Monday, 7 March 2016

பெண்கள் தொடர்பான 100 முக்கிய குறிப்புகள்:-

1) பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் ? ஆண்டாள்

2) இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதன்முதலாக பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது?
தமிழ்நாடு

3) இந்திய போலீஸ் பணியில் (ஐபிஎஸ்) சேர்ந்த முதல் பெண் யார்?கிரண்பேடி

4) முழுவதும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் எது?கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

5) உலகின் முதல் பெண் விண்வெளி வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963

6) சர்வதேச கால்பந்து போட்டியின் நடுவராக பணியாற்ற திண்டுக்கல்லை சேர்ந்த ரூபவதி என்ற பெண் தேர்வு பெற்றுள்ளார்.

7) உலகின் முதல் பெண் அதிபர் - மரியா எஸ்டெலாஃபெரான், அர்ஜெண்டினா

8) தேவருக்கு பால் கொடுத்தது :இஸ்லாமிய பெண்

9) பெண் வன்கொடுமை சட்டம் :1921

10) உலக பெண்கள் ஆண்டு :1978

11) தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி

12) நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி?விடை=மேரிகியூரி

13) பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர் -கார்கி

14) பெண்களைக் காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில் ஒளவை இல்லம் தொடங்கப்பட்டது

15) இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - முத்துலட்சுமி அம்மையார்

16) கற்ற பெண்களின் சிறப்பைக்கூறும் நூல் - குடும்ப விளக்கு

17) பெண் சிசு வதை தடுப்புச் சட்டம் மற்றும் உயிர் பலி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆட்சியில் இருந்தவர் - முதலாம் ஹார்டின்ஜ் பிரபு.

18) வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்ட வசதியான வீட்டுப் பெண்-அம்புஜத்தம்மாள்

19) பெண் ஓவியர் - சித்திரசேனா

20) ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்த முதல் இந்தியப் பெண்மணி- ஆர்திசாகா

21) சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள்-அக்டோபர் 11.

22) தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் தினம் : ஜனவரி 24

23) தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார் : டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

24) சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் முதல் பெண் பொது இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
மஞ்சுளா

25) Green Oscar எனப்படும் Wild Screen Panda Award பெற்ற முதல் இந்திய பெண் யார் ?
ஆஷ்விகா கபூர்

26) தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன? காளியம்மாள்

27) பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்?
மகாத்மா காந்தி

28) முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்? பெனாசீர் புட்டோ

29) பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் - 1992

30) பெண் கொடுமை சட்டம் - 2002

31) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகதின் முதல் பெண் துணை அதிபர் யார்?  Louise Richardson Chidambaram

33) அண்டகச் சுரப்பி=பெண்

34) பிடித்த பெண் - இலக்கணக் குறிப்பு தருக.
பெயரெச்சம்

35) கல்மரம் நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற பெண் எழுத்தாளர்
திலகவதி

36) அங்கு நிற்பது ஆணா? பெண்ணா? எவ்வகை வினா?
ஐய வினா

37) ஆள் - என்ன விகுதி? பெண்பால் வினைமுற்று

38) ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் ?  மெஹபூபா முஃப்தி

39) தேசிய பேரிடர் மீட்புப் படையின் முதல் பெண் கமாண்டர் ?
ரேகா நம்பியார்

40) இந்தியாவின் இரும்பு பெண் இந்திரா காந்தி.

41) பெண் என்ற நூலின் ஆசிரியர்? அகிலன்

42) பெண்ணின் பெருமை நூலின் ஆசிரியர்- திரு.வி.க

43) முதல்“அப்துல்கலாம் விருதைப்" பெற்ற ISRO பெண் இயக்குனர் யார்?  வளர்மதி

44) Radiological Society of North America (RSNA)வின் நிர்வாக குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்? விஜய் M. ராவ்

45) பேயோட்டுவதற்க்ககான வெறியாடல் என்பதனைப் பற்றி பாடிய பெண் புலவர்? காமக்கண்ணியார்

46) சங்க காலத்தில் அதிக பாடல்களை பாடிய பெண் புலவர் யார்.? ஒளவையார்

47) சங்க கால பெண் புலவர்கள் எத்தனை.?  31

48) அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு

49) மலேரியா நோயைப் பரப்பும் பிளாஸ்மோடியத்தின் முக்கியக் கடத்தியாக செயல்படுவது – பெண் அனோபீலஸ் கொசு

50) சிற்றில்= 17ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண் குழந்தைகள் வீடு கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும்.
(சிற்றில் = சிறு+வீடு)

51) 18 வயதிற்குட்பட்ட பெண் செய்யும் குற்றம் இளம் சிறார் குற்றமாகும்

52) தகாத முறையில் பெண்களை சித்தரிக்கும்(தடுப்பு) சட்டம் எப்போது இயற்றப்பட்டது? 1986

53) சிறந்த இலக்கியத்திற்காக, பிரிட்டன் வழங்கும் பரிசு. 1997 இல் அருந்ததிராய் எனும் இந்தியப் பெண் எழுத்தாளர் இவ்விருதைப் பெற்றார்.

54) ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம்-மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் பெயரால்தான் வழங்கப்பட்டு வருகின்றன.

55) பெண்ணுரிமைக்காகவே தனது வாழ்க்கையை செலவிட்டவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.

56) தமிழக முதல் பெண் முதலமைச்சர் திருமதி.ஜானகி ராமச்சந்திரன்(1988)

57) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்? பச்சேந்திரி பாய்

58) சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்

59) தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)

60) தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை

61) தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்

62) தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS

63) தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்

64) தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி

65) தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி

66) தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்

67) பாரத ஸ்டேட் வங்கியின் முதல் இந்திய பெண் தலைலராக 2013ல் நியமிகப்பட்டவர்? அருத்ததி பட்டசார்யா

68) இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்

69) சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை

70) எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? – மீனாட்சியம்மை குறம்

71) எந்த இந்திய தொழிலில் அதிக அளவிலான பெண்கள் பணிப்புரிகின்றனர்? டி(தேயிலை)

72)  கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் – பாரதிதாசன்

73) ஐ.நா உலகப்பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம் - பெல்ஜியம்

74) இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு

75) இந்தியாவில் முதல் பெண்கள் கல்லூரி 1879-ம் ஆண்டு நிறுவப்பட்டது. கோல்கத்தாவில் நிறுவப்பட்ட இக்கல்லூரியின் பெயர் - பேத்தூன்.

76) சாரதா சட்டத்துடன் தொடர்புடையது எது? குழந்தைத் திருமணம், ஆண் -18, பெண் - 16

77) மக்களவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ?
சுஷ்மா சுவராஜ்

78) தேசிய பெண்கள் ஆணையச்சட்டம்-1990

79) ஆண்கள் விட பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் :கேரளம்

80) பெண்களுக்கு செய்யும் குடும்ப கட்டுபாடு :டியூபக்டேமி

81) மொரிசியஸ் நாட்டின் முதல் பெண் பிரதமர்? அமீனா குரிப் பாகிம்

82) நன்னன் என்பவன் பெண் கொலை புரிந்த மன்னன்.

83) படித்த பெண் என்னும் திரைப்படத்திற்கு முதன்முதலாக பாடல் எழுதியவர்-பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்.

84) படித்தபெண்கள் எனும் நூலின் ஆசிரியர்? பாரதிதாசன்

85) மடவார் என்பது? பெண்கள்

86) சவுதி அரேபியாவில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் முதன் முதலில் வெற்றி பெற்ற பெண் என்ற பெருமையை பெற்றவர்? சல்மா பின்ட் ஹிஸாப் அல்-ஒடீபி

87) பெரியாருக்கு பெரியார் பட்டம் வழங்கியவர்கள்? பெண்கள்

88) பாகிஸ்தானின், முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார்.

89) சிரியாவைச்சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் Zaina Erhaimக்கு Reporters Without Borders Prize என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது

90) 2015ம் ஆண்டின் சிறந்த மனிதராக, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "டைம்' ஆங்கிலப் பத்திரிகை தேர்வு செய்துள்ளது.

91) சுமார் 30 ஆண்டுகளுக்கு பின், இந்த கௌரவத்தை பெறும் முதல் பெண் என்ற பெருமை மெர்க்கலாவுக்கு கிடைத்துள்ளது.

92) கடந்த 1986-ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக பிலிப்பின்ஸின் முதல் பெண் அதிபர் கோராஸன் அகினோவை, "டைம்' பத்திரிகை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது

93) தலைமை தேர்தல் ஆணையராக இருந்த பெண் யார்?ரமாதேவி

94) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? 15வது இடம்

95) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?
சென்னை (23,23,454)

96) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? 71.54 ஆண்டுகள்

97) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் எவ்வளவு? 3,59,80,087

98) அன்யூப்ளாய்டி எ.கா-- டர்னர் சின்ரோம் ( பெண் அலி )

99) உலகின் முதல் பெண் பிரதமர்?பண்டார நாயகே - இலங்கை.

100) கடற்படை தலைவராக இருந்த ஆர்டிமீசியா என்ற பெண் எந்த நாட்டை சேர்ந்தவர்?
கிரேக்கம்.
 WOMEN'S DAY WISHES TO ALL THE FEMALE MEMBERS

பி.எப்.,வட்டிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க பிரதமர் பரிந்துரை.

வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்குமாறு, நிதியமைச்சகத்துக்கு, பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெ ளியாகியுள்ளன. இதனையடுத்து இது தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் பார்லிமென்டில் வெ ளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


பார்லிமென்டில், பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். 'தொழிலாளர்கள் ஓய்வு அடையும்போது பெறும், இ.பி.எப்., மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.பி.எப்., தொகையில், 60 சதவீதத்தின் மீது ஓய்வுக்கால வரி விதிக்கப்படும்' என, பட்ஜெட்டில் கூறப்பட்டது.இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இ.பி.எப்., தொகைக்கான வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பான இறுதி முடிவை பிரதமர் எடுக்க வேண்டும் என எம்.பி.,க்கள் கூட்டத்தில்ஜெட்லி கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பி.எப்., வட்டிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்த வேண்டும் எனவும், நிதியமைச்சகத்துக்கு பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து, பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று, தனது அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர், இது தொடர்பான அறிவிப்பை ஜெட்லி பார்லிமென்டில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் தலையிட்டின் மூலம், 60 லட்சம் ஊழியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.

உலக மக‌ளி‌ர் ‌தின‌ம்!

மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை உலக மக‌ளி‌ர் ‌தினமாக‌ நா‌ம் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம். ‌வீ‌ட்டி‌ற்கு‌ள்ளே இரு‌ந்த பெ‌ண் சமுதாய‌ம் த‌ற்போது வா‌னி‌ல் பற‌ந்து கொ‌‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல், அத‌ற்கு ‌வி‌த்‌தி‌ட்ட ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன் வெ‌ற்‌றி ‌தினமே இ‌ந்த மக‌ளி‌ர் ‌தினமாகு‌ம்.


முத‌லி‌ல் அனை‌த்து மக‌ளி‌ரு‌க்கு‌ம் எமது KSkalviseithigal  சா‌ர்‌பி‌ல் மக‌ளி‌ர் ‌தின வா‌ழ்‌த்துகளை தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌கிறோ‌ம்.

உலக மக‌ளி‌ர் ‌தின‌த்தை வே‌ண்டுமானா‌ல் நா‌ம் எ‌ளிமையாக‌க் கொ‌ண்டாடலா‌ம். ஆனா‌ல் இ‌ந்த உலக மகளிர் தினம் கொ‌ண்டாடுவத‌ற்கு காரணமான போரா‌ட்டமு‌ம், அத‌‌ன் வெ‌ற்‌றிகளு‌ம் அ‌வ்வளவு எ‌ளிதாக‌க் ‌கி‌ட்டியத‌ல்ல‌். ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெ‌ண்களு‌க்கான உ‌ரிமைகளை வென்றெடுத்த நாள் இது.

18ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செ‌ய்யு‌ம் பொரு‌ட்டு வீடுகளில் முட‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர். பெரு‌ம்பாலான பெ‌ண்களு‌க்கு ஆரம்பக் கல்வி கூட மறு‌க்க‌ப்ப‌ட்டது. மரு‌த்துவமு‌ம், சுத‌ந்‌திரமு‌ம் எ‌ன்னவெ‌ன்று க‌ண்‌ணி‌ல் கா‌ட்ட‌ப்படாம‌ல் இரு‌ந்த கால‌ம் அது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் 1857ஆம் ஆண்டின் நடந்த போ‌ரினால் ஏராளமான ஆ‌ண்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டது‌ம், படுகாயமடை‌ந்து நட‌க்க முடியாத ‌நிலை‌க்கு உ‌ள்ளானது‌ம் ‌நிக‌ழ்‌ந்தது. இதனா‌ல் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை‌த் த‌வி‌ர்‌க்க ‌நிலக்க‌ரிச்சுரங்கள் ம‌ற்று‌ம் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிரு‌‌க்கு ப‌ணி வா‌ய்‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது. இ‌ந்த ச‌ந்த‌ர்‌ப்ப‌ம்தா‌ன் அடு‌ப்பூது‌ம் பெ‌ண்களா‌ல் தொ‌ழி‌ற்சாலைக‌ளிலு‌ம் ‌திறமையாக ப‌ணியா‌ற்ற முடியு‌ம் எ‌ன்பதை உல‌கி‌ற்கு ‌நிரூ‌பி‌த்தது. ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக பெ‌ண்களாலு‌ம் வேலை செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்று பெ‌ண் சமுதாயமே அ‌ப்போதுதா‌ன் பு‌ரி‌ந்து கொ‌ண்டது.


WD
எது எ‌ப்படி இரு‌ந்தாலு‌ம், வேலை பா‌ர்‌க்கு‌ம் இட‌ங்க‌ளி‌ல் ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக ப‌ணியா‌ற்ற வா‌ய்‌ப்பு ‌கிடை‌த்ததே‌த் த‌விர, ஊ‌திய‌த்‌தி‌ல் பெ‌ண்களு‌க்கு அ‌நீ‌தி இழை‌க்க‌ப்ப‌ட்டது. (அது இ‌ன்று வரை பல இட‌ங்க‌ளி‌ல் தொடருவது ம‌ற்றொரு ‌பிர‌ச்‌சினை). இதனால் பெண்கள் மனம் குமுறினர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைக‌ள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அ‌ப்போதைய அமெரிக்க அரசு செ‌விசா‌ய்‌க்க‌வி‌ல்லை.

இதனால் அமெ‌ரி‌க்கா முழுவது‌ம் கிளர்ந்தெழு‌ந்த பெண் தொழிலாளர்கள் 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். துணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தா‌ன் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உமையாளர்கள் இப்போராட்டத்தை அர‌சி‌ன் ஆதரவுடன் அடக்கினர். வெ‌ற்‌றி பெ‌ற்றதாக பக‌ல் கனவு‌ம் க‌ண்டன‌ர். ஆனா‌ல் அ‌ந்த பக‌ல் கனவு ‌நீ‌ண்ட நா‌‌ட்களு‌க்கு ப‌லி‌க்க‌வி‌ல்லை.


WD
அட‌க்‌கி வை‌த்தா‌ல் அட‌ங்‌கி‌ப் போவது அடிமை‌த் தன‌ம் எ‌ன்று பெண் தொழிலாளர்கள் 1907ஆம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உமை, சம ஊதியம் கோரினர். இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.

இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே, ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். ‌அ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் மு‌‌க்‌கிய சாரா‌ம்சமாக மார்ச் மாதம் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோ‌ரி‌க்கை வை‌த்தா‌ர். பெ‌ண்களை அட‌க்‌கி ஆள ‌நினை‌த்த ஆ‌ண் சமுதாய‌ம் இத‌ற்கு ஒ‌ப்பு‌க் கொ‌ள்ளுமா அ‌ல்லது இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற வ‌ழி ஏ‌ற்படு‌த்துமா... ப‌ல்வேறு தட‌ங்க‌ல்களா‌ல் இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற முடியாம‌ல் போனது.

இத‌ற்‌கிடையே பெ‌ண் தொ‌ழிலாள‌ர்க‌ள் அமை‌ப்‌பி‌ன‌ர் ஆ‌‌ங்கா‌ங்கே உ‌ரிமை‌க் குர‌ல் எழு‌ப்ப‌த் தொட‌ங்‌கி‌யிரு‌ந்தன‌ர். 1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நக‌ரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார்.

அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 88 ஆண்டுகளுக்கு முன்பு 1921ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர். அ‌ன்று முத‌ல் இ‌ன்று வரை ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை நா‌ம் மக‌ளி‌ர் ‌தினமாக‌க் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம். ஒரு ‌சில ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்புதா‌ன் இ‌ந்‌தியா‌வி‌ல் மக‌ளி‌ர் ‌தின‌க் கொ‌ண்டா‌ட்ட‌ங்க‌ள் களை க‌ட்டியு‌ள்ளன.