அட கடவுளே!
முக்கிய *பதிவு
ஆசிரியர்களின் பரிதாப *நிலை*
🥲
EMISல் நடைபெற்ற Mobile no.verify வேலையினால் ஆசிரியர்கள் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்பாக நடைபெற்ற உண்மை நிகழ்வு. விராலிமலை ஊராட்சி ஒன்றியம், மீனவேலி தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.ரோஸி மேரி அவர்கள் 14.05.2024.அன்று EMIS பணியை முடிப்பதற்காக தனது கணவரின் செல்போனை பயன்படுத்தி பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டு OTP எண்ணைப் பெறுவதற்காக ஒரு மாணவரின் தாயாரை 4முறை தொடர்பு கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நிகழ்வு அன்றுடன் முடிவடைந்து விட்டது. இன்று 28.05.2024 காலை 11:30 மணியளவில் விராலிமலை காவல் நிலையத்திலிருந்து ஆசிரியரின் கணவரை தொடர்பு கொண்டு உடனடியாக எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல் மாலை 5 மணிக்குள் காவல் நிலையத்திற்கு வர வேண்டும்.வரத் தவறினால் நாங்களே உங்களைத் தேடி வருவோம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே ஆசிரியரும் அவரது கணவரும் பதறி கொண்டு காவல் நிலையத்திற்கு வந்தார்கள். 14.05.2024 அன்று ஆசிரியர் தொடர்பு கொண்ட மாணவரின் பெற்றோர் இடையே தகராறு ஏற்பட்டு மாணவரின் தந்தை தீயிட்டு மரணம் அடைந்து விட்டார்.தாயார் தலைமறைவாகிவிட்டார். இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் தாயின் தொலைபேசி எண்ணிற்கு 4 முறை ஆசிரியரின் கணவரின் தொலைபேசியில் இருந்து அழைப்பு சென்றிருந்ததால் ஆசிரியரையும் அவரது கணவரையும் அழைத்து விசாரணை செய்தனர். OTP பிரச்சனையினால் ஆசிரியரும் அவரது கணவரும் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இது போன்ற இழிவான நிலையை ஆசிரியர்களுக்கு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய கடமை, பள்ளி கல்வித்துறைக்கு உள்ளது.*