Monday, 18 January 2016

அம்மா அழைப்பு மையம்

AMMA CALL CENTRE | அம்மா அழைப்பு மையம் - உங்கள் குறைகளை உடனுக்குடன் களைய தமிழக அரசின் புதிய திட்டம் ...

 1100 -ஐ...அழையுங்கள் உங்கள் குறைகளை ...நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.....

வாகனங்களின் இன்சூரன்ஸ் காகிதங்கள் கையில் வைத்திருக்கத் தேவையில்லை

கார், பைக் இன்சூரன்ஸ் காகித நகல் கையில் வைத்திருக்க தேவையில்லை

        புதுடில்லி,:கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் இன்சூரன்ஸ் ஆவணங்கள், விரைவில் மின்னணு முறையில் மாற்றப்பட உள்ளதால், போக்குவரத்து போலீசாரின் சோதனையின் போது அவற்றின் நகல் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்காது.

         இன்சூரன்ஸ் கட்டுப்பாடு ஆணையம், 'இ - வாஹன் பீமா' என்ற புதிய திட்டத்தை துவக்கி உள்ளது. இதன்படி, இன்சூரன்ஸ் ஆவணங்கள் அனைத்தும் மின்னணு முறையில் மாற்றப்பட உள்ளன.


திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
* வாகன உரிமையாளருக்கு, இ - மெயில் அல்லது எஸ்.எம்.எஸ்., மூலம்இன்சூரன்ஸ் பாலிசி விவரங்கள் அனுப்பப்படும்
* அதில், 'பார் கோடு, கியு.ஆர்., கோடு' போன்ற ரகசிய பதிவு கள் இருக்கும்
* 'ஸ்கேனிங்' இயந்திரம் மூலம், 'கியு.ஆர்., கோடு' ஸ்கேன் செய்யப்படும் போது இன்சூரன்ஸ் தகவல் மையத்தின் தொகுப்பில் உள்ள தகவல் தெரியவரும்
* கியு.ஆர்., கோடு முறையால் மோசடிகள் தடுக்கப்படும்
* இதை, ஸ்மார்ட் போன்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் கையில் உள்ள மின்னணு கருவி மூலம் படிக்க முடியும்; இதனால், வாகன காப்பீட்டு ஆவணங்களை காகித நகலாக எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை 'இன்சூரன்ஸ் ஆவணம் கிடைக்கவில்லை' என, வாகன உரிமையாளர் புகார் செய்யும் நிலையும் வராது
* இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செலவு கணிசமாக குறையும். இந்த திட்டம், முதல்வர்சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே அமலில் உள்ளது.

LAPTOP BATTERY MAINTENANCE

லேப்டாப் பேட்டரி பராமரிப்பு

        டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் தான் அதிக எண்ணிக்கையில் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைப் பராமரிப்பதில், இதன் பேட்டரிகளே முதல் இடம் பெறுகின்றன. பேட்டரி பராமரிப்பிற்கான சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.




எப்போதும் இணைப்பில் வேண்டாம்:
உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரை முதன் முதலில் சார்ஜ் செய்திடுகையில், அதனை 100% சார்ஜ் செய்திடவும். அதன் பின்னர், அதன் சார்ஜ் 40% முதல் 80% வரை என்ற அளவில் இருக்க வேண்டும். பேட்டரியில் உள்ள எலக்ட்ரான்கள் எப்போதாவது அங்கும் இங்கும் நகர்வதற்கான இடம் இருக்க வேண்டும்.
இந்த குறிப்பினை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்நிலையில் பேட்டரியை வைத்திருந்தால், பேட்டரியின் வாழ்நாள் நான்கு பங்கு அதிகரிக்கும்.


எப்படி இந்த அளவினைக் கண்காணித்து வைத்திருப்பது? என்று கேட்கிறீர்களா?



இதனை கம்ப்யூட்டர் திரையின் ஓரமாகக் கவனிக்கலாம். லேப்டாப் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கவில்லையா?



உடன் அதனை ஆப் செய்து, மூடி, மின்சக்தியிலிருந்து விடுவித்து, வீட்டில் வைக்கவும். இதனை வைத்திடும்போது, ஏதேனும் ஒரு மேஜை அல்லது அதைப் போன்ற பரப்பில் வைக்கவும். மெத்தை போன்றவற்றில் வைக்க வேண்டாம். பேட்டரியின் வெப்பம் வெளியேறுவதனை மெத்தை போன்ற பரப்பு தடுக்கும். இது பேட்டரியின் வாழ்நாள் பயன்பாட்டினைக் குறைக்கும்.



அப்படிப்பட்ட பரப்பில் வைத்து இயக்குவதும் தவறு.



சார்ஜ் செய்தல்:
மாதம் ஒருமுறையேனும், பேட்டரியை முழுமையாக (100%) சார்ஜ் செய்திட வேண்டும். அதே போல, ஒரு முறையேனும், முழுமையாக அதன் மின்சக்தியைக் காலி செய்து பின் சக்தி ஏற்ற வேண்டும்.
இந்த 'மாதம் ஒரு முறை' என்பதனை எதிலேனும், குறிப்பாக மொபைல் போனில், அல்லது கம்ப்யூட்டர் திரையில் உள்ள ஸ்டிக்கி குறிப்பில், எழுதி வைக்க வேண்டும். அப்போதுதான் இது நினைவிற்கு வரும்.

குளிர்ச்சியாக இருக்கட்டுமே:

தற்போது வரும் நவீன பேட்டரிகள் அனைத்தும், லித்தியம் அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டவை. எனவே இவற்றை 50 முதல் 95 பாரன்ஹீட் டிகிரி (10 முதல் 30 டிகிரி செல்சியஸ்) அளவில் வைத்திருக்க வேண்டும். இதனை நாம் எப்போதும் அளந்து வைத்திருக்க முடியாது. எனவே, நாம் பணியாற்றும் அறையைச் சற்றுக் குளிர் தன்மையுடன் வைத்திருக்கவேண்டும். அத்துடன் லேப்டாப் கம்ப்யூட்டரில் காற்று வெளியேறும் வழிகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெப்பக் காற்று விரைவாக வெளியேறுகிறதா என்பதனைக் கண்காணிக்க வேண்டும்.


அப்டேட் செய்திடுக:

பல நிறுவனங்கள், தங்களின் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை மேம்படுத்துகையில், பேட்டரியின் திறனை மேம்படுத்தும் வழிகளையும் தங்கள் பைல்களில் தருகின்றன. எனவே, நாம் லேப்டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் அனைத்திற்கும் அவ்வப்போது, அப்டேட் செய்திடுவது பேட்டரியின் வாழ்நாட்களையும் அதிகரிக்கும்.



நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லதல்ல:
ஏதேனும் காரணத்தினால், லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தாமல், பல மாதங்கள் விட்டுவிடுவதாக இருந்தால், அதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளவும். பேட்டரியில் 50% மின் சக்தியுடன், குளிர்ச்சியான இடத்தில் அது வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மொத்தமாக மின் சக்தி இல்லாத நிலையில் உள்ள பேட்டரிகளுடன், லேப் டாப் கம்ப்யூட்டரைப் பல மாதங்கள் விட்டு வைப்பது, பின் எப்போதும் பயன்படுத்த இயலாத நிலைக்கு பேட்டரியைக் கொண்டு சென்றுவிடும்.

PRIMARY TEACHERS- PASSPORT TAKING METHOD

தொடக்க கல்வி-ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் கடவுச் சீட்டு பெற புதுப்பிக்க நியமன அலுவலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது-கடவுச்சீட்டு விண்ணப்பிப்பதற்கு முன் தகவல் அளிக்கும் திட்டம்(prior intimation)செயல்படுத்துதல்-இயக்குநர் செயல்முறைகள்..