Sunday, 24 April 2016

பி.இ., ஆன்லைன் விண்ணப்பம் தொடரும் குழப்பத்தால் அவதி

        அண்ணா பல்கலையின் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பிப்பு முறையில் கட்டணம் செலுத்தியதற்கான பதிவு விபரம் வரவில்லை என, மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 
                அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 570 கல்லுாரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கென, www.annaunivnea2016.edu என்ற இணையதளம் மூலம், முதன் முறையாக ஆன்லைன் விண்ணப்பிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த, 15ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதல் நாள் இணையதளம் முடங்கியது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு, விண்ணப்பிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு அண்ணா பல்கலையின் விசாரணை மையம் மூலம் தெளிவுபடுத்தப்பட்டும் வருகின்றன.இந்நிலையில், ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்தியும், அதற்கான பதிவு விபரம் கிடைக்காது குழப்பம் ஏற்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாணவர் ஜெயச்சந்திரன் கூறுகையில்,''நான் ஆன்லைனில் பணம் செலுத்தியும், பணம் செலுத்தியதற்கான பதிவுவிபரம் வரவில்லை. மேலும் இரண்டு முறை பணம் செலுத்தியும் இதே பிரச்னை காணப்படுகிறது. ஒரு விண்ணப்பத்துக்கு, 1,700 ரூபாய் செலுத்தியுள்ளேன்,'' என்றார்.
அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன் கூறுகையில்,
''எஸ்.பி.ஐ., உள்ளிட்ட சில வங்கிகளில் கட்டணம் செலுத்தினால், மும்பை சென்று பதிவாகிவர சற்று தாமதமாகாலம். மாணவர்கள் ஒரே முறை கட்டணம் செலுத்தினால் போதுமானது; மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டாம். ஒரு முறைக்குமேல் பணம் செலுத்தியவர்களுக்கு கட்டணத்தை திரும்பத்தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மாரடைப்பு:

மாரடைப்பு வருவதற்கான அபாயத்தில் இருப்பவர்கள் எப்போதும் மூன்று வகையான மாத்திரைகளை கைவசம் வைத்திருக்க வேண்டும் .

ஒரு பாக்கெட்டில் மூன்று விதமான மாத்திரைகள் இருக்கும்.

அவை உயிர் காக்கும் மாத்திரைகள் .

மூன்று மாத்திரைகளும் சேர்ந்த விலை வெறும் 40 ரூபாய் தான் .

1 டிஸ்பிரின்
( Disprin 325mg ),

2 அட்டர்வாசேடின்
( Atorvastatin 80 mg ),

3 கிளோபிடேப்
( Clopitab 150mg )

இந்த மூன்றும் சேர்ந்தது உயிர் காக்கும் உத்தமான மாத்திரைகள் .

இதற்கு லோடிங் டோஸ்
( Loading Dose ) என்று பெயர்.

எதிர்பாராத நேரத்தில் ஒருவருக்கு நெஞ்சுவலி வருகிறது. ஹார்ட் அட்டாகிற்கான அறிகுறிகள் அனைத்தும் இருக்கின்றன .

ஆனால் உடனடியாக டாக்டரைப் பார்க்க முடியவில்லை .

இரண்டு மணி நேரம் ஆகும் என்ற சூழலில் , இந்த மாத்திரைகளை எப்போதும் சட்டைப் பையில் வைத்திருந்தால் உடனடியாக
உட் கொள்ளலாம் .

புகைக்கும் பழக்கம் இருப்பவர்கள் , உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் , சர்க்கரை நோய் இருப்பவர்கள் , ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் , அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கு நெஞ்சு வலி வரும் போது , டாக்டரை பார்க்க தாமதமாகும் சமயத்தில் இந்த மாத்திரைகளைப் போட்டுக் கொள்ளலாம் .

நாங்கள் டாக்டர் இல்லையே , ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்று கேட்டால் , உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது , ரத்த அழுத்தம் இருக்கிறது , சிகரெட் பழக்கம் இருக்கிறது , 40 வயதிற்கு மேல் ஆகிவிட்டது , ஏற்கனவே நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வாயுத் தொல்லை , அல்சர் இருந்தால் ஆன்டாசிட் மாத்திரைகளை சாப்பிட்ட பின் இந்த மாத்திரைகளை போட்டுக் கொள்ளலாம்.
வலி வந்தவுடன் டாக்டரைப் பார்க்க சில மணி நேரம் ஆகும் என்றால் இந்த முதலுதவி மாத்திரைகளைப் போட்டுக் கொண்டால் டாக்டரைப் பார்க்கும் வரை , அவர் சிகிச்சை செய்ய தாமதமானாலும் இந்த மாத்திரைகள் உங்களை காப்பாற்றும் .

இந்த மாத்திரைகளை அமெரிக்காவில் அனைவரும் பாக்கெட்டில் வைத்திருப்பார்கள். அடையாள அட்டை , பேனா , டைரி போல இந்த லோடிங் டோசை மறக்காமல் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஹார்ட் அட்டாக் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளவர்கள் உடனே உங்கள் டாக்டரிடம் ஆலோசனைப் பெற்று இந்த லோடிங் டோஸ் ஐ வாங்கி தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.