Friday, 2 December 2016

மன்றம்-விழுப்புரம் ஆர்ப்பாட்ட முக்கியச் செய்திகள்

        CPS ரத்து பற்றி தமிழ்நாடு தலைமைச்செயலக அலுவலர்கள் சங்கத் தலைவர் அவர்கள் கூறியது.

        27.11.2016 அன்று விழுப்புரத்தில்
1. CPS ரத்து.
2.7 ஆவது ஊதியக்குழுவை உடனடியாக அமல் படுத்த வேண்டுதல்.
3.இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு களைய வேண்டுதல்
4.புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசை கைவிட வேண்டுதல்.
 ஆகிய நான்கு கோரிக்கைகளை வலிறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர்,பாவலர் ஐயா தலைமையில் தொடர்முழக்க ஆர்ப்பாட்ட போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.இதில் மாநிலம் முழுவதிலிருந்தும் மன்ற மறவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

        பாவலர் ஐயா அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி  முழக்கமிட்டார்.பின்பு கோரிக்கைகளின் அவசியம் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் தலைமையுரையாற்றினார்.

      இதில் மன்றத்தின் தோழமை ஆசிரியர் சங்க மாநில பிரதிநிதிகளும் அகில இந்திய தொழிற்சங்க மாநில பிரதிநிதிகளும் அரசு ஊழியர்  சங்க மாநில பிரதிநிதிகளும் தமிழ்நாடு தலைமைச் செயலக அரசு ஊழியர்கள் நலச் சங்க மாதிலப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு CPS ரத்து செய்யப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இதர கோரிக்கைகள் பற்றியும் விரிவாக சிறப்புரையாற்றினார்கள்.
        
         தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொறுப்பாளர் திரு.மயிலை அவர்கள் பேசும்போது,நம் இரு ஆசிரியர் சங்கங்களும் இணைந்து போராட வேண்டிய தருணம் வந்து விட்டது.அதற்கான முயற்சிகளை பாவலர் ஐயா அவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
            
           இதில் தமிழ்நாடு தலைமைச் செயலக அரசு ஊழியர் நலச் சங்க மாநிலத் தலைவர் திரு.கணேசன்  அவர்கள் பேசும்போது,
            அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டியது  அரசின் கடமை என்றும் அதை வழங்க மறுப்பது நியாயமில்லை என்று பல்வேறு விளக்கங்களுடன் உரையாற்றினார்.மேலும் அவர் கூறியதாவது,
           நாங்கள் தற்போது அரசு அமைத்திருக்கும் CPS மறுசீராய்வு உயர்மட்டக் குழுவிடம் பேச்சு வார்த்தைக்குச் சென்ற பொழுது, ஓய்வூதியம் வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும் இதனால் அரசுக்கு அதிகப்படியான நிதிஇழப்பு ஏதுமில்லை என்றும் வலியுறுத்தினோம் என்றும் கூறினாராம்.ஆனால் அரசுஉயர் மட்டக்குழுவில் இருந்த IAS அதிகாரி ஒருவர்,அப்படியெல்லாம் கூறாதீர்கள், தற்போது அரசு ஊழியர்கள் நீண்டநாள் வாழ்வதால் அரசுக்கு மிகுதியான அளவில் நிதியிழப்பு ஏற்படும்  என்றும் CPS நடைமுறைப்படுத்துவதில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டுமா என்றுதான் கேட்கிறார் என்றும் கூறினார்.

       இப்போராட்டத்திற்கு திருப்பூர் மாவட்டத்திலிருத்து மன்றத்தினர் திரளாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #KS







            

No comments:

Post a Comment