Saturday, 6 February 2016

அரசு நிதி வருவாயில் 90 சதவீதம் ஊழியர் சம்பளத்திற்கு செல்கிறதா: அரசு ஊழியர் சங்கம் மறுப்பு


தேனியில் அவர் கூறியதாவது:20 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தலைமையில் 67 சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பிப். 10 முதல் ஈடுபடுகின்றன. மாநில முழுவதும் 3 லட்சம் அரசு ஊழியர்களும், 2 லட்சம் தொகுப்பூதியம் பெறுபவர்களும் பங்கேற்பர்.அரசு ஊழியர் வசூலித்த தானே புயல் நிவாரண நிதியை கூட முதல்வர், தலைமை செயலாளரை சந்தித்து வழங்க முடியவில்லை. சங்க பிரதிநிதிகளை சந்திப்பது இல்லை.
அரசின் நிதிவருவாயில் 90 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடுவதாக அமைச்சர் பன்னீர் செல்வம் தவறான தகவலை கூறி வருகிறார். அரசின் நிதிவருவாய் 41,215,57 லட்சம் கோடி. இதில் கல்வி மானியத்திற்கு 40 சதவீத நிதி செலவிடப்படுகிறது. மீதியுள்ள தொகை ரூ.30 ஆயிரம் கோடி. இதில் முதல்வர்,அமைச்சர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர்அதிகாரிகள் சம்பளம் பெறுகின்றனர். 20 ஆயிரம் கோடியில் 8 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளத்திற்காக செலவிடப்படுகிறது. இது அரசின் வருவாயில் 30 சதவீதம், என்றார்.

பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை துவக்கம்


தமிழகம் முழுவதும், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் 4ம் தேதி, பொதுத்தேர்வு துவங்கி, ஏப்., 1ம் தேதி முடிகிறது; 8.80 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.
முதற்கட்டமாக, நாளை செய்முறை தேர்வு துவங்குகிறது. தமிழகம் முழுவதும், இரண்டு பிரிவுகளாக இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. சில பள்ளிகளுக்கு, நாளை முதல், பிப்., 15ம் தேதி வரையிலும்; சில பள்ளிகளுக்கு, பிப்., 16ம் தேதி முதல், 25ம் தேதி வரையிலும் நடக்க உள்ளன.
செய்முறை தேர்வில், மாணவர்களின் செயல்முறை பதிவேடு நோட்டு புத்தகம் அடிப்படையிலும், ஆய்வகத்தில் நேரடி செய்முறை பயிற்சியின் அடிப்படையிலும், மதிப்பெண் வழங்கப்படும். ஆய்வகங்களுக்கு, வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள், கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வின் போது, ஆய்வகங்களில் முறைகேட்டை தடுக்க, பறக்கும்படையினர் ஆய்வு நடத்த உத்தர விடப்பட்டு உள்ளது.
குறிப்பாக, தனியார் பள்ளி களை அதிகளவில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு விதிகள்
* செய்முறை நோட்டு புத்தகத்தை சமர்ப்பிக்காதவர்களுகக்கு, 20 மதிப்பெண் ரத்து செய்யப்படும்
* இயற்பியல் மாணவர்களுக்கு, 'டிஜிட்டல் டைரி' அல்லாத அறிவியல், 'கால்குலேட்டர்' மட்டும் ஆய்வகங்களில் அனுமதிக்கப்படும்
* இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நர்சிங், உயிரி வேதியியல் உட்பட, 15 பாடங்களுக்கு, செய்முறை தேர்வு நடத்த வேண்டும்
* தேர்வு மதிப்பெண் பட்டியலை, எந்த காரணத்தை கொண்டும், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட யாருக்கும் கசிந்து விடாமல், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்
* ஒழுங்கீனம், விதிமீறல் இருந்தால், அதற்கு தேர்வு நடத்தும் தலைமை ஆசிரியரும், கண்காணிப்பாளரும் பொறுப்பு
* ஆய்வகங்களில், செய்முறை தேர்வுக்கு தேவையான அனைத்து அறிவியல் உபகரணங்கள், ரசாயன, உயிரி பொருட்களை தேவையான அளவு வைத்திருக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 செய்முறை தேர்வு விதிகள்

* செய்முறை நோட்டு புத்தகத்தை சமர்ப்பிக்காதவர்களுகக்கு, 20 மதிப்பெண் ரத்து செய்யப்படும்
* இயற்பியல் மாணவர்களுக்கு, 'டிஜிட்டல் டைரி' அல்லாத அறிவியல், 'கால்குலேட்டர்' மட்டும் ஆய்வகங்களில் அனுமதிக்கப்படும்
* இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நர்சிங், உயிரி வேதியியல் உட்பட, 15 பாடங்களுக்கு, செய்முறை தேர்வு நடத்த வேண்டும்

* தேர்வு மதிப்பெண் பட்டியலை, எந்த காரணத்தை கொண்டும், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட யாருக்கும் கசிந்து விடாமல், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்
* ஒழுங்கீனம், விதிமீறல் இருந்தால், அதற்கு தேர்வு நடத்தும் தலைமை ஆசிரியரும், கண்காணிப்பாளரும் பொறுப்பு
* ஆய்வகங்களில், செய்முறை தேர்வுக்கு தேவையான அனைத்து அறிவியல் உபகரணங்கள், ரசாயன, உயிரி பொருட்களை தேவையான அளவு வைத்திருக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

சான்றிதழை மறுப்பதா: கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் தலித், அருந்ததியர் மாணவர்களின் கல்விக் கட்டணத்தில், பெரும் பகுதியை, உதவித்தொகையாக மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. இந்த தொகை, கல்வி நிறுவனங்களுக்கு, தமிழக அரசு மூலம் வழங்கப்படுகிறது. 
'சில ஆண்டுகளாக, தமிழக அரசிடமிருந்து, இந்த நிதி முறையாக தங்களுக்கு கிடைக்கவில்லை' என, கல்வி நிறுவனங்கள் சார்பில் புகார் எழுந்தது. அதனால், கட்டண பாக்கி வைத்த மாணவர்கள் தேர்வு எழுத, பல இன்ஜி., கல்லுாரிகள் தடை விதித்தன.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு புகார்கள் வந்ததால், கல்லுாரிகளுக்கு அரசு எச்சரிக்கை விடுத்தது. அதன்பின், மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தேர்வு எழுதிய பின், கட்டண பாக்கி வைத்திருந்த மாணவர்களின் சான்றிதழ்களை, இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகள் தராமல் வைத்து கொண்டன.
அதனால், வேலை வாய்ப்புக்கும், உயர் படிப்புக்கும் செல்ல முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, உயர் கல்வித்துறையில், மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர்.இதையடுத்து, அனைத்து இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, தொழில்நுட்ப கல்வித்துறை, சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் 'அனைத்து கல்லுாரிகளும், கட்டண பாக்கிக்காக, மாணவர்களிடம் பிடித்து வைத்துள்ள சான்றிதழ்களை, தாமதமின்றி வழங்க வேண்டும். அரசிடம் இருந்து உரிய நேரத்தில் நிதி கிடைக்கும். அதற்காக, மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வியில் முட்டுக்கட்டை போடக்கூடாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப். 10ல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
பேச்சுவார்த்தைக்கு கூட அரசு அழைக்காததால், திட்டமிட்டபடி, பிப்., 10 முதல் காலவரையற்ற போராட்டம் நடக்கும்,'' என, மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் செல்வம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:''புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தார். அதை நிறைவேற்றக் கோரி தான் போராடி வருகிறோம்.


கடந்த ஜன., 21ல் சென்னையில் முதல்வரை சந்திக்க போராடினோம்.தலைமை செயலாளரை மட்டுமே சந்திக்க முடிந்தது. அவரும் முதல்வரை சந்தித்து பேச வைப்பதாக கூறியும் நடவடிக்கை இல்லை. கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு கூட அரசு அழைக்கவில்லை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூட புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய எதிர்பார்க்கின்றனர். புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு பிறகு 1,890 ஊழியர்கள் இறந்து விட்டனர். 3,450 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனாலும் புதிய ஓய்வூதிய திட்ட பயன்கள் அவர்களை சேரவில்லை.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்கள் மற்றும் அரசு பங்களிப்பு ரூ.12 ஆயிரம் கோடி சேர்ந்துள்ளது. மாநிலத்தில் நான்கு லட்சம் காலிபணியிடங்கள் உள்ளன. ஊழியர்கள் பணிச் சுமையில் உள்ளனர்.எனவே திட்டமிட்டபடி பிப்., 10ல் காலவரையற்ற போராட்டம்துவங்கும். அனைத்து துறைகளை சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்களும் பங்கேற்கின்றனர். ஆசிரியர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளது, என்றார்.
7. வது ஊதியக்குழு ஊதியத்தை ஏப்ரல் 1–ந்தேதி பெறலாம்!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு வழங்க 7–வது சம்பள கமிஷன்பரிந்துரை செய்துள்ளதை மத்திய அரசு அப்படியே ஏற்க முடிவு செய்துள்ளது.நாடு முழுவதும் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.


இது தவிர 52 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள விகிதம்சீரமைக்கப்படும்.


மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சீரமைக்க 7–வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன், மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தியது.பின்னர் தனது பரிந்துரைகளை அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசிடம் அளித்தது.இதில் பல்வேறு முரண்பாடுகள்இருப்பதாகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், மற்ற அதிகாரிகளுக்கும் சம்பள விகிதத்தில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாகவும் அதிருப்தி எழுந்தது. போக்குவரத்து அலவன்ஸ் உயர்த்தப்படவில்லை என்றும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து 7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை ஆராயவும் முரண்பாடுகளை சரி செய்யவும் மத்திய அரசின் கேமினட் செயலாளர் பி.கே.சின்கா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதில் 42 அரசுத்துறை செயலாளர்களுக்கு இடம் பெற்று இருந்தனர்.

இந்த குழு சம்பள கமிஷன் பரிந்துரைகளில் உள்ள முரண்பாடுகள் பற்றி பல்வேறு தரப்பிடம் கருத்து கேட்டது. விரைவில் இதற்கு இறுதி வடிவம் கொடுத்து மத்திய மந்திரிசபையின் ஒப்புதல் பெறப்படும். அதன் பிறகு அமலுக்கு வரும்.7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை அமல்படுத்துவதில் பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டி வருகிறார். வருகிற மத்திய பட்ஜெட்டில்சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கான பணிகளில் நிதிமந்திரி அருண்ஜெட்லி கவனம் செலுத்தி வருகிறார்.7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அப்படியே அமல்படுத்தவும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்ததும் மத்திய அரசுஊழியர்களுக்கு சம்பள உயர்வு அமலுக்கு வரும்.மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு வழங்க சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது. பல்வேறு அலவன்சுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆகவும் அதிகபட்ச சம்பளம் ரூ.2.55 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஊழியர்கள் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடை உச்ச வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாகஉயர்த்தப்பட்டுள்ளது.இந்த சம்பள உயர்வை ஜனவரி 1–ந்தேதியிட்டு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்புவெளியானதும் ஏப்ரல் 1–ந்தேதி முதல் சம்பள உயர்வை பெறலாம்

பிப்ரவரி 01முதல் பிப்ரவரி 29 வரை முக்கிய தினங்கள், முக்கிய நிகழ்வுகள், பிரபலங்கள் பிறந்த தினங்கள் , நினைவு தினங்கள் மற்றும் சுதந்திரம் கொண்டாடும் நாடுகள்...

🍁💐🍁💐🍁💐🍁
முக்கிய தினங்கள்
🍁💐🍁💐🍁💐🍁
 1 இந்தியக் கடலோர காவல் படை தினம்.
 2 உலக ஈர நில நாள்.
 4 உலக புற்றுநோய் தீமை தினம்.
 9 மக்கள்தொகை கணக்கெடுப்பு நாள்.
 10 விஞ்ஞானிகள் தினம் (SCIENCE DAY)
 12 டார்வின் தினம்.
 13 உலக வானொலி தினம்.
 14 காதலர் தினம்.
 16 தேசிய ஆற்றல் சேமிப்பு தினம்.
 18 தேசிய கடற்படை தினம்.
 20 சமூக நீதி நாள்.
 21 அகில உலக தாய்மொழி தினம்.
 24 மத்திய கலால் வரி தினம்.
 25 உலக காசநோய் தடுப்பு தினம்.
 28 தேசிய இளைஞர் தினம்.
 28 தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி. ராமன் விளைவு வெளியிட்ட நாள்

 முக்கிய நிகழ்வுகள்
5, 1852- ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் உலகப் புகழ்பெற்ற "ஹெரீம் டேஜ்' என்ற மியூசியம் திறக்கப்பட்டது.
 5, 2007- காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு - இறுதித் தீர்ப்பு வெளியானது.
 5, 2012- இங்கிலாந்தில் பிறந்த 17 மணி நேரமே ஆன குழந்தைக்கு, இதய ஆப்ரேசன் செய்து வெற்றி பெற்றனர்.
 6, 1952- இங்கிலாந்தில் இளவரசியாக இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழா நடந்தது - அப்போது வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்தார்.
 6, 2012- பிலிப்பைன்ஸ் பூகம்பத்தில் 44 பேர் இறந்தனர்.
 8, 1963- அமெரிக்கா கியூபாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திக்கொண்டது. ஜனாதிபதி கென்னடி உத்தரவிட்டார்.
 8, 2012- தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் திருமலைசாமி நியமனம்.
 9, 1951- முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு
 ஆரம்பம்.
 9, 2010- இந்தியா - 11-ஆவது தெற்காசியப் போட்டியில் 90 தங்கம், 55 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது.
 10, 1931- இந்தியாவின் தலைநகராக டெல்லி உருவானது.
 10, 1942- அமெரிக்கா பகலொளி நேரம் 1 மணி நேரம் கூடுதல் எனக் கணக்கெடுக்கப்பட்டது.
 11, 1965} பிரதம மந்திரி லால்பகதூர் சாஸ்திரி, ""நேருவின் உறுதிமொழி தொடரும். இந்தி பேசாத மக்கள் ஒத்துழைக்கும் வரை ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்கும்'' என்றார்.
 12, 1996} பாலஸ்தீன குடியரசுத் தலைவராக "யாசர் அராபத்' நியமிக்கப்பட்டார்.
 14, 1998} கோவையில் பல்வேறு 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
 14, 2012} அமெரிக்காவின் மனிதநேய விருதை இந்தியப் பொருளாதார மேதை அமர்த்தியா சென்னுக்கு, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வழங்கினார்.
 15, 2012} இந்திய ரஷ்ய நல்லுறவுக்குப் பங்காற்றிய எழுத்தாளர் டி. ஜெயகாந்தனுக்கு "ரஷ்ய சிவிலியன்' விருதான "ஆர்டர் ஆப் பிரண்ட்ஷிப்' வழங்கப்பட்டது.
 17, 1863} உலகின் முதல் முதலாக "செஞ்சிலுவைச் சங்கம்' தோன்றியது.
 17, 1924} விக்னோன் கலர் பிலிமைக் கண்டுபிடித்தார்.
 17, 2001} சென்னையில் தமிழ் இணைய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
 17, 2002} பிரான்சில் "பிராங்' நாணயம் விடைபெற்று "யூரோ' அமலானது.
 18, 1911} உலகிலேயே முதன்முதலாக ஆகாய விமானம் மூலம் இந்தியத் தபால்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
 18, 1930} சூரிய குடும்பத்தின் ஒன்பதாவது கோளாக "புளூட்டோ' அமெரிக்கா வானவியல் விஞ்ஞானி "கிளைட்' என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
 19, 1986} ரஷ்ய விண்வெளி கலம் மிர்-1 விண்ணில் செலுத்தப்பட்டது.
 20, 1745} இந்திய தபால் இலாகா பதிவுத் தபால் முறையை அறிமுகப்படுத்தியது.
 20, 1947} இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கலாம் என பிரிட்டிஷ் பிரதமர் அட்லி பிரபு அறிவித்தார்.
 20, 1986} ரஷ்யாவின் மிகப் பெரிய வானில் மிதக்கும் "மிர் விண்வெளி நிலையம்' நிறுவப்பட்டது.
 20, 1987} இந்தியாவில் 24-ஆவது மாநிலமாக அருணாசலப் பிரதேசம் உருவானது.
 23, 1861} அமெரிக்காவில் ஆப்ரஹாம் லிங்கன் மிகுந்த பாதுகாப்புடன் வந்து ஜனாதிபதியின் முதல் உரையை நிகழ்த்தினார்.
 23, 1947} முகமது அலி ஜின்னா பாகிஸ்தானைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என கேட்டார்.
 23, 2012} மத்திய அரசின் சேவை வரியைக் கண்டித்து இந்தியா முழுதும் திரைத்துறையினர் வேலை நிறுத்தம் செய்தனர்.
 24, 2010} சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்காவுடன் ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் (இரட்டை சதம்) எடுத்து, கிரிக்கெட்டில் சாதனை புரிந்தார்.
 24, 2011} அமெரிக்கா, நாசாவால் அனுப்பிய டிஸ்கவரி விண்கலம் ஓய்வு பெற்றது.
 26, 1887} பிரான்சு - பாரிசில் ஈகில் டவர் கட்டும் பணி துவங்கியது.
 26, 2008} ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்துக்கு முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
 26, 2012} தமிழகத்தில் தஞ்சை அரண்மனையில் 400 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய மன்னர் காலத்திய குளம் கண்டுபிடிக்கப்பட்டது.
 27, 2010} காமன்வெல்த் சாம்பியன் ஹிப் போட்டிகளில் இந்தியா 23 தங்கம் உள்பட 49 பதக்கங்களைப் பெற்று முதலிடம் பெற்றது.
 28, 1919} இந்திய கணிதமேதை ராமானுஜன் லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்வு.
 28, 1928} சர்.சி.வி.ராமன், ராமன் விளைவுகளை வெளியிட்டார்.
 28, 2003} மனித குளோனிங் முயற்சிக்கு அமெரிக்கா பாராளுமன்றம் தடை
 விதித்தது.
 28, 2012} புதுடெல்லியில் நடைபெற்ற ஹாக்கியில் இந்தியா - பிரான்ûஸ 8-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.


பிரபலங்களின் பிறந்த தினங்கள்

 4, 1922 பண்டிட் பீம்சென் ஜோஷி -
 ஹிந்துஸ்தானி பாடகர்.
 6, 1890 அப்துல் கபார் கான். எல்லை காந்தி - சுதந்திரப்
போராட்ட வீரர்.
 6, 1911 ரோனால்டு ரீகன் - அமெரிக்காவின்
 40-ஆவது ஜனாதிபதி.
 7, 1812 சார்லஸ் டிக்கன்ஸ் - ஆங்கில
 நாவலாசிரியர்.
 8, 1897 ஜாஹீர் உசைன் - இந்தியாவின் 3-ஆவது ஜனாதிபதி.
 10, 1950 மார்க் ஸ்பிட்ஸ் - ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் 7 தங்கப் பதக்கங்களை வென்ற அமெரிக்க வீரர்.
 11, 1847 தாமஸ் ஆல்வா எடிசன் - மின்சார பல்பு போன்ற ஆயிரத்துக்கு மேற்பட்டவற்றைக் கண்டுபிடித்த விஞ்ஞானி.
 12, 1809 சார்லஸ் டார்வின் - பரிணாம தத்துவம் கண்ட விஞ்ஞானி.
 12, 1809 ஆப்ரஹாம் லிங்கன் - அமெரிக்காவின் 16-ஆவது ஜனாதிபதி.
 12, 1824 தயானந்த சுவாமிகள் - ஆர்யா சமாஜ்
 நிறுவனர்.
 13, 1879 சரோஜினி நாயுடு - கவிக்குயில் என்ற புகழ் பெற்றவர். சுதந்திரப் போராட்ட வீராங்கனை.
 22, 1857 பேடன் பவுல் - சாரண இயக்கம் கண்ட "சாரண இயக்கத் தந்தை'.
 15, 1564 கலீலியோ - தூரதிருஷ்டிக் கண்ணாடி கண்டுபிடித்த விஞ்ஞானி.
 18, 1745 வோல்டா - மின்கலம் கண்டுபிடித்த
 விஞ்ஞானி.
 18, 1836 ராமகிருஷ்ண பரமஹம்சர் - இந்து மதத் துறவி.
 18, 1860 ம. சிங்காரவேலர் - சிந்தனைச் சிற்பி.
 19, 1627 சத்ரபதி சிவாஜி - மராட்டிய வீரமன்னன்.
 19, 1855 உ.வே. சாமிநாத அய்யர் (உ.வே.சா)
 ஏடுகள் மூலம் உள்ள தமிழ் இலக்கண இலக்கியங்களை பதிப்புச் செய்தவர்.
 22, 1898 தில்லையாடி வள்ளியம்மை - சுதந்திரப் போராட்ட வீரர்.
 22, 1732 ஜார்ஜ் வாஷிங்டன் - அமெரிக்க முதல் ஜனாதிபதி.
 24, 1948 ஜெயலலிதா - தமிழக முதல்வர்.
 26, 1802 விக்டர் ஹுயூகோ - பிரெஞ்சு
 எழுத்தாளர்.
 29, 1896 மொரார்ஜி தேசாய் - ஜனதா கட்சியின் முதல் பிரதமர்.
 29, 1904 ருக்மணி தேவி (அருண்டேல்) -
 கலாஷேத்ரா நிறுவனர்.

நினைவு தினங்கள்

 1, 1876 மகா வித்வான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
 1, 2003 கல்பனா சாவ்லா - இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை.
 3, 1969 சி.என். அண்ணாதுரை - முன்னாள்
 தமிழக முதல்வர்.
 4, 1974 சத்யேந்திரநாத் போஸ் - இந்திய
 விஞ்ஞானி.
 5, 2008 மகரிஷி மகேஷ் யோகி
 6, 1931 மோதிலால் நேரு - சுதந்திரப் போராட்ட வீரர். நேருவின் தந்தை.
 19, 1915 கோபால கிருஷ்ண கோகலே - சுதந்திரப் போராட்ட வீரர்.

 22 1944 கஸ்தூரிபா காந்தி - காந்தியின் மனைவி.

 22 1958 அபுல் கலாம் ஆசாத் - சுதந்திரப் போராட்ட வீரர்.

 23 1977 ஈ.வி.கே. சம்பத் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.

 25 2001 டொனால்டு ஜார்ஜ் பிராட்மேன் - கிரிக்கெட் சாதனையாளர்.

 26 1936 கமலாநேரு - நேருவின் மனைவி - இந்திரா காந்தியின் தாயார்.

 28 1963 டாக்டர். ராஜேந்திர பிரசாத் - இந்தியாவின் முதல் ஜனாதிபதி.


சுதந்திரம் கொண்டாடும் நாடுகள்

4 இலங்கை,
6 கெயிட்டி,
28 எகிப்து