Friday, 22 January 2016


தொடக்கக்கல்வி - ஆசிரியர்களின் அனைத்து கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கண்டறிய இயக்குனர் உத்தரவு

ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவங்கள் வெளியீடு

தரும புரி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட போலி ஆசிரியர்கள் பிரச்னையைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளிலும் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கண்டறிய வேண்டி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப்பணியில் உள்ளவர்கள் PASSPORT எடுக்கும் முறை

அரசு பணியில் உள்ளவர்கள் Passport அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பே அவரவர் appointment authority க்கு மேற்காணும் இணைப்பு படிவத்தை அனுப்பிவிட வேண்டும்

அரசு பணியில் உள்ளவர்கள் Passport அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பே அவரவர் appointmentauthority க்கு மேற்காணும் இணைப்பு படிவத்தை அனுப்பிவிட வேண்டும்.அதன் அசல் கடிதம் ஒன்றை (செராக்ஸ் கூடாது) passport அலுவலகம் செல்லும் போது அங்கு கொடுக்க வேண்டும். இதில் பெறுநர் முகவரி pin code உட்பட முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.பெறுநர் பெயரும் தெரிந்திருக்க வேண்டும்.

அடைவுத்தேர்வு-சரியான அளவுகோலா?

அடைவுத் தேர்வு - மாணவர்களின் கல்வி தரத்தைக் காணும் ஓர் அளவு கோலா?

அங்கன்வாடி பணியாளரகள்-விண்ணப்பங்கள் வரவேற்பு

அங்கன்வாடி பணியாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

அங்கன்வாடி மற்றும் குழந்தைகள் காப்பகப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் அங்கன்வாடி மற்றும் குழந்தைகள் காப்பகப் பணியாளர் (மாத சம்பளம் ரூ.3ஆயிரம்), காப்பக உதவியாளர் (மாத சம்பளம் ரூ.1,500) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காப்பகப் பணியாளர் பணியிடத்துக்கு வயது 25 முதல் 35 வயது வரை, விதவை மற்றும் ஆதரவற்றவராக இருந்தால் 40 வயது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காப்பக உதவியாளர் பணியிடத்துக்கு 20 வயது முதல் 40 வயது வரை, விதவை மற்றும் ஆதரவற்றவராக இருந்தால் 45 வயது, தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.உரிய விண்ணப்பங்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இணையதளமான www.icds.tn.nic.in ல் இருந்தும் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதி குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அல்லது தேனாம்பேட்டை, 2/124, தியாகராயா சாலையில் உள்ள இயக்குனர், குழும இயக்குனர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவரை அணுகலாம்.