Saturday, 30 April 2016

ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு !

ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் கோரி போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவத்தினருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வாதிடப் போவதாக மத்திய முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான ராம் ஜேத்மலானி அறிவித்தார்.

தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில்
முன்னாள் ராணுவத்தினர் 320-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜந்தமர் மந்தருக்கு வெள்ளிக்கிழமை சென்று முன்னாள் ராணுவத்தினருக்கு தனது ஆதரவை ராம் ஜேத்மலானி தெரிவித்தார்.
அப்போது பேசுகையில், "எனக்கு தற்போது 93 வயதாகின்றது. எனவே எந்நேரமும் நான் இறக்கலாம். ஆனால், உச்ச நீதிமன்றத்திடம் இருந்து உங்களுக்கு நான் நீதி பெற்றுத் தரும்வரை, அது நிகழாது என்று உறுதியளிக்கிறேன்' என்றார்.

ஜந்தர் மந்தர் பகுதியில் நடக்கும் போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் முன்னாள் ராணுவ அதிகாரி சத்பீர் சிங் கூறுகையில், "3 முதல் 4 நாள்களில், உச்ச நீதிமன்றத்தில் ராம் ஜேத்மலானி வழக்கு தொடுக்கவுள்ளார். இதற்காக அவர் வழக்குரைஞர் கட்டணம் எதுவும் கேட்கவில்லை. இதேபோல், பாதுகாப்புப் படை தீர்ப்பாயத்திலும் 4 வழக்குகள் தொடுக்கப்படவுள்ளது' என்றார்.
அதைத் தொடர்ந்து, ராம் ஜேத்மலானி செய்தியாளர்களிடம் பேசியபோது பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அடைந்த தோல்வியைப் போல, இனிவரும் தேர்தல்களில் பாஜக தோல்வியைச் சந்திக்கும் என்றும், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.
கருப்புப் பண விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு ராம் ஜேத்மலானி வழக்கு தொடுத்து வாதாடி வருகிறார். வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டு நாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்

இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை வாபஸ் பெற வேண்டும்!

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசின் பள்ளிக் கல்வி
இயக்ககத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 11.4.2016 தேதியிட்ட சுற்றறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல்நிலைக் கல்வி மாணவர்கள் சேர்க்கையின்போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு 1 சதவீதம், முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 31 சதவீதம் என இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் காணப்படுகிறது.
தமிழகத்தில், முற்பட்ட வகுப்பினருக்கு என சட்டப்படி இட ஒதுக்கீடு இல்லை. தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், முன்னேறிய இதர சமூகத்தினர் அனைவரும் மதிப்பெண் அடிப்படியில் 31 சதவீத இடத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த அடிப்படைக்கூடத் தெரியாமல் கல்வித்துறையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், அருந்ததியர், முஸ்லிம்கள் ஆகியோருக்கு தனி இட ஒதுக்கீடு உண்டு. அதையும் இந்த சுற்றறிக்கையில் பிரித்து காட்டவில்லை.தமிழக அரசின் கல்வித் துறை, முரண்பாடான இந்த சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற்று சட்டப்படியானஇட ஒதுக்கீடு குறித்த சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என்று வீரமணி தெரிவித்துள்ளார்.

எல் நினோக்கு அடுத்து லா நினா விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

எல் நினோ' வெப்ப சலனத்தை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் 'லா நினா' எனும் குளிர் சலனம் துவங்கும் எனவும், இது 'எல் நினோ'வை காட்டிலும் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு துவங்கிய 'எல் நினோ' காரணமாக இந்தியாவில், 33 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை நிலவுகிறது. பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவுகிறது.வியட்நாமில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பஞ்சம் நிலவுகிறது. இந்நிலையில் 'எல் நினோ' தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்தாலும், அதனைத் தொடர்ந்து வரும் 'லா நினா' காரணமாக பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த குளிர் சலனம் இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

1
2
3
4
இதுகுறித்து ஐ.நா., துணைப் பொதுச் செயலர் ஸ்டீபன் ஓபிரையன் கூறியதாவது: 'எல் நினா'வை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் வரவிருக்கும் 'லா நினா' மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இது 'எல் நினா'வால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட மிகக் கடுமையாக இருக்கும். இதனால் ஏற்படும் வெள்ளப் பெருக்கால், விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

இன்று முதல் அமலுக்கு வருகிறது மனை வணிகச் சட்டம்.

மனை வணிக (ரியல் எஸ்டேட்) துறையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மனை வணிகச் சட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 1) முதல் அமலுக்கு வருகிறது.இதுகுறித்து மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மனை வணிகச் சட்டத்தில் உள்ள அம்சங்களை 6 மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அமல்படுத்த வேண்டும். கட்டுமானத் திட்டங்களில் காலதாமதம் ஏற்படாமல், குறிப்பிட்ட நேரத்துக்குள் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களை கட்டுமான நிறுவனங்கள் கட்டிமுடிப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.கட்டுமானத் திட்டங்கள் தொடர்பான வழக்குகளில், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் 60 நாள்களுக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குடியிருப்புகளை கட்டிக்கொடுப்பதில் தாமதம் ஏற்படாமல் தடுப்பதற்கும், கணக்கில் வராத பணத்தை மனை வணிகத்தில் முதலீடு செய்வதைத் தடுப்பதற்கும் மனை வணிகச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது.

















உங்களது ஊதிய விபரங்களை அறிய .....

இங்கே Click பண்ணவும்.....

PAYMENT AND OTHER SALARY DETAILS