Saturday, 30 April 2016

ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு !

ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் கோரி போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவத்தினருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வாதிடப் போவதாக மத்திய முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான ராம் ஜேத்மலானி அறிவித்தார்.

தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில்
முன்னாள் ராணுவத்தினர் 320-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜந்தமர் மந்தருக்கு வெள்ளிக்கிழமை சென்று முன்னாள் ராணுவத்தினருக்கு தனது ஆதரவை ராம் ஜேத்மலானி தெரிவித்தார்.
அப்போது பேசுகையில், "எனக்கு தற்போது 93 வயதாகின்றது. எனவே எந்நேரமும் நான் இறக்கலாம். ஆனால், உச்ச நீதிமன்றத்திடம் இருந்து உங்களுக்கு நான் நீதி பெற்றுத் தரும்வரை, அது நிகழாது என்று உறுதியளிக்கிறேன்' என்றார்.

ஜந்தர் மந்தர் பகுதியில் நடக்கும் போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் முன்னாள் ராணுவ அதிகாரி சத்பீர் சிங் கூறுகையில், "3 முதல் 4 நாள்களில், உச்ச நீதிமன்றத்தில் ராம் ஜேத்மலானி வழக்கு தொடுக்கவுள்ளார். இதற்காக அவர் வழக்குரைஞர் கட்டணம் எதுவும் கேட்கவில்லை. இதேபோல், பாதுகாப்புப் படை தீர்ப்பாயத்திலும் 4 வழக்குகள் தொடுக்கப்படவுள்ளது' என்றார்.
அதைத் தொடர்ந்து, ராம் ஜேத்மலானி செய்தியாளர்களிடம் பேசியபோது பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அடைந்த தோல்வியைப் போல, இனிவரும் தேர்தல்களில் பாஜக தோல்வியைச் சந்திக்கும் என்றும், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.
கருப்புப் பண விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு ராம் ஜேத்மலானி வழக்கு தொடுத்து வாதாடி வருகிறார். வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டு நாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்

இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை வாபஸ் பெற வேண்டும்!

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசின் பள்ளிக் கல்வி
இயக்ககத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 11.4.2016 தேதியிட்ட சுற்றறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல்நிலைக் கல்வி மாணவர்கள் சேர்க்கையின்போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு 1 சதவீதம், முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 31 சதவீதம் என இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் காணப்படுகிறது.
தமிழகத்தில், முற்பட்ட வகுப்பினருக்கு என சட்டப்படி இட ஒதுக்கீடு இல்லை. தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், முன்னேறிய இதர சமூகத்தினர் அனைவரும் மதிப்பெண் அடிப்படியில் 31 சதவீத இடத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த அடிப்படைக்கூடத் தெரியாமல் கல்வித்துறையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், அருந்ததியர், முஸ்லிம்கள் ஆகியோருக்கு தனி இட ஒதுக்கீடு உண்டு. அதையும் இந்த சுற்றறிக்கையில் பிரித்து காட்டவில்லை.தமிழக அரசின் கல்வித் துறை, முரண்பாடான இந்த சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற்று சட்டப்படியானஇட ஒதுக்கீடு குறித்த சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என்று வீரமணி தெரிவித்துள்ளார்.

எல் நினோக்கு அடுத்து லா நினா விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

எல் நினோ' வெப்ப சலனத்தை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் 'லா நினா' எனும் குளிர் சலனம் துவங்கும் எனவும், இது 'எல் நினோ'வை காட்டிலும் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஆண்டு துவங்கிய 'எல் நினோ' காரணமாக இந்தியாவில், 33 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை நிலவுகிறது. பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவுகிறது.வியட்நாமில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பஞ்சம் நிலவுகிறது. இந்நிலையில் 'எல் நினோ' தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்தாலும், அதனைத் தொடர்ந்து வரும் 'லா நினா' காரணமாக பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த குளிர் சலனம் இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

1
2
3
4
இதுகுறித்து ஐ.நா., துணைப் பொதுச் செயலர் ஸ்டீபன் ஓபிரையன் கூறியதாவது: 'எல் நினா'வை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் வரவிருக்கும் 'லா நினா' மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இது 'எல் நினா'வால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட மிகக் கடுமையாக இருக்கும். இதனால் ஏற்படும் வெள்ளப் பெருக்கால், விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

இன்று முதல் அமலுக்கு வருகிறது மனை வணிகச் சட்டம்.

மனை வணிக (ரியல் எஸ்டேட்) துறையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மனை வணிகச் சட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 1) முதல் அமலுக்கு வருகிறது.இதுகுறித்து மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மனை வணிகச் சட்டத்தில் உள்ள அம்சங்களை 6 மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அமல்படுத்த வேண்டும். கட்டுமானத் திட்டங்களில் காலதாமதம் ஏற்படாமல், குறிப்பிட்ட நேரத்துக்குள் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களை கட்டுமான நிறுவனங்கள் கட்டிமுடிப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.கட்டுமானத் திட்டங்கள் தொடர்பான வழக்குகளில், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் 60 நாள்களுக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குடியிருப்புகளை கட்டிக்கொடுப்பதில் தாமதம் ஏற்படாமல் தடுப்பதற்கும், கணக்கில் வராத பணத்தை மனை வணிகத்தில் முதலீடு செய்வதைத் தடுப்பதற்கும் மனை வணிகச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது.

















உங்களது ஊதிய விபரங்களை அறிய .....

இங்கே Click பண்ணவும்.....

PAYMENT AND OTHER SALARY DETAILS 

Wednesday, 27 April 2016

ஆங்கில கல்வியில் அசத்தும் அரசு பள்ளி!

ராசிபுரம் அருகே, தமிழ் மற்றும் ஆங்கில கல்வியில் தனியார் பள்ளிக்கு இணையாக அசத்தும் கிராமப்புற பள்ளி, தற்போது இட நெருக்கடியால் அவதிப்பட்டு வருகிறது.


ராசிபுரம் அடுத்த, குட்டலாடம்பட்டி பஞ்சாயத்து, மலையம்பாளையம் கிராம சுற்றுப்பகுதியில், 300 குடும்பங்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு துவக்கப்பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு நிகராக வாகன வசதி, இசை, நடனம், கராத்தே, யோகா, அடையாள அட்டை என செயல்பட்டு வருவதால், இப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டிவருகின்றனர்.


இதுகுறித்து, இப்பள்ளியில், 14 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியர் செந்தில் கூறியதாவது:

இக்கிராமத்தில் கூலித்தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். அதனால், குடும்ப வறுமை காரணமாக வயல் வேலைக்கு செல்வது, கால்நடை மேய்க்க செல்வது, செங்கல் சூளைகளுக்கு செல்வது போன்றவை மாணவர்களிடம் இருந்தது. இந்நிலை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் வேலைக்கு செல்வது படிப்படியாக குறைக்கப்பட்டது.

இப்பள்ளி, 2000ம் ஆண்டுக்கு பின், ஈராசிரியர் பள்ளியாக தரம் உயர்த்தி மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், ஒன்றாம் வகுப்பு முதல், மூன்றாம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது, 114 மாணவர், 106 மாணவியர் உட்பட, 220 பேர் படிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக துவக்கக்கல்வி துறையின் சிறந்த பள்ளிக்கான விருதும், நாமக்கல் மாவட்டத்தின் முன் மாதிரி பள்ளிக்கான விருதும் பெற்றுள்ள இப்பள்ளி, தற்போது இட நெருக்கடியால் திணறி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, எட்டு பிரிவுகளாக நடக்கும் பள்ளி மரத்தடியிலும், அருகில் உள்ள கோவிலிலும் நடந்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.



தலைமையாசிரியர்களுக்கான அறிவுரை

Tuesday, 26 April 2016

EMIS UPDATION உதவிக்கு மாவட்ட வாரியாக ஒருங்கிணைபாளர்கள் அறிவிப்பு

Monday, 25 April 2016

அரசு ஊழியரின் 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் இல்லை: ஐகோர்ட் !

அரசு ஊழியரின் முதல் மனைவி இருக்கும் போது அல்லது முதல் மனைவி இறந்த பின், இரண்டாவது திருமணம் செய்திருந்தால், அப்பெண் குடும்ப ஓய்வூதியம் கோர முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி முதுவயலைச் சேர்ந்தவர் வேலு; வனத்துறையில்
வனக்காப்பாளராக பணியாற்றினார்.

இவரது முதல் மனைவி முனியம்மாள்; இவருக்கு இரண்டு குழந்தைகள். பாக்கியம் என்பவரை வேலு இரண்டாவது திருமணம் செய்தார். பாக்கியத்திற்கு மூன்று குழந்தைகள். கடந்த, 2003ல் வேலு இறந்தார். பாக்கியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரி, அரசின் தலைமை கணக்காயருக்கு மனு தாக்கல் செய்தார். இவரது மனு நிராகரிக்கப்பட்டது.இதை ரத்து செய்யக்கோரி பாக்கியம், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.


நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா உத்தரவு:

முதல் மனைவி இருக்கும்போது, இரண்டாவது திருமணம் செய்தால், அப்பெண் சட்டப்பூர்வமாக எந்த உரிமையும் கோர முடியாது. ஓய்வூதிய விதிகள்படி, முதல் மனைவிக்குத்தான் சட்டப்பூர்வ உரிமைகள் உள்ளன. முதல் மனைவி இறந்த பின், இரண்டாவது திருமணம் செய்திருந்தாலும், அப்பெண் சட்டப்பூர்வ உரிமைகளை கோர முடியாது. தலைமை கணக்காயரின் உத்தரவை உறுதி செய்து, மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

Sunday, 24 April 2016

பி.இ., ஆன்லைன் விண்ணப்பம் தொடரும் குழப்பத்தால் அவதி

        அண்ணா பல்கலையின் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பிப்பு முறையில் கட்டணம் செலுத்தியதற்கான பதிவு விபரம் வரவில்லை என, மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 
                அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 570 கல்லுாரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கென, www.annaunivnea2016.edu என்ற இணையதளம் மூலம், முதன் முறையாக ஆன்லைன் விண்ணப்பிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த, 15ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதல் நாள் இணையதளம் முடங்கியது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு, விண்ணப்பிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு அண்ணா பல்கலையின் விசாரணை மையம் மூலம் தெளிவுபடுத்தப்பட்டும் வருகின்றன.இந்நிலையில், ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்தியும், அதற்கான பதிவு விபரம் கிடைக்காது குழப்பம் ஏற்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாணவர் ஜெயச்சந்திரன் கூறுகையில்,''நான் ஆன்லைனில் பணம் செலுத்தியும், பணம் செலுத்தியதற்கான பதிவுவிபரம் வரவில்லை. மேலும் இரண்டு முறை பணம் செலுத்தியும் இதே பிரச்னை காணப்படுகிறது. ஒரு விண்ணப்பத்துக்கு, 1,700 ரூபாய் செலுத்தியுள்ளேன்,'' என்றார்.
அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன் கூறுகையில்,
''எஸ்.பி.ஐ., உள்ளிட்ட சில வங்கிகளில் கட்டணம் செலுத்தினால், மும்பை சென்று பதிவாகிவர சற்று தாமதமாகாலம். மாணவர்கள் ஒரே முறை கட்டணம் செலுத்தினால் போதுமானது; மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டாம். ஒரு முறைக்குமேல் பணம் செலுத்தியவர்களுக்கு கட்டணத்தை திரும்பத்தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மாரடைப்பு:

மாரடைப்பு வருவதற்கான அபாயத்தில் இருப்பவர்கள் எப்போதும் மூன்று வகையான மாத்திரைகளை கைவசம் வைத்திருக்க வேண்டும் .

ஒரு பாக்கெட்டில் மூன்று விதமான மாத்திரைகள் இருக்கும்.

அவை உயிர் காக்கும் மாத்திரைகள் .

மூன்று மாத்திரைகளும் சேர்ந்த விலை வெறும் 40 ரூபாய் தான் .

1 டிஸ்பிரின்
( Disprin 325mg ),

2 அட்டர்வாசேடின்
( Atorvastatin 80 mg ),

3 கிளோபிடேப்
( Clopitab 150mg )

இந்த மூன்றும் சேர்ந்தது உயிர் காக்கும் உத்தமான மாத்திரைகள் .

இதற்கு லோடிங் டோஸ்
( Loading Dose ) என்று பெயர்.

எதிர்பாராத நேரத்தில் ஒருவருக்கு நெஞ்சுவலி வருகிறது. ஹார்ட் அட்டாகிற்கான அறிகுறிகள் அனைத்தும் இருக்கின்றன .

ஆனால் உடனடியாக டாக்டரைப் பார்க்க முடியவில்லை .

இரண்டு மணி நேரம் ஆகும் என்ற சூழலில் , இந்த மாத்திரைகளை எப்போதும் சட்டைப் பையில் வைத்திருந்தால் உடனடியாக
உட் கொள்ளலாம் .

புகைக்கும் பழக்கம் இருப்பவர்கள் , உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் , சர்க்கரை நோய் இருப்பவர்கள் , ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் , அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கு நெஞ்சு வலி வரும் போது , டாக்டரை பார்க்க தாமதமாகும் சமயத்தில் இந்த மாத்திரைகளைப் போட்டுக் கொள்ளலாம் .

நாங்கள் டாக்டர் இல்லையே , ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்று கேட்டால் , உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது , ரத்த அழுத்தம் இருக்கிறது , சிகரெட் பழக்கம் இருக்கிறது , 40 வயதிற்கு மேல் ஆகிவிட்டது , ஏற்கனவே நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வாயுத் தொல்லை , அல்சர் இருந்தால் ஆன்டாசிட் மாத்திரைகளை சாப்பிட்ட பின் இந்த மாத்திரைகளை போட்டுக் கொள்ளலாம்.
வலி வந்தவுடன் டாக்டரைப் பார்க்க சில மணி நேரம் ஆகும் என்றால் இந்த முதலுதவி மாத்திரைகளைப் போட்டுக் கொண்டால் டாக்டரைப் பார்க்கும் வரை , அவர் சிகிச்சை செய்ய தாமதமானாலும் இந்த மாத்திரைகள் உங்களை காப்பாற்றும் .

இந்த மாத்திரைகளை அமெரிக்காவில் அனைவரும் பாக்கெட்டில் வைத்திருப்பார்கள். அடையாள அட்டை , பேனா , டைரி போல இந்த லோடிங் டோசை மறக்காமல் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஹார்ட் அட்டாக் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளவர்கள் உடனே உங்கள் டாக்டரிடம் ஆலோசனைப் பெற்று இந்த லோடிங் டோஸ் ஐ வாங்கி தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

Saturday, 23 April 2016

அண்ணா பல்கலை இணையதளத்தில் இன்ஜி., கல்லூரிகளின் கட்டண விவரம்

இன்ஜி., கல்லுாரிகளின் பாடப்பிரிவு மற்றும் கட்டண விவரங்கள், அண்ணா பல்கலையின் இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 570 இன்ஜி., கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்றால் மட்டுமே அவற்றில் மாணவர் சேர்க்கை நடத்த முடியும். இந்த ஆண்டுக்கான அங்கீகார பட்டியல் வெளியிடப்படவில்லை. 

இந்நிலையில், பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. நேற்று வரை, அண்ணா பல்கலையின் இணையதளத்தில், ஒரு லட்சத்து, 4,000 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 54 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, 'ஆன்லைனில்' விண்ணப்பத்தை அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையில், கல்லுாரிகளின் விவரங்களை மாணவர் மற்றும் பெற்றோர் அறிந்து கொள்ளும் வகையில், அண்ணா பல்கலையின் https://www.annauniv.edu/tnea2016/ இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.
இதில், கல்லுாரிகள் பற்றி முழு விவரம், என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளன; அவை எப்போது துவங்கப்பட்டன; விடுதி கட்டணம், உணவு கட்டணம் போன்ற பல விவரங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

போலி ஆசிரியர்களை கண்டுபிடிக்க களம் இறங்கிய கல்வித்துறை

 போலி ஆசிரியர்களை கண்டுபிடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உண்மைத் தன்மை சான்று பெறுவதில் இருந்த குழப்பத்தையும் ஆசிரியர் தேர்வு வாரியம் தீர்த்து வைத்துள்ளது.

சமீபத்தில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர் பிடிபட்டார். இதையடுத்து, 2012, 2013ல் தகுதித் தேர்வு மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் தகுதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை கண்டறிய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டது. 

தகுதிச்சான்றின் உண்மைத் தன்மை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டுகொள்ளாமல் இருந்ததால் தலைமை ஆசிரியர்கள் தகுதிச்சான்று பெற முடியாமல் தவித்து வந்தனர்.
போலி ஆசிரியர்களை கண்பிடிப்பதிலும் சிக்கல் இருந்தது. தற்போது, 'தகுதித் தேர்வை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. தகுதிச் சான்றுகளை முதன்மை கல்வி அலுவலர்களே அளித்தனர். இதனால் உண்மைத் தன்மை சான்றுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம். சந்தேகம் இருந்தால் மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுப்படுத்தி உள்ளது.
மிக முக்கிய செய்தி

அன்புள்ள தனி ஊதிய பலன்கள் கிடைக்பப்பெறாத 1.1.2006லிருந்து 1.1.2011 க்கு முன் 2800 தர ஊதியத்தில் இருந்த இடைநிலை ஆசிரியர் பெருமக்களே !!
          வணக்கம் தமிழக அரசின் திருத்திய ஊதியவிகித்தில் தனி ஊதியம் 1.1.2011 லிருந்து மட்டுமே வழங்கப்பட்டது அதற்கு முன்பாக கருத்தியலாக வழங்கப்படவில்லை ..இதனால்   2006 லிருந்து 2011க்குள் பதவி உயர்வு ஊக்க .உயர்கல்வி ஊக்க ஊதியம் .ஆண்டு ஊதிய உயர்வில் தனி ஊதிய பலன்கள் பணியில் முன்பாக இக்காலத்தில் பெற்றவர்கள் கிடைக்க பெறவில்லை ..ஆக 2011 க்கு பிறகு இந்நிலையை எய்திய இளையோர் மூத்தவரைவிட அதிக ஊதியம் பெறும் நிலை தமிழகம் முழுவதும் பல்லாயிரம் ஆசிரியர்களும் உண்டு என்பதை நாம் நன்கு அறிவோம் ....அரசும் ஆசிரியர் சங்கங்களும் இந்நிலையை போக்க தீவிரம் காட்டாத நிலையில் அரசாணை 23 ல் வழங்கப்பட்ட தனி ஊதிய பலன்களை தர ஊதியம் ரூபாய் 200 வழங்கியதைப் போல் 1.1.2006 லிருந்து கருத்தியலாகவும் 1.1.2011லிருந்து பணப்பலன் வழங்க கோரி கரூர் . நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள்  ஐவர் சென்னை உயர்நீதிமன்றம் நாடி wp .no.13567 எண் கொண்ட மேல்முறையீட்டு வழக்கினை நடத்தி வரும் நிலையில் இவ்வழக்கு குறித்து கலந்தாலோசித்து நாம் வெற்றி பெற விரும்பும் தோழர்களும் ..பாதிக்கப்பட்ட ஆசிரியர் பெருமக்களும் எங்களை தொடர்பு கொள்ளலாம் ..கலந்தாய்வு இடம் கரூர் அல்லது நாமக்கல்லில் நடைபெறும் ..நன்றி


SABL பாடமுறையில் மாணவர்களின் கல்வித்தரம், தேர்ச்சிவிகிதம் குறைந்தால் வகுப்பாசிரியர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்று அரசாணைகள், செயல்முறைகள் இல்லை - RTI


ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்த வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.

                        ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்த வேண்டும் என்று ஆரம்பப்பள்ளிஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர்கள்

                சோ.முருகேசன், மு.மணிமேகலை, மாவட்ட செயலாளர் செ.பால்ராஜ், தலைவர் பி.ராஜ்குமார், பொருளாளர் சே.சுப்பிரமணியன், மாநில குழு உறுப்பினர் மு.முத்தானந்தம் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மே மாதம் கோடை விடுமுறையில் நடைபெறும். கலந்தாய்வில் பங்குபெற விரும்பும் ஆசிரியர்களிடம் இருந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் மாறுதல் விண்ணப்பம் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகத்தால் பெறப்பட்டு பதிவேடு ஏ, பி, சி, என பிரிக்கப்பட்டு மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்படும். மாவட்ட தொடக்க கல்வி அலுவலரால் பணியிட மூப்பின் அடிப்படையில் ஒன்றியம் வாரியாக பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலும், மே மாத இறுதியில் ஏற்படும் காலிப் பணியிட விவரமும் வெளியிடப்படும். கடந்த ஆண்டு தாமதம் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட காலிப் பணியிடங்களை, பணியிட மூப்பின் அடிப்படையில் வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் பெற்றுக் கொள்வர். மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் வருகிற கல்வி ஆண்டின் முதல் நாளில், அதாவது ஜூன் மாதம் பள்ளி திறக்கும் முதல் வேலைநாளில் தாங்கள் மாறுதல் பெற்ற பள்ளிக்கூடங்களில் புதிதாக பணியேற்று கொள்வார்கள். இதனால், மாணவர்களின் கல்விநலன் பாதிக்கப்படாமல் காக்கப்பட்டது. ஆசிரியர்களும் தங்களுடைய குடும்பத்தினரை எளிதாக புதிய இடத்திற்கு இடம் பெயர்வு செய்வதற்கு வசதியாகவும் இருந்தது. கடந்த ஆண்டு சரியான திட்டமிடல் இல்லாததால், பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகு செப்டம்பர் மாதம், மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை மாறுதல் விண்ணப்பம் அளிப்பதற்கு எவ்வித அறிவிப்பையும் கல்வித்துறை வெளியிடவில்லை. சட்டசபை தேர்தலை காரணம் காட்டாமல் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று ஆசிரியர்களிடம் இருந்து பொதுமாறுதல் விண்ணப்பங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மே மாத இறுதியை அடிப்படையாக கொண்டு முழு காலி பணியிட விவரங்களையும் அறிவிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் காலி பணியிடங்களின் விவரங்கள் கலந்தாய்வுக்கு முன்னதாக ஒளிவு மறைவு இல்லாமல் இணையதளத்தில் வெளியிட வேண்டும். எனவே கோடை விடுமுறையில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் அப்பிளிகேசன் !!!

         திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி கணினித்துறை மாணவர்கள் மாதிரி ஆப்பரேஷன் மென்பொருள் கண்டுபிடித்துள்ளனர்.



         மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க இறந்தவர்களின் உடல்களை உரிமையாளர்களின் அனுமதியுடன்பெற்று அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் உடற் பாகங்கள்குறித்து பாடம் நடத்துவர்.


இறந்தவர் உடலை பயன்படுத்தி நேரடியாக அறுவை சிகிச்சை பயிற்சி அளிக்கும் முறை இந்தியாவில் மட்டுமே அதிகளவில் உள்ளது.வெளிநாடுகளில், அதற்கென பிரத்யேக வீடியோக்கள், நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மென்பொருள் மூலம் அறுவை சிகிச்சையை வீட்டில் இருந்தபடியே செய்து கற்றுக் கொள்கின்றனர்.இந்தியாவில் உள்ளது போல இறந்தவரின் உடலை வைத்து, மருத்துவம் படிக்கும் மாணவர்கள் அறுவை சிகிச்சை செய்து பயிற்சி பெறுவது என்பது கடினமானது. ஆகவே, இதனைகருத்தில் கொண்டு மருத்துவ மாணவர்கள் பயன்படும் வகையில், கணினித்துறை மாணவர்கள் முகமது நியாமத்துல்லா, கவின் சிதம்பரம், ராமச்சந்திரன் மாடல் ஆப்பரேஷன் மென்பொருளை துறை தலைவர் சாந்தி, பேராசிரியர் ஹேமலதா உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது: இந்த மென்பொருள் மூலம் மருத்துவமாணவர்கள், நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வது மாதிரியான பிம்பம் கணினியில் தோன்றும். இது இயல்பாக செய்வது போல தோன்றுவதற்காக, மென்பொருளுடன் &'கூகுள் போர்டு டேட்டா&' இணைக்கப் படுகிறது.

இதனை முகத்தில் மாட்டிக் கொண்டு, அதன் வழியே பார்க்கும் போது, உண்மையான ஆப்பரேஷன் தியேட்டரில் இருப்பது போல தெரியும். அதில், நோயாளி கட்டிலில் படுத்திருப்பது, மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய தயாராக நிற்பதுபோல தோன்றும்.முகமூடி அணிந்த மாணவர்கள், தங்கள் கையை அசைத்து, ஆப்பரேஷனுக்கு தேவையான கத்தி, ஊசி போன்ற பொருட்களை கொண்டு அறுவை சிகிச்சை செய்வது, தையல் போடுவது என செயல்பட முடியும்.இந்த மென்பொருள் மூலம் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே நேரடியாக அறுவை சிகிச்சை செய்வது போல செய்து பழகலாம். இது அவர்களின் பயிற்சிக்கு பேருதவியாக இருக்கும், என்றனர்.

CPS ல்இரு கணக்கு எண் இருப்பதால் குழப்பம் !

புதிய பென்ஷன் திட்டத்தில் சில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இரு கணக்கு எண் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
 இதனை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில் 2003 ஏப்., 1ல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத்தொகை ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த அரசு ஊழியர், ஆசிரியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் செய்தனர். தற்போது புதிய பென்ஷன் திட்டத்தை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது.
இதில் சிலருக்கு புதிய பென்ஷன் திட்டத்தில் இரு கணக்கு எண் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த குழப்பத்தை தவிர்க்க பழைய கணக்கை, புதிய கணக்கு எண்களுடன் சேர்க்க கருவூலத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
கருவூலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பணிமாறுதல், பதவி உயர்வில் செல்லும் ஊழியர்களுக்கு, அவர்களது பழைய கணக்கு எண்ணில் சந்தா பிடித்தம் செய்யாமல், புதிய கணக்கு துவங்கப்படுகிறது.
இதனால் சிலருக்கு இரு கணக்கு எண் உள்ளது. அவற்றை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் இதுவரை சந்தா செலுத்தாத கணக்குகளும் ரத்து செய்யப்படும், என்றார்.


புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் செய்தனர். தற்போது புதிய பென்ஷன் திட்டத்தை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது.

"வாட்ஸ் அப்"ல் தவறான செய்தியை அளிப்பது எப்படி ?

Instant messaging service WhatsApp has become the part and parcel of our lives. But sometimes the same thing might land us in a great embarrassment.


It must have happened to all of us at some point of time that we misfired the wrong photo, forwarded messages, self-written
messages.
Sometimes we have no idea how to reverse the action we have done. But next time if you send message to the wrong person on WhatsApp and you are a little prompt, you can still save yourself from the embarrassment.
Just make sure that you jump into action before the message is delivered.
Follow these easy steps
A. Keep pressing on the message you have mistakenly sent.
B. Tap on “Delete” in the window that will pop up.
Immediately opt for the delete option. Your message will be delivered.
But if you cant follow these steps, you can do the following
A. You can either immediately turn off the mobile data or Wi-Fi.
B. Or you can soon opt for airplane mode.
C. Remember, the action can be reversed only if there is no double grey tick. Happy deleting!

பிட்' அடித்த தனித்தேர்வர்கள்கண்காணிப்பாளர்கள் 20 பேர் மாற்றம் !

தேனியில் 8ம் வகுப்பு தேர்வில் தனித்தேர்வர்கள் 'பிட்' அடிக்க அனுமதித்த சம்பவத்தை தொடர்ந்து, அறை கண்காணிப்பாளர்கள் 20 பேர் மாற்றப்பட்டனர்.

         தேனியில் அரசு உதவிபெறும் பள்ளியில் நேற்று முன்தினம் 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு கணித தேர்வு நடந்தது. இதில் பங்கேற்றவர்களில் சிலர் முன்கூட்டியே தேர்வு மைய பொறுப்பாளர், அறை
கண்காணிப்பாளர்களை 'கவனித்தனர்'. இதனால் வினாத்தாளுடன் அதற்கான விடைகளின் நகலும் அவர்களுக்கு வழங்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. அவர்கள் 'பிட்' அடிக்க கல்வித்துறை அலுவலர்கள் உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் நாகராஜன் விசாரணை நடத்தினார். இதையடுத்து இந்த தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 20 பேர் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர் இப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று நடந்த அறிவியல் தேர்வை 243 பேர் எழுதினர். 140 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
மாவட்ட கல்வி அலுவலர் கூறுகையில், “ கணிதத் தேர்வில் தனித்தேர்வர்கள்' பிட்' அடிக்க அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அறை கண்காணிப்பாளர்கள், தேர்வு மைய பொறுப்பாளர் மாற்றப்பட்டுள்ளனர். இதுவே இவர்களுக்கு தண்டனை. தேர்வு முடிந்த பின் விரிவான விசாரணை நடத்தப்படும். இதில் கல்வித்துறை அலுவலர்கள் உடந்தையாக இருந்தனரா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது,” என்றார்.

ஆந்திரா,தெலுங்கானாவில் கல்வித்தரம் மோசம் !

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கல்வித்தரம் மிகவும் மோசமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கல்வித்தர பட்டியலில் நாட்டிலேயே மற்ற மாநிலங்களை விட
ஆந்திராவும், தெலுங்கானாவும் மிகவும் பின்தங்கி இருப்பதாகவும் கல்வித்தரம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

18 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் !

 தமிழகத்தில் தேர்தல் நடத்தை முறைகள் அமலில் உள்ளதால் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 18 பேரை மாற்றி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சேலம் எஸ்.பி.,யாக இருந்த சுப்புலட்சுமி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக அமித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த ராஜேஸ்வரி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சந்தோஷ்
ஹிதிமானி நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் கலெக்டராக ராஜேந்திரன் ரத்னு நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் கலெக்டராக வி.சம்பத்திற்கு பதிலாக டி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் கலெக்டராக சத்தியபிரதா சாஹூ நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.நாகராஜன் தேனி மாவட்ட கலெக்டராக என்.வெங்கடாச்சலத்திற்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் எஸ்.பி., மகேஸ்வரன் மாற்றப்பட்டு, சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

CPS ல்இரு கணக்கு எண் இருப்பதால் குழப்பம் !

புதிய பென்ஷன் திட்டத்தில் சில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இரு கணக்கு எண் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
 இதனை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில் 2003 ஏப்., 1ல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத்தொகை ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த அரசு ஊழியர், ஆசிரியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் செய்தனர். தற்போது புதிய பென்ஷன் திட்டத்தை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது.
இதில் சிலருக்கு புதிய பென்ஷன் திட்டத்தில் இரு கணக்கு எண் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த குழப்பத்தை தவிர்க்க பழைய கணக்கை, புதிய கணக்கு எண்களுடன் சேர்க்க கருவூலத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
கருவூலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பணிமாறுதல், பதவி உயர்வில் செல்லும் ஊழியர்களுக்கு, அவர்களது பழைய கணக்கு எண்ணில் சந்தா பிடித்தம் செய்யாமல், புதிய கணக்கு துவங்கப்படுகிறது.
இதனால் சிலருக்கு இரு கணக்கு எண் உள்ளது. அவற்றை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் இதுவரை சந்தா செலுத்தாத கணக்குகளும் ரத்து செய்யப்படும், என்றார்.


புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் செய்தனர். தற்போது புதிய பென்ஷன் திட்டத்தை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது.

அதிகபட்ச 'கருணை' பிளஸ் 2 மாணவர்கள் 'குஷி'

பிளஸ் 2 தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட அச்சுப்பிழை காரணமாக மாணவர்களுக்கு இந்தாண்டு 22 மதிப்பெண் 'கருணை' மதிப்பெண்ணாக வழங்கப்பட்டது.

           மார்ச் 4ல் பிளஸ் 2 தேர்வுகள் துவங்கி ஏப்.,1ல் முடிவுற்றது. மார்ச் 14ல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்கி பல மாவட்டங்களில் நேற்றுடன் திருத்தும் பணிகள் முடிந்தன.
கடந்த ஆண்டில் அனைத்து பாடங்களிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் 'சென்டம்' பெற்றனர்.
இதனால், விடைத்தாள் மதிப்பீடு தொடர்பாக கல்வித்துறையில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.இதனால் இந்தாண்டு மாணவர்கள் அதிக 'சென்டம்' எடுப்பதை தவிர்க்க வினாத்தாள் கடினமாக அமைக்கப்பட்டது. அதேநேரம் வினாத்தாளில் அச்சுப்பிழை மற்றும் தவறுகள் அதிகம் இருந்தன.
இதன் எதிரொலியாக, வேதியியலில் 6, இயற்பியலில் 2, கணிதத்தில் 4, வணிக கணிதத்தில் 10 என மொத்தம் 22 மதிப்பெண், கருணை மதிப்பெண்ணாக வழங்கப்பட்டது.
பிளஸ் 2 தேர்வுகளில் கடந்த சில ஆண்டுகளில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணில் இது அதிகபட்சம். இவ்வினாக்களை எழுத முயற்சி செய்த மாணவர்களுக்கு 22 மதிப்பெண் அப்படியே கிடைக்கும் என்பதால் அவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதுகுறித்து விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
சில ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற அச்சுப்பிழையால் வேதியியல் தேர்வுக்கு மட்டும் 22 மதிப்பெண் கருணையாக வழங்கப்பட்டது.
அதன்பின் பல ஆண்டுகள் தொடர்ந்து சில மதிப்பெண்கள் மட்டுமே கருணை அடிப்படையில் வழங்கப்பட்டன. ஆனால் இந்தாண்டு அதிகபட்சமாக 22 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் தயாரிக்கும் பணியில் தேர்வுத்துறை அதிக கவனம் செலுத்த வேண்டும். அனுபவம் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும்.
கல்லுாரி ஆசிரியர்களை தவிர்க்கலாம். 0.25 'கட்ஆப்' மதிப்பெண் வித்தியாசத்தில் கூட பொறியியல், மருத்துவ படிப்பு சேர்க்கை வரிசையில் ஆயிரம் மாணவர்களுக்கு பின்தங்கும் வாய்ப்புள்ளது. இதனால் அச்சுப்பிழை மற்றும் தவறு இல்லாமல் வினாத்தாள் தயாரிப்பதில் தேர்வுத்துறை அதிக கவனம் செலுத்த வேண்டும், என்றனர்