Friday, 12 February 2016

ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம் அறிவிப்பு.

நமது கோரிக்கைகளை வென்றெடுக்க தொடர் வேலைநிறுத்தம் ஒன்றே தீர்வு..
16-ம் தேதிக்கு பிறகு களம் காண கால அவகாசம் இல்லை..
அரசின் சூழ்சிக்கு நமது கோரிக்கைகள் கேளிக்கைகளாய் போவது தொடர் வாடிக்கை....
பிறகு ஏன் இந்த வேடிக்கை...???

ஜாக்டோ தொடர் வேலைநிறுத்தத்திற்கு முட்டுக்கட்டை போட்ட வண்ணமாகவே உள்ளது..
JACTTO-வில் பள்ளிக் கல்வித்துறை சங்கங்கள் இணைந்துள்ளவரை நாம் (TETOJAC) உடனடியாக எந்த முடிவும் எடுக்க போவதில்லை..
எனவே இன்று TNPTF -ன் மாநில செயற்குழுவில் 15.02.2016 (திங்கள் கிழமை) முதல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசு ஊழியர்களுடன் இணைந்து காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்க முடிவு. 
உடனடியாக ஜாக்டோவை வேலைநிறுத்தத்தில் குதிக்கச் செய்யவே இந்த நெருக்கடிகள்..
பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்தல் மற்றும் மத்திய அரசுக்கு இணையாக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் இவை உட்பட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தம்..
களம் காண்போம்...
வெற்றி பெறுவோம்.
16-ம் தேதிக்கு பிறகாவது தோழமை இயக்கங்கள் தொடர் வேலைநிறுத்தக் களம் காணும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்

Flash News:1062 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

1062 முதுகலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் விரைவில் நியமனம் செய்ய நடவடிக்கை-பள்ளிக்கல்வித்துறை தகவல்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஹால்டிக்கெட்: பிப்., 20 முதல் பதிவிறக்கம் செய்ய உத்தரவு

பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களின் ஹால்டிக்கெட், தேர்வறையில் அமர்வதற்கான திட்ட வடிவம், வருகை பதிவேடு உள்ளிட்ட அனைத்தும், ஆன்லைன் வழியாக, பதிவிறக்கம் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச், 4ம் தேதி முதல், பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. இதில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.


இவர்களுக்கான விண்ணப்பங்களை பெற்றது முதல், பெயர் பட்டியல் திருத்தம் வரை, அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலமாகவே நடந்தது. தற்போது, மாணவர்களுக்கு தேவையான ஹால்டிக்கெட், வருகை பதிவேடு, தேர்வறையில் அமர்வதற்கான திட்ட வடிவம் ஆகியவற்றை, தேர்வுமைய தலைமை ஆசிரியர்கள், தங்களது யூசர் ஐ.டி., வழியாக பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி, 12ம் தேதி முதல், 16ம் தேதி வரை, மையம் வாரியாக தேர்வர்களின் பெயர் பட்டியல், தேர்வறையில் அமர்வதற்கான திட்ட வடிவம், விடைத்தாள் முகப்பு சீட்டு ஆகியவற்றை டவுண்லோடு செய்யவும், பிப்ரவரி 17 முதல், 20 வரை வருகை பதிவேடும், பிப்ரவரி, 20 முதல், 26ம் தேதி வரை, மாணவ, மாணவியரின் ஹால் டிக்கெட்டுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: பள்ளிக் கல்விஇயக்குநர் உத்தரவு

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர் கள் அனைவரையும் அரசு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது:


எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒரு சில மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் அளித்து மாணவர்களை பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பும் நிகழ்வுகள் ஒருசில மாவட்டங்களில் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அனைத்து மாணவர்களும் அரசு பொதுத் தேர்வில் தேர்ச் சிப் பெற தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டி யது ஒவ்வொரு பள்ளித் தலை மையாசிரியரின் கடமையாகும். பொதுத் தேர்வு நெருங்கும் நேரத் தில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்கும் தலை மையாசிரியர்கள் மீது கடுமை யான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட் டத்தில் இது போன்று நிகழ்வுகள் ஏதும் நடைபெறாத வண்ணம் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி கட்டணம் 40 சதவீதம் உயர்வு

தனியார் பள்ளிகளின் அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை, அரசு வெளியிட்டு உள்ளது. இதில், கடந்த ஆண்டை விட, 40 சதவீதம் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க, நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.


இந்த கமிட்டியினரால், பள்ளிகளின் உள்கட்டமைப்பு அடிப்படையில், கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, 2015 - 16 வரை, மூன்று ஆண்டுகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த கல்வி ஆண்டில், கட்டணநிர்ணயம் முடிவதால், அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை, சிங்காரவேலர் கமிட்டி நிர்ணயித்துள்ளது. இந்த கட்டண விவரம், நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.இதன்படி, அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கான பட்டியலில், கடந்த ஆண்டை விட, 20 - 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை விட, சென்னையின் பள்ளிகளில் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுகாதார ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை:பொது சுகாதாரத் துறையில், காலியாக உள்ள, 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில்நிரப்பப்பட உள்ளன. துப்புரவு ஆய்வாளர், டிப்ளமோ படித்தோர் இதில் சேரலாம்.'விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் 23ம் தேதிக்குள், பொது சுகாதார இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், விவரங்களையும் இணையதளத்தில் அறியலாம்' என, பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Friday, 12 February 2016


70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள்முடிவு

மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைத் தொடர்ந்து, வருகிற 2016-17 கல்வியாண்டில் 70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.இதுபோல, மாணவர் சேர்க்கை இடங்களைக் குறைக்க 20-க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.


தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள் குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளாக எம்.சி.ஏ., பி.டெக். தகவல் தொழில்நுட்பம், பி.இ, கணினி அறிவியல், இசிஇ போன்ற கணினிப் படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் வெகுவாகக் குறைந்து வருகிறது.மெக்கானிக்கல் பிரிவு மீது ஆர்வம்: அதேவேளையில், இயந்திரவியல், கட்டுமானப் பொறியியல் படிப்புகள் மீது மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரித்திருக்கிறது.2013-இல் இயந்திரவியல் பிரிவை 28,010 பேரும், மின்னணுவியல் தொடர்பியல் (இசிஇ) பிரிவை 22,449 பேரும், கட்டுமானப் பொறியியல் பிரிவை 15,655 பேரும், கணினி அறிவியல் பிரிவை 13,423 பேரும் தேர்வு செய்தனர். 2014-இல் இயந்திரவியல் பிரிவை 26,770 பேரும், மின்னணுவியல் தொடர்பியல் பிரிவை 19,012 பேரும், கட்டுமானப் பொறியியல் பிரிவை 17,010 பேரும், கணினி அறிவியல் பிரிவை 13,987 பேரும் தேர்வு செய்தனர்.2015-இல் இயந்திரவியல் பிரிவை 26,942 பேரும், மின்னணுவியல் தொடர்பியல் பிரிவை 18,707 பேரும், கட்டுமான பொறியியல் பிரிவை 15,089 பேரும், கணினி அறிவியல் பிரிவை 15,056 பேரும் தேர்வு செய்தனர்.

குறைந்து வரும் ஒட்டுமொத்த மாணவர்கள் சேர்க்கை:

கணினி அறிவியல் படிப்புகள் மீது ஆர்வம் குறைந்து வருவது போல, பொறியியல் கல்லூரிகளில் ஒட்டுமொத்த மாணவர்கள் சேர்க்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. கடந்த 2013-இல் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஒற்றைச்சாளர கலந்தாய்வில் 2,07,141 இடங்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றில் 1,27,838 இடங்கள் நிரம்பின. 79,303 இடங்கள் காலியாக இருந்தன.இதுபோல, 2014-இல் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்தது. அப்போது இடம் பெற்றிருந்த 2,11,589 அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் 1,09,079 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1,02,510 இடங்களில் சேர்க்கை நடைபெறவில்லை. 2015-இல் கல்லூரிகளின் எண்ணிக்கை 574 ஆகக் குறைந்தது.

 மாணவர்கள் சேர்க்கை இல்லாததால், 2 கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன. அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2,02,422-ஆக இருந்தது. இவற்றில் 1,07,969 இடங்கள் மட்டுமே நிரம்பின. 94,453 இடங்கள் காலியாக இருந்தன.மேலும், அண்ணா பல்கலைக்கழக புள்ளிவிவரங்களின்படி, 2015-16 பொறியியல் சேர்க்கை முடிவில், 33 கல்லூரிகளில் 60 சதவீத அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்கள் நிரம்பவில்லை. இந்தக் கல்லூரிகளில் முக்கியத் துறைகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்கள் சேர்க்கையின்றி காலியாக இருந்தன.இந்த நிலை வருகிற 2016-17 கல்வியாண்டிலும் தொடரும் என பொறியியல் கல்லூரிகள் அஞ்சுவதால், பல பொறியியல் கல்லூரிகள் ஏராளமான துறைகளைக் கைவிட முடிவு செய்துள்ளன.அதன்படி, வருகிற 2016-17 கல்வியாண்டில் தமிழகம் முழுவதிலுமிருந்து 30 கல்லூரிகள் 70 துறைகளைக் கைவிட விண்ணப்பித்துள்ளன. இதில் குறிப்பாக, பி.இ. தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல், ஏரோனாட்டிகல் போன்ற துறைகள் அடங்கும். மேலும், 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பல்வேறு துறைகளில் மாணவர்கள் சேர்க்கை இடங்களைப் பாதியாகக் குறைக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன என அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் காரணமாக, கடந்த ஆண்டுகளைப் போலவே பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்களில் நூற்றுக்கணக்கானோர் வேலையை இழக்கும் நிலை உருவாகி இருப்பதாகவும், பல கல்லூரிகள் ஏற்கெனவே இந்த ஆள் குறைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாகவும் தனியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.4 பேராசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி!பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் குறைந்து வருவதைத் தொடர்ந்து, ஆள் குறைப்பு நடவடிக்கைகளை கல்லூரிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து தனியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகவே பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் குறைந்து, மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.இதனால், மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தவும், வருவாய்ப் பாதிப்பை ஈடுகட்டவும் பல்வேறு நடவடிக்கைகளை தனியார் பொறியியல் கல்லூரிகள் மேற்கொண்டு வருகின்றன.பல கல்லூரிகள் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் தலா2 மாணவர்களை ஒவ்வோர் ஆண்டும் சேர்த்தாக வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கின்றன.

குறிப்பாக ஈரோடு, கோவை, திருப்பூர் பகுதிகளில் இந்த நிலை தொடர்கிறது. அவ்வாறுமாணவர்களைச் சேர்க்காத பேராசிரியர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.இப்போது சென்னையில் உள்ள பிரபல கல்லூரிகள், மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் ஆள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இதில் புதிய உத்தியை அந்தக் கல்லூரிகள் பின்பற்றுகின்றன. அதாவது, பணிபுரியும் அனைத்துப் பேராசிரியர்களுக்கும் தேர்வு நடத்தி, அதில் தேர்வு பெறுபவர்களை மட்டும் பணியில் வைத்துக் கொண்டு தேர்ச்சி பெறாதவர்களை நீக்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றன.சென்னை கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பிரபல கல்லூரியில் கடந்த வாரம் நடத்தபபட்ட இந்தத் தேர்வை 40 பேராசிரியர்கள் எழுதினர். அவர்களில் 4 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். கல்லூரிகளின் இந்த நடவடிக்கை காரணமாக நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, தனியார் பொறியியல் கல்லூரிகளின் இந்த நடவடிக்கைகளில் பல்கலைக்கழகம் தலையிட முடியாது என்றனர்.

தொழிலாளர் நல அலுவலகத்தில் ஆசிரியர்கள் நூதன போராட்டம்

கல்வித் தகுதிக்கு ஏற்ப மாற்றுப்பணி கோரி, குழந்தை தொழிலாளர் திட்ட ஆசிரியர்கள், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், காலவரையின்றி காத்திருக்கும் நுாதன போராட்டத்தை துவக்கி உள்ளனர்.தமிழகத்தில், குழந்தை தொழிலாளர் திட்ட பள்ளிகளில், ஆசிரியர், பள்ளி எழுத்தர்என, 1,254 பேர் பணியாற்றி வருகின்றனர்.


இவர்கள் முறையே, 4,500 ரூபாய், 3,500 ரூபாய் சம்பளம் பெற்று வருகின்றனர்.ஊதியத்தை உயர்த்த வேண்டும்; கல்வித் தகுதிக்கு ஏற்ப மாற்றுப்பணி வழங்க வேண்டும் எனக் கோரி, திட்ட ஆசிரியர்கள், நேற்று, தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அவர்களுடன், தொழிலாளர் நலத்துறை இணைஆணையர், பேசினார். அவர் எழுத்துப்பூர்வமாக எந்த உறுதியும் அளிக்க மறுத்ததால், திட்ட ஆசிரியர்கள் காலவரையின்றி காத்திருக்கும் நுாதன போராட்டத்தை துவக்கினர்.இது குறித்து, தேசிய குழந்தை தொழிலாளர் பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் அழகுஜோதி கூறுகையில், ''தொழிலாளர் நலன் காக்கும் துறையில் பணியாற்றும் நாங்கள், குழந்தை தொழிலாளர்களை விட மிக மோசமான நிலையில் உள்ளோம். நல்லசம்பளத்தில் மாற்றுப்பணி என்பதே எங்கள் கோரிக்கை. கோரிக்கையை அரசு ஏற்கும் வரை,இரவு, பகலாக அலுவலகத்திலேயே காத்திருப்போம்;எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை,'' என்றார்.
Click here for..

IGNOU B.Ed -Dec 2015 downloading