Sunday, 28 February 2016

மத்திய பொது பட்ஜெட் :கல்வித் துறை முக்கிய அம்சங்கள்

1. 10 அரசு கல்வி நிறுவனங்களும், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் உலகத்தரத்துக்கு மேம்படுத்தப்படும்.

2. பள்ளிச் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் டிஜிட்டல் ஆவணங்களாகவும் வழங்கப்படும்.

3. அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 62 நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.
மத்திய பட்ஜெட் : முக்கிய அம்சங்கள்


வரும் 2016-17-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தா‌க்கல் செய்தார்.



முக்கிய அம்சங்கள்

* 5 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5000 ரூபாய் வரை சலுகை


* வீட்டு வாடகைக்கான சலுகை ஆண்டுக்கு 24,000த்திலிருந்து 60,000த்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.


* இந்த நிதி ஆன்டில் திட்டமிடப்படாத செலவுகள் 14.3 லட்சம் கோடியாக கணிக்கப்பட்டிருக்கிறது.


* வருவாய் பற்றாகுறை 2015 - 16ல் 2.8 லிருந்து 2.5 சதவிகிதமாக குறைந்தது.

* சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ஆதார் எண் இணைக்கப்படும்.


* பருப்பு விலையை கட்டுப்படுத்த 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு.


* வங்கியின் செயல்பாடுகளில் அரசு தலையிடாது.


* ஐடிபிஐ வங்கியில் அரசின் பங்கை குறைத்துக்கொள்ளும் அறிவிப்பால் அந்த பங்கு 8%
விலை உயர்ந்தது.

* இந்தியாவின் நிதி பற்றாக்குறை 3.9 சதவிகிதமாக இருந்தது. அதை 2016 - 17ல் 3.5 சதவிகிதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.


* 2016 - 17ல் இந்தியாவின் மொத்த செலவு 17.78 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்ககிடப்பட்டிருக்கிறது.


* ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க ஒரு நாளில் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட இருக்கிறது.


* பொதுத்துறை வங்கிகளில் 25000 கோடி ரூபாய் கூடுதல் முதலீடு செய்யப்படும்

* சிறு தொழில்களுக்கு கடன் வழங்கும் முத்ரா திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ. 1,80,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.


* 3000 புதிய ஜெனிரிக் மருத்தகம் அமைக்கப்படும்.


* விவசாயிகளுக்கு உர மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.


* திட்டமிட்ட செலவுகள் 15% கடந்த ஆண்டைவிட உயர்வு.


* பொதுத்துறை வங்கிகளுக்கு மறு முதலீடு 25,000 கோடி ஒதுக்கீடு

* மாநில அரசுகளுடன் இணைந்து 160 விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.

* புட் புராக்கெட், பார்மா துறைகளிலில் எஃப்டிஐ முதலீட்டு அளவு 100% அதிகரிக்கப்படும். மேலும் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்.


* அணு சக்தி துறைக்கு 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.


* இன்ஃப்ரா துறையை மேம்பாடுத்த புதிய கிரெடிட் ரேட்டிங் உருவாக்கப்படும்.

* அனைத்து மாவட்டங்களுக்கு டயாலிசிஸ் மையங்கள் அமைக்க திட்டம்.


* அடுத்த 3 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு ஸ்கில் இந்தியா திட்டம் முலம் பயிற்சி


* நாடு முழுவதும் 1500 பன்முக திறன் வளர்ப்புப் பயிற்சி மையங்கள்


* 2016 - 17 நிதி ஆன்டில் 10,000 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டம்.


* இந்தியாவின் உள்கட்டுமானத்திற்கு 2,21,246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


* சாலை போக்குவரத்துகளை அதிகரிக்கும் விதத்தில் மோட்டார் வாகன சட்டங்களில் சில திருத்தங்கலை கொண்டு வரத் திட்டம்.


* பேங்க்ரப்ட்ஸி மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்!


* புதிதாக இபிஎஃப் திட்டத்தில் இணையும் தொழிலாளர்களுக்கு 8.3 சதவிகித வட்டி வழங்கப்படும்


* ஆழ்கடலில் எரிவாயு எடுக்க திட்டங்கள் சலுகை அளிக்கப்படும்!


 * மூத்த குடிமக்களுக்கு ஒரு லட்சம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம்


* 75 லட்சம் நடுத்தர குடும்பத்தினர் தங்கள் எரிவாயு இணைப்பு மானியத்தை விட்டுக் கொடுத்திறுகின்றனர்.


* 10 பொதுத்துறை மற்றும் 10 தனியார் துறை கல்வி நிறுவனங்கள் தேர்தெடுக்கப்பட்டு அதில் பயிலும் மாணவர்களுக்கு உலக தரம் வாய்ந்த கல்வி பயிற்றுவிக்கப்படும்


 * மோட்டார் வண்டிகள் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்!


* தலித் மக்கள் தொழில்முனைவோராக தங்கள் வாழ்கையை மேம்படுத்திக் கொள்ள திட்டம்


* 500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தலித் மக்களுக்கு எம்.எஸ்.எம்.இ யில் தனி ஹப் அமைக்கப்பட இருக்கிறது


 * ஒட்டு மொத்த கிராம புறங்கள் வளர்ச்சிக்கு 87,765 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்கள்


 * எல்பிஜி கேஸ் இணைப்பை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு வழங்க 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


* நெடுஞ்சாலைகளை அமைக்க ரூ.55,000 கோடி ஒதுக்கீடு!


 * உயர் படிக்காக நிதி உதவி செய்ய ரூ.1000 கோடி செலவில் தனி அமைப்பு அமைக்கப்படும்!


 * அடுத்த 3 ஆண்டுகளில் 6 கோடி நபர்களுக்கு டிஜிட்டல் கல்வி அறிவை பயிற்றுவிக்க திட்டம்.


 * டயாலிசிஸ் செய்யும் கருவிக்கு கலால் வரி கிடையாது!


* மே 1, 2018க்கு முன் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.


 * 2.87 லட்சம் கோடி கிராம பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


* 19000 கோடி ரூபாய் கிராமபுற சாலை மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


* 15000 கோடி ரூபாய் வட்டி சுமை குறைக்கப்பட திட்டம் திட்டப்பட்டுள்ளது.


* ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்படும்!


* சுவாச் பாரத் திட்டத்துக்கு 9,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு!


 * இந்த நிதி ஆண்டில்
விவசாயிகளுக்கு 9 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். இது இதுவரை இந்தியாவில் வழங்கப்பட்ட கடன்களில் அதிகம்


* 5500 கோடி ரூபாய் மதிப்பிற்கு பயிர்க் காப்பீடு வழங்கப்படும்.


* விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இ - காமர்ஸ் சந்தையில் விற்க வழிவகை செய்யப்படும்.


* அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகள் வருமானம் 2 மடங்காக அதிகரிக்கப்படும்


*நீர்பாசன திட்டங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 86,500 கோடி ஒதுக்கப்படும்


   * 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.38500 கோடி ஒதுக்கீடு


* உலக அளவில் உலக பொருளாதார வளர்ச்சி 3.4 சதவிகிதத்திலிருந்து 3.1 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.


* சர்வதேச நிதியம் இந்தியா உலக அளவில் சிறந்த பொருளாதாரமாக இந்தியாவை குறிப்பிட்டிருக்கிறது


* வரி தாக்கல் எளிமைப்படுத்தப்படும்!


* கிராமப்புறம், சமூக வளர்ச்சி, உள்கட்டமைப்பு போன்றவற்றில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்


* மத்திய பட்ஜெட்டில் விவசாயத்திற்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடு


* விவசாய பாசனத்தை மேம்படுத்த 17,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு!


 * 2020ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த திட்டம்


 * மொத்த விலை விவசாய விளைபொருட்களுக்கு இ-மார்க்கெட் மூலம் இணைக்கப்படும்!


* அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாசனத் துறை வளர்ச்சிக்காக 86,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு!


* மொத்த விலை விவசாய விளைபொருட்களுக்கு இ-மார்க்கெட் மூலம் இணைக்கப்படும்!


* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்க திட்டம்.


* விவசாயக் கடனுக்கான வட்டிச் சுமையைக் குறைக்க 15,000 கோடி ஒதுக்கீடு!


* ரூரல் சடக் யோஜனா திட்டத்துக்கு 19,000 கோடி ஒதுக்கீடு!


 * 2017-ல் பயிர் இன்ஷூரன்ஸுக்காக 5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு!


* 5 லட்சம் விளைநிலங்கள் ஆர்கானிக் விவசாய நிலங்களாக அடுத்த 3 ஆண்டுகளில் வழங்க திட்டம்


* ஊரக் வேலைவாய்ப்பு திட்டத்துக்காக 38,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

TNTET : ஆசிரியர் தகுதித்;தேர்வில் (2013 ) தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் பணிநியமணம் வேண்டி மார்ச் 01 முதல் தொடர் உண்ணாவிரதம்

கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வி;ல் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2014ம் ஆண்டு பணிநியமணத்துக்கான சான்றிதழ்; சரிபார்ப்பும் முடிந்த நிலையில் வெய்ட்டேஜ் என்னும் முறையால் வாழ்வுரிமை இழந்தனர்.... பின்னர் 2014ம் கல்வியாண்டுக்கான காலி ஆசிரியர் பணியிடமும் 2015ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் காலி;ப்பணியிடமும் அரசு இன்று வரை தெரிக்கவில்லை..
இருப்பினும் அரசு நம்மை வைத்தே இனிவரும் ஆசிரியர் பணியிடங்ளை நிரப்பும் என்று நம்பிக்கை வைத்தனர்...
அனைத்தும் கானல் நீராகவே இருந்தது... அதனால் டி.இ.டி தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மன உளைச்சலுக்கு ஆளாயினோம்... ஆகவே அரசு டி.இ.டி 2013ல் தேர்வில் தேர்ச்சிப்பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நமக்கு பணிநியமனம் வழங்க வேண்டியும்... வெய்ட்டேஜை திரும்ப பெறுமாறும்... இனிவரும் காலங்களில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களாகிய எங்களை வைத்தே காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டியும் மார்ச் 01 முதல் தொடர் போராட்டம் நடைபெற முடிவெடுத்துள்ளோம் நண்பர்களே...
இத்தனை நாள் ஏதோ எனக்கென்ன என்று இருந்து விட்டாய் இனியும் நீ அவ்வாறு இருந்தால் .. டி.இ.டி 2013 என்ற அத்தியாயம் முடிந்து விடும்... துணிந்து வா.. தோல்விகள் நமக்கில்லை...
போராட்டம் ஒன்றும் நமக்கு புதிதல்ல... புதிரல்ல...
நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு துளிக்காற்றும் கூட தேசப்பிதா காந்தி திருப்பூர் குமரன் வ.உ.சி போன்ற எண்ணற்றோர் போராடி தான் நமக்கு விடுதலை சுவாசத்தை அள்ளித்தந்தார்கள்... போராட்டக்குணம் நம் இரத்தத்தில் ஊறிப்போனது தான்... உரிமைக்காக போராடுவனே சிறந்த மனிதன்...
உன்னிடம் எதிர்பார்ப்பது உன் வருகையை மட்டும் தான்... உன் பிள்ளைகள்.. உன் குடும்பத்தார்.. உன் தந்தை தாய் ...உறவினர்கள் என அனைவரோடும் கலந்து கொள்.... ஏனெனில் இது நம் இறுதிகட்ட முயற்சி.... நம் பணிநியமனம் இழந்து தவிக்கும் உன் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார்கள் என அனைவரும் திரட்டு.. அரசுக்கு பணிவாய் நமது கோரிக்கையை எடுத்துரைப்போம்...
அன்று சுதந்திர போராட்ட வீரர்கள் 'முழு சுதந்திரத்தை தவிர வேறு எதனாலும் திருப்தி அடையமாட்டோம்' என முழுங்கினார்கள்...
இன்று... நாம் ' பணிநியமணம் அல்லது பணிநிமணம் சார்ந்த எழுத்துப்பூர்வ அறிக்கையினால் மட்டுமே தவிர வேறு எதனாலும் நமது போராட்டதிலிருந்து பின்வாங்க போவதில்லை'
ஆகவே தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு வருகை தந்து உங்கள் உரிமையை நிலைநாட்ட வாரிர்...
நாள் : மார்ச் 01 முதல்... இடம் : டி.பி.ஐ வளாகம் ... சென்னை
தொடர்புக்கு:
பி.இராஜலிங்கம் 9600208188
கபிலன் 9092019692
செல்லத்துரை 9843633012
சிவா 8807148088
கோவிந்தன்
மாவட்ட வரியாக ஒருங்கிணைப்பாளர்கள்:
திண்டுக்கல் புவனேஸ்வரி - 9688414105
தருமபுரி பிரகாசம் -  978737442
விழுப்புரம் நடராசன் - 9443517563
சிவகங்கை சமையமுத்து – 9843519554
வேலூர் நந்தகுமார் - 9965855880
மதுரை 7598360223
விரைவில் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தொடர்பு எண்கள் வெளியிடப்படும்
TNPSC VAO KEY ANSWERS பார்க்க...



Click here,
TNPSC VAO KEY ANSWERS  Downloading..