Saturday, 16 January 2016

MISSING CERTIFICATES RECOVERY

வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம். அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படக்கூடிய முக்கிய ஆவணங்களாகும். மேற்படிப்பு பயில, அரசின் கடன் உதவி பெற, வேலைகளில் சேர போன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயதுச் சான்றாகவும் பயன்படுகிற ஆவணங்கள் இவை. பள்ளி / கல்லூரிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துபோனால் எப்படி புதிய சான்றிதழ்கள் பெறுவது எப்படி?
பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்து போனால்:-
பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.
விண்ணப்பத்துடன் வட்டாட்சியரிடம் பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துவிட்டது என்ற சான்றிதழை வாங்கி இணைத்துக் கொடுக்க வேண்டும். இத்துடன் பள்ளிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் செலுத்தி ரசீதை இணைக்க வேண்டும்.
எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடமே விண்ணப்பிக்கலாம். இணைக்க வேண்டிய ஆவணங்கள்: மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், கட்டணம் செலுத்திய ரசீது.
கல்லூரிச் சான்றிதழ் தொலைந்து போனால்:-
கல்லூரி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.
அத்துடன் சான்றிதழ் தொலைந்தது குறித்து வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும். அவர் அந்தப் பகுதி வருவாய் ஆய்வாளரால் விசாரணை நடத்திய பின்னர் சான்றிதழ் தொலைந்தது உண்மை எனச் சான்று வழங்குவார்.
பின்னர் காவல்துறை அளித்த சான்று, வட்டாட்சியர் அளித்த சான்று இவற்றுடன் கல்லூரி நிர்ணயம் செய்த தேடுதல் கட்டணத்தைச் செலுத்தி கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்:
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் முதலில் அந்தப் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும்.
அத்துடன் மதிப்பெண் பட்டியலின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம், மாதம் ஆகிவற்றைக் குறிப்பிட்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு முன்னணி நாளிதழில் அறிவிப்பு விளம்பரம் வெளியிட வேண்டும்.
பின்னர் காவல் நிலையத்தில் புகாரளித்ததற்கான ரசீது, பிரசுரமான விளம்பரம் ஆகியவற்றை இணைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் வழியாக மாவட்டக் கல்வி அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
இதனுடன் தேடுதல் கட்டணம் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.
மனுவைப் பரிசீலித்து மாவட்டக் கல்வி அதிகாரி மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பம் செய்வார்.
கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்:
கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டால் கடைசியாகப் படித்த கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் மதிப்பெண் சான்றிதழின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம் ஆகியவற்றைச் சரிபார்த்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குப் பரிந்துரைத்து எழுதுவார்.
இத்துடன் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மனுவைப் பெற்றுக் கொண்ட தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மதிப்பெண் சான்றிதழ் வழங்குவார்.
விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்களுக்குள் இச்சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும்.
தனித்தேர்வர்களுக்கு:-
தனித்தேர்வர்கள் நேரடியாக தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.
பின்குறிப்பு:
பள்ளி / கல்லூரி மாற்றுச் சான்றிதழ்கள், பள்ளி / கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியரையோ அல்லது கல்லூரி முதல்வரையோ அணுகி மேலதிக விவரங்களையும், கட்டண விவரங்களையும் தெரிந்துகொள்ளவும்.

FILES DELETING METHOD IN ANDROID

உங்களது Phone-ஐ விற்க போகிறீர்களா? Recover செய்ய முடியாதவாறு File-களை Delete செய்வது எப்படி?

இன்றைய பதிவில் நீங்கள் Delete செய்த  எந்த ஒரு File-ஐயும் Recover செய்ய முடியாத படி செய்வது எப்படி என்று பார்ப்போம். சாதரணமாக நாங்கள் எமது போனை, Pen Drive அல்லது ஏதேனும் External Storage Device-களை மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் போது அதிலே இருக்கும் அனைத்து தரவுகளையும் Delete செய்த பின்னரே விற்பனை செய்வோம்.
ஆனால் Delete செய்த அனைத்து தகவல்களையும் மிக இலகுவாக Recover செய்து கொள்ள  முடியும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
Delete செய்த File-களை மிக இலகுவாக Professional Data Recovery Tool-களை பயன்படுத்தி Recover செய்து கொள்ள முடியும்.
உங்களிடம் இருந்து உங்கள் போனையோ அல்லது Pen Drive-ஐயோ வாங்கியவர் , உங்கள் தரவுகளை Recover செய்யும் பட்சத்தில் அதை தவறாக உபயோகிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறான பாதுகாப்பு பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் எவ்வாறு உங்கள் தனிப்பட்ட File-களை Recover செய்ய முடியாதபடி Delete செய்வது என்று காட்டுகிறேன்.இதனால் உங்கள் தனிப்பட்ட File-கள் பாதுகாக்கபடுவதோடு நீங்கள் எதுவித பயமும் இன்றி உங்களுடைய போனையோ அல்லது Pen Drive-ஐயோ இன்னொருவருக்கு விற்பனை செய்ய முடியும்.

Recover செய்ய முடியாதவாறு ஒரு  File-ஐ எவ்வாறு Delete செய்வது?

உங்களுடைய கோப்புகளை எந்த விதமான Recovery Tool-ஐ பயன்படுத்தியும் Recover செய்ய முடியாத வண்ணம் Delete செய்ய File Shredder எனும் மென்பொருள் ஒன்று உதவுகிறது.

இங்கே கிளிக் செய்து File Shredder மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.

தரவிறக்கிய மென்பொருளை உங்கள் கணனியில் Install செய்யுங்கள்.
இப்போது உங்கள் Memory Card, Pen Drive அல்லது Phone, எதிலிருந்து உங்கள் கோப்புக்களை Recover செய்ய முடியாதவாறு Delete செய்ய நினைக்கிறீர்களோ அந்த Device-ஐ உங்கள் கணணியும் Connect செய்யுங்கள்.இப்போது நீங்கள் Delete செய்ய நினைக்கும் File-ஐ ரைட் கிளிக் செய்யுங்கள்.

கீழே காட்டபட்டிருப்பது போல் File Shredder எனும் ஒரு Option தோன்றும்.






அங்கே Secure Delete File எனும் Option-ஐ தெரிவு செய்து உங்கள் கோப்புக்களை Delete செய்யுங்கள்.

அவ்வளவு தான். இனி எந்தவிதமான File Recovery Tool-ஐ பயன்படுத்தியும் உங்களது Delete செய்யப்பட்ட கோப்புக்களை மீட்டெடுக்க முடியாது.

இவ்வாறு உங்கள் அனைத்து கோப்புக்களையும் Delete செய்த பின்னர், குறிப்பிட்ட Storage Device-ஐ Format செய்யுங்கள். சாதரணமான முறையில் Format செய்யாமல், கீழே குறிப்பிட்டிருப்பது போல், Quick Format எனும் Option-ஐ Un-tick செய்யுங்கள்.






பின்னர் Start எனும் Option-ஐ Click செய்து Format செய்யுங்கள்.

இவ்வாறு Format செய்வதால், உங்கள் External Storage Device-ல் தங்கி இருக்கும் அனைத்து System File-களும் முழுமையாக Delete செய்யப்படும்.

இப்போது எதுவித பயமும் இன்றி குறிப்பிட்ட Storage Device-ஐ இன்னொருவருக்கு கொடுக்கவோ அல்லது விற்பனை  செய்யவோ முடியும்.source techinthamil.

RAM POWER INCREASING METHOD IN ANDROID PHONES

Saturday, 16 January 2016

Android Phone-ல் SD Card-ஐ RAM ஆக மாற்றி போனின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?

இன்று Android ஸ்மார்ட் போன் உபயோகிக்கும் அனைவருமே எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினை ஒன்று தான், தங்களுடைய ஸ்மார்ட் போன் மெதுவாக செயற்படுவது. இதற்கு முக்கிய காணரமாக நமது Android போனில் இருக்கும் RAM-ஐ கூறலாம். நமது ஸ்மார்ட் போனில் அதிகளவான செயலிகள் காணப்படும் போது, அதற்கேற்ற RAM அளவு நமது போனில் இல்லையாயின் நமது ஸ்மார்ட் போன் மிகவும் மந்தமாகவே செயற்படும்.
இதனால் இன்றைய பதிவில் நமது ஸ்மார்ட் போனில் காணப்படும் SD Card-ஐ எப்படி RAM ஆக உபயோகித்து நமது ஸ்மார்ட் போனை வேகமாக்கி கொள்வது என்று பார்ப்போம்.
SD Card-ஐ RAM ஆக மாற்ற தேவையானவைகள் 
Class 4 அல்லது அதற்கு மேலால SD Card
Root செய்யப்பட்ட Android ஸ்மார்ட் போன்
விண்டோஸ் கணணி
Mini Tool Partition மென்பொருள்
SD Card ரீடர்

உங்களது ஸ்மார்ட் போன் Swapping Support செய்யக்கூடியதாய் இருக்க வேண்டும். இதை பரிசீலித்து பார்க்கஇந்த செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவி தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து உங்களது விண்டோஸ் கணனியில் நான் மேலே குறிப்பிட்டுள்ள Mini Tool Partition என்ற மென்பொருளை நிறுவி கொள்ளுங்கள்.

அடுத்து உங்களது SD Card-ஐ Card Reader மூலம் உங்களது கணனியுடன் இணைத்து கொள்ளுங்கள்.

உங்களது SD Card-ஐ Format செய்யுங்கள்.
பின்னர், Mini Partition Tool-ஐ திறவுங்கள்.
அங்கே உங்களது SD Card-ஐ காணக்கூடியதாய் இருக்கும்.

இப்போது SD Card-ஐ ரைட் கிளிக் செய்து Create Partition என்பதை தெரிவு செய்யுங்கள்.

அடுத்து RAM-க்கு தேவையான அளவு Memory-யை வழங்குங்கள்.

அடுத்து கீழே நான் குறிப்பிட்டுள்ளவாறு செட்டிங்க்ஸ்-களை தெரிவு செய்யுங்கள்.
Partition > Primary
File System > FAT32

இப்போது Done என்பதை கிளிக் செய்து RAM-க்கு தேவையான மெமரி-ஐ உருவாக்குங்கள்.

அடுத்து மிச்சமாக இருக்கும் மெமரி-யை மீண்டும் Make Partition என்பதை கிளிக் செய்து, அடுத்து கீழே நான் குறிப்பிட்டுள்ளவாறு செட்டிங்க்ஸ்-களை தெரிவு செய்யுங்கள்.

Partition > Primary
File System > EXT2, EXT3 or EXT4 Partition.



குறிப்பு
File System என்பதில் நான் மேலே குறிப்பிட்டுள்ள எதாவது ஒரு டைப்-ஐ தெரிவு செய்யுங்கள்.
இப்போது Done என்பதை கிளிக் செய்து அடுத்த Partition-ஐ உருவாக்குங்கள்.
இப்போது Link2SD எனும் செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவுங்கள்.



நிறுவிய செயலியை திறவுங்கள். இப்போது இந்த செயலி ஆனது Root Permission என்று கேட்கும். அதற்க்கான அனுமதியை வழங்குங்கள்.
இப்போது Link2SD செயலியின் உதவியுடன் நீங்கள் கணணி மூலம் உங்களது SD Card-இல் உருவாக்கிய “.ext” Partition-ஐ (அதாவது RAM-க்கான Partition) உங்களது ஸ்மார்ட் போனின் மெமரி உடன் இணையுங்கள்.
இதுவரை நீங்கள் உங்களது ஸ்மார்ட் போனில் உபயோகிக்கும் SD Card-ஐ RAM-க்கு தேவையான அளவு Memory அளவு உடன் Partition செய்து அதை உங்களது ஸ்மார்ட் போனின் Internal மெமரி உடன் இணைத்து விட்டீர்கள்.
அடுத்ததாக உங்களது ஸ்மார்ட் போனில் புதிதாக சேர்க்கப்பட்ட Internal மெமரி-யை எப்படி RAM மெமரி உடன் இணைப்பது என்று பார்ப்போம்.
இதற்கு Swapper For Root எனும் செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவிக்கொள்ளுங்கள்.


இப்போது இந்த செயலியை திறந்து அங்கே Swap on Boot என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து Swap File Position என்பதில் Swap File Dimention என்ற ஐ தெரிவு செய்து உருவாக்க வேண்டிய RAM மெமரி-யின் அளவை வழங்குங்கள்.



நீங்கள் வழங்கும் RAM மெமரி-யின் அளவு நீங்கள் கணணி மூலம் உருவாக்கிய Partition-இன் மெமரி அளவை விட குறைவாக இருக்க வேண்டும்.
இறுதியாக Save என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான். இப்போது உங்கள் ஸ்மார்ட் போனை ஒரு முறை Restart செய்து விட்டு செட்டிங்க்ஸ் சென்று பாருங்கள். அங்கே உங்களது ஸ்மார்ட் போனின் RAM அதிகரிக்கப்பட்டிருப்பதை காணலாம்.
குறிப்பு
இந்த முறையில் உங்களது ஸ்மார்ட் போனின் RAM-ஐ அதிகரிப்பதானது மிகவும் Advance ஆன ஒன்றாகும். உங்களுக்கு இது பற்றிய முழுமையான தெளிவு இல்லையென்றால் இதை முயற்சிக்காமல் இருப்பதே சிறந்தது.
இந்த பதிவை நான் எழுதியது, Android போன் செட்டிங்க்ஸ்-ஐ ஹேக் செய்து இப்படியும் RAM-ஐ அதிகரித்துக்கொள்ளலாம் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவே ஆகும். இதை உங்களது சொந்த முயற்சியில் செய்து பாருங்கள்.
செயல்முறைகளின் போது உங்களது ஸ்மார்ட் போனிற்கோ அல்லது SD Card- ற்கோ ஏதாவது பாதிப்பு வந்தால் இந்த பதிவு பொறுப்பாகாது.
இந்த பதிவு முழுக்க முழுக்க Android சார்ந்த கல்வி அறிவிற்காகவே எழுதப்பட்டுள்ளது.