Sunday, 7 February 2016

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்: ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் தீர்மானம்

கோவில்பட்டியில் நடைபெறும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மாநாட்டில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ரா.பாலசுப்பிரமணியன் பேசினார்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 6-வது மாநில மாநாடு, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
தொடக்க விழாவில் மாநிலத் தலைவர் ச.மோசஸ், அருணன், நடிகை ரோகினி, பத்திரிகையாளர் சமஸ், ஆந்திர மாநில ஆசிரியர் சங்கத் தலைவர் ஐ.வெங்கடேஷ் வரராவ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ரா.பால சுப்பிரமணியன், தலைமைச் செய லக ஊழியர் சங்க பொதுச் செய லாளர் ஜி.கணேசன் ஆகியோர் பேசினர்.
மாநாட்டின் 2-ம் நாளான நேற்று, செ.பாலசந்தர், ரா.முத்து சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மீதான லஞ்சப் புகார்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்பாக அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என்ற அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment