Saturday, 23 April 2016

18 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் !

 தமிழகத்தில் தேர்தல் நடத்தை முறைகள் அமலில் உள்ளதால் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 18 பேரை மாற்றி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சேலம் எஸ்.பி.,யாக இருந்த சுப்புலட்சுமி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக அமித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த ராஜேஸ்வரி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சந்தோஷ்
ஹிதிமானி நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் கலெக்டராக ராஜேந்திரன் ரத்னு நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் கலெக்டராக வி.சம்பத்திற்கு பதிலாக டி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் கலெக்டராக சத்தியபிரதா சாஹூ நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.நாகராஜன் தேனி மாவட்ட கலெக்டராக என்.வெங்கடாச்சலத்திற்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் எஸ்.பி., மகேஸ்வரன் மாற்றப்பட்டு, சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment