Monday, 29 February 2016

மார்ச் மாத முக்கிய தினங்கள் , நிகழ்வுகள், பிரபலங்கள் பிறந்த தினங்கள்,நினைவு தினங்கள் மற்றும் சுதந்திரம் கொண்டாடும் நாடுகள்...

மார்ச் மாத விவரம் :

ரோமானியர்களின் கடவுள் "மார்ஸ்' ஆவார். அதன் அடிப்படையில் அமைந்த பெயர் ""மார்ச்'' மாதமாகும்.
ரோமானியர்களின் தலைவர், ரோமுலஸ் என்பவர். மார்ச் மாதத்தை முதல் மாதமாகச் செய்தார். ஆனால், கிரிகோரியன் காலண்டர் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, மூன்றாவது மாதமாகக் கணக்கிட்டு இம்மாதத்திற்கு 31 நாட்களாக்கினார்கள்.

முக்கிய தினங்கள் | மார்ச் மாதம்...

3 உலகவன உயிரின நாள்.
4 தேசிய பாதுகாப்பு தினம்.
8 சர்வதேச எழுத்தறிவு தினம்.
8 உலக மகளிர் தினம்.
12 இந்திய துணை ராணுவ தினம்.
12 தண்டி யாத்திரை தினம்.
13 உலக சிறுநீரக விழிப்புணர்வு தினம்.
15 உலக நுகர்வோர் தினம்.
15 உலக ஊனமுற்றோர் தினம்.
16 தடுப்பூசி தினம்.
18 இந்திய தளவாடங்கள் தினம்.
20 உலக கதை சொல்லும் நாள்.
20 உலக குருவிகள் தினம்.
21 உலக காடுகள் தினம்.
21 உலக வனவிலங்குகள் தினம்.
21 நிறவெறி ஒழிப்பு தினம்.
21 இரவும் பகலும் சரி சமமாக உள்ள நாள்.
22 உலக தண்ணீர் தினம்.
23 உலக வானிலை தினம்.
23 பகத்சிங் நினைவு தினம்.
24 உலக காசநோய் எதிர்ப்பு தினம்.
26 வங்கதேச தினம்.
27 தேசிய திரையரங்கு தினம்.
31 ஆண்டு கணக்கு முடிக்கும் நாள்.

முக்கிய நிகழ்வுகள்:

1, 1917 இந்திய - தபால் நிலையங்களில் சேமிப்பில் பத்திரமுறை தொடங்கப்பட்டது.
3, 1876 அமெரிக்காவில் அலெக்சாண்டர்
கிரஹாம்பெல் - தொலைபேசிக்குக்
காப்புரிமை பெற்றார்.
3, 2012 இந்திய ராணுவத்துக்கு, புதிய தலைமை
தளபதி - லெப்டினென்ட் ஜெனரல்
விக்ரம்சிங் நியமிக்கப்பட்டார்.
4, 1931 காந்திஜி சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.
4, 1997 அமெரிக்க அதிபர் கிளிண்டன்,
குளோனிங் முறையில் மனிதனைப்
பிறப்பிக்கச் செய்யும் ஆராய்ச்சிக்கு அரசு நிதி உதவி செய்யாது என்றார்.
4, 2012 பிகாரில், உலகக் கோப்பை கபாடி
பெண்கள் பிரிவில் இந்திய அணி
தங்கப்பதக்கம் வென்றது.
5, 1979 வியாழனின் துணைக் கிரகமான "சுயோ'வில் எரிமலை இருப்பதை
அமெரிக்காவின் வாயேஜர்-1
கண்டுபிடித்தது.
5, 2012 ரஷ்யாவில் 3-ஆவது முறையாக புதின் அதிபர் ஆனார்.
6, 1967 அண்ணாவுடன் 9 பேர் கொண்ட மந்திரி சபை
தமிழகத்தில் பதவி ஏற்றது.
6, 2004 கும்பகோணத்தில் மகாமகம் - பல லட்சம் பேர்
புனித நீராடல்.
8, 1848 பிரான்ஸ் - புருஸ்ஸியனில்
அரசன் லுயிஸ்பிளாங்க்.
பெண்களுக்கு அரசவைக்
குழுவில் இடம் அளித்தான். வாக்குரிமை அளிக்கவும்
ஒப்புதல் கொடுத்த நாளே
மகளிர் தினம்
அனுசரிக்கப்படுகிறது.
9, 1790 உலகில் முதன்முதலாக,
பிரான்ஸில் பொது மக்களின் பார்வைக்காக பாரிஸ் நகரில் மிருகக் காட்சி சாலை திறந்து வைக்கப்பட்டது.
9, 2012 ராகுல் திராவிட் (இந்தியாவின் சுவர் எனப்படும் 16 ஆண்டுகள் கிரிக்கெட்டில் விளையாடியவர். சர்வதேச கிரிக்கெட்
போட்டியிலிருந்து ஓய்வு.
11, 1889 பிரான்ஸில் பாரிஸ் ஈகிள் டவர், காஸ்டவ் ஈஃபிளில் என்பவரால் கட்டப்பட்டுத் திறந்து
வைக்கப்பட்டது.
12, 1918 ரஷ்யாவில் மாஸ்கோ
தலைநகரமானது. முன்னர் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்
தலைநகராயிருந்தது.
12, 1969 இந்திரா காந்தி தலைமையில், தமிழகத்தில் கல்பாக்கத்தில் அணு உலை தோற்றுவிக்கப்
பட்டது.
13, 1781 "யுரேனஸ்' கோள் "வில்லியம் ஷர்க் செல்' என்பவரால்
கண்டுபிடிக்கப்பட்டது.
13, 2012 ஸ்பெயினில் கருவிலுள்ள
குழந்தைக்கு நுரையீரல்
ஆப்ரேசன் வெற்றிகரமாகச் செய்தார்கள்.
15, 1986 நுகர்வோர் பாதுகாப்புச்
சட்டம் அமலாக்கப்பட்டது.
16, 1960 அமெரிக்கா, நீல் ஆம்ஸ்ட்ராங் பயணித்த ஸ்கார்ட என்ற விண்கலத்துடன் ஜெமினி ஆ என்ற விண்கலத்தை இணைத்தன. முதன்முதலாக
2 விண்கலங்கள்
விண்வெளியில் இணைந்தன.
16, 2012 ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கெதிரான
போட்டியில் சச்சின் 114 ரன்கள் எடுத்து 100-ஆவது சதம் எடுத்து உலக சாதனை படைத்தார்.
17, 1958 கப்பல் போக்குவரத்தை
சீர்செய்யும் விதமாக "சர்வதேச கப்பல் கழகம்'
ஏற்படுத்தப்பட்டது.
17, 1988 இந்தியாவில் செயற்கைக்கோள் ஐ.த.ந. ஐஅ ஏவப்பட்டது.
18, 2010 உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் சுகன் நரஸ் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
19, 1939 இந்தியாவில், சென்னை
அயனாவரத்தில் முதன்முதலாக பால் பண்ணை
தொடங்கப்பட்டது.
19, 2003 அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஈராக் மீது போர் நடத்த உத்தரவிட்டார்.
27, 2010 ஒடிசாவில் ஒரே நாளில் பிருத்வி-2 மற்றும் தனுஷ்
ஏவுகணைகள் சோதனை வெற்றி.
28, 1978 தமிழகத்தில் ஆஸ்தான
கவிஞராக கண்ணதாசன்
நியமனம்.
28, 1995 தமிழகத்தைச் சார்ந்த
அருண்பாலாஜி.
தலைமன்னாருக்கும்
தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள 32 கி.மீ. தூரத்தை நீந்தி சாதனை செய்தார்.
29, 1999 உத்திரப் பிரதேசத்தில்
நிலநடுக்கத்தில் 85 பேர் பலி. ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மக்கள் காயமடைந்தனர்.
சொத்துகள் சேதம்.
30, 1870 அமெரிக்க அரசியல்
சட்டத்தில் கறுப்பு - வெள்ளை பாகுபாடு இன்றி "குடியுரிமை' பெற்றுள்ள எல்லோருக்கும் "வாக்குரிமை' அளிக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
30, 1954 தமிழக முதல்வராக
கே. காமராஜ் பதவி ஏற்றார்.
30, 2012 இந்தியா, பிரமோஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாகச் செய்தது.
31, 1889 பிரெஞ்சு - பாரிஸில் ஈபிள் டவர் கட்டி முடிக்கப் பெற்றது.
31, 2001 சச்சின் டெண்டுல்கர்
10,000 ரன்கள் எடுத்து
கிரிக்கெட் உலகில் உலக சாதனை படைத்தார்.
31, 2002 தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் மின் உபயோகத்துக்காக
அணுஉலை அமைக்கும் பணி ஆரம்பம் ஆனது.

மார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் :

2, 1935 குன்னக்குடி வைத்தியநாதன் - வயலின் கலைஞர், திரைப்பட இசையமைப்பாளர்.
3, 1847 அலெக்சாண்டர் கிரஹாம்பெல் - தொலைபேசி கண்டுபிடித்த விஞ்ஞானி.
3, 1941 பங்காரு அடிகளார் - மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம்.
6, 1475 மைக்கேல் ஆஞ்சலோ - உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர்.
6, 1937 வாலண்டினா - ரஷ்ய விண்வெளி
வீராங்கனை.
7, 1919 எம்.என். நம்பியார் - தமிழ் திரைப்பட
நடிகர்.
9, 1454 அமெரிக்கோ வெஸ்புகி - அமெரிக்காவைக் கண்டறிந்தவர். அவர் பெயரிலேயே அது வழக்கத்தில் உள்ளது.
9, 1934 யூரி காகரின் - ரஷ்யர் - முதன்முதலாக விண்வெளியில் பயணம் செய்தவர்.
10, 1957 ஒசாமா பின்லேடன் - அமெரிக்கா
இரட்டைக் கோபுரம் இடிபடக்
காரணமாக இருந்த தீவிரவாதி.
13, 1733 ஜோசப் பிரிஸ்ட்லி ஆக்ஸிஜனைக்
கண்டறிந்த விஞ்ஞானி.
13, 1913 சக்தி கிருஷ்ணசாமி - நாடக, திரைப்பட வசனகர்த்தா.
14, 1879 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நோபல் பரிசு பெற்ற உலகம் போற்றும் விஞ்ஞானி.
16, 1750 கரோலின் ஹெர்ஷல் - வானியல்
விஞ்ஞானி.
17, 1920 முஜிபுர் ரஹ்மான் - கிழக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபர்.
17, 1962 கல்பனா சாவ்லா - விண்வெளி சாதனை வீராங்கனை.
17, 1990 சாய்னா நேவால் - பேட்மின்டன்
வீராங்கனை.
19, 1933 குமரி அனந்தன் - முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர்.
21, 1923 பொள்ளாச்சி என். மகாலிங்கம் - தொழில் அதிபர், கல்வியாளர்.
21, 1934 வேத் மேத்தா - கண் பார்வையற்றவர், எழுத்தாளர், பத்திரிகையாளர்.
23, 1893 ஜி.டி. நாயுடு - தமிழக விஞ்ஞானி.
21, 1921 லட்சுமி (டாக்டர் திரிபுரசுந்தரி) - தமிழக அரசு பரிசு பெற்ற எழுத்தாளர்.
24, 1923 ப.ங.ந. என்ற ப.ங. சௌந்தர்ராஜன். பக்தி, திரைப்படப் பாடகர்.

நினைவு தினங்கள் :

2, 1949 கவிக்குயில் சரோஜினி நாயுடு.
9, 1911 ஜான் பென்னிகுவிக் - முல்லைப் பெரியார் அணை கட்டிய பொறியாளர்,
ஆங்கிலேயர்.
9, 1994 தேவிகாராணி ரோரிச் - இந்தி திரைப்பட முதல் நடிகை.
10, 1897 சாவித்ரிபாய் புலே. பெண் கல்வித்
திட்டம் கொண்டு வந்த சமூக சேவகி.
14, 1883 கார்ல் மார்க்ஸ் - கம்யூனிஸ்ட் கொள்கை உருவாக்கியவர்.
19, 1998 உ.ங.ந. நம்பூதிரிபாட் - கேரள
முன்னாள் முதல்வர்.
28, 1948 தீரர் சத்யமூர்த்தி - காமராஜரின் குரு,
சுதந்திரப் போராட்ட வீரர்.


சுதந்திரம் கொண்டாடும் நாடுகள் :

1 - போஸ்னியா
6 - கானா
11- லிதுவேனியா
12 - மொரீஷியஸ்
20 - துனிஷியா
21 - நமீபியா
25 - கிரீஸ்
26 - வங்காளதேசம்



ஐ.ஏ.எஸ்., தேர்வு 'இன்டர்வியூ' இனி அழைப்பு கடிதம் வராது

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, இனிமேல்,நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது என்றும், மாறாக, தேர்வாணையத்தின் இணைய தளத்தில், 'இ - சம்மனை' டவுண்லோடு செய்து கொள்ளலாம் என்றும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான தேர்வை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் நடத்துகிறது.


முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, இதுவரை, கடிதம் மூலம், நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை மாற்றி, இணைய தளம் மூலம், அழைப்புக் கடிதம் அனுப்ப, யு.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.நடப்பு ஆண்டுக்கான நேர்முகத்தேர்வு, மார்ச், 8ம் தேதி முதல் துவங்க உள்ளது.என்ன செய்ய வேண்டும்?:நேர்முகத்தேர்வுக்கு இனிமேல், அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது. மாறாக, தேர்வர்கள், மின்னணு முறையிலான அழைப்பாணையை, தேர்வாணையத்தின், www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து, 'டவுண்லோடு' செய்ய வேண்டும்.அழைப்புக் கடிதத்தை, 'டவுண்லோடு' செய்ய முடியாவிட்டால், அதுபற்றி, உடனடியாகவோ அல்லது நேர்முகத் தேர்வுக்கு, ஐந்து நாட்களுக்கு முன்போ, தேர்வாணையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென, யு.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
யார் யார் இரத்த தானம் செய்யலாம்?

நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண், பெண்.

18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.

குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.

இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்.
எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்?

ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும்,
பெண்கள்
நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.

இரத்ததானம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

10 நிமிடம்.

இரத்த தானத்திற்குப் பிறகு எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்?

20 நிமிடம்.

இரத்த தானத்தில் எவ்வளவு இரத்தம் எடுக்கப்படுகிறது?

350 மில்லி.

(நம் உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது)
எடுக்கப்படுகிற
இரத்தம் திரும்ப உடலில் உற்பத்தி ஆகிவிடும்.

இரத்த தானத்திற்காக எடுக்கப்பட்ட இரத்தம் எவ்வளவு நாள் கழித்து உடலில் உற்பத்தி ஆகும்?

10 லிருந்து 21 நாட்களில்.

இரத்த தானம் ஏன் கொடுக்க வேண்டும்?

நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள் தான் உயிரோடு இருக்கும்.

பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நீங்கள் இரத்தம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் செயல்.
ஆக அழிந்து பின் திரும்ப வரப்போகிற ஒன்றை மற்றொருவருக்குக் கொடுத்து
உயிர் காப்பது
நல்லதுதானே?

இரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன?

நன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது.
தானம் செய்வதற்கு முன் மோர் போன்ற திரவங்களைக் குடிப்பது நல்லது.
சின்னச்சின்ன உடல் நலக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

உதவிக்கு கீழே கொடுக்கப்பட்ட லிஸ்ட்டை பயன்படுத்துங்கள்.

சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு _ கொடுக்கலாம்.

 ஆஸ்துமா _ மூச்சுத்திணறல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்கலாம்.

ஆஸ்துமாவிற்காக கார்டிஸோன் மருந்து சாப்பிடுகிறவர்கள் _ வேண்டாம்.

குழந்தை பிறந்த பிறகு 6 மாதம் ஆன தாய்மார்கள் _ கொடுக்கலாம்.

 அபார்ஷன் ஆனவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

குழந்தைக்குப் பால் கொடுப்பவர்கள் _ பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு கொடுக்கலாம்.

பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

 சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 3 மாதத்திற்குப் பிறகு கொடுக்கலாம்

பல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 1 மாதம் கழித்துக் கொடுக்கலாம்

 பல்பிடுங்கிய பின் _ 3 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

 இதய நோய்கள் _ வேண்டாம்.

 இரத்த அழுத்த நோய் _ கொடுக்கும்போது இரத்த அழுத்தம் சரியான அளவில் இருந்தால் கொடுக்கலாம்.

வலிப்பு நோய் _ மருந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் வேண்டாம்.
மருந்து நிறுத்தி 2 வருடங்கள் வலிப்பு இல்லை என்றால் கொடுக்கலாம்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் _ 4 வாரங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

 நாய்க்கடி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்றவர்கள் _ 12 மாதங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

மஞ்சள் காமாலை ஙி,சி வந்தவர்கள் _வேண்டாம்.

மலேரியா _ 3 மாதங்களுக்குப் பிறகு.

 காசநோய் _ 5 வருடங்கள் வேண்டாம்.
மாத்திரைகளை சில காரணங்களுக்காகச் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

 சாலிசிலேட் மாத்திரையை கடைசி மூன்று நாட்கள் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.

 ப்ராஸ்டேட் பிரச்னைக்காக ஃபினஸ்டிரேட் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் கொடுக்க வேண்டாம்.

 நீரிழிவு மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்தக்குழாய் கோளாறு இல்லை என்றால் கொடுக்கலாம்.

இன்சுலின் போட்டுக் கொள்கிறவர்கள் கொடுக்க வேண்டாம்.

ஆன்டிபயாடிக் மாத்திரை சாப்பிட்டால் 5 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

இதயக் கோளாறு மாத்திரைகள், வலிப்பு நோய் மாத்திரைகள், தைராய்ட் நோய் மாத்திரைகள், இரத்தம் உறையாமலிருக்க டிஜிடாலிஸ், டைலான்டின் போன்ற மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக் கூடாது.

இரத்ததானம் கொடுத்தபின் என்ன செய்யக் கூடாது?

 நல்ல திரவ உணவை அருந்துங்கள்.
ஹெவி உணவு வேண்டாம்.

 ஒரு மணி நேரத்திற்கு புகை பிடிக்கக் கூடாது.
3. 6 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது.

 இரத்தம் எடுத்த இடத்தில் அழுத்தி வைக்கப்பட்ட பஞ்சை 5 மணிநேரம் எடுக்க வேண்டாம்.


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, குறைந்த செலவிலான ஏர்செல் நிறுவனத்தின் CUG திட்டம்


AIRCEL POST PAID CORPORATE CUG PLAN FOR Govt. STAFFS and TEACHERS:
PLAN NATIONAL SME @ Rs149,
(Service Tax 14% Extra)

  • CUG CALLS UNLIMITED FREE
  • 400 MIN FREE LOCAL TO TN MOBILE
AFTER FREE MINUTES,CALL RATE:
  • ALL NETWORK TN MOBILE 30p Min
  • LOCAL LANDLINE 40p Min
  • STD ALL INDIA 50p Min
  • MOBILE NUMBER PORTABILITY Fecility Available.
  • PREPAID TO POSTPAID MIGRATION Fecility Available.
  • DEPOSIT Rs.250 only.
  • NO ACTIVATION FEE
  • 250 AIRCEL SMS FREE
  • 250 OTHER SMS 10 PAISE ONLY.
  • EBILL FECILITY AVAILABLE.
  • One Govt Employee can get 3 sims for relatives/Family Members/Friends. These sims are also covered in CUG.