Wednesday, 16 March 2016

உலகின் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற பாலஸ்தீனிய ஆசிரியை.

பாலஸ்தீனிய நாட்டில் உள்ள அகதிகளுக்கு ஆசிரியராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் உலகிலேயே மிகச் சிறந்த ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக போப் பிரான்சிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் ஹானன் அல் ஹுருப் பெத்தலேகம் அகதிகள் முகாமில் அகதிகளுக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.குறிப்பாக,


வன்முறையால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருக்கும் குழந்தைகளுக்கு அவர் பாடம் எடுத்து வருகிறார். துபாயில் நேற்று நடந்த ‘உலகின் சிறந்த ஆசிரியரை’ தெரிவு செய்யும் நிகழ்ச்சியில் தன்னுடன் போட்டியிட்ட உலக ஆசிரியர்களை வெற்றி பெற்று இந்த விருதினை தட்டிச் சென்றுள்ளார். விருதினை பெற்ற ஆசிரியை ஹனான் பேசியபோது, ’உலகின் தலைச்சிறந்த ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டு இந்த மேடையில் ஒரு பாலஸ்த்தீனிய பெண் ஆசிரியராக நிற்பதற்காக நான் மிகவும் பெருமை படுகிறேன். எனக்கு கிடைத்துள்ள இந்த பரிசு தொகையை பயன்படுத்தி அகதி மாணவர்களின் முன்னேற்றுத்திற்காக பாடுபடுவேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.

இதே நிகழ்ச்சிக்கு கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ் மற்றும் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உள்ளிட்டவர்கள் வீடியோ மூலம் வாழ்த்து செய்திகளை அனுப்பியுள்ளனர். அதில், ‘உலகில் அமைதியை நிலை நாட்ட ஆசிரியர்கள் பெரிதும் உதவுகின்றனர். ஆசிரியர்களின் சேவை மேன்மேலும் தொடர வேண்டும்’ என போல் பிரான்சிஸ் வாழ்த்தியுள்ளார்.’மாணவர்களை வழிநடத்தி அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை வடிவமைத்து தருவதில் ஆசிரியர்கள் பெரும் பங்கு கொண்டுள்ளனர்’ என இளவரசர் வில்லியம் பாராட்டியுள்ளார்.

Tuesday, 15 March 2016

அனைத்துக் கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளிகள்'

தமிழகத்தில் உள்ள 60,000 கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளிகளைத் தொடங்குவதுதான் இலக்கு என ஓராசிரியர் பள்ளிகளின் நிறுவனர் எஸ்.வேதாந்தம் தெரிவித்தார்.

             சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஓராசிரியர் பள்ளிகளின் 10-ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசும்போது அவர் மேலும் கூறியதாவது:
        தமிழகத்தில் இதுவரை 600 ஓராசிரியர் பள்ளிகளில் சுமார் 22,000 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஊர் கூடித் தேர் இழுப்பதுபோல, எல்லா மக்களும் சேர்ந்து இந்தப் பணியைச் செய்து வருகின்றனர். மக்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை.
          பள்ளிக்கு மாணவர்கள் போக முடியவில்லை என்றால், பள்ளியானது மாணவனைத் தேடிப் போக வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர். அவரின் வாக்கை பின்பற்றி, மாணவர்களைத் தேடிப்போய் ஓராசிரியர் பள்ளிகள் செயல்படுகின்றன.
         கல்வி மூலமாக ஒழுக்கத்தையும், கிராமங்களில் எழுச்சியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவதுதான் எங்களது நோக்கம். குடிசைவாழ் மக்களுக்காக இதுவரை சுமார் 52 கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.75 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.
எங்களது சேவைகளால் கவரப்பட்டு தொழிலதிபர் ரத்தன் டாடா ரூ.50 லட்சம் அளித்து உதவினார். சில நிறுவனங்கள் எங்களது மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளன.
        தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளிகளைத் தொடங்கி மாணவர்களுக்கு கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிப்பதுதான் எங்கள் நோக்கம் என்றார்.

Sunday, 13 March 2016

தமிழக முதலமைச்சர்கள் பட்டியல் 1920 முதல் தமிழக முதலமைச்சர்கள் !

தமிழக முதலமைச்சர்கள் பட்டியல்
1920 முதல் தமிழக முதலமைச்சர்கள்


1. திரு.A. சுப்பராயலு – 17-12-1920 to 11-07-1921

2. திரு. பனகல் ராஜா – 11-07-1921 to 03-12-1926

3. டாக்டர். P. சுப்பராயன் – 04-12-1926 to 27-10-1930


4. திரு. P.முனுசாமி நாயுடு – 27-10-1930 to 04-11-1932
-->

5. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 05-11-1932 to 04-04-1936

6. திரு. P . T . ராஜன் – 04-04-1936 to 24-08-1936

7. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 24-08-1936 to 01-04-1937

8. திரு குர்ம வேங்கட ரெட்டி நாயுடு – 01-04-1937 to 14-07-1937

9. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 14-07-1937 to 29-10-1939

10. திரு தன்குதுரி பிரகாசம் – 30-04-1946 to 23-03-1947

11. திரு O P ராமசாமி ரெட்டியார் – 23-03-1947 to 06-04-1949

12. திரு P S குமாரசுவாமி ராஜா – 06-04-1949 to 09-04-1952  -->

13. திரு C ராஜகோபாலாச்சாரி – 10-04-1952 to 13-04-1954

14. திரு K காமராஜ் – 13-04-1954 to 02-10-1963

15. திரு M பக்தவத்சலம் – 02-10-1963 to 06-03-1967

16. டாக்டர். C.N. அண்ணாது ரை – 06-03-1967 to 03-02-1969

17. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 10-02-1969 to 04-01-1971, 15-03-1971 to 31-01-1976

18.டாக்டர். M G ராமசந்திரன் – 30-06-1977 to 17-02-1980, 09-06-1980 to 15-11-1984, 10-02-1985 to 24-12-1987

19. திருமதி ஜானகி ராமசந்திரன் – 07-01-1988 to 30-01-1988

20. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 27-01-1989 to 30-01-1991

21. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 24-06-1991 to 12-05-1996

22. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 13-05-1996 to 13-05-2001

23. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 14-05-2001 to 21-09-2001

24. திரு O. பன்னீர்செல்வம் – 21-09-2001 to 01-03-2002 -->

25. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 02-03-2002 to 12-05-2006

26. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 13-05-2006 to 15-05-2011

27. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா 16-05-2011 முதல்

-----------------------------------------------------------------------------
அதிக முறை (5) பொறுப்பேற்ற முதல்வர் மு. கருணாநிதி.

மிக நீண்ட காலம் (தொடர்ந்து) பொறுப்பிலிருந்த முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் ஆவார். ஆண்ட காலம் 10 வருடம், 5 மாதம் 25 நாட்கள்

மிகக்குறுகிய காலம் (24 நாட்கள்), பொறுப்பிலிருந்தவர் ஜானகி இராமச்சந்திரன்

பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியா கண்டுபிடிப்பு

 பிளாஸ்டிக்கினால் ஆகும் பொருட்கள் மட்காமல் மலை போல் பெருகி உலகின் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.


 மறுசுழற்சி செய்ய இயலாத பிஇடி பாலிமரான இவ்வகை பிளாஸடிக்குகளை சிதைக்கும் திறனுடைய பாக்டீரியாவை கண்டறிந்து ஜப்பான் விஞ்ஞானிகள் குழு சாதனை படைத்திருக்கிறது.

           இக்கண்டுபிடிப்பு பிளாஸ்டிக்குகளின் மறுசுழற்சிக்கு பேருதிவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு பிளாஸ்டிக்குகளை சிதைக்கும் சில பூஞ்சை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதன் வேகம் மிக மிகக் குறைவாக இருந்ததால், மறுசுழற்சிக்கு அதனை பயன்படுத்த முடியாதது குறிப்பிடத்தக்கது.

180 விதமாக பட்டாம் பூச்சிகளை வரைந்து தேவராயபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்

Saturday, 12 March 2016

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் வருகை: திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தருகிறார்களா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (எஸ்.எஸ்.ஏ) மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


தமிழகத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆண்டாய்வு மற்றும் பள்ளிகள் பார்வை ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.

உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், அறிவியல் மற்றும் நர்சரி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைத்து பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வு மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (எஸ்எஸ்ஏ) மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


ஆய்வு குறித்த தகவல் ரகசியமாக இருக்க வேண்டும். தொடர்ந்து புகார்கள் வரும் பள்ளிகள் மற்றும் கல்வித் தரத்தில் பின்தங்கிய பள்ளிகளைத் தேர்வு செய்து திடீர் ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.

குழுவினர் ஆய்வு மேற்கொள்ளும் போது, ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருகை தருவது குறித்தும், வேலை நேரம் முழுவதும் பள்ளியில் இருப்பது குறித்தும் முதலில் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், மாணவர்களின் முன்னேற்றம், பள்ளி நூலகம் பயன்பாடு, நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ள விவரம், கழிப்பறை வசதி, துப்புரவு பணியாளர்கள் பணி செய்வது குறித்த விவரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளதா என்பன போன்ற விவரங்களை ஆய்வு செய்து அது தொடர்பான விவரத்தை தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Friday, 11 March 2016

வெள்ளிக்கிழமை கதர் அணிய அரசு வேண்டுகோள்!

Thursday, 10 March 2016

2020ல் அரசு ஆரம்பப்பள்ளிகளே இருக்காது

Click here for...


CPS NOMINEE NAME downloading

Wednesday, 9 March 2016

01.04.2003 அன்றோ (அ) அதற்கு பின்னரோ பணியில் சேர்ந்துள்ள தமிழக அரசுபணியாளர்களுக்கு CPS தான்பொருந்தும்-RTI Letter

01.04.2003 அன்றோ (அ) அதற்கு பின்னரோ பணியில் சேர்ந்துள்ள தமிழக அரசுபணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம்(CPS)தான்பொருந்தும், என்று தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில் திருத்தம் செய்து,தமிழ்நாடு அரசின் கெஜட்டில் 27.08.2003 அன்று வெளியிட்ட பக்கத்தின் நகல்மற்றும் இது RTI தொடர்பான கடிதம்.

Tuesday, 8 March 2016

சூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் ? என்ன பரிகாரம் ?

நாளை மார்ச் ஒன்பதாம் தேதி அதிகாலை முதல் நிகழ இருக்கும் சூரியகிரகணம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ சூரியன் உதயமாகும் காலை 6.20 முதல 6.50 வரை மட்டும் தெரியும்.

“கிரஹண்” என்ற சம்ஸ்க்ருத வார்த்தைக்கு ஒளி மறைப்பு அல்லது ஒளி இழப்பு என்று அர்த்தம்.

சூரியனும் பூமியும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும் அமாவாசை நாளில் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் வரும்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால் சில நிமிடங்களுக்கு வானில் சூரியன் மறையும் தோற்றமான இத்தகைய சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

இத்தனை சிறிய நிலாவின் நிழல் அதனை விட நானூறு மடங்கு பெரியதான சூரியனையே மறைப்பது போன்ற இந்தத் தோற்றத்திற்குக் காரணம் பூமிக்கும் சந்திரனுக்கும் இருக்கும் தூரத்தைப் போல நானூறு மடங்கு தூரத்தில் சூரியன் இருப்பதுவேயாகும்.

எனவே அருகில் இருக்கும் சிறிய நிலாவும் தூரத்தில் இருக்கும் பெரிய சூரியனும் நமது கண்களுக்கு ஒரே அளவில் இருப்பது போன்ற தோற்றம் உண்டாகி இந்த கனகச்சிதமான ஒளி மறைப்பு உண்டாகிறது.

வானில் அனைத்துச் சிறிய பொருட்களும் தனக்கு அருகில் இருக்கும் பெரிய பொருளைச் சார்ந்து அதனை மையமாக வைத்தே சுற்றி வருகின்றன. அதன்படி சந்திரன் பூமியை ஏறத்தாழ ஒருமாதத்திற்கு ஒருமுறை சுற்றும் நிலையில் நமது பூமி வருடத்திற்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வருகிறது.

நமது சூரியன் தனது சூரிய மண்டலத்திலுள்ள நமது பூமி உள்ளிட்ட கிரகங்கள், அவற்றின் துணைக்கோள்கள், வால் நட்சத்திரங்கள், கிரகங்களாக உருப்பெறாத ஆஸ்ட்ராய்டு குறுங்கற்கள், ஊர்ட் மேகங்கள் போன்ற அனைத்தையும் இழுத்துக் கொண்டு நொடிக்கு சுமார் 275 கிலோமீட்டர் தன்னை விடப் பெரிதான இந்த பால்வெளி மண்டலத்தை ஏறத்தாழ இருபத்தியிரண்டு கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது.

இதனையே ஒரு பிரபஞ்ச ஆண்டு என்கிறோம்.

மனிதன் அறிவியல் முன்னேற்றத்தை அடைய ஒருவகையில் இந்த பௌர்ணமி அமாவாசை மற்றும் சூரிய சந்திர கிரகணங்களே காரணமாக இருந்தன. மனிதனின் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மற்றும் ஆய்வு மனப்பான்மையை இந்த நிகழ்வுகளே தூண்டி விட்டன.

உள்ளங்கைக்குள் சாக்லெட்டை மறைத்துவைத்து தன் குழந்தைக்கு ஆர்வமூட்டி அதனை மெல்லத் திறந்து காட்டும் ஒரு தகப்பனைப்போல மனிதனுக்கு மெல்ல மெல்ல தனது ரகசியங்களைத் அறியத் தந்து கொண்டிருக்கும் இந்த மகா பிரபஞ்சத்தில் ஒரு குழந்தையின் ஜனனம் முதற்கொண்டு பூமியின் மூலமுதல்வனான சூரியனின் ஒளியை சின்னஞ்சிறு நிலவு கிரகணம் என்ற பெயரில் மறைப்பது வரை நடக்கும் அனைத்திற்கும் காரணங்களும் தொடர்புகளும் கண்டிப்பாக இருக்கின்றன.

பூமியிலும் ஏனைய வான்பொருட்களிலும் பிரபஞ்சத்திலும் நடக்கும் அனைத்து சம்பவங்களும் ஒன்றுக்கொன்று கண்டிப்பாகத் தொடர்புடையவையே. காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை.
இதனையே நமது ஞானிகள் சுருக்கமாக அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் இருக்கிறது என்று சொன்னார்கள்.

ஜோதிடத்தில் சூரியன் ஆத்மா எனப்படும் ஆன்மக்காரகனாக குறிப்பிடப்படுகிறான். சந்திரனை மனதை இயக்குபவன் என்ற அர்த்தத்தில் மனோகாரகன் என்று அழைக்கிறோம். நாம் பிறக்கக் காரணமான இந்த பூமி லக்னம் எனப்படும் நமது உயிரை நமக்குத் தந்தது.

ஆகவே நமது உயிரும் மனதும் ஆன்மாவும் ஒரு நேர்கோட்டில் இணையும் நாளான இந்தக் கிரகண நாள் ஆன்மீகத்தில் ஒருவகையில் தனிச் சிறப்பான நாளாகச் சொல்லப்படுகிறது.

உலகின் உன்னதமான மேலான எனது மதம் உயிர் மனம் ஆத்மா என இவை மூன்றும் ஒரே அலைவரிசையில் இருக்கும் இந்த கிரகண நேரம் சித்துக்கள் கை வரப்பெற வேண்டும், இறைநிலை பற்றிய ரகசியத்தை அறிய வேண்டும், பரம்பொருளின் பக்கத்தில் செல்ல வேண்டும் என்று விரும்பும் ஒருவருக்கு தவம் தியானம் போன்றவைகளைச் செய்ய சரியான நேரம் என்று சுட்டிக் காட்டுகிறது.

இந்த கிரகணநேரத்தில் உங்கள் மனமும் உங்களின் உயிர் அடங்கிய இந்த உடலும் ஆன்மா எனப்படும் பிரபஞ்ச உயர்சக்தியோடு ஒரேவித அலைவரிசையில் தொடர்பு கொண்டிருக்கும் என்பதால்தான் இந்த கிரகண நேரங்களில் நமது ஞானிகள் சாதாரண விஷயங்களைச் செய்யாமல் நமது மனது பக்குவப்படும் ஜபம் தியானம் போன்ற உன்னத விஷயங்களைச் செய்யச்
சொன்னார்கள்.

கிரகணநேரத்தில் வெளியே வராதே என்று நமது மதம் சொல்வது பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால் கிண்டல் செய்யப்படுகிறது. ஆனால் பூகம்பம் சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளை முன்கூட்டியே உணரும் சக்தி படைத்த விலங்குகளும் பறவைகளும் கிரகண நேரத்தில் வெளியே வருவதில்லை அல்லது உடனடியாக இருப்பிடம் திரும்புகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஒரு கிரகணத்தின் போது கிரகணம் ஏற்படும் நட்சத்திரத்திற்கு முன்பின் நட்சத்திரங்கள் மற்றும் அதே நட்சத்திரத்தின் திரிகோண பத்தாவது நட்சத்திரங்களான அந்த நட்சத்திர அதிபதியின் மற்ற நட்சத்திரங்களும் தோஷம் அடையும் என்பது ஜோதிடவிதி.

தற்போது நடைபெற இருக்கும் இந்த சூரிய கிரகணம் கும்பராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தில் நடைபெறுவதால் பூரட்டாதியின் முன்பின் நட்சத்திரங்களான சதயம் உத்திராட்டாதி ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சூரியன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தோஷங்கள் ஏற்படும்.

மேலும் பூரட்டாதி குருவின் நட்சத்திரம் என்பதால் குருபகவானின் மற்ற இரு நட்சத்திரக்காரர்களான புனர்பூசம் விசாகம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அவர்களது ஜாதகப்படி சூரியனின் ஆதிபத்திய காரகத்துவ அமைப்புகளில் பாதிப்புகளை அடைவார்கள்.

இதனால் கிரகணம் நிகழும் ராசியான கும்பம் மற்றும் அதன் முன்பின் ராசிகளான மகரம் மீனம் மற்றும் மிதுனம் கடகம் துலாம் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்குள் அடங்கிய மேற்கண்ட நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

மேற்கண்ட நட்சத்திரக்காரர்களின் தந்தைக்கோ, தந்தைவழி உறவினர்கள், அல்லது பூர்வீகஅமைப்புகளில் கெடுபலன்களோ அல்லது மேற்கண்ட நட்சத்திரக்காரர்களின் ஜாதகங்களில் சூரியன் எந்த ஆதிபத்தியத்திற்கு உரியவரோ அந்த பாவபலன்களில் குறைகளும் கெடுபலன்களும் இருக்கும்.

சூரியன் ராகுகேதுக்களால் பீடிக்கப்படுவதால் மேற்கண்ட நட்சத்திரக்காரர்கள் கிரகண தினத்தன்று தங்களின் தாய் தந்தைக்கு அல்லது அவர்களுக்கு நிகரான பெரியோர்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை,எளியோருக்கு தங்களால் இயன்ற அளவுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற ஆடைகளை தானம் செய்வது கெடுபலன்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் சிறந்த
பரிகாரம்.

ஜோதி வடிவான சூரிய சந்திரர்களையே சிவன்-சக்தி அம்மை அப்பன் என வழிபடும் நமது மேலான இந்து மதத்தின் திருக்கோவில்கள் கிரகண நேரத்தில் இவர்கள் வலுவிழப்பதால்தான் நடைசாத்தப்பட்டு கிரகணம் முடிந்த பின் பரிகாரபூஜைகள் செய்விக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படுகின்றன.

கிரகணத்தன்று ஏற்படும் சக்தியிழப்பை அன்று வெளிப்படும் தோஷமான கதிர்களைத் தடுக்கும் சக்தி தர்ப்பை புல்லுக்கு உண்டு என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதன் காரணமாகவே கிரகண நேரத்தில் நாம் நீரோ உணவோ அருந்தக் கூடாது எனவும் அப்படித் தவிர்க்க முடியாமல் தண்ணீர் குடிக்க நேர்ந்தால் அதில் தர்ப்பைப் புல்லைப் போட்டுக் குடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது சூரிய கிரகணம் ஆரம்பிக்கும் நேரமும் சந்திர கிரகணம் முடியும் நேரமும் முக்கியமானது என்பதால் இந்த நேரங்களில்
புனித நீராடுவது நல்லது.

ஒரு பொதுவான வழிகாட்டுதலாக நாளைய கிரகண நேரத்தில் கும்ப லக்னம் மற்றும் கும்பராசி மற்றும் ஜாதகத்தில் சூரியனைச் சுபராகக் கொண்டவர்கள் முக்கிய செய்கைகள் முடிவுகள் எதனையும் எடுக்காமல் இருப்பது நலம். அதைவிட இந்த நேரத்தில் சூரிய காயத்ரி போன்ற சூரிய துதிகளை தியானிப்பது நல்லது.

கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்?

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது. நீரில் விழும் சூரிய பிம்பத்தைப் பார்க்கலாம். கூலிங்கிளாஸ் போன்ற குளிர்கண்ணாடி அணிந்து பார்ப்பதையும் தவிர்க்கவும். இதனால் கண்களில் பாதிப்பு உண்டாகும்.

வீட்டில் இருக்கும் உணவு நீர், போன்ற பொருட்களில் தர்ப்பைப் புல்லை இட்டு வைக்க நமது முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள். மேலும் கிரகணம் ஆரம்பிக்கும் பொழுதும் முடிந்த பிறகும் குளிப்பது மேன்மை.

சர்க்கரை நோயாளிகள் போன்று நேராநேரத்திற்கு உணவருந்த வேண்டியவர்கள் கிரகணநேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பே சாப்பிட்டு விடலாம். மற்றவர்கள் கிரகணம் முடிந்த பிறகு மட்டுமே சாப்பிடுவது நல்லது.

நடைபெறப்போவது சூரிய கிரகணம் என்பதால் கிரகணம் ஆரம்பிக்கும் நேரம் பித்ரு தர்ப்பணம் கொடுக்கலாம். இளைய தலைமுறையினர் கிரகணநேரத்தில் பேஸ்புக் வாட்ஸ் அப் போன்ற பொழுது போக்குகளில் அரட்டை அடிக்காமல் ஜபம் மற்றும் பாராயணம் செய்வது அவர்களின் மனோபலம் செயல்திறனைக் கூட்டும்.

பொய் பெயரில் புகார் அளித்தால் நடவடிக்கை கிடையாது: சி.வி.சி.,

புதுடில்லி;'அரசு ஊழியர்களுக்கு எதிராக, பெயர் தெரிவிக்காமல், அல்லது பொய் பெயர்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என, மத்திய அரசின் துறைகளுக்கு, சி.வி.சி., எனப்படும், மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும், சி.வி.சி., அனுப்பியுள்ள உத்தரவு விவரம்:அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு எதிராக, புகார் அளிப்போர், தம் பெயர் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.

பெயர் குறிப்பிடாமலோ, பொய்யான பெயர்களுடனோ, அரசு ஊழியர்களுக்கு எதிராக வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். இத்தகைய புகார்களை, கோப்புகளில் வைத்தால் போதும். இது தொடர்பாக, 1999ல், சுற்றோலை அனுப்பப்பட்டது. அதற்கு முன், புனை பெயர்களில் அல்லது பெயர் குறிப்பிடாமல் வந்த புகார்கள் மீது துவங்கிய நடவடிக்கைகளை, முடித்து வைக்க வேண்டும். இப்புகார்கள் மீது நடந்த விசாரணைகளில் கிடைத்த ஆதாரங்களை, எதிர்காலத்தில், ஒழுங்கு நடவடிக்கைகள், நன்னடத்தை பிறழ்வு போன்ற புகார்கள் வரும்போது, பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பொய் புகார் ஏன்?பொய்யான பெயர்களில் புகார்கள் வருவது குறித்து, மூத்த அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில், 'அரசு ஊழியர்கள் பதவி உயர்வு பெறும் சமயத்தில் அல்லது வேறு முக்கியமான பணியில் ஈடுபடுத்தப்படும்போது, சம்பந்தப்பட்ட ஊழியருக்கு, புலனாய்வுத் துறை அனுமதி கிடைப்பதை தாமதப்படுத்தும் நோக்கில், பொய் புகார்கள் கூறப்படுகின்றன' என்றார்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் மேல் தளத்தில் தேர்வெழுத தடை


தமிழகத்தில் பொதுத்தேர்வுகளில் பங்கேற்போரில், கண் பார்வையற்ற, காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாதோர், டிஸ்லெக்சியா குறைபாடு, மனநலம் குறைபாடு, உடல் ஊனமுற்றோர் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. எழுதுபவரை நியமித்துக்கொள்வது, கூடுதல் தேர்வு நேரம் உள்ளிட்டவைகளை, தலைமை ஆசிரியர் மற்றும் கல்வித்துறை அலுவலர்களின் பரிந்துரையில் சலுகை வழங்கப்பட்டு வந்தது.நடப்பு ஆண்டில், சலுகை பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பட்டியல்களை தேர்வுத்துறையே தயாரித்து, அதில் வழங்க வேண்டிய சலுகைகள் குறித்தும், மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளி மாணவர்களை, கட்டாயம் கீழ் தளத்தில் உள்ள வகுப்பறையில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்க வேண்டும். மேல் தளம், திறந்தவெளி உள்ளிட்டவைகளுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்களை திறந்தவெளியில் அமர வைப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகை விபரங்களை முன்கூட்டியே, சம்பந்தப்பட்ட மாணவர், எழுதுபவர், கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு விளக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களை கண்காணிக்கும்கல்வித்துறை அதிகாரிகள்.

தேர்தல் நேரத்தில் ஆசிரியர்களை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தொடக்க கல்வித்துறையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஒருங்கிணைந்து, இரண்டு பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தி வருகிறது.


அவர்கள், ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருகின்றனரா, முழு நேரமும் பள்ளியில் இருக்கின்றனரா என்பதை கண்காணித்து வருகிறது. அந்த குழு ஆய்வு குறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களிடம் அறிக்கை அளிக்கிறது. தேர்தல் நேரத்தில், அதிகாரிகள் கண்காணிப்பதால் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தொடக்க கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தொடர்புகார் வந்த பள்ளிகள், கல்வி தரத்தில் பின்தங்கிய பள்ளிகளில் மட்டுமே ஆய்வு நடத்துகிறோம். ஆசிரியர்களின் வருகை, நடவடிக்கைகளை கண்காணிக்கிறோம்.தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தேர்தல் தொடர்பான ஆய்வு கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை: முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு

 மத்திய அரசுப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


         மத்திய அரசுப் பணியாளர்கள் சுமார் 47 லட்சம் பேர் மற்றும் 52 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஆகியோரது ஊதியத்தை உயர்த்துவது குறித்து 7-ஆவது ஊதியக் குழு சில பரிந்துரைகளை முன்வைத்தது. அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசுச் செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான குழுவை கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அமைத்தது.

 இதனிடையே, அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், "7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் எதிர்வரும் நிதியாண்டில் (2016-17) அமல்படுத்தப்படும்' என்று அறிவிப்பு வெளியானது.
 அதன் அடிப்படையில், தற்போது முதல்கட்டமாக ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தினால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினம் குறித்து துல்லியமாக எவருக்கும் தெரியாது என்றும், இதுதொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அரசுத் துறைச் செயலர்கள் குழு, தனது அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது அதுகுறித்து முழுமையாகத் தெரியவரும் என்றும் அவர் கூறினார்

பி.எப். வரிவிதிப்பு திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு

பி.எஃப். தொகை எடுப்பில் 60% தொகைக்கு வரிவிதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதாக அருண் ஜேட்லி செவ்வாயன்று அறிவித்தார்.

2016-17-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த அருண் ஜேட்லி, ஏப்ரல் 1, 2016-க்குப் பிறகான பி.எஃப். பிடித்தத் தொகையில் எடுப்பின் போது 60% தொகைக்கு வரிவிதிக்கும் திட்டத்தை அறிவித்தார்.


இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தொழிற்சங்கங்கள் மற்ற எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்ததோடு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். சார்பு தொழிற்சங்கம் இந்த வரிவிதிப்பை இரட்டை வரிவிதிப்பு என்று கடுமையாக சாடியது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட அருண் ஜேட்லி, “இத்திட்டம் குறித்த கருத்துகளின் அடிப்படையில், பல்வேறு கோணங்களில் மத்திய அரசு பி.எஃப். வரிவிதிப்புத் திட்டத்தை ஆய்வு செய்ய விரும்புகிறது, எனவே இந்த வரிவிதிப்புத் திட்டத்தை மத்திய அரசு கைவிடுகிறது” என்றார்.

முன்னதாக இந்தத் திட்டம் குறித்து பல குழப்பமான அறிவிப்புகள் வெளியாகின, பி.எஃப். தொகையின் மீதான வட்டிக்குத்தான் வரி என்று முதலில் விளக்கம் அளிக்கப்பட்டது, பிறகு அருண் ஜேட்லி தொழிற்துறை கூட்டமைப்பினரிடையே கூறும்போது, அதாவது முழு பி.எஃப். தொகையையும் எடுத்தால் 60% எடுப்புத் தொகைக்கு வரி விதிக்கப்படும் என்றும் மாறாக அந்த 60% தொகை ஏதாவது பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டால் அதற்கு வரிவிதிப்பு கிடையாது என்றும் கூறினார்.

இந்த விளக்கத்திற்கு தொழிற்சங்கங்கள், கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதாவது ஊழியர்கள் பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தேயாக வேண்டும் என்பதை மறைமுகமாக கட்டாயப்படுத்துகிறது இது என்று சாடினர்.

அதாவது தங்கள் பணத்தை எங்கு, எதில் முதலீடு செய்வது என்பதைத் தேர்வு செய்ய ஊழியர்களுக்கே உரிமை உள்ளது என்ற வாதத்தை இவர்கள் முன்வைத்தனர்.

இதற்கு, அருண் ஜேட்லி, வருவாயை அதிகரிக்க இந்த வரிவிதிப்பு இல்லை மாறாக அனைவரையும் பென்ஷன் திட்டத்தில் சேரவைப்பதே நோக்கம் என்றார்.

ஆனால், கடைசியில் பிரதமர் பார்வைக்கு இது குறித்த அனைத்து கருத்துக்கள், வரிவிதிப்பின் விளைவுகள் ஆகியவை கொண்டு செல்லப்பட்டன. இதனையடுத்து செவ்வாயன்று அருண் ஜேட்லி பி.எஃப். வரிவிதிப்பு திட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்தார்.

Monday, 7 March 2016

பெண்கள் தொடர்பான 100 முக்கிய குறிப்புகள்:-

1) பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் ? ஆண்டாள்

2) இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதன்முதலாக பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது?
தமிழ்நாடு

3) இந்திய போலீஸ் பணியில் (ஐபிஎஸ்) சேர்ந்த முதல் பெண் யார்?கிரண்பேடி

4) முழுவதும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் எது?கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

5) உலகின் முதல் பெண் விண்வெளி வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963

6) சர்வதேச கால்பந்து போட்டியின் நடுவராக பணியாற்ற திண்டுக்கல்லை சேர்ந்த ரூபவதி என்ற பெண் தேர்வு பெற்றுள்ளார்.

7) உலகின் முதல் பெண் அதிபர் - மரியா எஸ்டெலாஃபெரான், அர்ஜெண்டினா

8) தேவருக்கு பால் கொடுத்தது :இஸ்லாமிய பெண்

9) பெண் வன்கொடுமை சட்டம் :1921

10) உலக பெண்கள் ஆண்டு :1978

11) தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி

12) நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி?விடை=மேரிகியூரி

13) பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர் -கார்கி

14) பெண்களைக் காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில் ஒளவை இல்லம் தொடங்கப்பட்டது

15) இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - முத்துலட்சுமி அம்மையார்

16) கற்ற பெண்களின் சிறப்பைக்கூறும் நூல் - குடும்ப விளக்கு

17) பெண் சிசு வதை தடுப்புச் சட்டம் மற்றும் உயிர் பலி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆட்சியில் இருந்தவர் - முதலாம் ஹார்டின்ஜ் பிரபு.

18) வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்ட வசதியான வீட்டுப் பெண்-அம்புஜத்தம்மாள்

19) பெண் ஓவியர் - சித்திரசேனா

20) ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்த முதல் இந்தியப் பெண்மணி- ஆர்திசாகா

21) சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள்-அக்டோபர் 11.

22) தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் தினம் : ஜனவரி 24

23) தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார் : டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

24) சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் முதல் பெண் பொது இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
மஞ்சுளா

25) Green Oscar எனப்படும் Wild Screen Panda Award பெற்ற முதல் இந்திய பெண் யார் ?
ஆஷ்விகா கபூர்

26) தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன? காளியம்மாள்

27) பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்?
மகாத்மா காந்தி

28) முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்? பெனாசீர் புட்டோ

29) பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் - 1992

30) பெண் கொடுமை சட்டம் - 2002

31) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகதின் முதல் பெண் துணை அதிபர் யார்?  Louise Richardson Chidambaram

33) அண்டகச் சுரப்பி=பெண்

34) பிடித்த பெண் - இலக்கணக் குறிப்பு தருக.
பெயரெச்சம்

35) கல்மரம் நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற பெண் எழுத்தாளர்
திலகவதி

36) அங்கு நிற்பது ஆணா? பெண்ணா? எவ்வகை வினா?
ஐய வினா

37) ஆள் - என்ன விகுதி? பெண்பால் வினைமுற்று

38) ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் ?  மெஹபூபா முஃப்தி

39) தேசிய பேரிடர் மீட்புப் படையின் முதல் பெண் கமாண்டர் ?
ரேகா நம்பியார்

40) இந்தியாவின் இரும்பு பெண் இந்திரா காந்தி.

41) பெண் என்ற நூலின் ஆசிரியர்? அகிலன்

42) பெண்ணின் பெருமை நூலின் ஆசிரியர்- திரு.வி.க

43) முதல்“அப்துல்கலாம் விருதைப்" பெற்ற ISRO பெண் இயக்குனர் யார்?  வளர்மதி

44) Radiological Society of North America (RSNA)வின் நிர்வாக குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்? விஜய் M. ராவ்

45) பேயோட்டுவதற்க்ககான வெறியாடல் என்பதனைப் பற்றி பாடிய பெண் புலவர்? காமக்கண்ணியார்

46) சங்க காலத்தில் அதிக பாடல்களை பாடிய பெண் புலவர் யார்.? ஒளவையார்

47) சங்க கால பெண் புலவர்கள் எத்தனை.?  31

48) அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு

49) மலேரியா நோயைப் பரப்பும் பிளாஸ்மோடியத்தின் முக்கியக் கடத்தியாக செயல்படுவது – பெண் அனோபீலஸ் கொசு

50) சிற்றில்= 17ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண் குழந்தைகள் வீடு கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும்.
(சிற்றில் = சிறு+வீடு)

51) 18 வயதிற்குட்பட்ட பெண் செய்யும் குற்றம் இளம் சிறார் குற்றமாகும்

52) தகாத முறையில் பெண்களை சித்தரிக்கும்(தடுப்பு) சட்டம் எப்போது இயற்றப்பட்டது? 1986

53) சிறந்த இலக்கியத்திற்காக, பிரிட்டன் வழங்கும் பரிசு. 1997 இல் அருந்ததிராய் எனும் இந்தியப் பெண் எழுத்தாளர் இவ்விருதைப் பெற்றார்.

54) ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம்-மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் பெயரால்தான் வழங்கப்பட்டு வருகின்றன.

55) பெண்ணுரிமைக்காகவே தனது வாழ்க்கையை செலவிட்டவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.

56) தமிழக முதல் பெண் முதலமைச்சர் திருமதி.ஜானகி ராமச்சந்திரன்(1988)

57) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்? பச்சேந்திரி பாய்

58) சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்

59) தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)

60) தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை

61) தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்

62) தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS

63) தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்

64) தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி

65) தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி

66) தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்

67) பாரத ஸ்டேட் வங்கியின் முதல் இந்திய பெண் தலைலராக 2013ல் நியமிகப்பட்டவர்? அருத்ததி பட்டசார்யா

68) இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்

69) சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை

70) எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? – மீனாட்சியம்மை குறம்

71) எந்த இந்திய தொழிலில் அதிக அளவிலான பெண்கள் பணிப்புரிகின்றனர்? டி(தேயிலை)

72)  கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் – பாரதிதாசன்

73) ஐ.நா உலகப்பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம் - பெல்ஜியம்

74) இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு

75) இந்தியாவில் முதல் பெண்கள் கல்லூரி 1879-ம் ஆண்டு நிறுவப்பட்டது. கோல்கத்தாவில் நிறுவப்பட்ட இக்கல்லூரியின் பெயர் - பேத்தூன்.

76) சாரதா சட்டத்துடன் தொடர்புடையது எது? குழந்தைத் திருமணம், ஆண் -18, பெண் - 16

77) மக்களவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ?
சுஷ்மா சுவராஜ்

78) தேசிய பெண்கள் ஆணையச்சட்டம்-1990

79) ஆண்கள் விட பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் :கேரளம்

80) பெண்களுக்கு செய்யும் குடும்ப கட்டுபாடு :டியூபக்டேமி

81) மொரிசியஸ் நாட்டின் முதல் பெண் பிரதமர்? அமீனா குரிப் பாகிம்

82) நன்னன் என்பவன் பெண் கொலை புரிந்த மன்னன்.

83) படித்த பெண் என்னும் திரைப்படத்திற்கு முதன்முதலாக பாடல் எழுதியவர்-பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்.

84) படித்தபெண்கள் எனும் நூலின் ஆசிரியர்? பாரதிதாசன்

85) மடவார் என்பது? பெண்கள்

86) சவுதி அரேபியாவில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் முதன் முதலில் வெற்றி பெற்ற பெண் என்ற பெருமையை பெற்றவர்? சல்மா பின்ட் ஹிஸாப் அல்-ஒடீபி

87) பெரியாருக்கு பெரியார் பட்டம் வழங்கியவர்கள்? பெண்கள்

88) பாகிஸ்தானின், முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார்.

89) சிரியாவைச்சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் Zaina Erhaimக்கு Reporters Without Borders Prize என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது

90) 2015ம் ஆண்டின் சிறந்த மனிதராக, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "டைம்' ஆங்கிலப் பத்திரிகை தேர்வு செய்துள்ளது.

91) சுமார் 30 ஆண்டுகளுக்கு பின், இந்த கௌரவத்தை பெறும் முதல் பெண் என்ற பெருமை மெர்க்கலாவுக்கு கிடைத்துள்ளது.

92) கடந்த 1986-ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக பிலிப்பின்ஸின் முதல் பெண் அதிபர் கோராஸன் அகினோவை, "டைம்' பத்திரிகை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது

93) தலைமை தேர்தல் ஆணையராக இருந்த பெண் யார்?ரமாதேவி

94) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? 15வது இடம்

95) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?
சென்னை (23,23,454)

96) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? 71.54 ஆண்டுகள்

97) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் எவ்வளவு? 3,59,80,087

98) அன்யூப்ளாய்டி எ.கா-- டர்னர் சின்ரோம் ( பெண் அலி )

99) உலகின் முதல் பெண் பிரதமர்?பண்டார நாயகே - இலங்கை.

100) கடற்படை தலைவராக இருந்த ஆர்டிமீசியா என்ற பெண் எந்த நாட்டை சேர்ந்தவர்?
கிரேக்கம்.
 WOMEN'S DAY WISHES TO ALL THE FEMALE MEMBERS

பி.எப்.,வட்டிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க பிரதமர் பரிந்துரை.

வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்குமாறு, நிதியமைச்சகத்துக்கு, பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெ ளியாகியுள்ளன. இதனையடுத்து இது தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் பார்லிமென்டில் வெ ளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


பார்லிமென்டில், பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். 'தொழிலாளர்கள் ஓய்வு அடையும்போது பெறும், இ.பி.எப்., மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.பி.எப்., தொகையில், 60 சதவீதத்தின் மீது ஓய்வுக்கால வரி விதிக்கப்படும்' என, பட்ஜெட்டில் கூறப்பட்டது.இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இ.பி.எப்., தொகைக்கான வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பான இறுதி முடிவை பிரதமர் எடுக்க வேண்டும் என எம்.பி.,க்கள் கூட்டத்தில்ஜெட்லி கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பி.எப்., வட்டிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்த வேண்டும் எனவும், நிதியமைச்சகத்துக்கு பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து, பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று, தனது அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர், இது தொடர்பான அறிவிப்பை ஜெட்லி பார்லிமென்டில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் தலையிட்டின் மூலம், 60 லட்சம் ஊழியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.

உலக மக‌ளி‌ர் ‌தின‌ம்!

மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை உலக மக‌ளி‌ர் ‌தினமாக‌ நா‌ம் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம். ‌வீ‌ட்டி‌ற்கு‌ள்ளே இரு‌ந்த பெ‌ண் சமுதாய‌ம் த‌ற்போது வா‌னி‌ல் பற‌ந்து கொ‌‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல், அத‌ற்கு ‌வி‌த்‌தி‌ட்ட ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன் வெ‌ற்‌றி ‌தினமே இ‌ந்த மக‌ளி‌ர் ‌தினமாகு‌ம்.


முத‌லி‌ல் அனை‌த்து மக‌ளி‌ரு‌க்கு‌ம் எமது KSkalviseithigal  சா‌ர்‌பி‌ல் மக‌ளி‌ர் ‌தின வா‌ழ்‌த்துகளை தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌கிறோ‌ம்.

உலக மக‌ளி‌ர் ‌தின‌த்தை வே‌ண்டுமானா‌ல் நா‌ம் எ‌ளிமையாக‌க் கொ‌ண்டாடலா‌ம். ஆனா‌ல் இ‌ந்த உலக மகளிர் தினம் கொ‌ண்டாடுவத‌ற்கு காரணமான போரா‌ட்டமு‌ம், அத‌‌ன் வெ‌ற்‌றிகளு‌ம் அ‌வ்வளவு எ‌ளிதாக‌க் ‌கி‌ட்டியத‌ல்ல‌். ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெ‌ண்களு‌க்கான உ‌ரிமைகளை வென்றெடுத்த நாள் இது.

18ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செ‌ய்யு‌ம் பொரு‌ட்டு வீடுகளில் முட‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர். பெரு‌ம்பாலான பெ‌ண்களு‌க்கு ஆரம்பக் கல்வி கூட மறு‌க்க‌ப்ப‌ட்டது. மரு‌த்துவமு‌ம், சுத‌ந்‌திரமு‌ம் எ‌ன்னவெ‌ன்று க‌ண்‌ணி‌ல் கா‌ட்ட‌ப்படாம‌ல் இரு‌ந்த கால‌ம் அது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன் 1857ஆம் ஆண்டின் நடந்த போ‌ரினால் ஏராளமான ஆ‌ண்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டது‌ம், படுகாயமடை‌ந்து நட‌க்க முடியாத ‌நிலை‌க்கு உ‌ள்ளானது‌ம் ‌நிக‌ழ்‌ந்தது. இதனா‌ல் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை‌த் த‌வி‌ர்‌க்க ‌நிலக்க‌ரிச்சுரங்கள் ம‌ற்று‌ம் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் மகளிரு‌‌க்கு ப‌ணி வா‌ய்‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது. இ‌ந்த ச‌ந்த‌ர்‌ப்ப‌ம்தா‌ன் அடு‌ப்பூது‌ம் பெ‌ண்களா‌ல் தொ‌ழி‌ற்சாலைக‌ளிலு‌ம் ‌திறமையாக ப‌ணியா‌ற்ற முடியு‌ம் எ‌ன்பதை உல‌கி‌ற்கு ‌நிரூ‌பி‌த்தது. ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக பெ‌ண்களாலு‌ம் வேலை செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்று பெ‌ண் சமுதாயமே அ‌ப்போதுதா‌ன் பு‌ரி‌ந்து கொ‌ண்டது.


WD
எது எ‌ப்படி இரு‌ந்தாலு‌ம், வேலை பா‌ர்‌க்கு‌ம் இட‌ங்க‌ளி‌ல் ஆ‌ண்களு‌க்கு ‌நிகராக ப‌ணியா‌ற்ற வா‌ய்‌ப்பு ‌கிடை‌த்ததே‌த் த‌விர, ஊ‌திய‌த்‌தி‌ல் பெ‌ண்களு‌க்கு அ‌நீ‌தி இழை‌க்க‌ப்ப‌ட்டது. (அது இ‌ன்று வரை பல இட‌ங்க‌ளி‌ல் தொடருவது ம‌ற்றொரு ‌பிர‌ச்‌சினை). இதனால் பெண்கள் மனம் குமுறினர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைக‌ள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அ‌ப்போதைய அமெரிக்க அரசு செ‌விசா‌ய்‌க்க‌வி‌ல்லை.

இதனால் அமெ‌ரி‌க்கா முழுவது‌ம் கிளர்ந்தெழு‌ந்த பெண் தொழிலாளர்கள் 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். துணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தா‌ன் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உமையாளர்கள் இப்போராட்டத்தை அர‌சி‌ன் ஆதரவுடன் அடக்கினர். வெ‌ற்‌றி பெ‌ற்றதாக பக‌ல் கனவு‌ம் க‌ண்டன‌ர். ஆனா‌ல் அ‌ந்த பக‌ல் கனவு ‌நீ‌ண்ட நா‌‌ட்களு‌க்கு ப‌லி‌க்க‌வி‌ல்லை.


WD
அட‌க்‌கி வை‌த்தா‌ல் அட‌ங்‌கி‌ப் போவது அடிமை‌த் தன‌ம் எ‌ன்று பெண் தொழிலாளர்கள் 1907ஆம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உமை, சம ஊதியம் கோரினர். இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.

இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே, ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். ‌அ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் மு‌‌க்‌கிய சாரா‌ம்சமாக மார்ச் மாதம் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோ‌ரி‌க்கை வை‌த்தா‌ர். பெ‌ண்களை அட‌க்‌கி ஆள ‌நினை‌த்த ஆ‌ண் சமுதாய‌ம் இத‌ற்கு ஒ‌ப்பு‌க் கொ‌ள்ளுமா அ‌ல்லது இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற வ‌ழி ஏ‌ற்படு‌த்துமா... ப‌ல்வேறு தட‌ங்க‌ல்களா‌ல் இ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவேற முடியாம‌ல் போனது.

இத‌ற்‌கிடையே பெ‌ண் தொ‌ழிலாள‌ர்க‌ள் அமை‌ப்‌பி‌ன‌ர் ஆ‌‌ங்கா‌ங்கே உ‌ரிமை‌க் குர‌ல் எழு‌ப்ப‌த் தொட‌ங்‌கி‌யிரு‌ந்தன‌ர். 1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நக‌ரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார்.

அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 88 ஆண்டுகளுக்கு முன்பு 1921ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர். அ‌ன்று முத‌ல் இ‌ன்று வரை ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை நா‌ம் மக‌ளி‌ர் ‌தினமாக‌க் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம். ஒரு ‌சில ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்புதா‌ன் இ‌ந்‌தியா‌வி‌ல் மக‌ளி‌ர் ‌தின‌க் கொ‌ண்டா‌ட்ட‌ங்க‌ள் களை க‌ட்டியு‌ள்ளன.

Sunday, 6 March 2016

தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி 7.3.2016.

Saturday, 5 March 2016

14 ஆண்டுகளாக தவறாது பள்ளிக்கு வரும் மாணவி

பள்ளியில் சேர்ந்த நாள் முதல், பள்ளி இறுதி ஆண்டு வரை, ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல், 100 சதவீத வருகை தந்து சாதனை மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.


மேற்குவங்க மாநிலம், கோல்கட்டா நகரின் டம் டம் பகுதியில் வசிக்கும், சித்தரஞ்சன் குஹா - டாலி தம்பதியின் மகள் சந்திரஜா. அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், எல்.கே.ஜி., வகுப்பில் சேர்ந்த சந்திரஜா, தற்போது, பிளஸ் ௨ படித்து வருகிறார். படிப்பில் மட்டுமின்றி, வருகை பதிவிலும், 'ஏ' கிரேடு பெற்றுள்ளார். பள்ளியில் சேர்ந்த நாள் முதல், இன்று வரை, அவர் ஒருநாள் கூட விடுப்பு எடுத்ததில்லை. 100 சதவீத வருகை பதிவுடன் அவர் சாதனை படைத்துள்ளதை, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமின்றி, அப்பகுதி மக்களும் பாராட்டி உள்ளனர்.

சந்திரஜாவை பார்த்து, மற்ற மாணவர்களும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருவதாக, பள்ளி முதல்வர் கூறியுள்ளார். மாணவியின் சாதனை குறித்த தகவல், பத்திரிகைகளில் வெளியானதை அடுத்து, மேற்குவங்க மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, சந்திரஜாவை தன் அமைச்சக அலுவலகத்திற்கு வரவழைத்து, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், சந்திரஜாவுக்கு தேவையான உதவிகளை, அரசு செய்யும் என்றும் உறுதியளித்தார்.

TNPSC- DEPARTMENTAL EXAMINATIONS MAY -2016 TIME TABLE

WhatsApp features - New 8 facilities

WhatsApp recently joined the 1-billion users club. The Facebook-owned WhatsApp has now become almost the de facto mode of communicationin many countries around the globe. The regular updates the app gets has gone a long way in bolstering its user base.The popular instant messaging app has received a slew of new features in the past few months. Here's a glance at 6 such cool features you should know about.

We tell you the 8 most awaited and exciting features that you can now find on your WhatsApp:


1. Sharing the documents: Do you know that along with photos and audio clips, you can also share your documents on WhatsApp? Yes, the company's most recent update allows you to share your PDF files on the chat app. Users will have to update the WhatsAppto its latest version, which is available through the Google Play Store and the company's own website.

2.Google Drive, Dropbox, iCloud Drive integration in iOS:WhatsApp has released an update for iPhones that adds new features like sending files from GoogleDrive and Dropbox as well as lets users zoom in on videos as they play.One big feature of this update (v 2.12.14) is the integration of iCloud Drive, Google Drive, DropBox, OneDrive etc to send files to other contacts. This means that users can send photos and videos stored in cloud storage services directly from WhatsApp. However, other files stored in the cloud, like Excel sheets or Word documents, still cannot be sent via WhatsApp.

3. The much-talked about middle finger: Now you canbetter express your anger to someone on WhatsApp! Amongst the number of unique emojis the app has introduced, in one of its updates, users can also find the controversial middle finger emoji. Other new emojis include a bucket of popcorn, upside down smiley face, burrito, racing cars, spider and many more. So, go ahead and express yourself in a unique and better way on WhatsApp!

4. Pinch-to-Zoom videos:  The pinch to zoom feature lets the iOS users zoom in the videos while it is playing within WhatsApp.

5. Shared link history: WhatsApp now helps you keep a tab of the links that you share on the chat. Earlier, the app allowed users to see only the videos and images that have been shared on the thread. With this update, it is possible to see all the links that havebeen shared on either singular or group chats.

6. Group member limit increased from 100 to 256:WhatsApp recently increased the number of users one can have in a group to 256. This number previously was restricted to 100. The update is update is available to both iOS and Android app users.

7.Become a WhatsApp 'tester':This is the best way to become a WhatsApp pro. WhatsApp recently launched a beta tester programme. Once signed, as atester, you will receive an update that includes a testing version of the WhatsApp Messenger app. However, as with all beta versions, these features toomay be unstable or have a few bugs.However, so far the programme is only for Android users.

8.Keep starred messages while clearing chat:This feature gives you more flexibility while deleting your chats. So far, Android users have the option to delete messages older than 30 days or over 6 months. However, often felt if you could save some of these. You have the option now: Users can keep starred messages while clearing chats. This version is so far in beta mode.

வகுப்பறையில் 'மேப்' மாட்டாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

அரசு பள்ளிகளில், மூன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, வகுப்பறையில் கண்டிப்பாக வரைபடங்கள் மாட்ட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மற்றும் உதவிபெறும் தொடக்கப் பள்ளி மாணவர்கள், தங்களின் நாடு, மாநிலம், வசிக்கும் பகுதியை புவியியல் ரீதியாக அறிந்து கொள்ள, ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டுமென, உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, வகுப்பறை சுவர்களில் வரைபடங்களை மாட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக, மூன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, புவியியல் வரைபடங்கள், அரசின் சார்பில் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்த படங்களை, வகுப்பறைகளில் கண்டிப்பாக, மாணவர்கள் பார்வையில் படும்படி மாட்டி வைத்து, அதிலுள்ள இடங்களை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டுமென, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
வரைபடத்துடன் கற்றுத் தராத ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Wednesday, 2 March 2016

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா! ! ! !

உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற....

அழுத்துங்கள்-

Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#

Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#

Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#

Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#

Tata Dcomo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#


வாட்ஸ் அப்பில் இனி ஆவணங்களையும் அனுப்பலாம்!

வாட்ஸ் அப்பில் இனிமேல் ஆவணங்களையும் அனுப்பும் வசதி புதியதாக இணைக்கப்பட்டுள்ளது.



வாட்ஸ் அப் புதிய வெர்சன் - v 2.12.453 ஆண்ட்ராயிட் போன்களிலும்,  v 2.12.14 ஆப்பிள்  ஐஓஎஸ் போன்களிலும் இனிமேல் ஆவணங்களை அனுப்ப வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாக்குமெண்ட்டுகளை அனுப்ப தனி ஐகானும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ் அப் வெர்சன்களை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் கம்பெனி ஆப்களில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இதற்கு முன் பி.டி.எப். பைல்களை மட்டுமே வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ள முடியும். தற்போது வாட்ஸ் அப்பில் 6 ஐகான்கள் உள்ளன. புதிய வெர்சனில்  வீடியோ,புகைப்படங்கள் ஒன்றாக  இணைக்கப்பட்டு ஒரே ஐகானாக மாற்றப்பட்டுள்ளது.

அதே வேளையில் ஆவணங்களை யாருக்கு அனுப்புகிறமோ, அவரும் வாட்ஸ் அப் அப்டேட் செய்திருக்க வேண்டும்; அப்போதுதான் அவர் ஆவணங்களை பெற முடியும்.

Tuesday, 1 March 2016

அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி உயர்வு

02/03/2016

         ராமநாதபுரம்;பணியின்போது இறக்கும் அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டது.
 
                 அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தை 1974 ஜன., 1 ல், அரசு செயல்படுத்தியது. இதற்காக ஊழியர்களிடம் மாதந்தோறும் ரூ.10 வசூலிக்கப்பட்டது. பணியின்போது இறந்தால், ஊழியர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. 

அதன்பின் 2006 பிப்ரவரியில் ரூ.1.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இதற்காக மாதந்தோறும் ரூ.30 வசூலிக்கப்பட்டது.அரசு ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் 10 ஆண்டுகளுக்கு பின் பாதுகாப்பு நிதியை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அரசு உயர்த்தி உள்ளது. இதற்காக ஊதியத்தில் ரூ.60 பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு பிப்., 1 முதல் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் பணியாளர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியும் ரூ.3 லட்சமாக உயர்ந்துள்ளது.இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.