Tuesday, 16 February 2016

வாழ்க்கையில் எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்:-

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.

11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.

21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.

22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.

23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.

24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவது தான் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்.

25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்

ஈகோ என்றால் என்ன?

என்னளவில் நான் ஓஷோவிடமிருந்து கற்று உணர்ந்ததை என்னுடைய வார்த்தைகளில் தர முயற்சிக்கிறேன்.

இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் ஒரு சார்பு நிலையிலேயே அதாவது ஒன்றையொன்று சார்ந்தே இயங்கிக்கொண்டிருக்கிறது.

இதை பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றல் என்று மகரிஷி குறிப்பிடுகிறார்.

ஈகோவைப் பற்றிப் புரிந்துகொள்ள இந்த சார்பு நிலையைப் பற்றி சற்று ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

பல்வேறு உதாரணங்கள் மூலம் இந்த சார்பு நிலையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

இந்தியாவில் ஒரு காலத்தில் பஞ்சம் நேர்ந்தது.  பஞ்சத்திற்கு என்ன காரணம் என விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.  அந்தக் காலத்தில் அமெரிக்கர்கள் தவளை சூப்பை விரும்பி அருந்துவர்.  ஆதலால் இந்தியாவில் தவளை ஏற்றுமதி வியாபாரம் மிகவும் செழிப்பாக நடைபெற்று வந்தது.

பஞ்சத்தின் காரணத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் தவளை ஏற்றுமதி வியாபாரம்தான் பஞ்சத்திற்குக் காரணம் எனக் கண்டறிந்தனர்.

இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதைப் போல சம்பந்தமில்லாமல் இருப்பதாகத் தோன்றும்.  தவளை ஏற்றுமதிக்கும், பஞ்சத்திற்கும் என்ன சம்பந்தம்?

சம்பந்தம் உண்டு.   பயிரினங்களை அழிக்கும் பூச்சியினங்கள்தான்  தவளையின் உணவு.  பூச்சியினங்கள் பெருகாமல் அதன் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தவளைக்கு இயற்கை கொடுத்த வேலை.  தவளை இனங்கள் அருகி விட்டால் பூச்சியினங்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
பயிரினங்கள் அழிக்கப்படும்.  பஞ்சம் நேரும்.

மற்றொரு காலத்தில் இந்தியாவில் வெறிநாய்க்கடி (Rabies)  வைரஸ் அதிகமாகப் பரவியது.   இதன் காரணத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு விதமான கழுகு இனங்களை மனிதன் வேட்டையாடிக் கொன்றதுதான் ரேபிஸ் வைரஸ் பரவக் காரணம் எனக் கண்டறிந்தனர்.

கழுகு இனங்கள் அழிந்ததற்கும் ரேபிஸ் வைரஸ் பரவுவதற்கும் என்ன தொடர்பு?  ரேபிஸ் வைரஸ் தாக்கிய நாய், பன்றி போன்ற விலங்குகள் இறந்து கிடக்கையில் அதன் உடலிலுள்ள ரேபிஸ் வைரஸ் இறப்பதில்லை.   அந்த உடல்களை நாம் சரியான முறையில் அப்புறப்படுத்துவதில்லை.  அதனால் அந்தப் பகுதியில் வரும் மனிதர்களையும், பிற விலங்குகளையும் ரேபிஸ் வைரஸ் தொற்றிக்கொள்கிறது.

கழுகு இனங்கள் இந்த இறந்த உடல்களை உண்டு வாழ்பவை.  ரேபிஸ் வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் அவைகளுக்கு இயற்கையாகவே உண்டு.  அந்த கழுகு இனங்களை வேட்டையாடி அழித்துவிட்டதால் ரேபிஸ் வைரஸ் தாக்கி இறந்த உடல்களை உண்டு அழிப்பதற்கு யாருமில்லை.  எனவே வெறி நாய்க் கடி நோய் பரவியது.

அதேபோல தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் நாய், பூனை போன்ற விலங்குகள் உடல் சிதறி இறந்துகிடக்கின்றன.  அவற்றையெல்லாம் நாம் முறையாக அப்புறப்படுத்துவதில்லை.  அவை அப்படியே இருந்தால் வைரஸ் கிருமிகள் பரவி தொற்று நோய் ஏற்படும்.  ஆனால் அந்த உடல்களை உண்டு சுத்தப்படுத்துவது காகம்.  அதனால்தான் அது ஆகாயத் தொட்டி என்றழைக்கப்படுகிறது.  காகம் மட்டும் இல்லையானால் நாம் இங்கு ஆரோக்கியமானதொரு வாழ்க்கையை வாழ்தல் சாத்தியமே இல்லை.

ஒரு சாரைப் பாம்பு ஒரு நாளில் மூன்று எலிகளை உணவாகக் கொள்கிறது.  இதனால் எலிகளின் எண்ணிக்கை கட்டுப்படுகிறது.   பாம்புகளே இல்லையானால் எலிகளின் எண்ணிக்கை பெருகி எந்த தானியங்கிடங்கிலும் தானியங்களை இருப்பு வைக்க இயலாது போகும்.

இப்படி ஆயிரமாயிரம் உதாரணங்களைக் கூறலாம்.

அமேசான் காடுகளில் ஒரு புலி, மானை வேட்டையாடுவதற்கும் நம் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.  புலி மானை வேட்டையாடவில்லையெனில் மானின் எண்ணிக்கை பெருகும்.  மானின் எண்ணிக்கை பெருகினால் தாவரங்களின் எண்ணிக்கை குறையும்.  தாவரங்களின் எண்ணிக்கை குறைந்தால் மழை குறையும்.   பயிர் விளையாது.   பஞ்சம் நேரும்.

தசாவதாரம் திரைப்படத்தில்….ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பில் ஏற்படும் அதிர்வுக்கும் பூகம்பத்திற்கும் தொடர்பு உண்டு என்ற ஒரு வசனம் வரும். இதை கேயாஸ் (Chaos) தியரி என்கிறோம்.  ஆக இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்து இயக்கங்களும் ஒன்றையொன்று சார்ந்தே நடைபெறுகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

நம் முன்னோர்கள் இதை உணர்ந்திருந்தனர்.  இதை அனுபவமாக உணரும்போது அதன் விளைவாக நம்மிலிருந்து நன்றியுணர்வு ஊற்றெடுக்கும்.  அந்த நன்றியுணர்வினால்தான் அவர்கள் மலையை, மரங்களை, பஞ்சபூதங்களை, நாயை, பன்றியை, பாம்பை என அனைத்தையும் வழிபட்டனர்.  இந்த வழிபாடுகள் உச்சகட்ட நன்றியுணர்வின் வெளிப்பாடு.

மனிதனுக்கு என்று தனியான மையம் இல்லை.  இந்தப் பிரபஞ்சத்திற்கு என்று ஒரு மையம் உண்டு.  அதை பிரபஞ்ச மையம் என்கிறார் ஓஷோ.  முன்னோர்கள் அதை தம்மா, தாவோ என்று அழைத்தனர்.  இந்த பிரபஞ்ச மையமே ஒவ்வொரு மனிதனுக்கும் மையமாக அமைந்துள்ளது. ஒரு அமைதியான ஏரியில் ஒரு கல்லை எறிந்தால் கல்லை எறிந்த மையத்திலிருந்து வட்ட வடிவில் அலைகள் பிறக்கும்.  நூற்றுக்கணக்கான வட்ட வடிவ அலைகள் பிறந்து கொண்டேயிருக்கும்.  அத்துணை வட்டங்களுக்கும் மையம் ஒன்றுதான்.  தனித்தனியான மையங்கள் என்பது கிடையாது.   ஒவ்வொரு தனி வட்டமும் தன் மையம் கல் விழுந்த இடம்தான் என்று உரிமை கொண்டாடலாம்.   ஒருவிதத்தில் அது சரியும் கூட.   ஆனால் அந்த மையம் எல்லா வட்டங்களுக்கும் பொதுவானது.   எந்தத் தனி வட்டமும் அந்த மையத்தை தனது என்று உரிமை பாராட்ட முடியாது.

இதை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் சூரியன், சந்திரன் போன்றவற்றை எடுத்துக்கொள்வோம்.  இந்த பூமி வாழ் உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் அவை பொதுவானவை.  தனிப்பட்ட மனிதன் சந்திரனைப் பார்த்து அது தன்னுடையது என உரிமை கொண்டாடலாம்.  ஆனால் அது ஒரு கற்பனையே.  அது பூமிவாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவானது என்பதே உண்மை.

இதை மகரிஷி அவர்கள் ஒவ்வொரு உயிரினத்தின் கருமையமும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளதோடு மட்டுமில்லாமல் அனைத்துக் கருமையங்களும் பிரபஞ்சத்தின் கருமையத்தோடு இணைந்துள்ளன என்கிறார்.

ஆக மனிதன் முழுமையான இயற்கையின் ஒரு அங்கம். அவன் தனித்து இயங்குபவனல்ல. அவனால் தனித்து இயங்க இயலாது.

ஆனால் அவன் தன்னை முழுமையிலிருந்து பிரித்துக் கொண்டு, தனியாகச்  செயல்படத்தொடங்கும் அந்த விநாடியில்தான் ஆணவம் (Ego) என்பது பிறக்கிறது. அதுவே ஆணவத்தின் வேர். எல்லோருக்கும் பொதுவான அந்த மையத்தை தன் மையம் என்று உரிமை கொண்டாடத்தொடங்கும் இடம் ஆணவத்தின் பிறப்பிடம்.

இதை மகரிஷி அவர்கள் குறிப்பிடும்போது….
”தான் இறைநிலையிலிருந்து வந்தவன் என ஒரு மனிதன் நினைப்பது மிகச்சரியானதுதான்.   ஆனால் தன்னைப் போலவே சக மனிதனும் இறைநிலையிலிருந்து வந்தவன் என்பதை மறந்துவிடும்போதுதான் தன்முனைப்பு தலைதூக்குகிறது” என்பார்.

ஒரு இசையமைப்பாளர் அற்புதமான ஒரு பாடலுக்கு இசை அமைக்கிறார் என்று சொன்னால் அது அவரால் மட்டுமே செய்யப்பட்டதன்று.   அதற்கு இசைக் கருவியை வடிவமைத்தவன், இன்னும் பல்வேறு இசைக்கலைஞர்களின் உள்ளிட்ட பலரின் பங்களிப்பு உண்டு.   இந்த சார்பு நிலை விளங்கிவிடுமானால் அங்கு ஆணவத்திற்கு இடமில்லை.

இன்னும் ஆணவமற்ற நிலை ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியமா?  அது சாதாரண மனிதர்களுக்கு வாய்ப்பதில்லையா? சாதாரண மனிதன் ஆணவமற்று இருந்த தருணங்களே இல்லையா?  என்ற கேள்விக்கு விடைகாண்பதின் மூலம் ஆணவம் என்றால் என்ன என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ளலாம்.

ஒரு மனிதன் கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கத்தில் சஞ்சரிக்கும்போது அவன் ஆணவமற்ற நிலையில் பிரவேசிக்கிறான்.  ஆழ்ந்த தூக்கத்தில் மனம் என்பது இல்லை.  மனம் இல்லாத இடத்தில் ஆணவம் என்பதும் இல்லை.  மனம் செயல்படும்போது மட்டுமே ஆணவம் பிறக்கும்.   மனமற்ற நிலையில் ஆணவம் இல்லை.  ஆனால் ஆழ்ந்த தூக்கத்தில் விழிப்புணர்வு என்பதும் இல்லாமல் போகிறது.   ஆகையால் இறையோடு, இயற்கையோடு ஒன்றிய ஆணவமற்ற நிலையை அனுபவத்தில் உணர முடியாது போகிறது.

தூக்கத்திற்கு அடுத்தாற்போல காமம்.  எந்தவிதமான குற்ற உணர்வுமின்றி காமத்தில் ஈடுபடும்போது அதன் உச்சகட்டப் பரவசத்தில் “நான்” என்பதற்கான அனைத்து அடையாளங்களும் தொலைந்து போய் அத்வைத நிலையை தரிசிக்கிறோம்.  ஆனால் ஒரு சில விநாடிகளில் மீண்டும் “தொப்’ என்று ஆணவத்தில் விழுந்துவிடுகிறோம்.

அதைத் தவிர நமை மறந்து பூக்களை, சூர்யோதயத்தை, சூர்ய அஸ்தமனத்தை, பௌர்ணமி நிலாவை, தென்றல் காற்றை, மலையை, அருவியை இன்னும் இதுபோன்ற பல்வேறு இயற்கை அதிசயங்களை ரசிக்கும் போது நம் அடையாளங்கள் தொலைந்துபோய் இயற்கையோடு ஒன்றி விடுகிறோம்.   அப்போதெல்லாம் நாம் மனமற்ற தன்மையில் அதாவது ஆணவமற்ற தன்மையில் இயற்கையோடு இயற்கையாய் கலந்து முழுமையாய் இருக்கிறோம்.

ஒரு பூவை ரசித்துப் பார்த்து அதன் பெயர் போன்ற அடையாளங்களை மறந்து அதனோடு ஒன்று கலந்து நிற்கும் அந்தத் தருணம் ஆணவமற்ற நிலை.   “அட….. அந்தப் பூ எவ்வளவு அழகு” எனத் தோன்றிய அந்த மைக்ரோ விநாடியில் மனம் உள்ளே வந்துவிடுகிறது.  ஆணவம் துவங்கிவிடுகிறது.

திடீரென ஒரு அதிர்ச்சியை, ஆபத்தை சந்திக்கும்போது மனமற்ற நிலை வாய்க்கிறது.   அந்த சமயங்களில் நாம் ஆணவமின்றி அதாவது மனமின்றி இருக்கிறோம்.

இன்னும் எளிமையாய் ஒரு உதாரணம்.
உங்கள் இரு சக்கர வாகனத்தில் நீங்கள் பயணம் செய்துகொண்டிருக்கும்போது உங்களை கடந்து செல்லும் ஒரு பெண்ணின் சேலை சக்கரத்திற்குள் மாட்டிக்கொள்ளும் நிலையில் உள்ளதை நீங்கள் கவனிக்கிறீர்கள்.  அந்தப் பெண்மணிக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  ஆனால் உங்களை அறியாமல் உங்கள் வாகனத்தின் வேகத்தைக் கூட்டி அந்தப் பெண்ணை எச்சரிக்கிறீர்கள்.  

இந்தச் செயல் நடக்கும் அந்த நிமிடங்களில் உங்களை நீங்கள் கவனித்ததுண்டா?  அந்த நிமிடங்களில் உங்கள் பெயர், உங்கள் ஜாதி, மதம், அஸ்தஸ்து, பதவி, அதிகாரம் என நீங்கள் வெளியிலிருந்து சேர்த்துக்கொண்ட அடையாளங்கள் எதாவது உங்கள் மனதிலிருந்ததா?   அங்கு நீங்கள் இல்லை.   அந்தப் பெண்ணுக்கு நேரப்போகும் ஆபத்து குறித்து எச்சரிக்கும் உங்கள் செயல் மட்டுமே இருந்தது.

உண்மையில் அது உங்கள் செயல் இல்லை.  எங்கே நீங்கள் இல்லையோ…….அதாவது உங்கள் அடையாளங்கள் இல்லையோ……அதாவது உங்கள் மனம் இல்லையோ……அங்கே இறை உங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறது.   இப்போது அது இறையின் செயல்.   அது குறித்து அகங்காரம் கொள்ள ஏதுமேயில்லை.  இதை ஓஷோ…..

“When you are not there…. God will take possession of you” என்று கூறுகிறார்.

வள்ளலார் ஒரே இரவில் 1590 வரிகள் கொண்ட அகவலை ஒரே இரவில் எழுதி முடித்தார்.  அது அவருடைய செயல் அல்ல.   மனமற்ற நிலையில் இறை அவரை ஆட்கொண்டு…..அவரது உடலை ஒரு கருவியாக்கி….அகவலாக வெளிப்பட்டது.

இது போன்ற ஆணவமற்ற தருணங்கள் ஏதோ ஞானிகளுக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல.

எங்கெல்லாம் செய்பவன் மறைந்து செயல் மட்டுமே நடைபெறுகிறதோ அங்கெல்லாம் மனிதன் முழுமையாகிய இயற்கையோடு, இறையோடு ஒன்றுகிறான்.   ஒரு இசையமைப்பாளர் இசையில் ஒன்றும்போது அவரையும் அறியாமல் ஒரு அற்புதமான இசை வெளிப்படுவது அந்த ஆணவமற்ற தருணத்தில்தான்.  

ஒரு பேராசிரியர் தன்னை மறந்து மாணவர்களோடு ஒன்றி உரைநிகழ்த்தும்போது அந்த உரையில் அவரது தயாரிப்பில் இல்லாத பல அற்புதமான விஷயங்கள் வெளிப்படுகின்றன.  அது குறித்து பிற்பாடு அவருக்கே கூட ஆச்சர்யம் ஏற்படுவதுண்டு.   இவையெல்லாம் இறை நமை ஆட்கொண்ட ஆணவமற்ற தருணங்கள்.  

இன்னும் நடனமாடும்போது,  சிரிக்கும்போது என எந்தச் செயல்களில் எல்லாம் நாம் வெளியிலிருந்து ஏற்றுக்கொண்ட அடையாளங்களுக்கு வேலையில்லையோ அப்போதெல்லாம் நாம் ஆணவமற்ற தன்மையில்தான் வசிக்கிறோம்.

ஆனால் சாதாரண மனிதன் இதுபோன்ற ஆணவமற்ற தன்மையில் பிரவேசித்து இயற்கையோடு ஒன்றுபடுவது அரிதாகவே நிகழ்கிறது.   ஞானிகள் 24 மணி நேரமும் அதே தன்மையில்தான் வாழ்கின்றனர்.  இதுவே ஒரு ஞானிக்கும், சாதாரண மனிதனுக்கும் உள்ள வித்தியாசம்.  

வெளித் தேடலை நிறுத்தி மெல்ல மெல்ல ஆணவமற்ற தன்மையில் சஞ்சரிக்கும் நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இதையே உணர்வுகளை வாழுங்கள் என ஓஷோ கூறுகிறார்.   உணர்வுகளை வாழும்போது அந்த உணர்வாகவே மாறிவிடும்போது மனமற்ற நிலை சாத்தியமாகிறது.  ஒரு பௌர்ணமியன்று மொட்டைமாடியில் அமர்ந்து நிலாவை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும்போது அது “நிலா” என்ற பெயரும் கூட மறந்துபோய்,  நம்முடைய அடையாளங்கள் தொலைந்துபோய் அதனோடு ஒன்றிவிடக்கூடிய வாய்ப்பு அமையும்.

இங்கு அறிவு, மனம் என்பதற்கெல்லாம் இடமில்லை.   அது ஒரு உணர்வு அவ்வளவே.   எண்ணங்களில் தானாக எழுந்து அலையும் எண்ணங்கள் என்பது உண்டு.  அதேபோல நாமாய் விரும்பி இயக்கும் எண்ணங்கள் என்பதும் உண்டு.   உதாரணமாய் இறைத்துகள்பற்றி, சுத்தவெளி பற்றி நீங்கள் எண்ண ஆரம்பிக்கிறீர்கள்.   ஆழமாய் எண்ணுகிறீர்கள்.   இது தானாக எழுந்து அலையும் எண்ணம் அல்ல.  அதனால் இது சிந்தனை என்ற சிறப்புப் பெயரைப் பெறுகிறது.

 சிந்தனையாய் இருந்தாலும் எண்ணம் எண்ணம்தான்.   எங்கு எண்ணம் இருக்கிறதோ அங்கு மனம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.   இதில் அறிவு, மனம் என்பதெல்லாம் கிடையாது.

‘4 மணிக்கு எழு’ என்று சொல்வது அறிவு.  ‘இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு’ என்று சொல்வது மனம்.   இப்போது உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உண்டு.  மனம் சொன்னபடி கொஞ்ச நேரம் தூங்கலாம்.  அல்லது அறிவு சொன்னபடி எழுந்துகொள்ளலாம்.   இப்போது நீங்கள் எழுந்து கொண்டீர்களானால் உங்களைப் பற்றி உங்களுக்கே ஒரு பெருமை உண்டாகும்.   அறிவு சொன்னதை நீங்கள் கேட்டுவிட்டதற்காக உங்களுக்கு ஒரு நிறைவு ஏற்படும்.  ஆனால் அதுவும் ஒரு விதமான ஆணவமே என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளுதல் சற்றுக் கடினம்தான்.

அதிகாலையில் துயிலெழு என்று காலங்காலமாய் உங்களுக்குப் போதனைகள் நிகழ்ந்திருக்கின்றன.  அப்படித் துயில்எழும்போது உங்கள் தன்முனைப்பு திருப்திப் பட்டுக்கொள்கின்றது.   தவறும்போது குற்றமனப்பான்மை உங்களை ஆக்ரமித்துக் கொள்கிறது.   ஆனால் இரண்டுமே ஆணவத்தின் வெளிப்பாடுகளே.   ஏனெனில் இரண்டுமே வெளியிலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் நிகழ்பவை.

இரண்டுமே மனதிலிருந்து நிகழ்பவை.   ஒழுக்கக் கருத்துக்கள், அற நெறி சிந்தனைகளால் உருவேற்றப்பட்ட மனதின் ஒரு பகுதியை நீங்கள் அறிவென்று கருதிக் கொண்டிருக்கிறீர்கள்.  அதன் படி செயல்பட்டுவிட்டால் உவகை கொண்டு பெருமையடைகிறீர்கள்.   இது ஒரு நேர்மறையான ஆணவம். அவ்வளவுதானேயொழிய ஆணவமற்ற நிலையல்ல.  ஆணவமற்ற நிலை என்பது மனமில்லாதபோது நிகழ்வது.   ஆதலால் சிந்தனையை அறிவு என்றும் ஆணவமற்ற நிலை என்பதும் கருதிக்கொள்வது தவறு.

ஆனால் அறிவு என்று மகரிஷி குறிப்பிடுவது முற்றிலும் வேறானது.  அது பேரறிவு.  அறிவே தெய்வம் என்று குறிப்பிடப்படுவது நீங்கள் வெளியிலிருந்து சேர்த்துக்கொண்ட கொள்கைகளை, கோட்பாடுகளை, விஷய ஞானங்களை அல்ல.   அது முற்றிலும் வேறுபட்ட பரிணாமம் உடையது.  

ஒரு தேங்காயை கீழே போட்டால் உடைந்துவிடுகிறது.   ஆனால் 100 அடி உயரமுள்ள தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் விழும்போது அது உடைவதில்லை.   அது உடையக்கூடாது என்பதற்காய் தென்னை மரத்தின் அறிவு அற்புதமாய் செயல்பட்டு அதற்கு மட்டையைத் தருகிறது.   சாதாரண மட்டையல்ல.   தண்ணீரில் விழுந்தாலும் கூட தண்ணீர் உட்செல்லாதவாறு அமைக்கப்பட்ட வாட்டர் ப்ரூப் மட்டை.  

மட்டையை உரித்து தேங்காயை உடைக்கும் போது அது எளிதாக உடைபடும் விதமாக அதில் மூன்று கோடுகள் உள்ளன.   அந்தக் கோட்டில் அடித்தால் சரிபாதியாக உடைகிறது.  இதுவெல்லாம் தென்னைமரத்தின் அறிவு.   மனிதனில் உண்ட உணவை ஏழு தாதுக்களாக மாற்றும் விதமாய், இன்னும் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தும் விதமாய் அறிவு செயல்படுகிறது.   அதையே பேரறிவு.  அந்த அறிவே தெய்வம் என்றுதான் ஞானிகள் குறிப்பிட்டனரேயன்றி நாம் வெளியிலிருந்து சேர்க்கும் விஷய ஞானங்களை அறிவு என்று கருதிக்கொள்வது மடமை.

இந்த அறிவை உணர்ந்து அதனோடு ஒன்றி ஆச்சர்யத்தில் திளைத்துப் போய் நன்றி உணர்வு நம்மிலிருந்து அபரிமிதமாய் பெருகுவதே ஆணவமற்ற நிலை.

சரி.  ஆணவம் முற்றிலும் தேவையற்றதா?

அப்படியல்ல.   புறவாழ்க்கையை சிக்கலின்றி நடத்திக் கொள்ள வெகு நிச்சயமாய் இந்த ஆணவம் தேவை.   நமது பெயர், தொழில் இவை குறித்த நினைவு இருந்தால்தான் இங்கு வாழ்க்கை எளிதாகும்.

ஒரு டாக்டர் தன் மருத்துவ சேவையைச் செய்யும்போது “டாக்டர்” என்ற நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டால்தான் அவரால் சரியான முறையில் மருத்துவம் பார்க்க இயலும்.  

அது போல ஒவ்வொருவரும் தன் தொழிலுக்கு ஏற்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ளும்போதுதான் இங்கு செயல்கள் நடக்கும்.   ராமன் என் பெயருடைய ஒருவர் தன் பெயர் இது என்ற அடையாளத்தை வைத்துக்கொள்ளும்போதுதான் புற வாழ்க்கை குழப்பமில்லாமல் நடக்கும்.   ஆக புற வாழ்க்கைக்கு இந்த ஈகோ என்ற ஆணவம் அவசியம்தான்.

அக வாழ்க்கையைப் பொறுத்த வரையில் நமக்கு எந்த அடையாளங்களும் தேவையில்லை.   நாம் ஒரு விழிப்புணர்வு.  இந்த முழுமையின் ஒரு அங்கம் அவ்வளவே.

ஒரு ஞானியும் கூட தன் சிஷ்யர்களிடையே சொற்பொழிவு நடத்தும்போது ஒரு ‘குரு’ என்கிற நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டால்தான் அந்தச் சொற்பொழிவை நிகழ்த்த இயலும்.   ஆகையால் ஆணவம் குறித்து குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.  

புற வாழ்க்கைக்கான செயல்களில் ஈடுபடும்போது நீங்கள் வெளியிலிருந்து சேகரித்துக் கொண்ட விசய ஞானங்களைப் பயன்படுத்தித்தான் அச்செயல்களைச் செய்ய இயலும்.   அப்போது மனம் என்ற ஒன்று கண்டிப்பாய் இயங்கித்தான் ஆக வேண்டும். ஆனால் இப்போது மனம் ஒரு கருவி மட்டுமே.   அதை வேண்டியபோது மட்டுமே உபயோகிக்கிறோம்.   ஆகையால் ஆணவம் நம் விழிப்புணர்வில் நிகழ்கிறது.

இது போன்ற விழிப்புணர்வு நிலையில் இருந்துதான் மகரிஷி போன்ற ஞானிகள்……

“நான் ஒரு சாம்யம் வகுத்திருக்கிறேன்.   நான் ஒரு தியானப் பயிற்சியை வடிவமைத்திருக்கிறேன்”  எனக் கூறுகிறார்கள்.

இங்கு உபயோகப்படுத்தப் பட்ட “நான்” என்பது அவர்களின் விழிப்புணர்வில் இருந்து வெளிப்படுவது.   அது எளிமையாய் புரிந்துகொள்வதற்காக மட்டுமே.  அதில் வேறு எந்த உட்கருத்தும் இல்லை.  
ஏனெனில்….

“சுத்தவெளி ஒரு பயிற்சியை வடிவமைத்தது.   சுத்தவெளி வருகிறது”

என்று சொன்னால் புற வாழ்க்கையில் குழப்பங்களே மிஞ்சும்.

இந்தக் குழப்பங்களை தவிர்க்கும் ஒரே நோக்கத்தில்தான் ஞானிகள் “நான்” என்ற வார்த்தையைத் தங்கள் விழிப்புணர்விலிருந்து கையாளுகிறார்கள்.

இவ்வாறான முறையில் ஆணவம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டால் பிறகு ஆணவத்தைக் கடந்துவருதல் அதாவது மனதைக் கடந்து செல்லுதல் எளிதாகும்.

ஐயமிருப்பின் அல்லது முரண்பாடுகள் இருப்பின் தயக்கமின்றி சுட்டிக்காட்டலாம்.

நன்றி

#ராகவேந்தர்ஈகோ என்றால் என்ன?

என்னளவில் நான் ஓஷோவிடமிருந்து கற்று உணர்ந்ததை என்னுடைய வார்த்தைகளில் தர முயற்சிக்கிறேன்.

இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் ஒரு சார்பு நிலையிலேயே அதாவது ஒன்றையொன்று சார்ந்தே இயங்கிக்கொண்டிருக்கிறது.

இதை பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றல் என்று மகரிஷி குறிப்பிடுகிறார்.

ஈகோவைப் பற்றிப் புரிந்துகொள்ள இந்த சார்பு நிலையைப் பற்றி சற்று ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

பல்வேறு உதாரணங்கள் மூலம் இந்த சார்பு நிலையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

இந்தியாவில் ஒரு காலத்தில் பஞ்சம் நேர்ந்தது.  பஞ்சத்திற்கு என்ன காரணம் என விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.  அந்தக் காலத்தில் அமெரிக்கர்கள் தவளை சூப்பை விரும்பி அருந்துவர்.  ஆதலால் இந்தியாவில் தவளை ஏற்றுமதி வியாபாரம் மிகவும் செழிப்பாக நடைபெற்று வந்தது.

பஞ்சத்தின் காரணத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் தவளை ஏற்றுமதி வியாபாரம்தான் பஞ்சத்திற்குக் காரணம் எனக் கண்டறிந்தனர்.

இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதைப் போல சம்பந்தமில்லாமல் இருப்பதாகத் தோன்றும்.  தவளை ஏற்றுமதிக்கும், பஞ்சத்திற்கும் என்ன சம்பந்தம்?

சம்பந்தம் உண்டு.   பயிரினங்களை அழிக்கும் பூச்சியினங்கள்தான்  தவளையின் உணவு.  பூச்சியினங்கள் பெருகாமல் அதன் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தவளைக்கு இயற்கை கொடுத்த வேலை.  தவளை இனங்கள் அருகி விட்டால் பூச்சியினங்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
பயிரினங்கள் அழிக்கப்படும்.  பஞ்சம் நேரும்.

மற்றொரு காலத்தில் இந்தியாவில் வெறிநாய்க்கடி (Rabies)  வைரஸ் அதிகமாகப் பரவியது.   இதன் காரணத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு விதமான கழுகு இனங்களை மனிதன் வேட்டையாடிக் கொன்றதுதான் ரேபிஸ் வைரஸ் பரவக் காரணம் எனக் கண்டறிந்தனர்.

கழுகு இனங்கள் அழிந்ததற்கும் ரேபிஸ் வைரஸ் பரவுவதற்கும் என்ன தொடர்பு?  ரேபிஸ் வைரஸ் தாக்கிய நாய், பன்றி போன்ற விலங்குகள் இறந்து கிடக்கையில் அதன் உடலிலுள்ள ரேபிஸ் வைரஸ் இறப்பதில்லை.   அந்த உடல்களை நாம் சரியான முறையில் அப்புறப்படுத்துவதில்லை.  அதனால் அந்தப் பகுதியில் வரும் மனிதர்களையும், பிற விலங்குகளையும் ரேபிஸ் வைரஸ் தொற்றிக்கொள்கிறது.

கழுகு இனங்கள் இந்த இறந்த உடல்களை உண்டு வாழ்பவை.  ரேபிஸ் வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் அவைகளுக்கு இயற்கையாகவே உண்டு.  அந்த கழுகு இனங்களை வேட்டையாடி அழித்துவிட்டதால் ரேபிஸ் வைரஸ் தாக்கி இறந்த உடல்களை உண்டு அழிப்பதற்கு யாருமில்லை.  எனவே வெறி நாய்க் கடி நோய் பரவியது.

அதேபோல தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் நாய், பூனை போன்ற விலங்குகள் உடல் சிதறி இறந்துகிடக்கின்றன.  அவற்றையெல்லாம் நாம் முறையாக அப்புறப்படுத்துவதில்லை.  அவை அப்படியே இருந்தால் வைரஸ் கிருமிகள் பரவி தொற்று நோய் ஏற்படும்.  ஆனால் அந்த உடல்களை உண்டு சுத்தப்படுத்துவது காகம்.  அதனால்தான் அது ஆகாயத் தொட்டி என்றழைக்கப்படுகிறது.  காகம் மட்டும் இல்லையானால் நாம் இங்கு ஆரோக்கியமானதொரு வாழ்க்கையை வாழ்தல் சாத்தியமே இல்லை.

ஒரு சாரைப் பாம்பு ஒரு நாளில் மூன்று எலிகளை உணவாகக் கொள்கிறது.  இதனால் எலிகளின் எண்ணிக்கை கட்டுப்படுகிறது.   பாம்புகளே இல்லையானால் எலிகளின் எண்ணிக்கை பெருகி எந்த தானியங்கிடங்கிலும் தானியங்களை இருப்பு வைக்க இயலாது போகும்.

இப்படி ஆயிரமாயிரம் உதாரணங்களைக் கூறலாம்.

அமேசான் காடுகளில் ஒரு புலி, மானை வேட்டையாடுவதற்கும் நம் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.  புலி மானை வேட்டையாடவில்லையெனில் மானின் எண்ணிக்கை பெருகும்.  மானின் எண்ணிக்கை பெருகினால் தாவரங்களின் எண்ணிக்கை குறையும்.  தாவரங்களின் எண்ணிக்கை குறைந்தால் மழை குறையும்.   பயிர் விளையாது.   பஞ்சம் நேரும்.

தசாவதாரம் திரைப்படத்தில்….ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பில் ஏற்படும் அதிர்வுக்கும் பூகம்பத்திற்கும் தொடர்பு உண்டு என்ற ஒரு வசனம் வரும். இதை கேயாஸ் (Chaos) தியரி என்கிறோம்.  ஆக இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்து இயக்கங்களும் ஒன்றையொன்று சார்ந்தே நடைபெறுகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

நம் முன்னோர்கள் இதை உணர்ந்திருந்தனர்.  இதை அனுபவமாக உணரும்போது அதன் விளைவாக நம்மிலிருந்து நன்றியுணர்வு ஊற்றெடுக்கும்.  அந்த நன்றியுணர்வினால்தான் அவர்கள் மலையை, மரங்களை, பஞ்சபூதங்களை, நாயை, பன்றியை, பாம்பை என அனைத்தையும் வழிபட்டனர்.  இந்த வழிபாடுகள் உச்சகட்ட நன்றியுணர்வின் வெளிப்பாடு.

மனிதனுக்கு என்று தனியான மையம் இல்லை.  இந்தப் பிரபஞ்சத்திற்கு என்று ஒரு மையம் உண்டு.  அதை பிரபஞ்ச மையம் என்கிறார் ஓஷோ.  முன்னோர்கள் அதை தம்மா, தாவோ என்று அழைத்தனர்.  இந்த பிரபஞ்ச மையமே ஒவ்வொரு மனிதனுக்கும் மையமாக அமைந்துள்ளது. ஒரு அமைதியான ஏரியில் ஒரு கல்லை எறிந்தால் கல்லை எறிந்த மையத்திலிருந்து வட்ட வடிவில் அலைகள் பிறக்கும்.  நூற்றுக்கணக்கான வட்ட வடிவ அலைகள் பிறந்து கொண்டேயிருக்கும்.  அத்துணை வட்டங்களுக்கும் மையம் ஒன்றுதான்.  தனித்தனியான மையங்கள் என்பது கிடையாது.   ஒவ்வொரு தனி வட்டமும் தன் மையம் கல் விழுந்த இடம்தான் என்று உரிமை கொண்டாடலாம்.   ஒருவிதத்தில் அது சரியும் கூட.   ஆனால் அந்த மையம் எல்லா வட்டங்களுக்கும் பொதுவானது.   எந்தத் தனி வட்டமும் அந்த மையத்தை தனது என்று உரிமை பாராட்ட முடியாது.

இதை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் சூரியன், சந்திரன் போன்றவற்றை எடுத்துக்கொள்வோம்.  இந்த பூமி வாழ் உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் அவை பொதுவானவை.  தனிப்பட்ட மனிதன் சந்திரனைப் பார்த்து அது தன்னுடையது என உரிமை கொண்டாடலாம்.  ஆனால் அது ஒரு கற்பனையே.  அது பூமிவாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவானது என்பதே உண்மை.

இதை மகரிஷி அவர்கள் ஒவ்வொரு உயிரினத்தின் கருமையமும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளதோடு மட்டுமில்லாமல் அனைத்துக் கருமையங்களும் பிரபஞ்சத்தின் கருமையத்தோடு இணைந்துள்ளன என்கிறார்.

ஆக மனிதன் முழுமையான இயற்கையின் ஒரு அங்கம். அவன் தனித்து இயங்குபவனல்ல. அவனால் தனித்து இயங்க இயலாது.

ஆனால் அவன் தன்னை முழுமையிலிருந்து பிரித்துக் கொண்டு, தனியாகச்  செயல்படத்தொடங்கும் அந்த விநாடியில்தான் ஆணவம் (Ego) என்பது பிறக்கிறது. அதுவே ஆணவத்தின் வேர். எல்லோருக்கும் பொதுவான அந்த மையத்தை தன் மையம் என்று உரிமை கொண்டாடத்தொடங்கும் இடம் ஆணவத்தின் பிறப்பிடம்.

இதை மகரிஷி அவர்கள் குறிப்பிடும்போது….
”தான் இறைநிலையிலிருந்து வந்தவன் என ஒரு மனிதன் நினைப்பது மிகச்சரியானதுதான்.   ஆனால் தன்னைப் போலவே சக மனிதனும் இறைநிலையிலிருந்து வந்தவன் என்பதை மறந்துவிடும்போதுதான் தன்முனைப்பு தலைதூக்குகிறது” என்பார்.

ஒரு இசையமைப்பாளர் அற்புதமான ஒரு பாடலுக்கு இசை அமைக்கிறார் என்று சொன்னால் அது அவரால் மட்டுமே செய்யப்பட்டதன்று.   அதற்கு இசைக் கருவியை வடிவமைத்தவன், இன்னும் பல்வேறு இசைக்கலைஞர்களின் உள்ளிட்ட பலரின் பங்களிப்பு உண்டு.   இந்த சார்பு நிலை விளங்கிவிடுமானால் அங்கு ஆணவத்திற்கு இடமில்லை.

இன்னும் ஆணவமற்ற நிலை ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியமா?  அது சாதாரண மனிதர்களுக்கு வாய்ப்பதில்லையா? சாதாரண மனிதன் ஆணவமற்று இருந்த தருணங்களே இல்லையா?  என்ற கேள்விக்கு விடைகாண்பதின் மூலம் ஆணவம் என்றால் என்ன என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ளலாம்.

ஒரு மனிதன் கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கத்தில் சஞ்சரிக்கும்போது அவன் ஆணவமற்ற நிலையில் பிரவேசிக்கிறான்.  ஆழ்ந்த தூக்கத்தில் மனம் என்பது இல்லை.  மனம் இல்லாத இடத்தில் ஆணவம் என்பதும் இல்லை.  மனம் செயல்படும்போது மட்டுமே ஆணவம் பிறக்கும்.   மனமற்ற நிலையில் ஆணவம் இல்லை.  ஆனால் ஆழ்ந்த தூக்கத்தில் விழிப்புணர்வு என்பதும் இல்லாமல் போகிறது.   ஆகையால் இறையோடு, இயற்கையோடு ஒன்றிய ஆணவமற்ற நிலையை அனுபவத்தில் உணர முடியாது போகிறது.

தூக்கத்திற்கு அடுத்தாற்போல காமம்.  எந்தவிதமான குற்ற உணர்வுமின்றி காமத்தில் ஈடுபடும்போது அதன் உச்சகட்டப் பரவசத்தில் “நான்” என்பதற்கான அனைத்து அடையாளங்களும் தொலைந்து போய் அத்வைத நிலையை தரிசிக்கிறோம்.  ஆனால் ஒரு சில விநாடிகளில் மீண்டும் “தொப்’ என்று ஆணவத்தில் விழுந்துவிடுகிறோம்.

அதைத் தவிர நமை மறந்து பூக்களை, சூர்யோதயத்தை, சூர்ய அஸ்தமனத்தை, பௌர்ணமி நிலாவை, தென்றல் காற்றை, மலையை, அருவியை இன்னும் இதுபோன்ற பல்வேறு இயற்கை அதிசயங்களை ரசிக்கும் போது நம் அடையாளங்கள் தொலைந்துபோய் இயற்கையோடு ஒன்றி விடுகிறோம்.   அப்போதெல்லாம் நாம் மனமற்ற தன்மையில் அதாவது ஆணவமற்ற தன்மையில் இயற்கையோடு இயற்கையாய் கலந்து முழுமையாய் இருக்கிறோம்.

ஒரு பூவை ரசித்துப் பார்த்து அதன் பெயர் போன்ற அடையாளங்களை மறந்து அதனோடு ஒன்று கலந்து நிற்கும் அந்தத் தருணம் ஆணவமற்ற நிலை.   “அட….. அந்தப் பூ எவ்வளவு அழகு” எனத் தோன்றிய அந்த மைக்ரோ விநாடியில் மனம் உள்ளே வந்துவிடுகிறது.  ஆணவம் துவங்கிவிடுகிறது.

திடீரென ஒரு அதிர்ச்சியை, ஆபத்தை சந்திக்கும்போது மனமற்ற நிலை வாய்க்கிறது.   அந்த சமயங்களில் நாம் ஆணவமின்றி அதாவது மனமின்றி இருக்கிறோம்.

இன்னும் எளிமையாய் ஒரு உதாரணம்.
உங்கள் இரு சக்கர வாகனத்தில் நீங்கள் பயணம் செய்துகொண்டிருக்கும்போது உங்களை கடந்து செல்லும் ஒரு பெண்ணின் சேலை சக்கரத்திற்குள் மாட்டிக்கொள்ளும் நிலையில் உள்ளதை நீங்கள் கவனிக்கிறீர்கள்.  அந்தப் பெண்மணிக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  ஆனால் உங்களை அறியாமல் உங்கள் வாகனத்தின் வேகத்தைக் கூட்டி அந்தப் பெண்ணை எச்சரிக்கிறீர்கள்.  

இந்தச் செயல் நடக்கும் அந்த நிமிடங்களில் உங்களை நீங்கள் கவனித்ததுண்டா?  அந்த நிமிடங்களில் உங்கள் பெயர், உங்கள் ஜாதி, மதம், அஸ்தஸ்து, பதவி, அதிகாரம் என நீங்கள் வெளியிலிருந்து சேர்த்துக்கொண்ட அடையாளங்கள் எதாவது உங்கள் மனதிலிருந்ததா?   அங்கு நீங்கள் இல்லை.   அந்தப் பெண்ணுக்கு நேரப்போகும் ஆபத்து குறித்து எச்சரிக்கும் உங்கள் செயல் மட்டுமே இருந்தது.

உண்மையில் அது உங்கள் செயல் இல்லை.  எங்கே நீங்கள் இல்லையோ…….அதாவது உங்கள் அடையாளங்கள் இல்லையோ……அதாவது உங்கள் மனம் இல்லையோ……அங்கே இறை உங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறது.   இப்போது அது இறையின் செயல்.   அது குறித்து அகங்காரம் கொள்ள ஏதுமேயில்லை.  இதை ஓஷோ…..

“When you are not there…. God will take possession of you” என்று கூறுகிறார்.

வள்ளலார் ஒரே இரவில் 1590 வரிகள் கொண்ட அகவலை ஒரே இரவில் எழுதி முடித்தார்.  அது அவருடைய செயல் அல்ல.   மனமற்ற நிலையில் இறை அவரை ஆட்கொண்டு…..அவரது உடலை ஒரு கருவியாக்கி….அகவலாக வெளிப்பட்டது.

இது போன்ற ஆணவமற்ற தருணங்கள் ஏதோ ஞானிகளுக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல.

எங்கெல்லாம் செய்பவன் மறைந்து செயல் மட்டுமே நடைபெறுகிறதோ அங்கெல்லாம் மனிதன் முழுமையாகிய இயற்கையோடு, இறையோடு ஒன்றுகிறான்.   ஒரு இசையமைப்பாளர் இசையில் ஒன்றும்போது அவரையும் அறியாமல் ஒரு அற்புதமான இசை வெளிப்படுவது அந்த ஆணவமற்ற தருணத்தில்தான்.  

ஒரு பேராசிரியர் தன்னை மறந்து மாணவர்களோடு ஒன்றி உரைநிகழ்த்தும்போது அந்த உரையில் அவரது தயாரிப்பில் இல்லாத பல அற்புதமான விஷயங்கள் வெளிப்படுகின்றன.  அது குறித்து பிற்பாடு அவருக்கே கூட ஆச்சர்யம் ஏற்படுவதுண்டு.   இவையெல்லாம் இறை நமை ஆட்கொண்ட ஆணவமற்ற தருணங்கள்.  

இன்னும் நடனமாடும்போது,  சிரிக்கும்போது என எந்தச் செயல்களில் எல்லாம் நாம் வெளியிலிருந்து ஏற்றுக்கொண்ட அடையாளங்களுக்கு வேலையில்லையோ அப்போதெல்லாம் நாம் ஆணவமற்ற தன்மையில்தான் வசிக்கிறோம்.

ஆனால் சாதாரண மனிதன் இதுபோன்ற ஆணவமற்ற தன்மையில் பிரவேசித்து இயற்கையோடு ஒன்றுபடுவது அரிதாகவே நிகழ்கிறது.   ஞானிகள் 24 மணி நேரமும் அதே தன்மையில்தான் வாழ்கின்றனர்.  இதுவே ஒரு ஞானிக்கும், சாதாரண மனிதனுக்கும் உள்ள வித்தியாசம்.  

வெளித் தேடலை நிறுத்தி மெல்ல மெல்ல ஆணவமற்ற தன்மையில் சஞ்சரிக்கும் நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இதையே உணர்வுகளை வாழுங்கள் என ஓஷோ கூறுகிறார்.   உணர்வுகளை வாழும்போது அந்த உணர்வாகவே மாறிவிடும்போது மனமற்ற நிலை சாத்தியமாகிறது.  ஒரு பௌர்ணமியன்று மொட்டைமாடியில் அமர்ந்து நிலாவை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும்போது அது “நிலா” என்ற பெயரும் கூட மறந்துபோய்,  நம்முடைய அடையாளங்கள் தொலைந்துபோய் அதனோடு ஒன்றிவிடக்கூடிய வாய்ப்பு அமையும்.

இங்கு அறிவு, மனம் என்பதற்கெல்லாம் இடமில்லை.   அது ஒரு உணர்வு அவ்வளவே.   எண்ணங்களில் தானாக எழுந்து அலையும் எண்ணங்கள் என்பது உண்டு.  அதேபோல நாமாய் விரும்பி இயக்கும் எண்ணங்கள் என்பதும் உண்டு.   உதாரணமாய் இறைத்துகள்பற்றி, சுத்தவெளி பற்றி நீங்கள் எண்ண ஆரம்பிக்கிறீர்கள்.   ஆழமாய் எண்ணுகிறீர்கள்.   இது தானாக எழுந்து அலையும் எண்ணம் அல்ல.  அதனால் இது சிந்தனை என்ற சிறப்புப் பெயரைப் பெறுகிறது.

 சிந்தனையாய் இருந்தாலும் எண்ணம் எண்ணம்தான்.   எங்கு எண்ணம் இருக்கிறதோ அங்கு மனம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.   இதில் அறிவு, மனம் என்பதெல்லாம் கிடையாது.

‘4 மணிக்கு எழு’ என்று சொல்வது அறிவு.  ‘இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு’ என்று சொல்வது மனம்.   இப்போது உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உண்டு.  மனம் சொன்னபடி கொஞ்ச நேரம் தூங்கலாம்.  அல்லது அறிவு சொன்னபடி எழுந்துகொள்ளலாம்.   இப்போது நீங்கள் எழுந்து கொண்டீர்களானால் உங்களைப் பற்றி உங்களுக்கே ஒரு பெருமை உண்டாகும்.   அறிவு சொன்னதை நீங்கள் கேட்டுவிட்டதற்காக உங்களுக்கு ஒரு நிறைவு ஏற்படும்.  ஆனால் அதுவும் ஒரு விதமான ஆணவமே என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளுதல் சற்றுக் கடினம்தான்.

அதிகாலையில் துயிலெழு என்று காலங்காலமாய் உங்களுக்குப் போதனைகள் நிகழ்ந்திருக்கின்றன.  அப்படித் துயில்எழும்போது உங்கள் தன்முனைப்பு திருப்திப் பட்டுக்கொள்கின்றது.   தவறும்போது குற்றமனப்பான்மை உங்களை ஆக்ரமித்துக் கொள்கிறது.   ஆனால் இரண்டுமே ஆணவத்தின் வெளிப்பாடுகளே.   ஏனெனில் இரண்டுமே வெளியிலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் நிகழ்பவை.

இரண்டுமே மனதிலிருந்து நிகழ்பவை.   ஒழுக்கக் கருத்துக்கள், அற நெறி சிந்தனைகளால் உருவேற்றப்பட்ட மனதின் ஒரு பகுதியை நீங்கள் அறிவென்று கருதிக் கொண்டிருக்கிறீர்கள்.  அதன் படி செயல்பட்டுவிட்டால் உவகை கொண்டு பெருமையடைகிறீர்கள்.   இது ஒரு நேர்மறையான ஆணவம். அவ்வளவுதானேயொழிய ஆணவமற்ற நிலையல்ல.  ஆணவமற்ற நிலை என்பது மனமில்லாதபோது நிகழ்வது.   ஆதலால் சிந்தனையை அறிவு என்றும் ஆணவமற்ற நிலை என்பதும் கருதிக்கொள்வது தவறு.

ஆனால் அறிவு என்று மகரிஷி குறிப்பிடுவது முற்றிலும் வேறானது.  அது பேரறிவு.  அறிவே தெய்வம் என்று குறிப்பிடப்படுவது நீங்கள் வெளியிலிருந்து சேர்த்துக்கொண்ட கொள்கைகளை, கோட்பாடுகளை, விஷய ஞானங்களை அல்ல.   அது முற்றிலும் வேறுபட்ட பரிணாமம் உடையது.  

ஒரு தேங்காயை கீழே போட்டால் உடைந்துவிடுகிறது.   ஆனால் 100 அடி உயரமுள்ள தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் விழும்போது அது உடைவதில்லை.   அது உடையக்கூடாது என்பதற்காய் தென்னை மரத்தின் அறிவு அற்புதமாய் செயல்பட்டு அதற்கு மட்டையைத் தருகிறது.   சாதாரண மட்டையல்ல.   தண்ணீரில் விழுந்தாலும் கூட தண்ணீர் உட்செல்லாதவாறு அமைக்கப்பட்ட வாட்டர் ப்ரூப் மட்டை.  

மட்டையை உரித்து தேங்காயை உடைக்கும் போது அது எளிதாக உடைபடும் விதமாக அதில் மூன்று கோடுகள் உள்ளன.   அந்தக் கோட்டில் அடித்தால் சரிபாதியாக உடைகிறது.  இதுவெல்லாம் தென்னைமரத்தின் அறிவு.   மனிதனில் உண்ட உணவை ஏழு தாதுக்களாக மாற்றும் விதமாய், இன்னும் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தும் விதமாய் அறிவு செயல்படுகிறது.   அதையே பேரறிவு.  அந்த அறிவே தெய்வம் என்றுதான் ஞானிகள் குறிப்பிட்டனரேயன்றி நாம் வெளியிலிருந்து சேர்க்கும் விஷய ஞானங்களை அறிவு என்று கருதிக்கொள்வது மடமை.

இந்த அறிவை உணர்ந்து அதனோடு ஒன்றி ஆச்சர்யத்தில் திளைத்துப் போய் நன்றி உணர்வு நம்மிலிருந்து அபரிமிதமாய் பெருகுவதே ஆணவமற்ற நிலை.

சரி.  ஆணவம் முற்றிலும் தேவையற்றதா?

அப்படியல்ல.   புறவாழ்க்கையை சிக்கலின்றி நடத்திக் கொள்ள வெகு நிச்சயமாய் இந்த ஆணவம் தேவை.   நமது பெயர், தொழில் இவை குறித்த நினைவு இருந்தால்தான் இங்கு வாழ்க்கை எளிதாகும்.

ஒரு டாக்டர் தன் மருத்துவ சேவையைச் செய்யும்போது “டாக்டர்” என்ற நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டால்தான் அவரால் சரியான முறையில் மருத்துவம் பார்க்க இயலும்.  

அது போல ஒவ்வொருவரும் தன் தொழிலுக்கு ஏற்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ளும்போதுதான் இங்கு செயல்கள் நடக்கும்.   ராமன் என் பெயருடைய ஒருவர் தன் பெயர் இது என்ற அடையாளத்தை வைத்துக்கொள்ளும்போதுதான் புற வாழ்க்கை குழப்பமில்லாமல் நடக்கும்.   ஆக புற வாழ்க்கைக்கு இந்த ஈகோ என்ற ஆணவம் அவசியம்தான்.

அக வாழ்க்கையைப் பொறுத்த வரையில் நமக்கு எந்த அடையாளங்களும் தேவையில்லை.   நாம் ஒரு விழிப்புணர்வு.  இந்த முழுமையின் ஒரு அங்கம் அவ்வளவே.

ஒரு ஞானியும் கூட தன் சிஷ்யர்களிடையே சொற்பொழிவு நடத்தும்போது ஒரு ‘குரு’ என்கிற நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டால்தான் அந்தச் சொற்பொழிவை நிகழ்த்த இயலும்.   ஆகையால் ஆணவம் குறித்து குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.  

புற வாழ்க்கைக்கான செயல்களில் ஈடுபடும்போது நீங்கள் வெளியிலிருந்து சேகரித்துக் கொண்ட விசய ஞானங்களைப் பயன்படுத்தித்தான் அச்செயல்களைச் செய்ய இயலும்.   அப்போது மனம் என்ற ஒன்று கண்டிப்பாய் இயங்கித்தான் ஆக வேண்டும். ஆனால் இப்போது மனம் ஒரு கருவி மட்டுமே.   அதை வேண்டியபோது மட்டுமே உபயோகிக்கிறோம்.   ஆகையால் ஆணவம் நம் விழிப்புணர்வில் நிகழ்கிறது.

இது போன்ற விழிப்புணர்வு நிலையில் இருந்துதான் மகரிஷி போன்ற ஞானிகள்……

“நான் ஒரு சாம்யம் வகுத்திருக்கிறேன்.   நான் ஒரு தியானப் பயிற்சியை வடிவமைத்திருக்கிறேன்”  எனக் கூறுகிறார்கள்.

இங்கு உபயோகப்படுத்தப் பட்ட “நான்” என்பது அவர்களின் விழிப்புணர்வில் இருந்து வெளிப்படுவது.   அது எளிமையாய் புரிந்துகொள்வதற்காக மட்டுமே.  அதில் வேறு எந்த உட்கருத்தும் இல்லை.  
ஏனெனில்….

“சுத்தவெளி ஒரு பயிற்சியை வடிவமைத்தது.   சுத்தவெளி வருகிறது”

என்று சொன்னால் புற வாழ்க்கையில் குழப்பங்களே மிஞ்சும்.

இந்தக் குழப்பங்களை தவிர்க்கும் ஒரே நோக்கத்தில்தான் ஞானிகள் “நான்” என்ற வார்த்தையைத் தங்கள் விழிப்புணர்விலிருந்து கையாளுகிறார்கள்.

இவ்வாறான முறையில் ஆணவம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டால் பிறகு ஆணவத்தைக் கடந்துவருதல் அதாவது மனதைக் கடந்து செல்லுதல் எளிதாகும்.

ஐயமிருப்பின் அல்லது முரண்பாடுகள் இருப்பின் தயக்கமின்றி சுட்டிக்காட்டலாம்.


தொடக்ககல்வி - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் (INSPIRE AWARD) 2016 - நடைமுறை படுத்துவதில் சில மாற்றங்கள் - இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

மகளிர் குழுவினர் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு

தேனி,:சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பள்ளிகளில் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு சமைத்து வழங்கப்படுகிறது.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்.,10 முதல் அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம்


நடக்கிறது. இதில் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், அமைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாகவே தாங்கள் வேலை செய்யும் மையங்களை பூட்டி, ஆவணங்களை கையோடு எடுத்து சென்றனர்.
இப்போராட்டத்தால் பள்ளி சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் உணவு வழங்கும் பணி தடைபடக்கூடாது என அரசு உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து பல இடங்களில் மையங்களின் பூட்டுகள் உடைத்து திறக்கப்பட்டன.
மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், மகளிர் திட்ட உறுப்பினர்கள், புதுவாழ்வு திட்ட பெண்கள் ஆகியோரின் பெயர் பட்டியல் பெற்று, சமையல் பணிக்கான பெண்களை அதிகாரிகள் தயார் செய்தனர். பள்ளிக்கு இரண்டு அல்லது மூன்று பெண்கள் வீதம் சமையல் பணிக்கு அனுப்பப்படுகின்றனர். இவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி, உணவு தயாரித்து மாணவர்களுக்கு வழங்குகின்றனர். அதற்காக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.100 சம்பளம் வழங்கப்படுகிறது. போராட்டம் முடியும்வரை தொடர்ந்து வேலைக்கு வர அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தேர்வு துறை திட்டம் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா

 தனியார் பள்ளி தேர்வு அறைகளில், ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்த, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது; அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.


தமிழகத்தில், மார்ச், 4 முதல், பிளஸ் 2; மார்ச், 15 முதல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன; 15 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஆயத்த பணிகளில் தேர்வுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரத்தில், குறுக்கு வழியில் மாநில, 'ரேங்க்' பிடிக்க நினைக்கும் சில தனியார் பள்ளிகளுக்கு, 'செக்' வைக்க, தேர்வு அறைகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, சந்தேகத்துக்கு இடமான தனியார் பள்ளிகள் பட்டியல் தயாராகி வருகிறது.
இதுகுறித்து, தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
சில ஆண்டுகளாக, கொங்கு மண்டலத்தில் உள்ள, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள்; மதுரை மாவட்டத்தில் உள்ள சில குறிப்பிட்ட பள்ளிகள் மட்டும், மாநில, 'ரேங்க்' எடுக்கின்றன.
கடந்த ஆண்டு, பிளஸ் 2 கணிதத் தேர்வின் போது, தனியார் பள்ளி தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் ஆள் மாறாட்டம் செய்ததும்; கேள்வித்தாளை, 'வாட்ஸ் ஆப்' மூலம், பிற ஆசிரியர்களுக்கு அனுப்பியதும் தெரிய வந்தது. இந்த பிரச்னை, பொதுத் தேர்வில் விஸ்வரூபம் எடுத்தது; இது குறித்த விசாரணை இன்னும் முடியவில்லை.
எனவே, இந்த ஆண்டு, தேர்வு மையங்களுக்கு, தேர்வு கண்காணிப்பாளர்கள் மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப்பட உள்ளது. மேலும், தேர்வு அறையில், கண்காணிப்பு கேமரா பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சில தனியார் பள்ளி தேர்வு மையங்களில் அதிகாரிகள், ஆசிரியர்கள் உதவியுடன் முறைகேடு நடப்பது இதன் மூலம் தடுக்கப்படும்.
இவ்வாறு தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறின.

அதிகாரிகள், அரசியல்வாதிகள் உடந்தை

சில குறிப்பிட்ட தனியார் பள்ளிகள் மட்டும், ஒவ்வொரு ஆண்டும் மாநில, 'ரேங்க்' பிடிக்கின்றன. மேலும், அரசு பள்ளிகள் பின்னுக்கு தள்ளப்பட்டு, சில தனியார் பள்ளிகள் முன்னிலை பெறுகின்றன. இதற்கு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சிலர் உடந்தையாக உள்ளனர். அதனால் தான், கண்காணிப்பு கேமரா பொருத்துதல்; மொபைல் போனுக்கு கட்டுப்பாடு போன்ற திட்டங்களை, தேர்வுத் துறையால் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியவில்லை என, கூறப்படுகிறது.

அரசுக்கு எதிராக கொதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்:

மறியல் செய்த ஆயிரக்கணக்கானோர் கைது
சென்னை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலி பணி இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 10ம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமாக அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் அரசு துறை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. 
12ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு சுமார் 60 ஆயிரம் பேர் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.இதையடுத்து சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக இருந்ததால் அரசு ஊழியர்கள் அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சி கூட்டங்களை நடத்தினார்கள்.இந்த நிலையில் அரசு ஊழியர் சங்க போராட்டத்திற்கு ஆசிரியர் கூட்டணி ஆதரவு அளித்தது. இன்று (திங்கட்கிழமை) முதல் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தை சேர்ந்த மோசஸ் அறிவித்து இருந்தார். அரசு ஊழியர்களின் போராட்டம் இன்று மேலும் தீவிரமாகிறது.
முடங்கிய பணிகள்
இன்று காலை முதல் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, வணிக வரித்துறை, வேலை வாய்ப்பு துறை, தொழிற் பயிற்சி துறை போன்றவற்றில் ஊழியர்கள் வேலைக்கு வராததால் துறைரீதியான பணிகளும், மக்கள் பணிகளும் முடங்கின. அரசுஊழியர்களின் போராட்டம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாலை மறியல்
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை முதல் அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அரசு ஊழியர் சங்கத்தினர் மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் கைது
சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே அரசு ஊழியர்கள் திரண்டனர். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். விருந்தினர் மாளிகையை முற்றுகையிட சென்ற அவர்களை போலீசார் தடுத்து மறித்தனர். இதனால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் அவர்களைகைது செய்தனர்.
மாநிலம் முழுவதும் கைது
அரசு ஊழியர்களின் தொடர் சேலை நிறுத்த போராட்டத்தால் பல்வேறு துறைகளின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.முதல்வர் அறிவிப்பாரா?அரசு ஊழியர்கள் போராட்டத்தில் நீதித்துறை, ரேஷன் கடை ஊழியர்களும் இன்று பங்கேற்கிறார்கள். எங்களின் முக்கிய 4 கோரிக்கைகளை முதல்வர் அறிவித்து விட்டால் முக்கிய பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று அரசு ஊழியர் சங்கத்தினர் மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி கூறியுள்ளார்.
போராட்டம் தீவிரமாகும்
இனி பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை. பட்ஜெட் கூட்டத் தொடரிலோ அல்லது முதல்வரின் பிறந்தநாள் அறிவிப்பாகவோ நல்ல செய்தி வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி இல்லை என்பது போன்ற நழுவலான அறிவிப்புவரும் பட்சத்தில் எங்களது போராட்டம் மேலும் தீவிரமாகும் என்று தமிழ் செல்வி கூறியுள்ளார். பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பாரா?

PF., வட்டி அதிகரிப்பு

17/02/2016

               ''நடப்பு நிதியாண்டில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம், 8.75 சதவீதத்தில் இருந்து, 8.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது,'' என,மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.


        மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சககட்டுப்பாட்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன், மத்திய அறங்காவலர் குழுமத்தின், 211வது கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு இதை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துறை செயலர் சங்கர் அகர்வால், வருங்கால வைப்பு நிதி கமிஷனர் சமாரியா பங்கேற்றனர்.