனைத்து மாநிலங்களிலும் காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை கண்டுபிடிக்க “புன்னகையை தேடி” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது.01.01.2015 முதல் 31.01.2015 வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் நலனோடு தொடர்புடையதுறைகள் மற்றும் காவல்துறை அலுவலர்களை உள்ளடக்கிய ஐந்து குழுக்கள் தொடங்கப்பட்டு காணாமல் போன குழந்தைகள் தேடப்பட்டனர் அவ்வகையில் இந்தியா முழுவதும் சுமார் 3,000 குழந்தைகள் பேருந்து நிலையம், கோயில்கள், சுற்றுலா தலங்கள், சாலையோரங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில்; கண்டுபிடிக்கப்பட்டனர்.அதில் பெரும்பாலான குழந்தைகள் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு;ள்ளது.இந்த “புன்னகையை தேடி” (Operation Smile)திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதை தொடர்ந்து மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் 01.07.2015 முதல் 31.07.2015 வரை காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை தேடும் பணியாக “புன்னகையை தேடி” (Operation Muskkan) திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் போது சென்னையில் 122 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து, “புன்னகையை தேடி” (Oerations Smile II) திட்டமானது 01.01.2016 அன்று முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Tuesday, 26 January 2016

ஆசிரியர்கள் போராட்டத்தால் வகுப்புகள் முடங்கும் அபாயம்

      ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதனால், ஒரு வாரம் வரை வகுப்புகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
         ஆசிரியர் சங்க கூட்டுக் குழுவான ஜாக்டோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 30, 31 மற்றும் பிப்., 1ல் மாவட்ட தலைநகரங்களில், ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இதையடுத்து, அனைத்து பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை நேரில் சந்தித்து, போராட்டம் குறித்து பிரசாரம் செய்யவும் ஜாக்டோ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதனால்,
பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பெயரளவுக்கு வந்து விட்டு, ஒரு வாரம் வரை போராட்டபணிகளில் ஈடுபடும் நிலை உள்ளது.இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமின்றி, அனைத்து வகுப்பு மாணவர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடாமல் மவுனமாக இருப்பதால், ஆசிரியர் சங்க போராட்டத்துக்கு, அதிகாரிகளும் துணை போவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோரிக்கைகள் என்ன?
* மத்திய அரசுஆசிரியர்களை போல், தமிழக ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி தர ஊதியம் வழங்க வேண்டும்
* 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்* பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை வாபஸ் பெற்று, பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வர வேண்டும்
* ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்
* தமிழை முதல் பாடமாக்கி அரசாணை வெளியிட வேண்டும்
* இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழுவின் படி சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 15 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

Teachers Profile Online Entry Regarding Proceeding

Monday, 25 January 2016

புதிய கல்விக் கொள்கை - 'பள்ளிகள் ஹோம் ஒர்க் கோ - எஜுகேஷன் கூடாது'

புதிய கல்விக் கொள்கையை உருவாக்க, தேவையான ஆலோசனைகளை அளிக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தது.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கல்விப் பிரிவான வித்யா பாரதி, பல்வேறு ஆலோசனைகள் அளித்துள்ளது; அதன் முக்கிய அம்சங்கள்:

* காலை, 7:30 மணி முதல், மாலை, 7:30 மணி வரை, 12 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்* வெளிநாட்டு மொழிகளுக்குபதிலாக, சமஸ்கிருதம் கற்றுத் தர வேண்டும்

* சிறிய வயதில், மாணவர்கள், மிகவும் எளிதாக மொழிகளை கற்றுக் கொள்ள முடியும். அதன்படி, தாய்மொழி, சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகள் கற்றுத் தரப்பட வேண்டும்

* தற்போதைய, 6 மணி நேர பள்ளிநேரத்தில், இவற்றை கற்றுத் தர முடியாது.

* வழக்கமான பாடத்துடன், மொழி, இசை, விளையாட்டு ஆகியவற்றையும் கற்றுத் தர வேண்டும்

* இந்த புதிய பாடத் திட்டத்தின்படி, 'ஹோம் ஒர்க்' இருக்காது. இது, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் வசதியாக இருக்கும்

* இருபாலரும் ஒரே வகுப்பில் பயிலும், 'கோ - எஜுகேஷன்' முறை இருக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


குடியரசு தினம் என்றால் என்ன? - மாணவர்களுக்கான குடியரசு தின உரை

ஹலோ குட்டீஸ்... ஜனவரி 26-ம் தேதி எதற்காகப் பள்ளிகளுக்கு விடுமுறை விடுகிறார்கள்? குடியரசு தினம், அதனால் விடுமுறை என்று நீங்கள் சட்டென்று சொல்லிவிடுவீர்கள்.

சரி குடியரசு தினம் என்றால் என்ன? அந்தப் பதிலைச் சொல்லப் பெரியவர்களே கொஞ்சம் கஷ்டப்படுவார்கள். அது சரி, ஏன் குடியரசு தினம் கொண்டாடுகிறோம்?
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவை ஆண்டது யார்? உங்கள் பாடப்புத்தங்களில் படித்திருப்பீர்களே, மன்னர்கள்தான் ஆட்சி செய்து வந்தார்கள். இப்போது இருப்பது போல அப்போது மாநிலங்கள் எல்லாம் கிடையாது. சிறிய அரசர்கள், பெரிய அரசர்கள், பேரரசர்கள் எனத் தங்கள் எல்லையைப் பொறுத்து ஆட்சி செய்தார்கள். இந்த அரசர்களிடம் ஒற்றுமை இல்லை.

எல்லாருமே இந்தியாவைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஆட்சி செய்துவந்தார்கள். இப்படிப் பிரிந்து கிடந்ததாலும், ஒற்றுமை இல்லாததாலும் ஆங்கிலேயர்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். தந்திரமாக மன்னர்களிடம் பேசி நம் நாட்டுக்குள்ளே நுழைந்து பின்னர் நம்மை அடிமைப்படுத்தினார்கள்.

அது மட்டுமல்ல, மன்னர்கள் ஆட்சியில் அவர்கள் வைத்ததே சட்டம். மக்கள் சுயமாகச் சிந்திக்க முடியாது; சுதந்திரம் பற்றி நினைக்கவும் முடியாது. மன்னர் இறந்துபோனால், உடனே அவருடைய மகன் மன்னராகிவிடுவார். இதைத்தான் முடியாட்சி அல்லது மன்னராட்சி என்று சொல்லுவார்கள்.

ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவை அடிமைப்படுத்தியபோது சுதந்திரம் பற்றி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று இருந்தார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுபோன்ற ஒரு நிலை மீண்டும் வரக் கூடாது என்று சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் நினைத்தார்கள். வாரிசு உரிமை உள்ள மன்னராட்சி முறை கூடாது என்று நினைத்தார்கள். மக்கள் பங்கு கொள்ளும் மக்களாட்சி உள்ள நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதற்கு நாடு குடியரசாக இருப்பது அவசியம் என்றும் முடிவு செய்தார்கள்.

குடியரசு என்றால் குடிமக்களின் அரசு என்று பொருள். அதாவது மக்களாட்சி என்று அர்த்தம். மக்கள் தங்கள் விருப்பப்படி தேர்தல் மூலம் தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. இப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் இந்தியாவும் குடியரசு நாடானது.

ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது என்று பாடப் புத்தங்களில் படித்திருப்பீர்கள் அல்லவா? அரசியல் அமைப்புச் சட்டம் என்றால் என்ன தெரியுமா? நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம்.

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்ட மேதைகள் பலர் சேர்ந்து இதை உருவாக்கினார்கள். இந்த அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால்தான் அன்றைய தினத்தைக் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். அதனால்தான் உங்களுக்கு விடுமுறையும் கிடைக்கிறது.

குடியரசு தினம் என்றால் என்ன என்று இனி யாராவது கேட்டால், பளிச்செனப் பதில் சொல்லிவிடுவீர்கள் இல்லையா?

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு!!!

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதில் அரசு விதிமுறைகளை அதிகாரிகள் பின்பற்றவில்லை என பாமக குற்றம்சாட்டியது.
பாமக மாநில துணைத் தலைவர் வடிவேல், மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்தியிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
நாமக்கல் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள அசுஉதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் ஆசிரியர் நியமனம் செய்வதில் அரசு விதிமுறைகளை மிறி நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். ஆசிரியர் பணிநியமனத்தில் பதிவுமூப்பு அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 160 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதில் கடந்த வாரத்தில் 13 ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்ப்பட்டுள்ளன. இதில், தகுதியில்லாத நபர்கள் அரசுவிதிமுறைகளுக்கு உள்படாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.தற்போது போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதியில்லாதவர்கள் ஆதாயத்தின் அடிப்படையில் ஆசிரியர்களாக பணிநியமனம் செய்யப்படுகின்றனர். இதனால், பள்ளிக் குழந்தைகளில் கல்வி பாதிக்கப்படுவதோடு எதிர்காலமும் கேள்விக்குறியாகும். தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்கள் மிகவும் பாதிப்புஅடைந்துள்ளனர்.எனவே, நாமக்கல் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதில் வெளிப்படையான தன்மை நிலவ வேண்டும். இதில் அரசுவிதிமுறைகளை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sunday, 24 January 2016

இனி "ஆல் பாஸ்" திட்டம் இல்லை

'ஆல் பாஸ்' திட்டம் மாநிலங்களுக்கு கெடு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின், 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்த அறிக்கையை, ஒரு மாதத்திற்குள் அனுப்பும்படி, மாநிலங்களுக்கு, மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14 வயது வரையிலான மாணவர்களை, எந்த வகுப்பிலும், 'பெயில்' ஆக்காமல், அடுத்த வகுப்புக்கு, 'பாஸ்' செய்ய வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில், கட்டாய கல்வி உரிமை சட்டம் பின்பற்றப்படுகிறது. இந்த திட்டப்படி, 'அனைவருக்கும் கட்டாயமாக பள்ளிக்கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கம், சரியாக நிறைவேறவில்லை' என்ற, புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, மத்திய கல்வி ஆலோசனை வாரியம் சார்பில், குழு நியமிக்கப்பட்டு ஆய்வு நடந்தது. இதில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவும், 'ஆல் பாஸ்' திட்டத்தில் நிபந்தனைகள் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில், 'ஆல் பாஸ்' திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து, மாநிலங்கள் தங்கள் தரப்பு கருத்தை தெரிவிக்க, 2015 ஆகஸ்டில், மத்திய அரசு கடிதம் அனுப்பியது. பெரும்பாலான மாநிங்கள் இன்னும் கருத்து தெரிவிக்காததால், ஒரு மாதத்திற்குள் அனுப்பும்படி, மத்திய அரசு கெடு விதித்துஉள்ளது.

நிபந்தனைகள் என்ன?
* ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை கண்டிப்பாக தேர்வு
நடத்தி, சி.சி.இ., என்ற தொடர் மதிப்பீட்டு முறையை பின்பற்ற வேண்டும்

* தேர்வில், மூன்று, ஐந்து மற்றும் எட்டு என, மூன்று தரவரிசை வழங்கப்படும். எட்டாம் தரம் பெறும் மாணவர்களை, அடுத்த வகுப்புக்கு, 'பாஸ்' செய்யக்கூடாது

* அனைத்து வகுப்பு மாணவர்களும், குறைந்தது, 80 சதவீதம் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்பது கட்டாயம்.

பொதுப்பள்ளி முறையும், அருகமைப் பள்ளியும், தாய்மொழிவழியில் கல்வியும் இன்னும் நடைமுறையாகவில்லை - கூடி விவாதித்து ஆக்கப் பூர்வப்பணியை முடிவு செய்வோம் வாருங்கள்.


தேசிய வாக்காளர் நாள்

🍁💐🍁💐🍁💐🍁
ஜனவரி 25 தேசிய வாக்காளர் நாள்
🍁💐🍁💐🍁💐🍁

(தேசிய வாக்காளர் தினம்இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய அரசாங்கத்தால்இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காகதேசிய வாக்காளர் நாள்(National Voters' Day) அனுசரிக்கபடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி "தேசிய வாக்காளர் நாள்" ஆகும். ஓட்டளிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும். 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் ஓட்டளிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஓட்டளிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கபடுகின்றது.

GAS CYLINDER காலாவதியாகும் தேதியை அறிந்துகொள்ளுங்கள்

உங்கள் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி (Expiry date) தெரிந்து கொள்ள வேண்டுமா?
காலாவதியான கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்துவதால் பயங்கரமான ஆபத்துகள் வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ, அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். பிறகு வாங்குங்கள்.
ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள். அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம்.
படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு கேஸ் சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும்.
முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் (alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது.
இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது.
A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இது தான்.
A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)
B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)
C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)
D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)
உதாரணத்திற்கு, மேலே உள்ள படத்தில் B-13 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் ஜூன் மாதம் 2013-ம் (ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்...!"
அறியாமை தவறல்லா..!! அறியாமல் இருப்பது தான் தவறு. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இன்ஜி., படிக்க புதிய திறன் தேர்வு;மத்திய அரசு அடுத்த அதிரடி

தேசிய அளவில், ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் சேர, அடுத்த ஆண்டு முதல், புதிதாக தேசிய திறன் தகுதி தேர்வு அமலாக உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் சில நிகர்நிலை பல்கலைகளில் சேர, நுழைவுத்தேர்வு எழுத வேண்டியதில்லை.


ஆனால், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான. ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., -ஐ.எம்.எஸ்., - ஐ.ஐ.ஐ.டி.,- என்.ஐ.டி., போன்றவற்றில் சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு எழுத வேண்டும்.இதில், என்.ஐ.டி.,- ஐ.ஐ.ஐ.டி., போன்றவற்றில் சேர, முதற்கட்ட ஜே.இ.இ., முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும். ஆனால், மற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, இரண்டாம் கட்ட ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த முறையை. 2017 - 18ம் கல்வி ஆண்டு முதல் மாற்ற, மத்திய மனிதவள அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, உயர்கல்விநிறுவனங்களில் சேர, அனைத்து மாணவர்களும் முதற்கட்ட ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு பதில், என்.ஏ.டி., எனப்படும் தேசிய திறன் தேர்வை எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்ற பின், இரண்டாம் கட்டதேர்விலும் தேர்ச்சி பெற்ற பிறகே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்றால், மாநில உயர்கல்வி நிறுவனங்களில் மட்டும் சேர்ந்து கொள்ளலாம்.இந்த முடிவு குறித்த அறிக்கை, மத்திய மனிதவள அமைச்சகத்தின் மூலம்,பார்லிமென்ட் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், 2017 - 18ல்அமலுக்கு வரும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு ஆண்டுக்கும் சேர்த்து "லேப்-டாப்"

இரு ஆண்டுக்கும் சேர்த்து இலவச 'லேப் - டாப்'

தமிழக அரசின் இலவச லேப் - டாப் கிடைக்காதவர்களுக்கு கொடுப்பதற் காக, தமிழ்நாடு மின்னணு கழகம் எனும், 'எல்காட்' நிறுவனத்தினர், 2014 - 15 மற்றும் 2015 - 16 கல்வியாண்டுகளுக்கும் சேர்த்து, 10.5 லட்சம் லேப் - டாப்களை கொள்முதல் செய்துள்ளனர். இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறைஅதிகாரிகள் கூறியதாவது:


இரு கல்வியாண்டுக்கும் சேர்த்து தர வேண்டிய லேப் - டாப்கள் அனைத்தும், அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி முடிவடைந்தது.எனினும், சில பள்ளிகள் விடுபட்டிருப்பதாக, தகவல் வந்துள்ளது. அதற்காகவே, சில ஆயிரம் லேப் - டாப்கள் உபரியாக வைக்கப்பட்டுள்ளன. விடுபட்டோரின் பட்டியலை, பள்ளிக் கல்வித் துறைதந்தால், அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் கணக்கெடுப்பு

சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் கணக்கெடுக்க அரசு உத்தரவு

பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் விவரத்தை சேகரித்து அனுப்புமாறு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நடப்பு, 2015- - 16ம் கல்வியாண்டில் அரசு பள்ளி கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியர் விவரத்தை சேகரித்து அனுப்ப, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


கல்வித்துறை அதிகாரி கூறுகையில், 'பிப்., அல்லது மார்ச் மாதத்தில், சட்டசபை பட்ஜெட் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதால், சத்துணவு திட்டத்தில் மானியம் மற்றும் சத்துணவு சமையல் பொருட்களுக்கான நிதி ஒதுக்கீடு, ஊழியர் எண்ணிக்கை அடிப்படையில் இவ்விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. 'மாவட்டம் தோறும் பள்ளிகள் வாரியாக,சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை விவரம் சேகரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது' என்றார்.

யார்,யாருக்கு தேர்தல் பணியில் இருந்து விளக்களிக்கலாம் ,மாவட்ட ஆட்சியர் கடிதம்!

Saturday, 23 January 2016

உயர்கல்வியில் தமிழகம் முதலிடம்- முதல்வர் பேச்சு

பள்ளிக்கல்வி- உயர்கல்வியில் தமிழகம் முதலிடம் சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா

பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளின் காரணமாக பள்ளிக்கல்வியிலும் உயர்கல்வியிலும் தமிழகம் முதலிடத்தை பெற்றிருப்பதாக தமிழக சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல்வர் ஜெயலலிதா அளித்த பதிலுரை.






இந்த அரசு ஏழை, எளியவர்களுக்கான அரசு. இல்லாதோரை கை தூக்கிவிடும் அரசு. குறை உள்ளவர்களை நிறைவாக்கும் அரசு. ஒடுக்கப்பட்ட\மக்களின் நலன்களை காக்கும் அரசு. எனவே தான், வளர்ச்சி என்பதை வெறும்பொருளாதார வளர்ச்சியாக நான் பார்ப்பதில்லை. மாநிலத்தின் மொத்தஉற்பத்தியின் வளர்ச்சி, அதாவது மாத்திரம் ஆரோக்கியமான வளர்ச்சிஅல்ல. நாட்டு முன்னேற்றத்திற்கு மொத்த உற்பத்தி வளர்ச்சி, பயன்அளிக்கலாம். ஆனால், வளர்ச்சி என்பது ஒவ்வொருவரையும் சென்றடையவேண்டும். அடித்தட்டில்உள்ள மக்கள் பொருளாதார வளர்ச்சியின் பயனைப்பெற வேண்டுமென்றால் அவர்கள் கல்வியிலும், உடல் நலத்திலும் சிறந்துவிளங்க வேண்டுமென்பது இன்றியமையாததாகும்.


கல்வி மற்றும் மக்களின் உடல்நலம் ஆகியவற்றில் ஏற்படும் வளர்ச்சி சமுதாய வளர்ச்சிக் குறியீட்டைநிர்ணயிக்கும். எங்கு சமுதாய குறியீடுகள் விரைந்து வளர்ச்சி அடைகின்றனவோ அங்கு தான் ஏற்றத்தாழ்வற்ற நிலை ஏற்படும். அப்போதுதான் எல்லோரும் எல்லாமும் பெற முடியும். எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஒர் நிலை‛ என்ற குறிக்கோளை அப்போது தான் எய்த இயலும். எனவே தான் கல்விவளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவருகிறது.



அனைவருக்கும் தரமான கல்வி வழங்கிட வேண்டுமெனில் பள்ளிகளின்உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். போதிய ஆசிரியர்கள் நியமனம்செய்யப்பட வேண்டும். மாணவ மாணவியரின் இடைநிற்றலை குறைத்திடவேண்டும். மாணாக்கர்களின் கற்கும் திறன் உயர்த்தப்பட வேண்டும்.இவையெல்லாம் நிறைவேற்றிட வேண்டும் என்ற காரணத்தால் தான், கடந்த5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கென 84,568 கோடி ரூபாய் எனதுஅரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை39,058 கோடி ரூபாய் தான். அதாவது இந்த 5 ஆண்டுகளில் எனது ஆட்சியில்கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியில் ஒதுக்கியதை விட 116 சதவீத உயர் அளவுஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தான் தொடக்க கல்வி, நடுநிலைக் கல்வி,இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி என அனைத்து நிலைகளிலும்சேர்க்கை விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது; இடைநிற்றல் விகிதம் கணிசமாககுறைந்துள்ளது.



இவற்றிற்குக் காரணம் இந்த அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் தான். கடந்த 56 மாதங்களில் 26.96 லட்சம் பள்ளி மாணவ மாணவியருக்கு 4,723 கோடி ரூபாய் செலவில், விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை இடைநிற்றல்இன்றித் தொடர சிறப்பு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டம் எனது அரசால்அறிமுகம் செய்யப்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 முதல்12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மொத்தம்5,000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகையாக அவர்களின் பெயரில் முதலீடு செய்யப்படுகிறது.


இத்திட்டத்தின் கீழ், ஐந்தாண்டுகளில் 1 கோடியே13 லட்சத்து 76 ஆயிரம் மாணவ, மாணவியர் 1,810 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாகப் பெற்று பயனடைந்துள்ளனர்.2010-2011-ஆம் ஆண்டு ஒரு இணைச் சீருடை வழங்கப்பட்டு வந்தநிலையில், தற்போது பள்ளி மாணவ மாணவியருக்கு 4 இணைச் சீருடைவழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் இதற்கென 1,698 கோடிரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவியருக்கு விலையில்லா பாட நூல்கள் வழங்கப்படுகின்றன.



2012-2013-ஆம் ஆண்டு முதல் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கும்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அவை வழங்கப்பட்டு வருகின்றன. விலையில்லாபுத்தகப் பை, கணித உபகரணப் பெட்டிகள், கிரையான்ஸ், நில வரைபட புத்தகம்உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், வழங்கும் திட்டம் 2012-13-ஆம் ஆண்டில்அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது போலவே ஓர் இணைக் காலணிகள் வழங்கும் திட்டம் 2012-2013-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவையன்றி, விலையில்லா மிதிவண்டிகள்,கட்டணமில்லாப் பேருந்து பயணச் சலுகை, சத்தான மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.



பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு அதிக செலவிலானதனியார் பள்ளிகளை நாடுவதற்கான முக்கிய காரணம் ஆங்கில வழி போதனைஎன்பதால், அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கில வழிக் கல்வி வழங்கும் பொருட்டுதேவைக்கேற்ப 12,092 ஆங்கில வழிப் பிரிவுகள், ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2.64 லட்சம் மாணாக்கர்கள் இதில் பயின்று வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் 221 தொடக்கப் பள்ளிகள் புதிதாகதொடங்கப்பட்டுள்ளன; 112 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 810 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.



தேவைக்கேற்ப பள்ளிகளை அமைப்பதோடு, பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை வழங்கிடவும் எனது அரசு முன்னுரிமை அளிக்கிறது. கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள், சுற்றுச் சுவர்,மாற்றுத் திறனாளிகளுக்கென சாய்வு தளங்கள் ஆண்/ பெண் குழந்தைகளுக்கென தனித்தனியே கழிவறைகள் போன்ற உட்கட்டமைப்புவசதிகள் 4,166 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறந்த கல்வி வழங்கப்பட ஆசிரியர்கள் காலத்தே நியமிக்கப்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் 72,843 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 14,711 ஆசிரியர் அல்லா பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு முன்னோடிதிட்டங்களின், காரணமாகத் தான் தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் ஒரு சிறந்தமாநிலமாக திகழ்கிறது.



உயர்கல்வியைப் பொறுத்தவரை, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்பதை நான் முதலில் பெருமையுடன் பதிவு செய்ய விரும்புகிறேன். 2011-ஆம் ஆண்டு உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம், தமிழ்நாட்டில் 18 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அப்போது இந்திய அளவில் இந்த சதவீதம் 15 என இருந்தது.தற்போது இந்திய அளவில் மொத்த மாணவர் சேர்க்கை 23.6 சதவீதம் என்றுஉள்ளது.


ஆனால், தமிழ்நாட்டில் இது 44.8 என்ற சதவீதத்தை அடைந்து,இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. அதாவது,இந்திய அளவில் கடந்த 5 ஆண்டுகளில் 8.6 சதவீத அளவிற்கே உயர் கல்விமாணவர் சேர்க்கை உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இது26.8 சதவீதம் உயர்ந்துள்ளது. இத்தகைய மகத்தான வளர்ச்சிக்கு காரணம்எனது தலைமையிலான அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தான்என்பதை, நான் இங்கே உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.



கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியிலும், தற்போதும் உயர்கல்வி தொடர்பான சில புள்ளி விவரங்களை தெரிந்து கொண்டால் தற்போது நான்தெரிவித்த வியத்தகு சாதனை எப்படி சாத்தியமாயிற்று என்று புலப்படும். கடந்த 2006 முதல் 2011 வரையிலான ஆண்டுகளில், கடந்தமைனாரிட்டி திமுக ஆட்சியின் போது, உயர் கல்விக்கு செலவிடப்பட்ட தொகை6,142 கோடி ரூபாய். கடந்த 5 ஆண்டுகளில்அதிமுக ஆட்சியில், செலவிடப்பட்ட தொகை 14,609 கோடி ரூபாய். இதை கவனத்தில் கொள்ளவேண்டும். குறித்துக் கொள்ள வேண்டும்.


ஐந்து ஆண்டுகால மைனாரிட்டி திமுக ஆட்சியில் ஒட்டுமொத்தமாக கல்விக்காக செலவிடப்பட்டத் தொகை 6142 கோடிரூபாய். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அஇஅதிமுக ஆட்சியில் செலவிடப்பட்டதொகை 14,609 கோடி ரூபாய். முந்தைய திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட புதியகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 10. தற்போது எனது ஆட்சியில் புதியதாக துவங்கப்பட்டுள்ள கல்லூரிகள் 39. முந்தைய திமுக ஆட்சியில் புதியதாக துவங்கப்பட்ட பாடப் பிரிவுகள் 26. தற்போது அதிமுக ஆட்சியில், புதியதாக துவங்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகள் 959. கடந்த திமுக ஆட்சியில்கட்டடங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 7 கோடி ரூபாய்.


தற்போதுஅதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 220 கோடி ரூபாய்; கடந்த 5ஆண்டுகளில் கணக்கிட்டுப் பார்த்தீர்களானால் திமுக ஆட்சியின் போதுசெலவிடப்பட்டது 7 கோடி ரூபாய். ஆனால் அதிமுகஆட்சியில் செலவிடப்பட்டத் தொகை 220 கோடி ரூபாய். அன்றைய திமுகஆட்சியில் 20,626 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடமற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போதுஅதிமுக ஆட்சியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டமாணாக்கர்களின் எண்ணிக்கை 43,586. அன்றைய திமுக ஆட்சியில் எந்த ஒருபுதிய அரசு பொறியியல் கல்லூரியும் நிறுவப்படவில்லை.


ஆனால் தற்போது, அதிமுக ஆட்சியில் 4 புதிய அரசுபொறியியல் கல்லூரிகள், துவங்கப்பட்டுள்ளன. முந்தைய திமுக ஆட்சியில்78,045 பொறியியல் பயிலும் முதல் தலைமுறை மாணாக்கர்களுக்கு மட்டுமேபயிற்சிக் கட்டண விலக்கு வழங்கப்பட்டது. தற்போது எனது அரசால்பயனடைந்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 2,84,609. அப்போது திமுகஆட்சியில் இத்திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகை 149 கோடி ரூபாய். தற்போதுஅதிமுக ஆட்சியில் செலவிடப்பட்ட தொகை 2,268 கோடி ரூபாய்.முந்தைய திமுக ஆட்சியில் நிறுவப்பட்ட அரசு பலவகை தொழில் நுட்பக்கல்லூரிகள் 8. தற்போது அஇஅதிமுக ஆட்சியில் நிறுவப்பட்டுள்ளவை 11.அன்றைய திமுக அரசால், புதிய பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்குஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் 568. தற்போது எனது அரசால் ஒப்பளிக்கப்பட்டபணியிடங்கள் 1,153. இவ்வாறு அவர் பேசினார்.

sakthi at 20:23

GENUINENESS கட்டண விபரங்கள்

சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கண்டறிய உதவும் கட்டண விபரங்கள்

       இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக் பழகங்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கண்டறிய உதவும் கட்டண விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.





Friday, 22 January 2016


தொடக்கக்கல்வி - ஆசிரியர்களின் அனைத்து கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கண்டறிய இயக்குனர் உத்தரவு

ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவங்கள் வெளியீடு

தரும புரி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட போலி ஆசிரியர்கள் பிரச்னையைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளிலும் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கண்டறிய வேண்டி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப்பணியில் உள்ளவர்கள் PASSPORT எடுக்கும் முறை

அரசு பணியில் உள்ளவர்கள் Passport அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பே அவரவர் appointment authority க்கு மேற்காணும் இணைப்பு படிவத்தை அனுப்பிவிட வேண்டும்

அரசு பணியில் உள்ளவர்கள் Passport அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பே அவரவர் appointmentauthority க்கு மேற்காணும் இணைப்பு படிவத்தை அனுப்பிவிட வேண்டும்.அதன் அசல் கடிதம் ஒன்றை (செராக்ஸ் கூடாது) passport அலுவலகம் செல்லும் போது அங்கு கொடுக்க வேண்டும். இதில் பெறுநர் முகவரி pin code உட்பட முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.பெறுநர் பெயரும் தெரிந்திருக்க வேண்டும்.

அடைவுத்தேர்வு-சரியான அளவுகோலா?

அடைவுத் தேர்வு - மாணவர்களின் கல்வி தரத்தைக் காணும் ஓர் அளவு கோலா?

அங்கன்வாடி பணியாளரகள்-விண்ணப்பங்கள் வரவேற்பு

அங்கன்வாடி பணியாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

அங்கன்வாடி மற்றும் குழந்தைகள் காப்பகப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் அங்கன்வாடி மற்றும் குழந்தைகள் காப்பகப் பணியாளர் (மாத சம்பளம் ரூ.3ஆயிரம்), காப்பக உதவியாளர் (மாத சம்பளம் ரூ.1,500) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காப்பகப் பணியாளர் பணியிடத்துக்கு வயது 25 முதல் 35 வயது வரை, விதவை மற்றும் ஆதரவற்றவராக இருந்தால் 40 வயது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காப்பக உதவியாளர் பணியிடத்துக்கு 20 வயது முதல் 40 வயது வரை, விதவை மற்றும் ஆதரவற்றவராக இருந்தால் 45 வயது, தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.உரிய விண்ணப்பங்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இணையதளமான www.icds.tn.nic.in ல் இருந்தும் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதி குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அல்லது தேனாம்பேட்டை, 2/124, தியாகராயா சாலையில் உள்ள இயக்குனர், குழும இயக்குனர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவரை அணுகலாம்.

Thursday, 21 January 2016

CENSUS- RTI மூலம் கேட்கப்பட்ட கேள்வி

மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) தொடர்பாக RTI மூலம் கேட்கப்பட்ட கேள்வி

வாடகை வீட்டில் குடியிருக்க விரும்பாத அரசு ஊழியர்கள்

வாடகை வீட்டில் குடியிருக்க விரும்பாத அரசு ஊழியர்கள்

''அரசு ஊழியர்கள், சொந்த வீடு கட்ட, தமிழக அரசு தேவையான கடன் வழங்கியதால், வாடகை வீட்டில் குடியிருக்க, அவர்கள் விரும்புவதில்லை,'' என, வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

மார்க்சிஸ்ட் - டில்லிபாபு: அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, வாடகை குடியிருப்பு கட்டிக் கொடுக்க அரசு முன்வருமா?

வைத்திலிங்கம்: ஆறாவது ஊதியக் குழு மூலம் கிடைத்த சம்பள உயர்வு மற்றும் தமிழக அரசு வழங்கிய வீட்டுக்கடன் ஆகியவற்றால், அரசு ஊழியர்கள், சொந்த வீடு கட்டி குடியேறி வருகின்றனர். வாடகை வீட்டில் குடியிருக்க, அவர்கள் விரும்புவதில்லை. இதனால், சென்னை, கோவையைத் தவிர, பிற பகுதிகளில், அரசின் வாடகைக் குடியிருப்புகள் காலியாக உள்ளன. எனவே, புதிதாக வாடகை குடியிருப்புகள் கட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்படவில்லை.இவ்வாறு விவாதம் நடந்தது.

தமிழகத்தின் நிதிச்சுமை அதிகரிப்பு

தமிழகத்தின் நிதிச் சுமை அதிகரிப்பு!

பொருளாதாரத் தேக்க நிலை, வரி வருவாய் குறைவு ஆகிய காரணங்களால் தமிழகத்தின் நிதிச் சுமை மேலும் அதிகரித்துள்ளது என்று ஆளுநர் ரோசய்யா தெரிவித்தார்.
 இது தொடர்பாக ஆளுநர் உரையில் கூறப்பட்டிருப்பதாவது:
 14-ஆவது நிதிக் குழுவின்
பரிந்துரைகளால் மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வில் தமிழகத்தின் பங்கு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதகமான சூழல், தமிழகத்தின் நிதி நிலையை மோசமாகப் பாதித்துள்ளது.
 காரணங்கள் என்ன? தொடரும் பொருளாதாரத் தேக்க நிலை, சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவால் பெட்ரோலியப் பொருள்களிலிருந்து கிடைக்கும் வரி வருவாய் குறைந்து வருவது போன்ற பாதிப்புகளுடன், மத்திய அரசுத் திட்டங்களின் நிதிப் பங்களிப்பு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களும் தமிழக அரசின் நிதிச் சுமையை மேலும் கூடுதலாக்கியுள்ளன.
 மத்திய அரசுக்கு வலியுறுத்தல்: பொருள்கள், சேவைகள் மீதான வரியை நடைமுறைப்படுத்துவது குறித்து உறுதியான, தெளிவான நிலைப்பாடுகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த வரியை நடைமுறைப்படுத்த அரசியல் சட்டத் திருத்த முன்வடிவு கொண்டுவருவதற்கு முன்பாக, இழப்பீடு ஈடு செய்யும் காலம், இழப்பினைக் கணக்கிடும் முறை, நிகர வருவாய் இழப்பு ஏற்படாத வரி அளவு, குறைந்தபட்ச வரி கட்டுதல், வரிவிலக்கு அளிக்க வேண்டிய பொருள்கள், மாநிலங்களுக்கு இடையேயான வரி விதிப்பு முறை, இரட்டை நிர்வாகக் கட்டுப்பாடு குறித்த தெளிவு ஆகிய முக்கிய இனங்களின் மீது ஒருமித்த கருத்தை எட்டிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நிதி சுயாட்சி-நிரந்தர வருவாய் இழப்பு ஆகியன குறித்த மாநிலங்களின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
 முதன்மை மாநிலமாக...: நிதிச் சுமை அதிகரித்துள்ள போதிலும் வளர்ச்சியிலும், பொருளாதார வளத்திலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்திட வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை எட்டிட வேண்டும் என்ற நோக்கில், அனைத்து நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் தமிழக அரசு தொய்வின்றி செம்மையாகச் செயல்படுத்தி வருகிறது என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத சார்பு விடுமுறை தொடர்பான விளக்கங்கள்

மதசார் விடுப்பு தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள மதசார் விடுப்புகள்



வகுப்பறைகளில் வண்ணச்சித்திரங்கள் வரைய உத்தரவு

    அகஇ- முதலமைச்சர் அறிவிப்பு.

தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் விதமாக,
வகுப்பறைகளில் உடனடியாக வண்ணச்சித்திரங்கள் வரைய இயக்குனர் உத்தரவு.
பள்ளிகள் தேர்ந்தெடுத்தல் மற்றும் செலவின விபரங்கள் அறிய,

இங்கே Click பண்ணவும்,

CLASSROOM WALL PAINTING for G.O downloading

Wednesday, 20 January 2016

வாக்காளர் பட்டியலில் உங்கள் விபரங்களை சரிபார்த்தல்

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் மற்றும் இதர விபரங்களை சரிபார்க்க,

Click here,

YOUR VOTERS LIST  ......downloading

படிப்பை மட்டும் கொடுங்கள்

படிப்பை மட்டும் கொடுங்கள் - தலையங்கம்

எத்தனை கனவுகள்! ஆசைகள்! பிஞ்சு கரம்பிடித்து பிள்ளையை பள்ளிக்கூடத்தில் சேர்த்த முதல் நாளிலேயே பெற்றோர்கள் கனவு கோட்டை கட்டி விடுகிறார்கள்.அந்த கோட்டையில் ராஜாவாக, ராணியாக, மந்திரியாக, உயர்ந்த பதவி வகிக்கும் அதிகாரியாக... இன்னும் இப்படி பலபல தோற்றங்களில் அந்த பிள்ளைகள் வலம் வருவது போல் கனவு காண்கிறார்கள்.தங்கள் சுகங்களையும்,

வேதனைகளையும் தியாகம் செய்து பிள்ளைகளின் சந்தோஷத்தை மட்டுமே தங்கள் சந்தோஷமாக தாங்கி வாழ்கிறார்கள். படிப்பின் ஒவ்வொரு கட்டத்தையும் அவர்கள் தாண்டும் போது மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி வாசலில் கால் வைத்ததும் அந்த மாணவனும் பல கனவுகள் காண்கிறான்.காரணம், அங்குதான் அவனது எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் அந்த டீன் ஏஜ் பருவம் என்பது ‘பஞ்சு’ மாதிரி. எங்கெல்லாம் காற்று வீசுகிறதோ அங்கெல்லாம் பஞ்சு பறந்து கொண்டே இருக்கும். அதனால் தான் இந்த பருவத்தில் கட்டுப்பாடு அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால் தற்காலத்து கல்லூரி சூழ்நிலைகள் கவலை அளிப்பதாக உள்ளன. தாதாக்களை போல் நடுரோட்டில் மோதி கொள்வது... அரிவாள் கத்தியுடன் கல்லூரிக்கு வருவதெல்லாம் அதிகரித்து வருகிறது.இதுக படிக்கவா போவுது...? என்று பார்ப்பவர்கள் வெறுக்கும் அளவுக்கு மாணவர்களின் செயல்பாடு இருப்பது வேதனையானது.வாழ்க்கையில் சாதிக்கும் மாணவர்களை விட வாழ்க்கையை தொலைக்கும் மாணவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.அதற்கு காரணம் கல்லூரி களம் கல்விக்களமாக மட்டும் இல்லை என்ற குறைபாட்டை ஏற்றே ஆக வேண்டும். அரசியல் கட்சிகள் கையில் எடுக்கும் அத்தனை போராட்டங்களையும் மாணவர்களும் கையில் எடுக்கிறார்கள். போராட்டங்களை முன்னெடுத்து செல்லும் கட்சிகளுக்கு ஆதரவு தேவை என்பதால் போராட்ட களத்தில் குதிக்கும் மாணவர்களை உசுப்பேற்றி விடுகிறார்கள்.மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள் என்று அவர்களுக்கு கொம்பு சீவிவிட்டு அவர்களுக்கு ஆதரவான தளங்களை கல்லூரி வளாகங்களிலேயே அமைத்து விடுகிறார்கள். ஒவ்வொரு அமைப்புக்கும் ஒரு சித்தாந்தம் இருக்கும். அதில் ஊறிப்போகும் மாணவர்கள் படிப்பை உதறிவிட்டு அந்த சித்தாந்தங்களை பரப்புவதில்தான் அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள்.ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோஹித் என்ற மாணவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு பல திரைமறைவு நிகழ்வுகளையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. ‘தலித்’ மாணவருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று அரசியல் கட்சிகள் வரிந்து கட்டுகின்றன. நம்மை பொறுத்தவரை மாணவர்கள் என்றால் மாணவர்கள் அவ்வளவுதான். அவர்களுக்குள் சாதி, மத, இன பேதம் தேவையற்றது. அனைவரும் மாணவர் இனம் என்ற ஒரே பட்டியலில் இருப்பவர்கள். அப்படித்தான் பழகுகிறார்கள்.ஆனால் உருவாகும் பல அமைப்புகள் தான் அவர்களுக்குள் பிரிவினையையும் உருவாக்குகின்றன என்பது மறைக்க முடியாத உண்மை.மாணவரின் சாவுக்கு மந்திரி உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அது விசாரணை வளையத்துக்குள் இருப்பதால் கண்டிப்பாக உண்மை வெளிவர வேண்டும்.அதே நேரத்தில் அந்த மாணவரின் மரண சாசனம் பல கேள்விகளை எழ வைக்கிறது. தலித் மாணவர்கள் கல்லூரியில் சேரும்போதே கொஞ்சம் விஷத்தையும் கொடுத்துவிடுங்கள் என்று குமுறிவிட்டு எனது மரணத்துக்கு நானே காரணம் என்று சோகம் நிறைந்த தனது வாழ்க்கையை கண்ணீரோடு குறிப்பிட்டு இருக்கிறார்.இன்னொரு கடிதத்தில் அவரும் அவரது நண்பர்களும் இணைந்திருந்த அமைப்பில் இருந்து அவ்வளவு எளிதாக வெளியேற இயலாது என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்கு படிப்பைவிட அமைப்பின் மீது கொண்ட ஈடுபாடு அதிகமாக இருந்துள்ளது. அறிவியலை நேசித்த ஒரு மாணவனின் வாழ்க்கை இப்படி பாதியிலேயே முடிந்து போய்விட்டது! வருங்கால விஞ்ஞானியை நாடு இழந்து இருக்கிறது!இப்போது அவரது மரணமும் அரசியலாகி இருக்கிறது. தலித் மாணவர்களை குறிவைத்து பழிவாங்குவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. யாகூப் மேமன் தூக்கில் போடப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். பிரிவினை உணர்வை வளர்க்கிறார்கள் என்று பாரதிய ஜனதா சொல்கிறது. ஆக, மாணவர்களை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் நன்றாக பயன்படுத்தி வருகின்றன என்பது மட்டும் தெளிவாகி விட்டது. படிப்பை தவிர வேறு எந்த செயலிலும் மாணவர்கள் ஈடுபட வேண்டாம் என்று எந்த அரசியல் கட்சியும் சொல்வதில்லை. படிக்கும் காலத்தில் அமைப்புகளில் தீவிரமாக இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் எல்லை மீறி செல்வார்கள் என்பதற்கு கெஜ்ரிவால் மீது மை வீசிய பாவனா ஒரு சாட்சி. படிப்பு இருந்தால் சாதி தலை தூக்காது என்பதுதானே யதார்த்தம். சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு மெத்த படித்தவர்கள் கலப்பு மணம் புரிந்து கூடி வாழ்வதும், நட்பு பாராட்டி கூடி வாழ்வதும் கண்கூடான விஷயங்கள். எனவே, படிப்புக்குத்தான் முக்கியத்துவம்

இளம் வயதைசேர்ந்த 60 லட்சம் தலித்துகள் படிப்பில்லாமல் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அதைப்பற்றி கவலைப்படுவது யார்? படிக்கிற காலத்தில் படிப்பு என்பது மட்டுமே மாணவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதுதான் அவர்களின் உயர்வுக்கு வழிகாட்டும்.

மாவட்டங்களை நினைவில் கொள்ள எளிய கதை


மாவட்டங்கள் கதை -

இரு பதிவுகளின் இணைப்பு பாருங்கள் பகிருங்கள் குமாரி என்ற பெண்னின் பள்ளியில் டூர் போகிறார்கள் ..அதற்காக காலையில் அவசரமாக சோறு சாப்பிடுகிறாள்.அதில் நெல் இருந்து தொண்டையில் சிக்கி விக்க தண்ணிர் தூக்கி குடிக்கிறாள் அவ அம்மா உனக்கு என்ன விருதா தரப்போகிறார்கள் ,என்றாள் அவ அப்பா இராமநாதன் மதுரை மீனாட்சிக்கும் சிவனுக்கும் தேன் அபிஷேகம் செய்து கொண்டு இருக்கிறார்..திண்ணையில்இருக்கிற அஞ்சு முக விளக்கினில் திரியை திரிச்சு புது எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி சாமி கும்பிட சொன்னார் .கும்பிட்டாள் ,அவ ரோட்டுக்கு வர பக்கத்தில புத்துல இருந்து கோபமா வந்த கருப்பு நிற நாகப்பாம்பு அவ மேல நீல மணி துப்பிச்சு ,இவ பக்கத்தில்இருந்த நாமக்கல்லை எடுத்துஅடிக்க குறி தவறி பெரண்டகொடி மேல விழுது .அவ அப்பா பைக்கில வந்துஸ்கூல் பக்கத்தில் வண்டியை திருப்புற போது திருவாரூர் தேர் வருது .சாமி கும்பிட்டு டூர் கிளம்பினார்கள் டூரில் கடலூர் கடற்கரையில் பானிபூரி சாப்பிட நினைக்க அங்கே ஒரு மாற்று திறனாளி தருமம் கேட்க அவருக்கு இருந்த பணத்தை தருகிறாள் .ஆசிரியர் சேலத்து மாம்பழத்தை கத்தியால் அறிந்து தருகிறார் .பின் திருவண்ணாமலை மலை சுற்றும் போது தடுக்கிவிழுகிறாள் அங்கே பங்க் கடை யில் தொலைகாட்சியில் செய்தி வாசிக்கிறார்கள் .இன்று திருவள்ளுவர் தினம் .காஞ்சிபுரம் கிருஷ்ணன் வேலூர்ஜெயிலில் இருந்து சென்னை ஜெயிலுக்கு மாற்றபடுகிறார் என சொல்கிறார்கள் ......................................................................................................................... குமாரி [1.கன்னியாகுமரி] என்ற பெண்னின் பள்ளியில் டூர் போகிறார்கள் .. அதற்காக காலையில் அவசரமாக நெல்லு சோறு[2.திருநெல்வேலி] சாப்பிடுகிறாள் . விக்க தண்ணிர் தூக்கி குடிக்கிறாள்[3.தூத்துக்குடி] அவ அம்மா உனக்கு என்ன விருதா [4.விருதுநகர்]தரப்போகிறார்கள் ,என்றாள் அவ அப்பா 5.இராமநாதன் 6.மதுரை மீனாட்சிக்கும் சிவனுக்கும்[7.சிவகங்கை] தேன்[8.தேனீ] அபிஷேகம் செய்து கொண்டு இருக்கிறார். .திண்ணையில்[9.திண்டுக்கல்] இருக்கிற அஞ்சு[10.தஞ்சாவூர்] முக விளக்கினில் திரியை திரிச்சு[11.திருச்சி] புது[12.புதுகோட்டை] எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி சாமி கும்பிட சொன்னார் .கும்பிட்டாள் ,அவ ரோட்டுக்கு[13.ஈரோடு] வர பக்கத்தில புத்துல[14.கோயம்புத்தூர்] இருந்து கோபமா வந்த கருப்பு [15.கரூர்]நிற நாகப்பாம்பு [16.நாகப்பட்டினம்]அவ மேல நீல மணி [17.நீலகிரி]துப்பிச்சு ,இவ பக்கத்தில்இருந்த18. நாமக்கல்லை எடுத்துஅடிக்க குறி தவறி பெரண்டகொடி [19.பெரம்பலூர் ]மேல விழுது . அவ அப்பா பைக்கில வந்து ஸ்கூல் பக்கத்தில் வண்டியை திருப்புற[20.திருப்பூர்] போது 21திருவாரூர் தேர் வருது .சாமி கும்பிட்டு டூர் கிளம்பினார்கள் டூரில் 22.கடலூர் கடற்கரையில் பானிபூரி சாப்பிட நினைக்க அங்கே ஒரு மாற்று திறனாளி தருமம் கேட்க அவருக்கு இருந்த பணத்தை தருகிறாள் .[23.தருமபுரி] .ஆசிரியர் 24..சேலத்து மாம்பழத்தை கத்தியால் அறிந்து[25.அரியலூர் ] தருகிறார் .பின் 26.திருவண்ணாமலை மலை சுற்றும் போது தடுக்கிவிழுகிறாள்.[27.விழுப்புரம் ] அங்கே பங்க் கடை யில் தொலைகாட்சியில் செய்தி வாசிக்கிறார்கள் இன்று திருவள்ளுவர் தினம்[28.திருவள்ளூர்] .29.காஞ்சிபுரம் கிருஷ்ணன்[30.கிருஷ்ணகிரி] 31.வேலூர்ஜெயிலில் இருந்து 32.சென்னை ஜெயிலுக்கு மாற்றபடுகிறார் என சொல்கிறார்கள் என் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி சமுகத்திற்கு இந்த மாவட்டங்கள் கதையை அர்பணிக்கிறேன்.மாநிலங்கள் வீடியோ போட்ட போதே மாவட்டத்திற்கும் சொல்லுங்கள் என நண்பர்கள் கேட்டனர் .அவர்களின் ஆணைக்கு இணங்க இந்த பதிவு .

Tuesday, 19 January 2016

TEACHERS GPF ACCOUNT STATUS

ANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOADING/GPF/TPF/CPS சந்தாதாரர்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஆண்டு முழுச்சம்பள விபரங்களை அறியலாம்.
Click here for,
GPF ACCOUNT STATUS downloading.

ANDROID PHONE HEAT ஆகாமல் தடுப்பது எப்படி?

Android ஸ்மார்ட் போன் ஹீட் ஆகுவதை தடுப்பது எப்படி?

Android ஸ்மார்ட் போன் உபயோகிக்கும் அனைவருக்குமே இருக்கும் பொதுவான ஒரு பிரச்சினை தான், தங்களுடைய ஸ்மார்ட் போன் சீக்கிரமாக ஹீட் ஆகி விடுவது. இதற்கு முக்கியமான ஒரு காரணம் அதிகளவான செயலிகள் நமது ஸ்மார்ட் போனில் இருப்பதும் அதே போல் அதிகளவான நேரத்திற்கு தொடர்ந்து ஸ்மார்ட் போனை உபயோகிப்பதும் தான்.இவைகளுக்கு அடுத்த படியாக தரமான பேட்டரியை ஸ்மார்ட் போனில் உபயோகிப்பதும் அதே போல் தரமான மற்றைய உதிரிப்பாகங்களை உபயோகிப்பதும் ஸ்மார்ட் போன் ஹீட் ஆகுவதில் இருந்து தடுக்க உதவுகிறது.
நான் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் சரியாக கையாளும் போது நமது ஸ்மார்ட் போன் ஹீட் ஆக்குவதை தடுத்து கொள்ள முடியும். இதனால் இன்றைய பதிவில் அனைவருக்குமே உதவும் வகையில் ஸ்மார்ட் போன் ஹீட் ஆகுவதை எவ்வாறெல்லாம் தடுத்து கொள்ளலாம் என்று கூறுகிறேன்.


முதலாவதாக ஸ்மார்ட் போன் ஹீட் ஆகுவதை தடுக்கும் மிகச்சிறந்த செயலிகளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இந்த செயளிகலானது உங்கள் ஸ்மார்ட் போனில் எதாவது ஒரு செயலி அதிகளவான Resource-களை பெற்றுக்கொண்டு உங்களது ஸ்மார்ட் போனை ஹீட் ஆக்கிக்கொண்டிறுக்கிறது என்றால் அந்த குறிப்பிட்ட செயலியை கட்டுப்பாட்டிட்க்குள் கொண்டு வர உதவும். அதே போல் ஏதேனும் சிஸ்டம் பிரச்சினையால் உங்கள் ஸ்மார்ட் போன் ஹீட் ஆகிறது என்றால் அவற்றையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உதவுகிறது.

இந்த வேலையை மிகச்சிறப்பாக செய்து முடிக்க உதவுகிறது கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் செயலிகள். இவற்றில் எதாவது ஒரு செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவி உங்களது ஸ்மார்ட் போன் ஹீட் ஆகுவதை தடுத்து கொள்ளுங்கள்.

Cooler Master

CPU Temperature


அடுத்ததாக Cache Partition-ஐ சுத்தப்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட் போன் ஹீட் ஆக்குவதை தடுப்பது எப்படி என்று பார்ப்போம்.

உங்களது ஸ்மார்ட் போனை Switch Off செய்யுங்கள்.

Power Button + Home Button + Volume Up/Down Button போன்றவைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் Recovery Mode-ற்கு செல்லுங்கள்.

அங்கே Wipe Cache Partition என்று இருப்பதை தெரிவு செய்யுங்கள்.

குறிப்பு - Volume Up/Down பட்டன்களை பயன்படுத்தியே மேலும் கீழும் செல்ல முடியும். அதே போல் Power பட்டன் மூலம் தெரிவுகளை OK செய்ய முடியும்.

Wipe Cache Partition என்பதை தெரிவு செய்து Power பட்டன்-ஐ அழுத்தவும்.


அடுத்து reboot system now என்பதை தெரிவு செய்யுங்கள்.

இப்போது உங்களது ஸ்மார்ட் போன் Reboot ஆகி மறுபடியும் On ஆகும்.

அவ்வளவு தான். உங்களது ஸ்மார்ட் போனில் Cache Partition ஆனது சீராக்கப்பட்டு விட்டது. இப்போது உங்களது ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் போது முன்னரிலும் பார்க்க ஹீட் ஆகுவது குறைந்திருப்பதை உங்களால் உணர்ந்து கொள்ள கூடியதாய் இருக்கும்.