Tuesday, 26 July 2016

A.P.J.ABDUL KALAM

மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.

5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.

6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.

7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.

8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.

9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.

10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.

11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.

12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.

14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.

15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’

16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.

17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை. 

19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.

20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.

21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.

22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.

23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.

25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.

26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.

27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.

28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.

29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.

30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.

31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.

33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.

35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.

36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.

38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.

39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.

41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.

43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.

44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.

45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.

46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.

47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.

இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.

49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார். 

இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன. 

50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். நேற்று அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவடைந்தது.

Monday, 18 July 2016

SSA மானியங்கள் செலவிடும் முறைகள்...

படிக்க...

2016-2017 SSA மானியங்கள் செலவிடும் முறைகள்

ஆசிரியர் ஒருவர் வெளிநாடு செல்வதற்கு தேவையான முக்கிய 20 ஆவணங்கள்























Saturday, 16 July 2016

துாய்மை பள்ளி திட்டத்தில் விண்ணப்பிக்க,'மொபைல் ஆப்'

மத்திய அரசின் துாய்மை பள்ளி திட்டத்தில் விண்ணப்பிக்க,'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின்,'துாய்மை இந்தியா' திட்டம் எனப்படும், 'ஸ்வச் பாரத்' திட்டத்தின் கீழ், 'ஸ்வச் வித்யாலயா' என்ற பெயரில், துாய்மை பள்ளி விருது வழங்கப்படுகிறது.


நிதி ஒதுக்கீடு :

 இந்த திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் கழிப்பறைகளை, தினமும் இருவேளை பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மாத சம்பளம் மற்றும் கிருமி நாசினி வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து, கை கழுவ சோப்பு, கைத்துண்டு தர திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை ஊக்குவிக்க, சிறந்த துாய்மை பள்ளிகளுக்கு, மத்திய அரசு, 'ஸ்வச் வித்யாலயா புரஸ்கார்' என்ற விருது வழங்குகிறது. இதை பெற, அரசு பள்ளிகள், வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.நாடு முழுவதும், 500 பள்ளிகளை தேர்வு செய்து தலா, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில், 39 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அதில், பள்ளிகளின் அடிப்படை வசதிகள், சுகாதாரம் குறித்த கேள்விகள் இடம் பெற்றுள்ளன. 50 ஆயிரம் ரூபாய் : இதுதவிர,மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, 'ஸ்வச் வித்யாலயா மொபைல் ஆப்' மூலமும் பள்ளிகள் தனியாக விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான குழுவினர் பள்ளிகளை ஆய்வு செய்வர்.மாவட்ட குழுவில் கலெக்டர், மாவட்ட கல்வி அலுவலர், சிறந்தமூன்று தலைமை ஆசிரியர்கள், இன்ஜினியர், உடல்நல அலுவலர், இரு தன்னார்வலர்கள் இடம்பெறுவர். மாநில குழுவில் பள்ளிக்கல்வி செயலர், இயக்குனர், உடல்நல இயக்குனர், இரு தலைமை ஆசிரியர்கள், தலைமை இன்ஜினியர், பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் இடம்பெறுவர்.

தேசிய குழுவில், தலைமை கல்வி செயலர், துணை செயலர் இடம்பெறுவர். மாநிலத்தில், 40 பள்ளிகள் தேர்வு செய்து, அதில், 20 பள்ளிகள், தேசிய போட்டிக்கு பரிந்துரை செய்யப்படும். 20 பள்ளிகளுக்கு விருது, அங்கீகார சான்று வழங்கப்படும். சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்படும், 500 பள்ளிகளுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய் நிதி, உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்த வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பள்ளிகள் விபரம், நவ., 25ல் அறிவிக்கப்பட உள்ளது.

2016-2017 ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வின் முழு விபரங்கள்

TRANSFER G.O ALL COPIES

TRANSFER G.O.PUBLISHED;- G.O-258-நாள் 06.07.2016-பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2016-17-ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்












மாறுதல் கலந்தாய்வு ஆணை 258 ன் முக்கிய அம்சங்கள்

       மாறுதல் கலந்தாய்வு அரசாணை 258 ன் முக்கிய அம்சங்கள்
        
ஆசிரியர் பொது இடமாறுதல் விதிமுறைகளில் மாற்றம் இல்லை அரசாணை வெளியீடு | G.O-258-நாள் 06.07.2016-பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2016-17-ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. 
           அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பொது இடமாறுதல் அளிக்கும் முறை கடந்த 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னர் இடமாறுதல் தொடர்பான நெறிமுறைகள் வெளியிடப்படும். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆகியும் இடமாறுதல் நெறிமுறைகள் வெளியிடப்படாததால் புதிய விதிமுறைகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் எழுந்தது. இந்த ஆண்டு கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.இதனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் சற்று அச்சப்படவே செய்தனர்.

          இந்த நிலையில், 2016-17-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் இடமாறுதலுக்கு கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணையை பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ளார். இந்த அரசாணை ஜூலை 6-ம் தேதி கையெழுத்தானபோதும் நேற்றுதான் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு கிடைக்கப்பெற்றது. இந்த அரசாணையின்படி, இந்த ஆண்டு ஆசிரியர் பொது இடமாறுதல் விதிமுறைகளில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு என்ன விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவோ அதே விதிமுறைகள்தான் இந்த கல்வி ஆண்டிலும் பின்பற்றப்பட உள்ளன. 

இதன்படி

1. முதலில்அரசு பள்ளிகளில் 01.06.1016 ன்படி காலிப்பணியிடங்கள் கண்டறியப்படும்.

2. உபரி ஆசிரியர் பணியிடங்கள் கண்டறியப்பட்டு தேவைப்படும் இடங்களில் பணிநிரவல் செய்யப்பட்டும்

3.அதன் பிறகு பள்ளி நலன்,மாணவர்நலன் கருதி  நிர்வாக மாறுதல் செய்யப்படும்.

4. பின்பு மனமொத்த மாறுதல் முடிக்கப்படும்.
        இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பிறகே மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.இதற்கான அறிவிப்புகள் இன்று வெளியாகி உள்ளது..

5.மாறுதல் வேண்டி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.6.2015-க்கு முன்னர் அப்பள்ளியில் பணியில் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மனமொத்த மாறுதல் விண்ணப்பிப்பவர்களுக்கும் இதே முறை கடைபிடிக்கப்படும்.

6.அனைத்துப்பிரிவுகளிலும் வழக்கம் போலவே முன்னுரிமைகள் வழங்கப்படும்.

7.தொடக்க/நடுநிலைப் பள்ளிகளைப் பொறுத்த மட்டில்,மாவட்ட மாறுதல் வழங்கப்படும் பொழுது ஒன்றியம் விட்டு ஒன்றியம் அல்லது மற்ற அலகுகளுக்கு பரிசீலிக்க வேண்டும்.

8.01.06.2015  க்குப் பின்னர் spouse இறந்திருந்தால் சிறப்பு நிகழ்வாக்க் கருதி,விதிமுறைகளில் தறர்வு செய்து சிறப்பு முன்னுரிமை வழங்ஙப் பட வேண்டும்.

9.நிர்வாக காரணத்தினால் வேறு பள்ளிக்கு மாறுதல் பெற்றவர்கள் அப்பள்ளியில் 3 ஆண்டுகள் பணி முடித்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

10.மாவட்ட மாறுமல் வேண்டுவோர் பள்ளியின் பெயரை குறிப்பிட வேண்டியதில்லை.மாவட்டத்தின் பெயரை குறிப்பிட்டால் போதும்.

11.மலை சுழற்சி முறை பின்பற்றப்பட வேண்டும்.

12.தொடக்க கல்வித்துறையில் ஈராசிரியர் பணியிடங்களில் பதிலி ஆசிரியர் பணியேற்ற பிறகே பணிமாறுதல் ஆணை பெற்றவர்கள் விடுவிக்கப் பட வேண்டும்.

13.Unit transfer,ADW,Welfer schools,Kallar schools,Municipal schools போன்றவற்றிலிலுந்து பள்ளிக்கல்வித்துறைக்குச் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.ஆனால் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிபவர்கள் நகராட்சிப் பள்ளிகளுக்குப் பணி மாறுதல் பெறலாம்.

14.ஆண்கள் பள்ளிகளுக்கு ஆண்களும் பெண்கள் பள்ளிகளுக்கு பெண்களும் (ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் உட்பட)மாறுதல் பெற முன்னுரிமை வழங்கப் படும்.ஆசிரியர்கள் தேவைக்கேற்ப இல்லையெனில் இதில் தளர்வு உண்டு.        

            பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், 40 வயதை கடந்த, திருமணம் செய்துகொள்ளாத முதிர் கன்னியர், மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் போன்றோருக்கு  வழக்கம் போல சலுகைகள் வழங்கப்படும். ஆனால் இவர்கள் மாறுதல் கந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.06.2015க்கு முன்னர் பணியில் சேர்ந்திருக்க வேண்டும்.



ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு நாட்கள் விபரம்



👉 ஜூலை 19 முதல் 28 வரை விண்ணப்பம் கொடுத்தல்

👉ஆகஸ்டு3 உதவித்தொடக்ககல்வி அலுவலர் மாறுதல்

👉ஆகஸ்டு 4 உதவித்தொடக்ககல்வி அலுவலர் பதவி உயர்வு

👉ஆகஸ்ட் 6 ந.நி.பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல், ந.நி.பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர் மாறுதல்

👉ஆகஸ்ட் 7 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல்,பதவி உயர்வு

👉ஆகஸ்ட் 13 இடைநிலை ஆசிரியர் பணி நிரவல்

👉ஆகஸ்ட் 14 இடைநிலை ஆசிரியர் ஒன்றியம், மாவட்டத்திற்குள் பொது மாறுதல்

👉ஆகஸ்ட்  14பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு..

👉ஆகஸ்ட்  20 பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்

👉ஆகஸ்ட்  21 இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்...





தொடக்கக்கல்வி கலந்தாய்வு நாட்கள்



மாறுதல்- பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்







மாறுதல் கலந்தாய்வு-தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..



மாறுதல் விண்ணப்பப் படிவங்கள்













SPOUSE CERTIFICATE..





    -நன்றி....நட்புக்களுக்கு.




Friday, 15 July 2016

(ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் படிக்க வேண்டிய அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிரம்பிய கட்டுரை)

டிஸ்கால்குலியா... டிஸ்கிராஃபியா... டிஸ்லெக்ஸியா... மாணவர்களை வதைக்கும் கற்றல் குறைபாடுகள்..!
- எஸ்.பாலபாரதி

“ஒன்பதாம் வாய்ப்பாடு மனப்பாடமா சொல்லத்தெரியல... ஆனா.. சினிமா கதையை மட்டும் மறக்காமப் பேசு...” “எத்தன தடவை இந்த பாடத்தை  எடுத்திருப்பேன். இவ்வளவு கம்மியா மார்க் வாங்கி இருக்கியே? பாடத்தை விட, பராக்கு பார்க்குறதுலதானே உனக்கு ஆர்வம்! நீ எல்லாம் ஏன் படிக்க வர்ற...?”  “ஒரு கேள்விக்கும் சரியா பதில் எழுத்தத் தெரியல.. பாட்டு டான்ஸுன்னா மட்டும் முன்னாடி வந்து நின்னுடு!” இப்படி விதவிதமான திட்டுக்கள் வாங்கும்  பிள்ளைகளை நாம் பள்ளியிலோ, வீட்டிலோ பார்த்திருப்போம். இன்னும் சொல்லப்போனால் நம்மில் சிலரும் கூட இப்படி திட்டுக்கள் வாங்கி இருப்போம். பள்ளிப்  பாடப்புத்தகத்தில் இருக்கும் பாடங்கள் தவிர இதர விஷயங்களில் ஆர்வமாகவும் திறமையாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கும் எல்லாப் பிள்ளைகளுமே  இப்படியான திட்டுக்களையும் அவமானங்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

இன்னும் சில இடங்களில், ‘திமிர்த்தனத்தால் படிக்காமல் அலைகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டும் இப்படியான மாணவர்களின் மேல் வைக்கப்படுகிறது.  ஆசிரியராலும், பெற்றோராலும் ‘மக்கு’ என்று பட்டப்பெயர் சூட்டப்பட்டு, சக மாணவர்கள் மற்றும் உடன் பிறந்தோரால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும்  இக்குழந்தைகள் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்கள். ஆம். அவர்களுக்கு ஒரு பிரச்னை இருக்கிறது என்பதை எவரும் எளிதில் உணர்ந்து கொள்வதில்லை.  இதனால் மற்றவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகிறார்கள். இப்படியான பிள்ளைகளில் பலர் ‘learning disability’ என்று அழைக்கப்படும் கற்றல் குறைபாடு உடையவர்களாகவே இருப்பர் என்பதை நாம் அறிவதில்லை. அதென்ன கற்றல் குறைபாடு? எழுதவும் படிக்கவும் அதனைப் புரிந்து கொள்ளவும்  ஏற்படும் சிரமங்களைக் ‘கற்றல் குறைபாடு’ என்று வகைப்படுத்துகின்றனர். இதில் ஆறுக்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும், முக்கியமாக மூன்று  வகைகளைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

1. Dyscalculia - கணித ஆளுமைத்திறன் குறைபாடு
2. Dysgraphia - எழுத்தாளுமைத்திறன் குறைபாடு
3. Dyslexia - மொழியாளுமைத்திறன் குறைபாடு

டிஸ்கால்குலியா

பாரதியாருக்கு அவரின் தந்தை கணக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க அழைக்கும் போதெல்லாம்... ‘கணக்கு, பிணக்கு, வணக்கு, மணக்கு, ஆமணக்கு’ என்று  தமிழால் அடுக்குத் தொடர்போல சொல்லிக்கொண்டே போவாராம். ஆம். மகாகவி பாரதியாருக்கு கணக்குப்பாடம் என்றாலே வேப்பங்காய்தான்.  இன்றும் நம்  பிள்ளைகளில் சிலர் மற்ற பாடங்களில் காட்டும் ஆர்வத்தைக் கணிதத்தில் காட்டுவதில்லை. கூர்ந்து கவனித்தால் இப்படியானவர்கள் அநேகமாக,  ‘டிஸ்கால்குலியா’ என்னும் குறைபாடு உடையவர்களாக இருக்கலாம். இவர்களுக்கு எண்கள், கணிதத்துக்கான குறியீடுகள், சூத்திரங்கள் போன்றவற்றை  நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. சாதாரணமாக மணி பார்ப்பதில் தொடங்கி,  பொருட்களை எண்ணுவது வரை எண்கள் சம்பந்தப்பட்ட எல்லா விஷயமுமே  இவர்களுக்குச் சிரமம் தரும்.

டிஸ்கிராஃபியா

எழுத்துக்களின் வடிவத்தில் இவர்களுக்குக் குழப்பம் இருக்கும். சீரான இடைவெளி இல்லாது எழுதுவது, எழுத்துப் பிழைகள், மோசமான கையெழுத்து, வாக்கியத்தை  எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிப்பது என எழுதுவதில் ஏகப்பட்ட சிக்கல்களை சந்திப்பார்கள். நான்கு கோடு போட்ட நோட்டே கொடுத்தாலும் கோணல்  மாணலாகத்தான் இவர்களால் எழுத முடியும்.

டிஸ்லெக்ஸியா

"தாரே ஜமீன்பர்” என்ற இந்திப்படம் பார்த்தவர்கள் இக்குறைபாட்டைப் பற்றி ஓரளவு அறிந்துகொண்டிருக்க முடியும். எழுத்து மயக்கம் இருக்கும். அதாவது, மொழி  சார்ந்த கற்றல் குறைபாடான இதில் எழுதுவது, படிப்பது, படித்ததை புரிந்து கொள்வது, மனதில் பதித்துக் கொண்டு பின் தேவைப்படுகையில் நினைவுகூர்வது  போன்ற திறன்கள் பாதிக்கப்படலாம். உகங்ளால் இதந் வாக்கியத்தை இகுலவாக வாசிகக் முடிறகிதா எறுன் பாருகங்ள். அபப்டி வாசிகக் முடிதாந்ல் நிசச்யம்  பாட்ராடுகள்.

-மேற்கண்ட வாக்கியத்தை உங்களால் இலகுவாக வாசிக்க முடிகிறதா? ‘ஆம்’ என்றால் உங்களுக்குப் பாராட்டுகள். ஆனால் இதுபோல உங்களால் இலகுவாக  எழுத முடியுமா? என் கேள்வி குழப்புகிறதா? டிஸ்லெக்‌சியாவால் பாதிக்கப்பட்டவர்கள் இப்படி மாற்றிப் போட்டு எழுதுவதும் உண்டு. பள்ளி மாணவர்களில் பலரும்  இப்படி எழுதுவதைக் காணமுடியும். இதன் காரணமாகவே தேர்வுகளில் தோற்றுப்போகிறவர்களும் உண்டு. எழுதியதை திரும்பப் படித்தால் திருத்திக்  கொள்வார்களோ என்று நினைக்க முடியாது. எத்தனை முறை படித்தாலும் அவர்கள் தவறாக எழுதியிருப்பதாக அவர்களால் உணரவே முடியாது. வார்த்தையை  பிரித்து உச்சரிப்பதிலும் (syllabification -அசை பிரிப்பது) இவர்களுக்கு சிக்கல்கள் இருக்கும்.

அடையாளம் காணுங்கள்

இப்படியான பிரச்னைகளை சந்திக்க நேரும் குழந்தைகளுக்கு, தான் இப்படி ஒரு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியாது. அவர்களைச் சுற்றி  இருக்கும் பெற்றோரோ, ஆசிரியர்களோ தான் இக்குழந்தைகளை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். எல்லா குழந்தைகளும் ஒன்றுபோல இருப்பதில்லை. பின்  எப்படி எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் மட்டும் சரியானவையாக இருக்க முடியும். பொதுவாகக் கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கு,  ஆடல், பாடல், படம் வரைதல் போன்ற கலைகளின்பால் இருக்கும் ஆர்வம் பாடங்களின் மேல் இருப்பதில்லை. இன்று நாம் கற்பிக்கும் முறையில்  இம்மாணவர்களால் பாடங்களை உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை. தனக்குக் குறைபாடு இருக்கிறது என்று தெரிவதும் இல்லை. இதனால் ஆசிரியர் மற்றும்
பெற்றோரின் கடுஞ்சொற்களால் மன ரீதியில் பெரும் பாதிப்படைகின்றனர். மாணவர்களை அடிப்பது மட்டும் குற்றமல்ல.

மனரீதியிலான காயங்களை ஏற்படுத்துவதும் குற்றம் என்பதை நாம் எப்போது உணர்ந்து கொள்கிறோமோ, அப்போதுதான் இம்மாணவர்களுக்கு விடுதலை.  இக்காரணங்களினாலேயே பல மாணவர்கள் பள்ளி செல்ல மறுத்து அடம் பிடிக்கின்றனர். மேலும் இன்றைய கல்விமுறையில், புரிந்துகொண்டு படிப்பதைவிட,  மனப்பாடம் செய்யும் வழக்கத்தையே நாம் அதிகமாக்கி வைத்திருக்கிறோம். எழுத்துக்களும், மொழியும் சேர்ந்து ஏற்கனவே இம்மாணவர்களை மிரட்டிக்  கொண்டிருக்கும்போது பாடங்களைப் புரிந்துகொள்ளாமல், வெறும் மொட்டை உருப்போடுவது என்பது இன்னும் சிக்கலை ஏற்படுத்துகிறது. புத்திசாலிகளாக  இருந்தாலும் இக்குறைபாடு உடையவர்கள் குடத்துக்குள் இட்ட விளக்கு போலவே இருக்கின்றனர்.

தனிக் கவனம் தேவை

மேலை நாடுகளில் கற்றல் குறைபாடு உடையவர்களையும், ‘slow learners’ என்று சொல்லப்படுகின்ற மெதுவாகக் கற்கும் திறனுடையோரையும் தனியே  அடையாளம் கண்டு, சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இம்மாணவர்களை ஒருபோதும் ஆசிரியர்களோ, சக மாணவர்களோ காயப்படுத்துவதில்லை.  அவர்கள் கருணையோடும், கூடுதல் அன்போடும் நடத்தப்படுகின்றனர். சுற்றி இருப்பவர்களின் துணைகொண்டு, வாழ்வில் உயரங்களை இவர்கள் தொடுகிறார்கள். இவர்களுக்கான பாடங்களை வழக்கமான முறையில் இல்லாமல், சிறப்புக்கவனம் எடுத்து சொல்லிக்கொடுக்க வேண்டியதிருக்கும். “ஆடுற மாட்டை ஆடிக் கற,  பாடுற மாட்டைப் பாடிக் கற” என்ற பழமொழிக்கேற்ப குழந்தைகளின் ஆர்வத்துக்கேற்ப பாடங்களை வடிவமைப்பதே சிறப்புக் கல்வி என்றழைக்கப்படுகிறது.

சிறப்புப் பயிற்சிகள்

கரும்பலகையில் எழுதிப்போட்டு, அதைப் படித்துக் காண்பித்து, மாணவர்களை ஒப்பிக்கவோ/எழுதவோ சொல்லும் வழமையான முறையை மறந்துவிட்டு  மாணவர்களுக்கு பல்லுணர்வு முறையில் (VAKT - Visual, Auditory, Kinesthetic and Tactile) முறையில் எப்படிப் பிடிக்கிறதோ அப்படிப் பாடங்களைச் சொல்லித் தர வேண்டும். பார்வை (Visual) மூலம் கற்றுக் கொள்ளும் திறனுடைய மாணவர்களுக்கு நிறைய படங்கள், சார்ட்  எனப்படும் வரைபடங்கள் போன்றவற்றின் மூலம் கற்பிக்க வேண்டும். கேள்விப் புலன் (Auditory) மூலம் கற்றுக் கொள்ளும் திறனுள்ள பிள்ளைகளுக்கு  இசையோடு சேர்த்து பாடங்களைச் சொல்லித் தரலாம். இவர்களுக்கு வாய்மொழியாகப்பயிற்று விப்பதே சிறந்தது. இயக்கம் (Kinesthetic) மூலம்  கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு நம் மரபான வகுப்பறைக் கல்வி சற்றும் பொருந்தாது.

முழு உடலாலும் இயங்கும் போது மட்டுமே இவர்களால் நன்கு கற்க முடியும். விளையாட்டின் வழி கல்வி மூலமே இவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முடியும். இவர்கள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவார்கள். தொடு உணர்வு(Tactile) மூலம் கற்கும் குழந்தைகளுக்கு மாண்டிசோரி கல்வி  முறையில் பயன்படுத்தப்படும் உபகரணங்களைக் கொண்டு கற்பிப்பது சிறப்பு. உப்புத்தாள், மணல் போன்றவற்றில் எழுத்தை சொல்லித் தருவது, ’அபாகஸ்’  மணிச்சட்டங்களை வைத்து எண்களைச் சொல்லித் தருவது என அவர்களால் தொட்டு உணரக்கூடிய பொருட்களின் மூலம் சொல்லித் தந்தால் இக்குழந்தைகள்  நன்கு புரிந்துகொள்வர். கற்றல் குறைபாடு என்பது தீர்க்கவே முடியாத பிரச்னை அல்ல. மாணவர்களின் நிலை அறிந்து, சிறப்புக் கவனம் எடுத்துக்கொண்டு  பாடங்களை நடத்தினால் கற்றல் குறைபாடுடைய மாணவர்களை மேம்படுத்த முடியும். நம்நாட்டில் இன்றைய தேவையும் இதுதான்.

யெஸ்.பாலபாரதி

நன்றி - தினகரன் கல்விமலர் (ஜூலை 14, 2016)                                        🙏மீண்டும் படிப்போம்🙏

மாறுதல் கலந்தாய்வு ஆணை 258 ன் முக்கிய அம்சங்கள்

       மாறுதல் கலந்தாய்வு அரசாணை 258 ன் முக்கிய அம்சங்கள்
        
ஆசிரியர் பொது இடமாறுதல் விதிமுறைகளில் மாற்றம் இல்லை அரசாணை வெளியீடு | G.O-258-நாள் 06.07.2016-பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2016-17-ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. 
           அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பொது இடமாறுதல் அளிக்கும் முறை கடந்த 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னர் இடமாறுதல் தொடர்பான நெறிமுறைகள் வெளியிடப்படும். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆகியும் இடமாறுதல் நெறிமுறைகள் வெளியிடப்படாததால் புதிய விதிமுறைகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் எழுந்தது. இந்த ஆண்டு கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.இதனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் சற்று அச்சப்படவே செய்தனர்.

          இந்த நிலையில், 2016-17-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் இடமாறுதலுக்கு கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணையை பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ளார். இந்த அரசாணை ஜூலை 6-ம் தேதி கையெழுத்தானபோதும் நேற்றுதான் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு கிடைக்கப்பெற்றது. இந்த அரசாணையின்படி, இந்த ஆண்டு ஆசிரியர் பொது இடமாறுதல் விதிமுறைகளில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு என்ன விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவோ அதே விதிமுறைகள்தான் இந்த கல்வி ஆண்டிலும் பின்பற்றப்பட உள்ளன. 

இதன்படி

1. முதலில்அரசு பள்ளிகளில் 01.06.1016 ன்படி காலிப்பணியிடங்கள் கண்டறியப்படும்.

2. உபரி ஆசிரியர் பணியிடங்கள் கண்டறியப்பட்டு தேவைப்படும் இடங்களில் பணிநிரவல் செய்யப்பட்டும்

3.அதன் பிறகு பள்ளி நலன்,மாணவர்நலன் கருதி  நிர்வாக மாறுதல் செய்யப்படும்.

4. பின்பு மனமொத்த மாறுதல் முடிக்கப்படும்.
        இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பிறகே மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.இதற்கான முறையான அறிவிப்புகளை இயக்குநர் அவர்கள் வெளியிடுவார்.

5.மாறுதல் வேண்டி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.6.2015-க்கு முன்னர் அப்பள்ளியில் பணியில் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மனமொத்த மாறுதல் விண்ணப்பிப்பவர்களுக்கும் இதே முறை கடைபிடிக்கப்படும்.

6.அனைத்துப்பிரிவுகளிலும் வழக்கம் போலவே முன்னுரிமைகள் வழங்கப்படும்.

7.தொடக்க/நடுநிலைப் பள்ளிகளைப் பொறுத்த மட்டில்,மாவட்ட மாறுதல் வழங்கப்படும் பொழுது ஒன்றியம் விட்டு ஒன்றியம் அல்லது மற்ற அலகுகளுக்கு பரிசீலிக்க வேண்டும்.

8.01.06.2015  க்குப் பின்னர் spouse இறந்திருந்தால் சிறப்பு நிகழ்வாக்க் கருதி,விதிமுறைகளில் தறர்வு செய்து சிறப்பு முன்னுரிமை வழங்ஙப் பட வேண்டும்.

9.நிர்வாக காரணத்தினால் வேறு பள்ளிக்கு மாறுதல் பெற்றவர்கள் அப்பள்ளியில் 3 ஆண்டுகள் பணி முடித்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

10.மாவட்ட மாறுமல் வேண்டுவோர் பள்ளியின் பெயரை குறிப்பிட வேண்டியதில்லை.மாவட்டத்தின் பெயரை குறிப்பிட்டால் போதும்.

11.மலை சுழற்சி முறை பின்பற்றப்பட வேண்டும்.

12.தொடக்க கல்வித்துறையில் ஈராசிரியர் பணியிடங்களில் பதிலி ஆசிரியர் பணியேற்ற பிறகே பணிமாறுதல் ஆணை பெற்றவர்கள் விடுவிக்கப் பட வேண்டும்.

13.Unit transfer,ADW,Welfer schools,Kallar schools,Municipal schools போன்றவற்றிலிலுந்து பள்ளிக்கல்வித்துறைக்குச் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.ஆனால் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிபவர்கள் நகராட்சிப் பள்ளிகளுக்குப் பணி மாறுதல் பெறலாம்.

14.ஆண்கள் பள்ளிகளுக்கு ஆண்களும் பெண்கள் பள்ளிகளுக்கு பெண்களும் (ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் உட்பட)மாறுதல் பெற முன்னுரிமை வழங்கப் படும்.ஆசிரியர்கள் தேவைக்கேற்ப இல்லையெனில் இதில் தளர்வு உண்டு.        

            பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், 40 வயதை கடந்த, திருமணம் செய்துகொள்ளாத முதிர் கன்னியர், மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் போன்றோருக்கு  வழக்கம் போல சலுகைகள் வழங்கப்படும். ஆனால் இவர்கள் மாறுதல் கந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 1.06.2015க்கு முன்னர் பணியில் சேர்ந்திருக்க வேண்டும்.