மாறுதல் கலந்தாய்வு அரசாணை 258 ன் முக்கிய அம்சங்கள்
ஆசிரியர் பொது இடமாறுதல் விதிமுறைகளில் மாற்றம் இல்லை அரசாணை வெளியீடு | G.O-258-நாள் 06.07.2016-பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2016-17-ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பொது இடமாறுதல் அளிக்கும் முறை கடந்த 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னர் இடமாறுதல் தொடர்பான நெறிமுறைகள் வெளியிடப்படும். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆகியும் இடமாறுதல் நெறிமுறைகள் வெளியிடப்படாததால் புதிய விதிமுறைகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் எழுந்தது. இந்த ஆண்டு கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.இதனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் சற்று அச்சப்படவே செய்தனர்.
இந்த நிலையில், 2016-17-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் இடமாறுதலுக்கு கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணையை பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ளார். இந்த அரசாணை ஜூலை 6-ம் தேதி கையெழுத்தானபோதும் நேற்றுதான் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு கிடைக்கப்பெற்றது. இந்த அரசாணையின்படி, இந்த ஆண்டு ஆசிரியர் பொது இடமாறுதல் விதிமுறைகளில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு என்ன விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவோ அதே விதிமுறைகள்தான் இந்த கல்வி ஆண்டிலும் பின்பற்றப்பட உள்ளன.
இதன்படி
1. முதலில்அரசு பள்ளிகளில் 01.06.1016 ன்படி காலிப்பணியிடங்கள் கண்டறியப்படும்.
2. உபரி ஆசிரியர் பணியிடங்கள் கண்டறியப்பட்டு தேவைப்படும் இடங்களில் பணிநிரவல் செய்யப்பட்டும்
3.அதன் பிறகு பள்ளி நலன்,மாணவர்நலன் கருதி நிர்வாக மாறுதல் செய்யப்படும்.
4. பின்பு மனமொத்த மாறுதல் முடிக்கப்படும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பிறகே மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.இதற்கான முறையான அறிவிப்புகளை இயக்குநர் அவர்கள் வெளியிடுவார்.
5.மாறுதல் வேண்டி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.6.2015-க்கு முன்னர் அப்பள்ளியில் பணியில் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மனமொத்த மாறுதல் விண்ணப்பிப்பவர்களுக்கும் இதே முறை கடைபிடிக்கப்படும்.
6.அனைத்துப்பிரிவுகளிலும் வழக்கம் போலவே முன்னுரிமைகள் வழங்கப்படும்.
7.தொடக்க/நடுநிலைப் பள்ளிகளைப் பொறுத்த மட்டில்,மாவட்ட மாறுதல் வழங்கப்படும் பொழுது ஒன்றியம் விட்டு ஒன்றியம் அல்லது மற்ற அலகுகளுக்கு பரிசீலிக்க வேண்டும்.
8.01.06.2015 க்குப் பின்னர் spouse இறந்திருந்தால் சிறப்பு நிகழ்வாக்க் கருதி,விதிமுறைகளில் தறர்வு செய்து சிறப்பு முன்னுரிமை வழங்ஙப் பட வேண்டும்.
9.நிர்வாக காரணத்தினால் வேறு பள்ளிக்கு மாறுதல் பெற்றவர்கள் அப்பள்ளியில் 3 ஆண்டுகள் பணி முடித்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
10.மாவட்ட மாறுமல் வேண்டுவோர் பள்ளியின் பெயரை குறிப்பிட வேண்டியதில்லை.மாவட்டத்தின் பெயரை குறிப்பிட்டால் போதும்.
11.மலை சுழற்சி முறை பின்பற்றப்பட வேண்டும்.
12.தொடக்க கல்வித்துறையில் ஈராசிரியர் பணியிடங்களில் பதிலி ஆசிரியர் பணியேற்ற பிறகே பணிமாறுதல் ஆணை பெற்றவர்கள் விடுவிக்கப் பட வேண்டும்.
13.Unit transfer,ADW,Welfer schools,Kallar schools,Municipal schools போன்றவற்றிலிலுந்து பள்ளிக்கல்வித்துறைக்குச் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.ஆனால் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிபவர்கள் நகராட்சிப் பள்ளிகளுக்குப் பணி மாறுதல் பெறலாம்.
14.ஆண்கள் பள்ளிகளுக்கு ஆண்களும் பெண்கள் பள்ளிகளுக்கு பெண்களும் (ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் உட்பட)மாறுதல் பெற முன்னுரிமை வழங்கப் படும்.ஆசிரியர்கள் தேவைக்கேற்ப இல்லையெனில் இதில் தளர்வு உண்டு.
பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், 40 வயதை கடந்த, திருமணம் செய்துகொள்ளாத முதிர் கன்னியர், மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் போன்றோருக்கு வழக்கம் போல சலுகைகள் வழங்கப்படும். ஆனால் இவர்கள் மாறுதல் கந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.06.2015க்கு முன்னர் பணியில் சேர்ந்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment