Sunday, 7 February 2016

G.O 203 DSE Date 16/12/2015- கல்வி வளர்ச்சி நாள் - அலுவலர்களின் அதிகாரங்களில் மாற்றம் ஏற்படுத்தி அரசாணை வெளியீடு


ஓய்வுபெறும்போது வெறும் கையோடு போகிறோம்"!

"ஓய்வுபெறும்போது வெறும் கையோடு போகிறோம்!”

புதிய ஓய்வூதியத் திட்டத்தால் நிம்மதியிழந்த அரசு ஊழியர்கள்

“அரசு ஊழியர்களை நவீன பிச்சைக் காரர்களாக மாற்றிய, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்பவர் களுக்கே வரும் தேர்தலில் எங்கள் வாக்கு” என்று அதிரடி முடிவில் இறங்கியுள்ளனர் அரசு ஊழியர்கள். ‘பங்களிப்புடன் கூடிய புதிய பென்சன் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்தது. 2003-ம் ஆண்டுக்குப் பிறகு அரசு ஊழியர்களாகச் சேரும் அனைவருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டப்படிதான்
பென்சன் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

‘‘புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி அரசு ஊழியர்களின் அடிப் படைச் சம்பளம், தர ஊதியம் மற்றும் அதற்கு இணையான அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் மாதம்தோறும் 10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும். அந்தத் தொகைக்கு இணையாக அரசு தனது பங்கைச் செலுத்தும். இவ்வாறு சேரும் தொகையில் 60 சதவிகிதம், ஊழியர் ஓய்வுபெறும்போது கொடுக்கப் படும். மீதமுள்ள 40 சதவிகிதத் தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு மாதந்தோறும் ஓய்வூதியமாக அளிக்கப்படும்” என்று அறிவித்தனர். தமிழகத்தில் ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என சுமார் நான்கு லட்சம்பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருகின்றனர்.

இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா மாநிலங்களைத் தவிர, அனைத்து மாநிலங்களிலும் இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி, ஊழியர்களின் பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அவர்களின் ஓய்வுக்காலத்தில் திருப்பித் தர டெல்லியில் ‘ஓய்வூதியத் தொகை வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையம்’ செயல்பட்டு வருகிறது.

ஓய்வுபெற்ற பிறகும் பலன் அளிக்காத புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் பிரடெரிக் ஏங்கெல்ஸிடம் பேசினோம். “புதிய ஓய்வூதியத் திட்டம் வந்து 12 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், ஓர் அரசு ஊழியர்கூட பயன்பெறவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்றவர்களும், பணிக்காலத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை.

ஊழியர்களிடம் இருந்து ஏழாயிரம் கோடி ரூபாய் பிடித்தம் செய்யப் பட்டிருக்கிறது. பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசின் பங்குத்தொகை இரண்டும் பி.எஃப்.ஆர்.டி.ஏ-வுக்குச் செலுத்தப் படவில்லை. அந்தத் தொகை என்ன ஆனது என்பதுதான் எங்கள் கேள்வி?

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்த பலன்கள் இந்தத் திட்டத்தில் இல்லை. குடும்ப பென்சன், பணிக்கொடை எதுவும் இந்தத் திட்டத்தில் கிடையாது. எங்களிடம் பிடித்தம் செய்த தொகையை மட்டுமாவதுத் திருப்பித்தரலாம். அதையும் இந்த அரசு தர மறுக்கிறது. தமிழக அரசு இந்தத் தொகையை வைப்புநிதியாக வைத்துள்ளதாகக் கூறுகின்றனர். அதனால் எங்களுக்கு என்ன பயன்? ஓய்வுபெறும் ஊழியர்கள் வெறும் கையோடு போகும் நிலை உள்ளது.

ராணுவம் மற்றும் காவல் துறையில் பணியாற்றிய நாய்கள், குதிரைகள்கூட ஓய்வுபெற்றபின், அவற்றின் பராமரிப்புக்குப் பணம் ஒதுக்கும் அரசு, எங்களை மட்டும் அலட்சியம் செய்வது ஏன்?” என்றார்.

மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் துரைப்பாண்டியனிடம் பேசினோம். “கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம்’ என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

ஆனால், ஊழியர்களின் பணம்கூட ஒழுங்காக ஆணையத்தில் செலுத்தப் படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்குக் குடும்ப ஓய்வூதியம் உள்ளது. ஆனால், மாநில அரசில் அது இல்லை. ஊழியர்களின் பணத்தைவைத்து பங்குச் சந்தையை வளர்க்கத்தான் இந்தத் திட்டத்தைச் செயல் படுத்துகின்றனர். ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் எந்தப் பணமும் கிடைக்காமல் நவீன பிச்சைக்காரர்களாக மாறும் நிலை உள்ளது.

2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் இதே அ.தி.மு.க உறுப்பினர்கள், இடதுசாரி உறுப்பினர்களோடு இணைந்து புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அரசு ஊழியர்களிடத்தில் மாறுபாடான நிலையைக் கடைப்பிடிக்கின்றனர். வரும் தேர்தலில் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுவோம் என்று உறுதியாகக் கூறும் கட்சிக்குத்தான் நாங்கள் வாக்களிப்போம்” என்றார்.

Expected DA on 1.1.2016 is Over – Ends with 6% Hike at 125%

Expected DA on 1.1.2016 is Over – Ends with 6% Hike at 125%

Expected DA ends with a 6percentage hike at 125%; Labour Bureau releases the much-awaited AICPIN stats of December

The AICPIN statistics points for the month of December 2015 has been released by Labour Bureau. The index is one point
decreased and ends with 269. The AICPIN points for the months of July 2015 till December 2015, has concluded with some ups and downs. The AICPIN points that started at 263, has ended on an average of 261.4 points (263, 264, 266, 269, 270, and 269).

Since all the AICPIN points required for calculating the DA for the months of July to December have been released, the additional Dearness Allowance, which will be issued from the month of January 2016, has been decided. It will be implemented only after the central cabinet gives its approval.

The final instalment of the DA, to be issued as per the recommendations of the 6th Pay Commission, will see an increase of 6 percent and end at 125%. With this, it concludes its 10-year-long journey.



Starting from January 2006, Dearness Allowance was revised 20 times based on the method recommended by the 6th Pay Commission. It began at zero on 01.01.2006, and increased, step by step, to 125 percent by 01.01.2016. In other words, there was an average increase of 6.25 % each time.
புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது (Inspire Award) அனைத்து மாணவர்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்க உத்தரவு


அடுத்த மாதம் மத்திய அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ரெயில்வே, அஞ்சல் சேவை முடங்கும் ஆபத்து

மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த மாதம் முதல் வாரம் தொடங்கி, காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் ரெயில்வே, அஞ்சல் உள்ளிட்ட சேவைகள் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய ரெயில்வே ஊழியர் சம்மேளனத்தின் (ஏஐஆர்எப்) பொதுச்செயலாளர் சிவ கோபால் மிஷ்ரா, ஐதராபாத் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு, மத்திய அரசு எந்த முன்னுரிமையும் வழங்கவில்லை.
7-வது சம்பள கமிஷனின் பிற்போக்கான சிபாரிசுகளை நீக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உற்பத்தி அடிப்படையிலான போனஸ் நிலுவை தொகை வழங்கப்படவில்லை. ரெயில்வேயில் 2½ லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை இல்லை. அயல்பணிகளை பெறுவதை நிறுத்தவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான தொழிலாளர் சட்ட திருத்தங்களை நிறுத்த வேண்டும். அன்னிய நேரடி முதலீட்டை 100 சதவீதம் நிறுத்த வேண்டும்.
இதில், பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்காரணமாக அடுத்த மாதம் முதல் வாரம் தொடங்கி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போகிறோம். இதில் ரெயில்வே, அஞ்சல், ராணுவம் உள்ளிட்டவற்றில் பணியாற்றுகிற 36 லட்சத்துக்கும் மேலான ஊழியர்கள் பங்கு பெறுவார்கள்.
ரெயில்வே, அஞ்சல், பாதுகாப்பு, கணக்கு தணிக்கை, வருமான வரி மற்றும் பிற மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு அமைப்பான தேசிய நடவடிக்கை குழு, 7-வது சம்பள கமிஷனின் பிற்போக்கான சிபாரிசுகளை நிராகரித்துள்ளது. இந்தப் பிரச்சினையில் பிப்ரவரி முதல் வாரத்துக்குள் உடன்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் மார்ச் முதல் வாரத்தில் எந்தவொரு நாளிலும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ரெயில்வே, அஞ்சல் உள்ளிட்ட முக்கிய சேவைகள் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்: ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் தீர்மானம்

கோவில்பட்டியில் நடைபெறும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மாநாட்டில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ரா.பாலசுப்பிரமணியன் பேசினார்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 6-வது மாநில மாநாடு, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
தொடக்க விழாவில் மாநிலத் தலைவர் ச.மோசஸ், அருணன், நடிகை ரோகினி, பத்திரிகையாளர் சமஸ், ஆந்திர மாநில ஆசிரியர் சங்கத் தலைவர் ஐ.வெங்கடேஷ் வரராவ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ரா.பால சுப்பிரமணியன், தலைமைச் செய லக ஊழியர் சங்க பொதுச் செய லாளர் ஜி.கணேசன் ஆகியோர் பேசினர்.
மாநாட்டின் 2-ம் நாளான நேற்று, செ.பாலசந்தர், ரா.முத்து சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மீதான லஞ்சப் புகார்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்பாக அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என்ற அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.