மாவட்டங்கள் கதை -
இரு பதிவுகளின் இணைப்பு பாருங்கள் பகிருங்கள் குமாரி என்ற பெண்னின் பள்ளியில் டூர் போகிறார்கள் ..அதற்காக காலையில் அவசரமாக சோறு சாப்பிடுகிறாள்.அதில் நெல் இருந்து தொண்டையில் சிக்கி விக்க தண்ணிர் தூக்கி குடிக்கிறாள் அவ அம்மா உனக்கு என்ன விருதா தரப்போகிறார்கள் ,என்றாள் அவ அப்பா இராமநாதன் மதுரை மீனாட்சிக்கும் சிவனுக்கும் தேன் அபிஷேகம் செய்து கொண்டு இருக்கிறார்..திண்ணையில்இருக்கிற அஞ்சு முக விளக்கினில் திரியை திரிச்சு புது எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி சாமி கும்பிட சொன்னார் .கும்பிட்டாள் ,அவ ரோட்டுக்கு வர பக்கத்தில புத்துல இருந்து கோபமா வந்த கருப்பு நிற நாகப்பாம்பு அவ மேல நீல மணி துப்பிச்சு ,இவ பக்கத்தில்இருந்த நாமக்கல்லை எடுத்துஅடிக்க குறி தவறி பெரண்டகொடி மேல விழுது .அவ அப்பா பைக்கில வந்துஸ்கூல் பக்கத்தில் வண்டியை திருப்புற போது திருவாரூர் தேர் வருது .சாமி கும்பிட்டு டூர் கிளம்பினார்கள் டூரில் கடலூர் கடற்கரையில் பானிபூரி சாப்பிட நினைக்க அங்கே ஒரு மாற்று திறனாளி தருமம் கேட்க அவருக்கு இருந்த பணத்தை தருகிறாள் .ஆசிரியர் சேலத்து மாம்பழத்தை கத்தியால் அறிந்து தருகிறார் .பின் திருவண்ணாமலை மலை சுற்றும் போது தடுக்கிவிழுகிறாள் அங்கே பங்க் கடை யில் தொலைகாட்சியில் செய்தி வாசிக்கிறார்கள் .இன்று திருவள்ளுவர் தினம் .காஞ்சிபுரம் கிருஷ்ணன் வேலூர்ஜெயிலில் இருந்து சென்னை ஜெயிலுக்கு மாற்றபடுகிறார் என சொல்கிறார்கள் ......................................................................................................................... குமாரி [1.கன்னியாகுமரி] என்ற பெண்னின் பள்ளியில் டூர் போகிறார்கள் .. அதற்காக காலையில் அவசரமாக நெல்லு சோறு[2.திருநெல்வேலி] சாப்பிடுகிறாள் . விக்க தண்ணிர் தூக்கி குடிக்கிறாள்[3.தூத்துக்குடி] அவ அம்மா உனக்கு என்ன விருதா [4.விருதுநகர்]தரப்போகிறார்கள் ,என்றாள் அவ அப்பா 5.இராமநாதன் 6.மதுரை மீனாட்சிக்கும் சிவனுக்கும்[7.சிவகங்கை] தேன்[8.தேனீ] அபிஷேகம் செய்து கொண்டு இருக்கிறார். .திண்ணையில்[9.திண்டுக்கல்] இருக்கிற அஞ்சு[10.தஞ்சாவூர்] முக விளக்கினில் திரியை திரிச்சு[11.திருச்சி] புது[12.புதுகோட்டை] எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி சாமி கும்பிட சொன்னார் .கும்பிட்டாள் ,அவ ரோட்டுக்கு[13.ஈரோடு] வர பக்கத்தில புத்துல[14.கோயம்புத்தூர்] இருந்து கோபமா வந்த கருப்பு [15.கரூர்]நிற நாகப்பாம்பு [16.நாகப்பட்டினம்]அவ மேல நீல மணி [17.நீலகிரி]துப்பிச்சு ,இவ பக்கத்தில்இருந்த18. நாமக்கல்லை எடுத்துஅடிக்க குறி தவறி பெரண்டகொடி [19.பெரம்பலூர் ]மேல விழுது . அவ அப்பா பைக்கில வந்து ஸ்கூல் பக்கத்தில் வண்டியை திருப்புற[20.திருப்பூர்] போது 21திருவாரூர் தேர் வருது .சாமி கும்பிட்டு டூர் கிளம்பினார்கள் டூரில் 22.கடலூர் கடற்கரையில் பானிபூரி சாப்பிட நினைக்க அங்கே ஒரு மாற்று திறனாளி தருமம் கேட்க அவருக்கு இருந்த பணத்தை தருகிறாள் .[23.தருமபுரி] .ஆசிரியர் 24..சேலத்து மாம்பழத்தை கத்தியால் அறிந்து[25.அரியலூர் ] தருகிறார் .பின் 26.திருவண்ணாமலை மலை சுற்றும் போது தடுக்கிவிழுகிறாள்.[27.விழுப்புரம் ] அங்கே பங்க் கடை யில் தொலைகாட்சியில் செய்தி வாசிக்கிறார்கள் இன்று திருவள்ளுவர் தினம்[28.திருவள்ளூர்] .29.காஞ்சிபுரம் கிருஷ்ணன்[30.கிருஷ்ணகிரி] 31.வேலூர்ஜெயிலில் இருந்து 32.சென்னை ஜெயிலுக்கு மாற்றபடுகிறார் என சொல்கிறார்கள் என் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி சமுகத்திற்கு இந்த மாவட்டங்கள் கதையை அர்பணிக்கிறேன்.மாநிலங்கள் வீடியோ போட்ட போதே மாவட்டத்திற்கும் சொல்லுங்கள் என நண்பர்கள் கேட்டனர் .அவர்களின் ஆணைக்கு இணங்க இந்த பதிவு .
No comments:
Post a Comment