Monday, 29 February 2016

மார்ச் மாத முக்கிய தினங்கள் , நிகழ்வுகள், பிரபலங்கள் பிறந்த தினங்கள்,நினைவு தினங்கள் மற்றும் சுதந்திரம் கொண்டாடும் நாடுகள்...

மார்ச் மாத விவரம் :

ரோமானியர்களின் கடவுள் "மார்ஸ்' ஆவார். அதன் அடிப்படையில் அமைந்த பெயர் ""மார்ச்'' மாதமாகும்.
ரோமானியர்களின் தலைவர், ரோமுலஸ் என்பவர். மார்ச் மாதத்தை முதல் மாதமாகச் செய்தார். ஆனால், கிரிகோரியன் காலண்டர் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, மூன்றாவது மாதமாகக் கணக்கிட்டு இம்மாதத்திற்கு 31 நாட்களாக்கினார்கள்.

முக்கிய தினங்கள் | மார்ச் மாதம்...

3 உலகவன உயிரின நாள்.
4 தேசிய பாதுகாப்பு தினம்.
8 சர்வதேச எழுத்தறிவு தினம்.
8 உலக மகளிர் தினம்.
12 இந்திய துணை ராணுவ தினம்.
12 தண்டி யாத்திரை தினம்.
13 உலக சிறுநீரக விழிப்புணர்வு தினம்.
15 உலக நுகர்வோர் தினம்.
15 உலக ஊனமுற்றோர் தினம்.
16 தடுப்பூசி தினம்.
18 இந்திய தளவாடங்கள் தினம்.
20 உலக கதை சொல்லும் நாள்.
20 உலக குருவிகள் தினம்.
21 உலக காடுகள் தினம்.
21 உலக வனவிலங்குகள் தினம்.
21 நிறவெறி ஒழிப்பு தினம்.
21 இரவும் பகலும் சரி சமமாக உள்ள நாள்.
22 உலக தண்ணீர் தினம்.
23 உலக வானிலை தினம்.
23 பகத்சிங் நினைவு தினம்.
24 உலக காசநோய் எதிர்ப்பு தினம்.
26 வங்கதேச தினம்.
27 தேசிய திரையரங்கு தினம்.
31 ஆண்டு கணக்கு முடிக்கும் நாள்.

முக்கிய நிகழ்வுகள்:

1, 1917 இந்திய - தபால் நிலையங்களில் சேமிப்பில் பத்திரமுறை தொடங்கப்பட்டது.
3, 1876 அமெரிக்காவில் அலெக்சாண்டர்
கிரஹாம்பெல் - தொலைபேசிக்குக்
காப்புரிமை பெற்றார்.
3, 2012 இந்திய ராணுவத்துக்கு, புதிய தலைமை
தளபதி - லெப்டினென்ட் ஜெனரல்
விக்ரம்சிங் நியமிக்கப்பட்டார்.
4, 1931 காந்திஜி சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.
4, 1997 அமெரிக்க அதிபர் கிளிண்டன்,
குளோனிங் முறையில் மனிதனைப்
பிறப்பிக்கச் செய்யும் ஆராய்ச்சிக்கு அரசு நிதி உதவி செய்யாது என்றார்.
4, 2012 பிகாரில், உலகக் கோப்பை கபாடி
பெண்கள் பிரிவில் இந்திய அணி
தங்கப்பதக்கம் வென்றது.
5, 1979 வியாழனின் துணைக் கிரகமான "சுயோ'வில் எரிமலை இருப்பதை
அமெரிக்காவின் வாயேஜர்-1
கண்டுபிடித்தது.
5, 2012 ரஷ்யாவில் 3-ஆவது முறையாக புதின் அதிபர் ஆனார்.
6, 1967 அண்ணாவுடன் 9 பேர் கொண்ட மந்திரி சபை
தமிழகத்தில் பதவி ஏற்றது.
6, 2004 கும்பகோணத்தில் மகாமகம் - பல லட்சம் பேர்
புனித நீராடல்.
8, 1848 பிரான்ஸ் - புருஸ்ஸியனில்
அரசன் லுயிஸ்பிளாங்க்.
பெண்களுக்கு அரசவைக்
குழுவில் இடம் அளித்தான். வாக்குரிமை அளிக்கவும்
ஒப்புதல் கொடுத்த நாளே
மகளிர் தினம்
அனுசரிக்கப்படுகிறது.
9, 1790 உலகில் முதன்முதலாக,
பிரான்ஸில் பொது மக்களின் பார்வைக்காக பாரிஸ் நகரில் மிருகக் காட்சி சாலை திறந்து வைக்கப்பட்டது.
9, 2012 ராகுல் திராவிட் (இந்தியாவின் சுவர் எனப்படும் 16 ஆண்டுகள் கிரிக்கெட்டில் விளையாடியவர். சர்வதேச கிரிக்கெட்
போட்டியிலிருந்து ஓய்வு.
11, 1889 பிரான்ஸில் பாரிஸ் ஈகிள் டவர், காஸ்டவ் ஈஃபிளில் என்பவரால் கட்டப்பட்டுத் திறந்து
வைக்கப்பட்டது.
12, 1918 ரஷ்யாவில் மாஸ்கோ
தலைநகரமானது. முன்னர் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்
தலைநகராயிருந்தது.
12, 1969 இந்திரா காந்தி தலைமையில், தமிழகத்தில் கல்பாக்கத்தில் அணு உலை தோற்றுவிக்கப்
பட்டது.
13, 1781 "யுரேனஸ்' கோள் "வில்லியம் ஷர்க் செல்' என்பவரால்
கண்டுபிடிக்கப்பட்டது.
13, 2012 ஸ்பெயினில் கருவிலுள்ள
குழந்தைக்கு நுரையீரல்
ஆப்ரேசன் வெற்றிகரமாகச் செய்தார்கள்.
15, 1986 நுகர்வோர் பாதுகாப்புச்
சட்டம் அமலாக்கப்பட்டது.
16, 1960 அமெரிக்கா, நீல் ஆம்ஸ்ட்ராங் பயணித்த ஸ்கார்ட என்ற விண்கலத்துடன் ஜெமினி ஆ என்ற விண்கலத்தை இணைத்தன. முதன்முதலாக
2 விண்கலங்கள்
விண்வெளியில் இணைந்தன.
16, 2012 ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கெதிரான
போட்டியில் சச்சின் 114 ரன்கள் எடுத்து 100-ஆவது சதம் எடுத்து உலக சாதனை படைத்தார்.
17, 1958 கப்பல் போக்குவரத்தை
சீர்செய்யும் விதமாக "சர்வதேச கப்பல் கழகம்'
ஏற்படுத்தப்பட்டது.
17, 1988 இந்தியாவில் செயற்கைக்கோள் ஐ.த.ந. ஐஅ ஏவப்பட்டது.
18, 2010 உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் சுகன் நரஸ் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
19, 1939 இந்தியாவில், சென்னை
அயனாவரத்தில் முதன்முதலாக பால் பண்ணை
தொடங்கப்பட்டது.
19, 2003 அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஈராக் மீது போர் நடத்த உத்தரவிட்டார்.
27, 2010 ஒடிசாவில் ஒரே நாளில் பிருத்வி-2 மற்றும் தனுஷ்
ஏவுகணைகள் சோதனை வெற்றி.
28, 1978 தமிழகத்தில் ஆஸ்தான
கவிஞராக கண்ணதாசன்
நியமனம்.
28, 1995 தமிழகத்தைச் சார்ந்த
அருண்பாலாஜி.
தலைமன்னாருக்கும்
தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள 32 கி.மீ. தூரத்தை நீந்தி சாதனை செய்தார்.
29, 1999 உத்திரப் பிரதேசத்தில்
நிலநடுக்கத்தில் 85 பேர் பலி. ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மக்கள் காயமடைந்தனர்.
சொத்துகள் சேதம்.
30, 1870 அமெரிக்க அரசியல்
சட்டத்தில் கறுப்பு - வெள்ளை பாகுபாடு இன்றி "குடியுரிமை' பெற்றுள்ள எல்லோருக்கும் "வாக்குரிமை' அளிக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
30, 1954 தமிழக முதல்வராக
கே. காமராஜ் பதவி ஏற்றார்.
30, 2012 இந்தியா, பிரமோஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாகச் செய்தது.
31, 1889 பிரெஞ்சு - பாரிஸில் ஈபிள் டவர் கட்டி முடிக்கப் பெற்றது.
31, 2001 சச்சின் டெண்டுல்கர்
10,000 ரன்கள் எடுத்து
கிரிக்கெட் உலகில் உலக சாதனை படைத்தார்.
31, 2002 தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் மின் உபயோகத்துக்காக
அணுஉலை அமைக்கும் பணி ஆரம்பம் ஆனது.

மார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் :

2, 1935 குன்னக்குடி வைத்தியநாதன் - வயலின் கலைஞர், திரைப்பட இசையமைப்பாளர்.
3, 1847 அலெக்சாண்டர் கிரஹாம்பெல் - தொலைபேசி கண்டுபிடித்த விஞ்ஞானி.
3, 1941 பங்காரு அடிகளார் - மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம்.
6, 1475 மைக்கேல் ஆஞ்சலோ - உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர்.
6, 1937 வாலண்டினா - ரஷ்ய விண்வெளி
வீராங்கனை.
7, 1919 எம்.என். நம்பியார் - தமிழ் திரைப்பட
நடிகர்.
9, 1454 அமெரிக்கோ வெஸ்புகி - அமெரிக்காவைக் கண்டறிந்தவர். அவர் பெயரிலேயே அது வழக்கத்தில் உள்ளது.
9, 1934 யூரி காகரின் - ரஷ்யர் - முதன்முதலாக விண்வெளியில் பயணம் செய்தவர்.
10, 1957 ஒசாமா பின்லேடன் - அமெரிக்கா
இரட்டைக் கோபுரம் இடிபடக்
காரணமாக இருந்த தீவிரவாதி.
13, 1733 ஜோசப் பிரிஸ்ட்லி ஆக்ஸிஜனைக்
கண்டறிந்த விஞ்ஞானி.
13, 1913 சக்தி கிருஷ்ணசாமி - நாடக, திரைப்பட வசனகர்த்தா.
14, 1879 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நோபல் பரிசு பெற்ற உலகம் போற்றும் விஞ்ஞானி.
16, 1750 கரோலின் ஹெர்ஷல் - வானியல்
விஞ்ஞானி.
17, 1920 முஜிபுர் ரஹ்மான் - கிழக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபர்.
17, 1962 கல்பனா சாவ்லா - விண்வெளி சாதனை வீராங்கனை.
17, 1990 சாய்னா நேவால் - பேட்மின்டன்
வீராங்கனை.
19, 1933 குமரி அனந்தன் - முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர்.
21, 1923 பொள்ளாச்சி என். மகாலிங்கம் - தொழில் அதிபர், கல்வியாளர்.
21, 1934 வேத் மேத்தா - கண் பார்வையற்றவர், எழுத்தாளர், பத்திரிகையாளர்.
23, 1893 ஜி.டி. நாயுடு - தமிழக விஞ்ஞானி.
21, 1921 லட்சுமி (டாக்டர் திரிபுரசுந்தரி) - தமிழக அரசு பரிசு பெற்ற எழுத்தாளர்.
24, 1923 ப.ங.ந. என்ற ப.ங. சௌந்தர்ராஜன். பக்தி, திரைப்படப் பாடகர்.

நினைவு தினங்கள் :

2, 1949 கவிக்குயில் சரோஜினி நாயுடு.
9, 1911 ஜான் பென்னிகுவிக் - முல்லைப் பெரியார் அணை கட்டிய பொறியாளர்,
ஆங்கிலேயர்.
9, 1994 தேவிகாராணி ரோரிச் - இந்தி திரைப்பட முதல் நடிகை.
10, 1897 சாவித்ரிபாய் புலே. பெண் கல்வித்
திட்டம் கொண்டு வந்த சமூக சேவகி.
14, 1883 கார்ல் மார்க்ஸ் - கம்யூனிஸ்ட் கொள்கை உருவாக்கியவர்.
19, 1998 உ.ங.ந. நம்பூதிரிபாட் - கேரள
முன்னாள் முதல்வர்.
28, 1948 தீரர் சத்யமூர்த்தி - காமராஜரின் குரு,
சுதந்திரப் போராட்ட வீரர்.


சுதந்திரம் கொண்டாடும் நாடுகள் :

1 - போஸ்னியா
6 - கானா
11- லிதுவேனியா
12 - மொரீஷியஸ்
20 - துனிஷியா
21 - நமீபியா
25 - கிரீஸ்
26 - வங்காளதேசம்



ஐ.ஏ.எஸ்., தேர்வு 'இன்டர்வியூ' இனி அழைப்பு கடிதம் வராது

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, இனிமேல்,நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது என்றும், மாறாக, தேர்வாணையத்தின் இணைய தளத்தில், 'இ - சம்மனை' டவுண்லோடு செய்து கொள்ளலாம் என்றும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான தேர்வை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் நடத்துகிறது.


முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, இதுவரை, கடிதம் மூலம், நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை மாற்றி, இணைய தளம் மூலம், அழைப்புக் கடிதம் அனுப்ப, யு.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.நடப்பு ஆண்டுக்கான நேர்முகத்தேர்வு, மார்ச், 8ம் தேதி முதல் துவங்க உள்ளது.என்ன செய்ய வேண்டும்?:நேர்முகத்தேர்வுக்கு இனிமேல், அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது. மாறாக, தேர்வர்கள், மின்னணு முறையிலான அழைப்பாணையை, தேர்வாணையத்தின், www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து, 'டவுண்லோடு' செய்ய வேண்டும்.அழைப்புக் கடிதத்தை, 'டவுண்லோடு' செய்ய முடியாவிட்டால், அதுபற்றி, உடனடியாகவோ அல்லது நேர்முகத் தேர்வுக்கு, ஐந்து நாட்களுக்கு முன்போ, தேர்வாணையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென, யு.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
யார் யார் இரத்த தானம் செய்யலாம்?

நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண், பெண்.

18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்.

குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்.

இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்.
எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்?

ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும்,
பெண்கள்
நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.

இரத்ததானம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

10 நிமிடம்.

இரத்த தானத்திற்குப் பிறகு எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்?

20 நிமிடம்.

இரத்த தானத்தில் எவ்வளவு இரத்தம் எடுக்கப்படுகிறது?

350 மில்லி.

(நம் உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது)
எடுக்கப்படுகிற
இரத்தம் திரும்ப உடலில் உற்பத்தி ஆகிவிடும்.

இரத்த தானத்திற்காக எடுக்கப்பட்ட இரத்தம் எவ்வளவு நாள் கழித்து உடலில் உற்பத்தி ஆகும்?

10 லிருந்து 21 நாட்களில்.

இரத்த தானம் ஏன் கொடுக்க வேண்டும்?

நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள் தான் உயிரோடு இருக்கும்.

பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நீங்கள் இரத்தம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் செயல்.
ஆக அழிந்து பின் திரும்ப வரப்போகிற ஒன்றை மற்றொருவருக்குக் கொடுத்து
உயிர் காப்பது
நல்லதுதானே?

இரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன?

நன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது.
தானம் செய்வதற்கு முன் மோர் போன்ற திரவங்களைக் குடிப்பது நல்லது.
சின்னச்சின்ன உடல் நலக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

உதவிக்கு கீழே கொடுக்கப்பட்ட லிஸ்ட்டை பயன்படுத்துங்கள்.

சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு _ கொடுக்கலாம்.

 ஆஸ்துமா _ மூச்சுத்திணறல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்கலாம்.

ஆஸ்துமாவிற்காக கார்டிஸோன் மருந்து சாப்பிடுகிறவர்கள் _ வேண்டாம்.

குழந்தை பிறந்த பிறகு 6 மாதம் ஆன தாய்மார்கள் _ கொடுக்கலாம்.

 அபார்ஷன் ஆனவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

குழந்தைக்குப் பால் கொடுப்பவர்கள் _ பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு கொடுக்கலாம்.

பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.

 சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 3 மாதத்திற்குப் பிறகு கொடுக்கலாம்

பல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 1 மாதம் கழித்துக் கொடுக்கலாம்

 பல்பிடுங்கிய பின் _ 3 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

 இதய நோய்கள் _ வேண்டாம்.

 இரத்த அழுத்த நோய் _ கொடுக்கும்போது இரத்த அழுத்தம் சரியான அளவில் இருந்தால் கொடுக்கலாம்.

வலிப்பு நோய் _ மருந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் வேண்டாம்.
மருந்து நிறுத்தி 2 வருடங்கள் வலிப்பு இல்லை என்றால் கொடுக்கலாம்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் _ 4 வாரங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

 நாய்க்கடி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்றவர்கள் _ 12 மாதங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

மஞ்சள் காமாலை ஙி,சி வந்தவர்கள் _வேண்டாம்.

மலேரியா _ 3 மாதங்களுக்குப் பிறகு.

 காசநோய் _ 5 வருடங்கள் வேண்டாம்.
மாத்திரைகளை சில காரணங்களுக்காகச் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

 சாலிசிலேட் மாத்திரையை கடைசி மூன்று நாட்கள் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.

 ப்ராஸ்டேட் பிரச்னைக்காக ஃபினஸ்டிரேட் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் கொடுக்க வேண்டாம்.

 நீரிழிவு மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்தக்குழாய் கோளாறு இல்லை என்றால் கொடுக்கலாம்.

இன்சுலின் போட்டுக் கொள்கிறவர்கள் கொடுக்க வேண்டாம்.

ஆன்டிபயாடிக் மாத்திரை சாப்பிட்டால் 5 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.

இதயக் கோளாறு மாத்திரைகள், வலிப்பு நோய் மாத்திரைகள், தைராய்ட் நோய் மாத்திரைகள், இரத்தம் உறையாமலிருக்க டிஜிடாலிஸ், டைலான்டின் போன்ற மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக் கூடாது.

இரத்ததானம் கொடுத்தபின் என்ன செய்யக் கூடாது?

 நல்ல திரவ உணவை அருந்துங்கள்.
ஹெவி உணவு வேண்டாம்.

 ஒரு மணி நேரத்திற்கு புகை பிடிக்கக் கூடாது.
3. 6 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது.

 இரத்தம் எடுத்த இடத்தில் அழுத்தி வைக்கப்பட்ட பஞ்சை 5 மணிநேரம் எடுக்க வேண்டாம்.


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, குறைந்த செலவிலான ஏர்செல் நிறுவனத்தின் CUG திட்டம்


AIRCEL POST PAID CORPORATE CUG PLAN FOR Govt. STAFFS and TEACHERS:
PLAN NATIONAL SME @ Rs149,
(Service Tax 14% Extra)

  • CUG CALLS UNLIMITED FREE
  • 400 MIN FREE LOCAL TO TN MOBILE
AFTER FREE MINUTES,CALL RATE:
  • ALL NETWORK TN MOBILE 30p Min
  • LOCAL LANDLINE 40p Min
  • STD ALL INDIA 50p Min
  • MOBILE NUMBER PORTABILITY Fecility Available.
  • PREPAID TO POSTPAID MIGRATION Fecility Available.
  • DEPOSIT Rs.250 only.
  • NO ACTIVATION FEE
  • 250 AIRCEL SMS FREE
  • 250 OTHER SMS 10 PAISE ONLY.
  • EBILL FECILITY AVAILABLE.
  • One Govt Employee can get 3 sims for relatives/Family Members/Friends. These sims are also covered in CUG.

Sunday, 28 February 2016

மத்திய பொது பட்ஜெட் :கல்வித் துறை முக்கிய அம்சங்கள்

1. 10 அரசு கல்வி நிறுவனங்களும், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் உலகத்தரத்துக்கு மேம்படுத்தப்படும்.

2. பள்ளிச் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் டிஜிட்டல் ஆவணங்களாகவும் வழங்கப்படும்.

3. அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 62 நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.
மத்திய பட்ஜெட் : முக்கிய அம்சங்கள்


வரும் 2016-17-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தா‌க்கல் செய்தார்.



முக்கிய அம்சங்கள்

* 5 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5000 ரூபாய் வரை சலுகை


* வீட்டு வாடகைக்கான சலுகை ஆண்டுக்கு 24,000த்திலிருந்து 60,000த்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.


* இந்த நிதி ஆன்டில் திட்டமிடப்படாத செலவுகள் 14.3 லட்சம் கோடியாக கணிக்கப்பட்டிருக்கிறது.


* வருவாய் பற்றாகுறை 2015 - 16ல் 2.8 லிருந்து 2.5 சதவிகிதமாக குறைந்தது.

* சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ஆதார் எண் இணைக்கப்படும்.


* பருப்பு விலையை கட்டுப்படுத்த 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு.


* வங்கியின் செயல்பாடுகளில் அரசு தலையிடாது.


* ஐடிபிஐ வங்கியில் அரசின் பங்கை குறைத்துக்கொள்ளும் அறிவிப்பால் அந்த பங்கு 8%
விலை உயர்ந்தது.

* இந்தியாவின் நிதி பற்றாக்குறை 3.9 சதவிகிதமாக இருந்தது. அதை 2016 - 17ல் 3.5 சதவிகிதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.


* 2016 - 17ல் இந்தியாவின் மொத்த செலவு 17.78 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்ககிடப்பட்டிருக்கிறது.


* ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க ஒரு நாளில் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட இருக்கிறது.


* பொதுத்துறை வங்கிகளில் 25000 கோடி ரூபாய் கூடுதல் முதலீடு செய்யப்படும்

* சிறு தொழில்களுக்கு கடன் வழங்கும் முத்ரா திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ. 1,80,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.


* 3000 புதிய ஜெனிரிக் மருத்தகம் அமைக்கப்படும்.


* விவசாயிகளுக்கு உர மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.


* திட்டமிட்ட செலவுகள் 15% கடந்த ஆண்டைவிட உயர்வு.


* பொதுத்துறை வங்கிகளுக்கு மறு முதலீடு 25,000 கோடி ஒதுக்கீடு

* மாநில அரசுகளுடன் இணைந்து 160 விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.

* புட் புராக்கெட், பார்மா துறைகளிலில் எஃப்டிஐ முதலீட்டு அளவு 100% அதிகரிக்கப்படும். மேலும் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்.


* அணு சக்தி துறைக்கு 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.


* இன்ஃப்ரா துறையை மேம்பாடுத்த புதிய கிரெடிட் ரேட்டிங் உருவாக்கப்படும்.

* அனைத்து மாவட்டங்களுக்கு டயாலிசிஸ் மையங்கள் அமைக்க திட்டம்.


* அடுத்த 3 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு ஸ்கில் இந்தியா திட்டம் முலம் பயிற்சி


* நாடு முழுவதும் 1500 பன்முக திறன் வளர்ப்புப் பயிற்சி மையங்கள்


* 2016 - 17 நிதி ஆன்டில் 10,000 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டம்.


* இந்தியாவின் உள்கட்டுமானத்திற்கு 2,21,246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


* சாலை போக்குவரத்துகளை அதிகரிக்கும் விதத்தில் மோட்டார் வாகன சட்டங்களில் சில திருத்தங்கலை கொண்டு வரத் திட்டம்.


* பேங்க்ரப்ட்ஸி மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்!


* புதிதாக இபிஎஃப் திட்டத்தில் இணையும் தொழிலாளர்களுக்கு 8.3 சதவிகித வட்டி வழங்கப்படும்


* ஆழ்கடலில் எரிவாயு எடுக்க திட்டங்கள் சலுகை அளிக்கப்படும்!


 * மூத்த குடிமக்களுக்கு ஒரு லட்சம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம்


* 75 லட்சம் நடுத்தர குடும்பத்தினர் தங்கள் எரிவாயு இணைப்பு மானியத்தை விட்டுக் கொடுத்திறுகின்றனர்.


* 10 பொதுத்துறை மற்றும் 10 தனியார் துறை கல்வி நிறுவனங்கள் தேர்தெடுக்கப்பட்டு அதில் பயிலும் மாணவர்களுக்கு உலக தரம் வாய்ந்த கல்வி பயிற்றுவிக்கப்படும்


 * மோட்டார் வண்டிகள் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்!


* தலித் மக்கள் தொழில்முனைவோராக தங்கள் வாழ்கையை மேம்படுத்திக் கொள்ள திட்டம்


* 500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தலித் மக்களுக்கு எம்.எஸ்.எம்.இ யில் தனி ஹப் அமைக்கப்பட இருக்கிறது


 * ஒட்டு மொத்த கிராம புறங்கள் வளர்ச்சிக்கு 87,765 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்கள்


 * எல்பிஜி கேஸ் இணைப்பை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு வழங்க 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


* நெடுஞ்சாலைகளை அமைக்க ரூ.55,000 கோடி ஒதுக்கீடு!


 * உயர் படிக்காக நிதி உதவி செய்ய ரூ.1000 கோடி செலவில் தனி அமைப்பு அமைக்கப்படும்!


 * அடுத்த 3 ஆண்டுகளில் 6 கோடி நபர்களுக்கு டிஜிட்டல் கல்வி அறிவை பயிற்றுவிக்க திட்டம்.


 * டயாலிசிஸ் செய்யும் கருவிக்கு கலால் வரி கிடையாது!


* மே 1, 2018க்கு முன் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.


 * 2.87 லட்சம் கோடி கிராம பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


* 19000 கோடி ரூபாய் கிராமபுற சாலை மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


* 15000 கோடி ரூபாய் வட்டி சுமை குறைக்கப்பட திட்டம் திட்டப்பட்டுள்ளது.


* ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்படும்!


* சுவாச் பாரத் திட்டத்துக்கு 9,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு!


 * இந்த நிதி ஆண்டில்
விவசாயிகளுக்கு 9 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். இது இதுவரை இந்தியாவில் வழங்கப்பட்ட கடன்களில் அதிகம்


* 5500 கோடி ரூபாய் மதிப்பிற்கு பயிர்க் காப்பீடு வழங்கப்படும்.


* விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இ - காமர்ஸ் சந்தையில் விற்க வழிவகை செய்யப்படும்.


* அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகள் வருமானம் 2 மடங்காக அதிகரிக்கப்படும்


*நீர்பாசன திட்டங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 86,500 கோடி ஒதுக்கப்படும்


   * 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.38500 கோடி ஒதுக்கீடு


* உலக அளவில் உலக பொருளாதார வளர்ச்சி 3.4 சதவிகிதத்திலிருந்து 3.1 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.


* சர்வதேச நிதியம் இந்தியா உலக அளவில் சிறந்த பொருளாதாரமாக இந்தியாவை குறிப்பிட்டிருக்கிறது


* வரி தாக்கல் எளிமைப்படுத்தப்படும்!


* கிராமப்புறம், சமூக வளர்ச்சி, உள்கட்டமைப்பு போன்றவற்றில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்


* மத்திய பட்ஜெட்டில் விவசாயத்திற்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடு


* விவசாய பாசனத்தை மேம்படுத்த 17,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு!


 * 2020ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த திட்டம்


 * மொத்த விலை விவசாய விளைபொருட்களுக்கு இ-மார்க்கெட் மூலம் இணைக்கப்படும்!


* அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாசனத் துறை வளர்ச்சிக்காக 86,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு!


* மொத்த விலை விவசாய விளைபொருட்களுக்கு இ-மார்க்கெட் மூலம் இணைக்கப்படும்!


* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்க திட்டம்.


* விவசாயக் கடனுக்கான வட்டிச் சுமையைக் குறைக்க 15,000 கோடி ஒதுக்கீடு!


* ரூரல் சடக் யோஜனா திட்டத்துக்கு 19,000 கோடி ஒதுக்கீடு!


 * 2017-ல் பயிர் இன்ஷூரன்ஸுக்காக 5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு!


* 5 லட்சம் விளைநிலங்கள் ஆர்கானிக் விவசாய நிலங்களாக அடுத்த 3 ஆண்டுகளில் வழங்க திட்டம்


* ஊரக் வேலைவாய்ப்பு திட்டத்துக்காக 38,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

TNTET : ஆசிரியர் தகுதித்;தேர்வில் (2013 ) தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் பணிநியமணம் வேண்டி மார்ச் 01 முதல் தொடர் உண்ணாவிரதம்

கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வி;ல் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2014ம் ஆண்டு பணிநியமணத்துக்கான சான்றிதழ்; சரிபார்ப்பும் முடிந்த நிலையில் வெய்ட்டேஜ் என்னும் முறையால் வாழ்வுரிமை இழந்தனர்.... பின்னர் 2014ம் கல்வியாண்டுக்கான காலி ஆசிரியர் பணியிடமும் 2015ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் காலி;ப்பணியிடமும் அரசு இன்று வரை தெரிக்கவில்லை..
இருப்பினும் அரசு நம்மை வைத்தே இனிவரும் ஆசிரியர் பணியிடங்ளை நிரப்பும் என்று நம்பிக்கை வைத்தனர்...
அனைத்தும் கானல் நீராகவே இருந்தது... அதனால் டி.இ.டி தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மன உளைச்சலுக்கு ஆளாயினோம்... ஆகவே அரசு டி.இ.டி 2013ல் தேர்வில் தேர்ச்சிப்பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நமக்கு பணிநியமனம் வழங்க வேண்டியும்... வெய்ட்டேஜை திரும்ப பெறுமாறும்... இனிவரும் காலங்களில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களாகிய எங்களை வைத்தே காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டியும் மார்ச் 01 முதல் தொடர் போராட்டம் நடைபெற முடிவெடுத்துள்ளோம் நண்பர்களே...
இத்தனை நாள் ஏதோ எனக்கென்ன என்று இருந்து விட்டாய் இனியும் நீ அவ்வாறு இருந்தால் .. டி.இ.டி 2013 என்ற அத்தியாயம் முடிந்து விடும்... துணிந்து வா.. தோல்விகள் நமக்கில்லை...
போராட்டம் ஒன்றும் நமக்கு புதிதல்ல... புதிரல்ல...
நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு துளிக்காற்றும் கூட தேசப்பிதா காந்தி திருப்பூர் குமரன் வ.உ.சி போன்ற எண்ணற்றோர் போராடி தான் நமக்கு விடுதலை சுவாசத்தை அள்ளித்தந்தார்கள்... போராட்டக்குணம் நம் இரத்தத்தில் ஊறிப்போனது தான்... உரிமைக்காக போராடுவனே சிறந்த மனிதன்...
உன்னிடம் எதிர்பார்ப்பது உன் வருகையை மட்டும் தான்... உன் பிள்ளைகள்.. உன் குடும்பத்தார்.. உன் தந்தை தாய் ...உறவினர்கள் என அனைவரோடும் கலந்து கொள்.... ஏனெனில் இது நம் இறுதிகட்ட முயற்சி.... நம் பணிநியமனம் இழந்து தவிக்கும் உன் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார்கள் என அனைவரும் திரட்டு.. அரசுக்கு பணிவாய் நமது கோரிக்கையை எடுத்துரைப்போம்...
அன்று சுதந்திர போராட்ட வீரர்கள் 'முழு சுதந்திரத்தை தவிர வேறு எதனாலும் திருப்தி அடையமாட்டோம்' என முழுங்கினார்கள்...
இன்று... நாம் ' பணிநியமணம் அல்லது பணிநிமணம் சார்ந்த எழுத்துப்பூர்வ அறிக்கையினால் மட்டுமே தவிர வேறு எதனாலும் நமது போராட்டதிலிருந்து பின்வாங்க போவதில்லை'
ஆகவே தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு வருகை தந்து உங்கள் உரிமையை நிலைநாட்ட வாரிர்...
நாள் : மார்ச் 01 முதல்... இடம் : டி.பி.ஐ வளாகம் ... சென்னை
தொடர்புக்கு:
பி.இராஜலிங்கம் 9600208188
கபிலன் 9092019692
செல்லத்துரை 9843633012
சிவா 8807148088
கோவிந்தன்
மாவட்ட வரியாக ஒருங்கிணைப்பாளர்கள்:
திண்டுக்கல் புவனேஸ்வரி - 9688414105
தருமபுரி பிரகாசம் -  978737442
விழுப்புரம் நடராசன் - 9443517563
சிவகங்கை சமையமுத்து – 9843519554
வேலூர் நந்தகுமார் - 9965855880
மதுரை 7598360223
விரைவில் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தொடர்பு எண்கள் வெளியிடப்படும்
TNPSC VAO KEY ANSWERS பார்க்க...



Click here,
TNPSC VAO KEY ANSWERS  Downloading..

Saturday, 27 February 2016

பள்ளிகளில் Work done register பராமரிக்கத் தேவையில்லை என்பதற்கான தகவல் அறியும் உரிமை சட்ட கடிதம் .





ஆண்டுக்கணக்கில் மாயமாகும் ஆசிரியர்கள் பட்டியல் எடுக்க அதிகாரிகள் உத்தரவு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில், ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டும் என்றாலும், முறையான அனுமதி வாங்க வேண்டும். உயர் கல்விபடிக்க; பாஸ்போர்ட் பெற; வெளிநாடு செல்ல; சொத்துகள் வாங்க, உயர் அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்து, முன் அனுமதி பெற வேண்டும்.ஆனால், கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், பல விதமாக விடுப்பு எடுக்கின்றனர்.


கல்வி ஆண்டின் இறுதியில், தங்கள் பிள்ளைகள், பொதுத்தேர்வு அல்லது கல்லுாரி தேர்வு எழுத பயிற்சி தரவேண்டும்; குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்; வீடு கட்ட வேண்டும்; வெளியூரில் உள்ள சொத்து பிரச்னைகளை தீர்க்க வேண்டும் எனக்கூறி, மாதக் கணக்கில் விடுப்பு எடுக்கின்றனர். பல நேரங்களில், மருத்துவ விடுப்பாக இதற்கு அனுமதி பெறுகின்றனர்.சிலர் கடிதம் மட்டும் கொடுத்து விட்டு, அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்து விடுகின்றனர்; வீடு, முகவரி மற்றும் போன் எண் வரை மாற்றி விட்டு செல்கின்றனர். இப்படி மாயமாகும் பலர் தனியார் நிறுவன பணி; வெளிநாட்டில் உயர்படிப்பு மற்றும் வெளிநாட்டு வேலைக்கு செல்வது உண்டு.பல ஆண்டுகள் கழித்து தங்கள் சொந்த பணி முடிந்ததும், மீண்டும் அரசு பணியில் சேர முயற்சிக்கின்றனர்.

சில ஆசிரியர்கள், 10 ஆண்டுகளுக்கு மேல் விடுப்பு எடுத்து விட்டு, திடீரென மீண்டும் பணி கேட்டுள்ளதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, நீண்ட நாள் வேலைக்கு வராமல், விடுப்பில் உள்ளோரின் பட்டியலைஅனுப்பும்படி, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். இதில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள்சிக்குவர் என, தெரிகிறது.

தொடக்கக்கல்வி செயல்முறைகள் -திருச்சி வருமான வரித்துறை அலுவலர் பள்ளிகளின் பெயர் மற்றும் பள்ளிகளின் முகவரி அனுப்ப கோருதல் சார்பு.

10 ஆண்டு சம்பளம் குடுத்தாச்சு: சான்றிதழை பற்றி தெரியாதாம்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகளாக சம்பளம் அளித்த பிறகும், அவர்களின் சான்றிதழ் உண்மையானதா என, கண்டுபிடிக்க முடியாமல் பள்ளிக்கல்வி துறை திணறுகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுநிராகரிக்கப்பட்டு உள்ளது.


அரசு பள்ளிகளில், 2006க்கு பின், 10 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரிஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, 10 ஆண்டுகளாக ஊதியம் வழங்கிய பிறகும், அவர்களின் சான்றிதழ் உண்மையானதா என, பள்ளிக் கல்வி துறை மற்றும்தேர்வுத்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டில், உயர்நிலை தலைமை ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, பட்டியலை தயாரிக்க, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அதற்கு தகுதியான ஆசிரியர்கள், தங்கள் பெயர் விவரங்களுடன், சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்த சான்று, இரண்டு ஆண்டு பயிற்சி முடித்தது தொடர்பான, தகுதி காண் பருவ சான்றிதழ் போன்றவற்றை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால், பெரும்பாலான ஆசிரியர்களுக்கு, இன்னும் சான்றிதழின் உண்மை தன்மை கண்டறியப்படவில்லை. அத்துடன், ஆசிரியர்கள் தகுதி காண் பருவம் முடிந்து, எட்டு ஆண்டு ஆன பிறகும், பயிற்சி முடித்த சான்றிதழும்கிடைக்கவில்லை.

நிராகரிப்பு:பள்ளிக்கல்வி துறை, தேர்வுத்துறை அலட்சியத்தால், தகுதி காண் பருவம் முடித்த நுாற்றுக்கணக்கானோருக்கு,சான்றிதழின் உண்மை தன்மை தெரியாமல், பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டுள்ளது. - என். இளங்கோ, நிர்வாகி - தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரிஆசிரியர் கழகம்.

TNTET :ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 04.03.2016 அன்று பதிவாளர் கோர்ட் எண்-2 இல் வரிசை எண் 27 ஆக விசாரணைக்கு வருகிறது...

Thursday, 25 February 2016

பெயரின் முதல் எழுத்து(Initial)பெயர் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்,மற்றும் விவரங்கள்.

100 சதவீத தேர்ச்சி பள்ளிகளுக்கு பரிசு -கல்வித்துறை முடிவு

Wednesday, 24 February 2016

G.O.No.57 Dt:22/02/2016-Finance TAMIL NADU GOVERNMENT SERVANTS’ FAMILY SECURITY FUND SCHEME – Lumpsum amount payable in case of death of Government servant while in service – Enhancement from Rs.1,50,000/- to Rs.3,00,000/- - Orders - Issued.


ஆங்கில உச்சரிப்பு வரைபடங்கள்

   தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த வகுப்பறை சுவர்களில் வரைய வேண்டிய படங்களும் அதன் அதன் அளவுகளும்..


















40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை

சமூக நலத்துறை 22.02.2016 தேதியிட்ட புதிய அரசாணை எண்.27-ஐ சமூக நலத்துறை அரசு முதன்மை செயலாளர் திரு.பி. சிவசங்கரன் வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1000/- வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊனத்தின் அளவு 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதன் மூலம் 40 சதவிகிதத்திற்கு மேல் ஊனம் இருந்தாலே இனிமேல் உதவித்தொகை வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானம் இல்லாதவராகவும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவராகவும், குடும்ப சொத்து மதிப்பு ரூ.50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும், குடும்பத்தில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண் வாரிசு இருக்க கூடாது என்பது உள்ளடக்கிய ஆதரவற்றோராக இருக்க வேண்டும் என்ற விதி மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்த்தி, பணி இல்லாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் பெயர் மாற்றம்
சமூக பாதுகாப்பு திட்டத்தில் செயல்படுத்தப்படும் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டம் என்பதை மாற்றி, மாற்றுத்தினாளிகளுக்கான உதவித்தொகை திட்டம் என்று இனிமேல் அழைக்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





G.O No. 59
Dt:22.02.16
PENSION – Contributory Pension Scheme – Settlement of accumulation under Contributory Pension Scheme in respect of CPS subscribers retired/resigned, died and terminated from service - Orders - Issued.







Tuesday, 16 February 2016

வாழ்க்கையில் எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்:-

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.

11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.

21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.

22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.

23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.

24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவது தான் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்.

25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்

ஈகோ என்றால் என்ன?

என்னளவில் நான் ஓஷோவிடமிருந்து கற்று உணர்ந்ததை என்னுடைய வார்த்தைகளில் தர முயற்சிக்கிறேன்.

இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் ஒரு சார்பு நிலையிலேயே அதாவது ஒன்றையொன்று சார்ந்தே இயங்கிக்கொண்டிருக்கிறது.

இதை பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றல் என்று மகரிஷி குறிப்பிடுகிறார்.

ஈகோவைப் பற்றிப் புரிந்துகொள்ள இந்த சார்பு நிலையைப் பற்றி சற்று ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

பல்வேறு உதாரணங்கள் மூலம் இந்த சார்பு நிலையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

இந்தியாவில் ஒரு காலத்தில் பஞ்சம் நேர்ந்தது.  பஞ்சத்திற்கு என்ன காரணம் என விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.  அந்தக் காலத்தில் அமெரிக்கர்கள் தவளை சூப்பை விரும்பி அருந்துவர்.  ஆதலால் இந்தியாவில் தவளை ஏற்றுமதி வியாபாரம் மிகவும் செழிப்பாக நடைபெற்று வந்தது.

பஞ்சத்தின் காரணத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் தவளை ஏற்றுமதி வியாபாரம்தான் பஞ்சத்திற்குக் காரணம் எனக் கண்டறிந்தனர்.

இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதைப் போல சம்பந்தமில்லாமல் இருப்பதாகத் தோன்றும்.  தவளை ஏற்றுமதிக்கும், பஞ்சத்திற்கும் என்ன சம்பந்தம்?

சம்பந்தம் உண்டு.   பயிரினங்களை அழிக்கும் பூச்சியினங்கள்தான்  தவளையின் உணவு.  பூச்சியினங்கள் பெருகாமல் அதன் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தவளைக்கு இயற்கை கொடுத்த வேலை.  தவளை இனங்கள் அருகி விட்டால் பூச்சியினங்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
பயிரினங்கள் அழிக்கப்படும்.  பஞ்சம் நேரும்.

மற்றொரு காலத்தில் இந்தியாவில் வெறிநாய்க்கடி (Rabies)  வைரஸ் அதிகமாகப் பரவியது.   இதன் காரணத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு விதமான கழுகு இனங்களை மனிதன் வேட்டையாடிக் கொன்றதுதான் ரேபிஸ் வைரஸ் பரவக் காரணம் எனக் கண்டறிந்தனர்.

கழுகு இனங்கள் அழிந்ததற்கும் ரேபிஸ் வைரஸ் பரவுவதற்கும் என்ன தொடர்பு?  ரேபிஸ் வைரஸ் தாக்கிய நாய், பன்றி போன்ற விலங்குகள் இறந்து கிடக்கையில் அதன் உடலிலுள்ள ரேபிஸ் வைரஸ் இறப்பதில்லை.   அந்த உடல்களை நாம் சரியான முறையில் அப்புறப்படுத்துவதில்லை.  அதனால் அந்தப் பகுதியில் வரும் மனிதர்களையும், பிற விலங்குகளையும் ரேபிஸ் வைரஸ் தொற்றிக்கொள்கிறது.

கழுகு இனங்கள் இந்த இறந்த உடல்களை உண்டு வாழ்பவை.  ரேபிஸ் வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் அவைகளுக்கு இயற்கையாகவே உண்டு.  அந்த கழுகு இனங்களை வேட்டையாடி அழித்துவிட்டதால் ரேபிஸ் வைரஸ் தாக்கி இறந்த உடல்களை உண்டு அழிப்பதற்கு யாருமில்லை.  எனவே வெறி நாய்க் கடி நோய் பரவியது.

அதேபோல தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் நாய், பூனை போன்ற விலங்குகள் உடல் சிதறி இறந்துகிடக்கின்றன.  அவற்றையெல்லாம் நாம் முறையாக அப்புறப்படுத்துவதில்லை.  அவை அப்படியே இருந்தால் வைரஸ் கிருமிகள் பரவி தொற்று நோய் ஏற்படும்.  ஆனால் அந்த உடல்களை உண்டு சுத்தப்படுத்துவது காகம்.  அதனால்தான் அது ஆகாயத் தொட்டி என்றழைக்கப்படுகிறது.  காகம் மட்டும் இல்லையானால் நாம் இங்கு ஆரோக்கியமானதொரு வாழ்க்கையை வாழ்தல் சாத்தியமே இல்லை.

ஒரு சாரைப் பாம்பு ஒரு நாளில் மூன்று எலிகளை உணவாகக் கொள்கிறது.  இதனால் எலிகளின் எண்ணிக்கை கட்டுப்படுகிறது.   பாம்புகளே இல்லையானால் எலிகளின் எண்ணிக்கை பெருகி எந்த தானியங்கிடங்கிலும் தானியங்களை இருப்பு வைக்க இயலாது போகும்.

இப்படி ஆயிரமாயிரம் உதாரணங்களைக் கூறலாம்.

அமேசான் காடுகளில் ஒரு புலி, மானை வேட்டையாடுவதற்கும் நம் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.  புலி மானை வேட்டையாடவில்லையெனில் மானின் எண்ணிக்கை பெருகும்.  மானின் எண்ணிக்கை பெருகினால் தாவரங்களின் எண்ணிக்கை குறையும்.  தாவரங்களின் எண்ணிக்கை குறைந்தால் மழை குறையும்.   பயிர் விளையாது.   பஞ்சம் நேரும்.

தசாவதாரம் திரைப்படத்தில்….ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பில் ஏற்படும் அதிர்வுக்கும் பூகம்பத்திற்கும் தொடர்பு உண்டு என்ற ஒரு வசனம் வரும். இதை கேயாஸ் (Chaos) தியரி என்கிறோம்.  ஆக இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்து இயக்கங்களும் ஒன்றையொன்று சார்ந்தே நடைபெறுகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

நம் முன்னோர்கள் இதை உணர்ந்திருந்தனர்.  இதை அனுபவமாக உணரும்போது அதன் விளைவாக நம்மிலிருந்து நன்றியுணர்வு ஊற்றெடுக்கும்.  அந்த நன்றியுணர்வினால்தான் அவர்கள் மலையை, மரங்களை, பஞ்சபூதங்களை, நாயை, பன்றியை, பாம்பை என அனைத்தையும் வழிபட்டனர்.  இந்த வழிபாடுகள் உச்சகட்ட நன்றியுணர்வின் வெளிப்பாடு.

மனிதனுக்கு என்று தனியான மையம் இல்லை.  இந்தப் பிரபஞ்சத்திற்கு என்று ஒரு மையம் உண்டு.  அதை பிரபஞ்ச மையம் என்கிறார் ஓஷோ.  முன்னோர்கள் அதை தம்மா, தாவோ என்று அழைத்தனர்.  இந்த பிரபஞ்ச மையமே ஒவ்வொரு மனிதனுக்கும் மையமாக அமைந்துள்ளது. ஒரு அமைதியான ஏரியில் ஒரு கல்லை எறிந்தால் கல்லை எறிந்த மையத்திலிருந்து வட்ட வடிவில் அலைகள் பிறக்கும்.  நூற்றுக்கணக்கான வட்ட வடிவ அலைகள் பிறந்து கொண்டேயிருக்கும்.  அத்துணை வட்டங்களுக்கும் மையம் ஒன்றுதான்.  தனித்தனியான மையங்கள் என்பது கிடையாது.   ஒவ்வொரு தனி வட்டமும் தன் மையம் கல் விழுந்த இடம்தான் என்று உரிமை கொண்டாடலாம்.   ஒருவிதத்தில் அது சரியும் கூட.   ஆனால் அந்த மையம் எல்லா வட்டங்களுக்கும் பொதுவானது.   எந்தத் தனி வட்டமும் அந்த மையத்தை தனது என்று உரிமை பாராட்ட முடியாது.

இதை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் சூரியன், சந்திரன் போன்றவற்றை எடுத்துக்கொள்வோம்.  இந்த பூமி வாழ் உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் அவை பொதுவானவை.  தனிப்பட்ட மனிதன் சந்திரனைப் பார்த்து அது தன்னுடையது என உரிமை கொண்டாடலாம்.  ஆனால் அது ஒரு கற்பனையே.  அது பூமிவாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவானது என்பதே உண்மை.

இதை மகரிஷி அவர்கள் ஒவ்வொரு உயிரினத்தின் கருமையமும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளதோடு மட்டுமில்லாமல் அனைத்துக் கருமையங்களும் பிரபஞ்சத்தின் கருமையத்தோடு இணைந்துள்ளன என்கிறார்.

ஆக மனிதன் முழுமையான இயற்கையின் ஒரு அங்கம். அவன் தனித்து இயங்குபவனல்ல. அவனால் தனித்து இயங்க இயலாது.

ஆனால் அவன் தன்னை முழுமையிலிருந்து பிரித்துக் கொண்டு, தனியாகச்  செயல்படத்தொடங்கும் அந்த விநாடியில்தான் ஆணவம் (Ego) என்பது பிறக்கிறது. அதுவே ஆணவத்தின் வேர். எல்லோருக்கும் பொதுவான அந்த மையத்தை தன் மையம் என்று உரிமை கொண்டாடத்தொடங்கும் இடம் ஆணவத்தின் பிறப்பிடம்.

இதை மகரிஷி அவர்கள் குறிப்பிடும்போது….
”தான் இறைநிலையிலிருந்து வந்தவன் என ஒரு மனிதன் நினைப்பது மிகச்சரியானதுதான்.   ஆனால் தன்னைப் போலவே சக மனிதனும் இறைநிலையிலிருந்து வந்தவன் என்பதை மறந்துவிடும்போதுதான் தன்முனைப்பு தலைதூக்குகிறது” என்பார்.

ஒரு இசையமைப்பாளர் அற்புதமான ஒரு பாடலுக்கு இசை அமைக்கிறார் என்று சொன்னால் அது அவரால் மட்டுமே செய்யப்பட்டதன்று.   அதற்கு இசைக் கருவியை வடிவமைத்தவன், இன்னும் பல்வேறு இசைக்கலைஞர்களின் உள்ளிட்ட பலரின் பங்களிப்பு உண்டு.   இந்த சார்பு நிலை விளங்கிவிடுமானால் அங்கு ஆணவத்திற்கு இடமில்லை.

இன்னும் ஆணவமற்ற நிலை ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியமா?  அது சாதாரண மனிதர்களுக்கு வாய்ப்பதில்லையா? சாதாரண மனிதன் ஆணவமற்று இருந்த தருணங்களே இல்லையா?  என்ற கேள்விக்கு விடைகாண்பதின் மூலம் ஆணவம் என்றால் என்ன என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ளலாம்.

ஒரு மனிதன் கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கத்தில் சஞ்சரிக்கும்போது அவன் ஆணவமற்ற நிலையில் பிரவேசிக்கிறான்.  ஆழ்ந்த தூக்கத்தில் மனம் என்பது இல்லை.  மனம் இல்லாத இடத்தில் ஆணவம் என்பதும் இல்லை.  மனம் செயல்படும்போது மட்டுமே ஆணவம் பிறக்கும்.   மனமற்ற நிலையில் ஆணவம் இல்லை.  ஆனால் ஆழ்ந்த தூக்கத்தில் விழிப்புணர்வு என்பதும் இல்லாமல் போகிறது.   ஆகையால் இறையோடு, இயற்கையோடு ஒன்றிய ஆணவமற்ற நிலையை அனுபவத்தில் உணர முடியாது போகிறது.

தூக்கத்திற்கு அடுத்தாற்போல காமம்.  எந்தவிதமான குற்ற உணர்வுமின்றி காமத்தில் ஈடுபடும்போது அதன் உச்சகட்டப் பரவசத்தில் “நான்” என்பதற்கான அனைத்து அடையாளங்களும் தொலைந்து போய் அத்வைத நிலையை தரிசிக்கிறோம்.  ஆனால் ஒரு சில விநாடிகளில் மீண்டும் “தொப்’ என்று ஆணவத்தில் விழுந்துவிடுகிறோம்.

அதைத் தவிர நமை மறந்து பூக்களை, சூர்யோதயத்தை, சூர்ய அஸ்தமனத்தை, பௌர்ணமி நிலாவை, தென்றல் காற்றை, மலையை, அருவியை இன்னும் இதுபோன்ற பல்வேறு இயற்கை அதிசயங்களை ரசிக்கும் போது நம் அடையாளங்கள் தொலைந்துபோய் இயற்கையோடு ஒன்றி விடுகிறோம்.   அப்போதெல்லாம் நாம் மனமற்ற தன்மையில் அதாவது ஆணவமற்ற தன்மையில் இயற்கையோடு இயற்கையாய் கலந்து முழுமையாய் இருக்கிறோம்.

ஒரு பூவை ரசித்துப் பார்த்து அதன் பெயர் போன்ற அடையாளங்களை மறந்து அதனோடு ஒன்று கலந்து நிற்கும் அந்தத் தருணம் ஆணவமற்ற நிலை.   “அட….. அந்தப் பூ எவ்வளவு அழகு” எனத் தோன்றிய அந்த மைக்ரோ விநாடியில் மனம் உள்ளே வந்துவிடுகிறது.  ஆணவம் துவங்கிவிடுகிறது.

திடீரென ஒரு அதிர்ச்சியை, ஆபத்தை சந்திக்கும்போது மனமற்ற நிலை வாய்க்கிறது.   அந்த சமயங்களில் நாம் ஆணவமின்றி அதாவது மனமின்றி இருக்கிறோம்.

இன்னும் எளிமையாய் ஒரு உதாரணம்.
உங்கள் இரு சக்கர வாகனத்தில் நீங்கள் பயணம் செய்துகொண்டிருக்கும்போது உங்களை கடந்து செல்லும் ஒரு பெண்ணின் சேலை சக்கரத்திற்குள் மாட்டிக்கொள்ளும் நிலையில் உள்ளதை நீங்கள் கவனிக்கிறீர்கள்.  அந்தப் பெண்மணிக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  ஆனால் உங்களை அறியாமல் உங்கள் வாகனத்தின் வேகத்தைக் கூட்டி அந்தப் பெண்ணை எச்சரிக்கிறீர்கள்.  

இந்தச் செயல் நடக்கும் அந்த நிமிடங்களில் உங்களை நீங்கள் கவனித்ததுண்டா?  அந்த நிமிடங்களில் உங்கள் பெயர், உங்கள் ஜாதி, மதம், அஸ்தஸ்து, பதவி, அதிகாரம் என நீங்கள் வெளியிலிருந்து சேர்த்துக்கொண்ட அடையாளங்கள் எதாவது உங்கள் மனதிலிருந்ததா?   அங்கு நீங்கள் இல்லை.   அந்தப் பெண்ணுக்கு நேரப்போகும் ஆபத்து குறித்து எச்சரிக்கும் உங்கள் செயல் மட்டுமே இருந்தது.

உண்மையில் அது உங்கள் செயல் இல்லை.  எங்கே நீங்கள் இல்லையோ…….அதாவது உங்கள் அடையாளங்கள் இல்லையோ……அதாவது உங்கள் மனம் இல்லையோ……அங்கே இறை உங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறது.   இப்போது அது இறையின் செயல்.   அது குறித்து அகங்காரம் கொள்ள ஏதுமேயில்லை.  இதை ஓஷோ…..

“When you are not there…. God will take possession of you” என்று கூறுகிறார்.

வள்ளலார் ஒரே இரவில் 1590 வரிகள் கொண்ட அகவலை ஒரே இரவில் எழுதி முடித்தார்.  அது அவருடைய செயல் அல்ல.   மனமற்ற நிலையில் இறை அவரை ஆட்கொண்டு…..அவரது உடலை ஒரு கருவியாக்கி….அகவலாக வெளிப்பட்டது.

இது போன்ற ஆணவமற்ற தருணங்கள் ஏதோ ஞானிகளுக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல.

எங்கெல்லாம் செய்பவன் மறைந்து செயல் மட்டுமே நடைபெறுகிறதோ அங்கெல்லாம் மனிதன் முழுமையாகிய இயற்கையோடு, இறையோடு ஒன்றுகிறான்.   ஒரு இசையமைப்பாளர் இசையில் ஒன்றும்போது அவரையும் அறியாமல் ஒரு அற்புதமான இசை வெளிப்படுவது அந்த ஆணவமற்ற தருணத்தில்தான்.  

ஒரு பேராசிரியர் தன்னை மறந்து மாணவர்களோடு ஒன்றி உரைநிகழ்த்தும்போது அந்த உரையில் அவரது தயாரிப்பில் இல்லாத பல அற்புதமான விஷயங்கள் வெளிப்படுகின்றன.  அது குறித்து பிற்பாடு அவருக்கே கூட ஆச்சர்யம் ஏற்படுவதுண்டு.   இவையெல்லாம் இறை நமை ஆட்கொண்ட ஆணவமற்ற தருணங்கள்.  

இன்னும் நடனமாடும்போது,  சிரிக்கும்போது என எந்தச் செயல்களில் எல்லாம் நாம் வெளியிலிருந்து ஏற்றுக்கொண்ட அடையாளங்களுக்கு வேலையில்லையோ அப்போதெல்லாம் நாம் ஆணவமற்ற தன்மையில்தான் வசிக்கிறோம்.

ஆனால் சாதாரண மனிதன் இதுபோன்ற ஆணவமற்ற தன்மையில் பிரவேசித்து இயற்கையோடு ஒன்றுபடுவது அரிதாகவே நிகழ்கிறது.   ஞானிகள் 24 மணி நேரமும் அதே தன்மையில்தான் வாழ்கின்றனர்.  இதுவே ஒரு ஞானிக்கும், சாதாரண மனிதனுக்கும் உள்ள வித்தியாசம்.  

வெளித் தேடலை நிறுத்தி மெல்ல மெல்ல ஆணவமற்ற தன்மையில் சஞ்சரிக்கும் நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இதையே உணர்வுகளை வாழுங்கள் என ஓஷோ கூறுகிறார்.   உணர்வுகளை வாழும்போது அந்த உணர்வாகவே மாறிவிடும்போது மனமற்ற நிலை சாத்தியமாகிறது.  ஒரு பௌர்ணமியன்று மொட்டைமாடியில் அமர்ந்து நிலாவை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும்போது அது “நிலா” என்ற பெயரும் கூட மறந்துபோய்,  நம்முடைய அடையாளங்கள் தொலைந்துபோய் அதனோடு ஒன்றிவிடக்கூடிய வாய்ப்பு அமையும்.

இங்கு அறிவு, மனம் என்பதற்கெல்லாம் இடமில்லை.   அது ஒரு உணர்வு அவ்வளவே.   எண்ணங்களில் தானாக எழுந்து அலையும் எண்ணங்கள் என்பது உண்டு.  அதேபோல நாமாய் விரும்பி இயக்கும் எண்ணங்கள் என்பதும் உண்டு.   உதாரணமாய் இறைத்துகள்பற்றி, சுத்தவெளி பற்றி நீங்கள் எண்ண ஆரம்பிக்கிறீர்கள்.   ஆழமாய் எண்ணுகிறீர்கள்.   இது தானாக எழுந்து அலையும் எண்ணம் அல்ல.  அதனால் இது சிந்தனை என்ற சிறப்புப் பெயரைப் பெறுகிறது.

 சிந்தனையாய் இருந்தாலும் எண்ணம் எண்ணம்தான்.   எங்கு எண்ணம் இருக்கிறதோ அங்கு மனம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.   இதில் அறிவு, மனம் என்பதெல்லாம் கிடையாது.

‘4 மணிக்கு எழு’ என்று சொல்வது அறிவு.  ‘இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு’ என்று சொல்வது மனம்.   இப்போது உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உண்டு.  மனம் சொன்னபடி கொஞ்ச நேரம் தூங்கலாம்.  அல்லது அறிவு சொன்னபடி எழுந்துகொள்ளலாம்.   இப்போது நீங்கள் எழுந்து கொண்டீர்களானால் உங்களைப் பற்றி உங்களுக்கே ஒரு பெருமை உண்டாகும்.   அறிவு சொன்னதை நீங்கள் கேட்டுவிட்டதற்காக உங்களுக்கு ஒரு நிறைவு ஏற்படும்.  ஆனால் அதுவும் ஒரு விதமான ஆணவமே என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளுதல் சற்றுக் கடினம்தான்.

அதிகாலையில் துயிலெழு என்று காலங்காலமாய் உங்களுக்குப் போதனைகள் நிகழ்ந்திருக்கின்றன.  அப்படித் துயில்எழும்போது உங்கள் தன்முனைப்பு திருப்திப் பட்டுக்கொள்கின்றது.   தவறும்போது குற்றமனப்பான்மை உங்களை ஆக்ரமித்துக் கொள்கிறது.   ஆனால் இரண்டுமே ஆணவத்தின் வெளிப்பாடுகளே.   ஏனெனில் இரண்டுமே வெளியிலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் நிகழ்பவை.

இரண்டுமே மனதிலிருந்து நிகழ்பவை.   ஒழுக்கக் கருத்துக்கள், அற நெறி சிந்தனைகளால் உருவேற்றப்பட்ட மனதின் ஒரு பகுதியை நீங்கள் அறிவென்று கருதிக் கொண்டிருக்கிறீர்கள்.  அதன் படி செயல்பட்டுவிட்டால் உவகை கொண்டு பெருமையடைகிறீர்கள்.   இது ஒரு நேர்மறையான ஆணவம். அவ்வளவுதானேயொழிய ஆணவமற்ற நிலையல்ல.  ஆணவமற்ற நிலை என்பது மனமில்லாதபோது நிகழ்வது.   ஆதலால் சிந்தனையை அறிவு என்றும் ஆணவமற்ற நிலை என்பதும் கருதிக்கொள்வது தவறு.

ஆனால் அறிவு என்று மகரிஷி குறிப்பிடுவது முற்றிலும் வேறானது.  அது பேரறிவு.  அறிவே தெய்வம் என்று குறிப்பிடப்படுவது நீங்கள் வெளியிலிருந்து சேர்த்துக்கொண்ட கொள்கைகளை, கோட்பாடுகளை, விஷய ஞானங்களை அல்ல.   அது முற்றிலும் வேறுபட்ட பரிணாமம் உடையது.  

ஒரு தேங்காயை கீழே போட்டால் உடைந்துவிடுகிறது.   ஆனால் 100 அடி உயரமுள்ள தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் விழும்போது அது உடைவதில்லை.   அது உடையக்கூடாது என்பதற்காய் தென்னை மரத்தின் அறிவு அற்புதமாய் செயல்பட்டு அதற்கு மட்டையைத் தருகிறது.   சாதாரண மட்டையல்ல.   தண்ணீரில் விழுந்தாலும் கூட தண்ணீர் உட்செல்லாதவாறு அமைக்கப்பட்ட வாட்டர் ப்ரூப் மட்டை.  

மட்டையை உரித்து தேங்காயை உடைக்கும் போது அது எளிதாக உடைபடும் விதமாக அதில் மூன்று கோடுகள் உள்ளன.   அந்தக் கோட்டில் அடித்தால் சரிபாதியாக உடைகிறது.  இதுவெல்லாம் தென்னைமரத்தின் அறிவு.   மனிதனில் உண்ட உணவை ஏழு தாதுக்களாக மாற்றும் விதமாய், இன்னும் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தும் விதமாய் அறிவு செயல்படுகிறது.   அதையே பேரறிவு.  அந்த அறிவே தெய்வம் என்றுதான் ஞானிகள் குறிப்பிட்டனரேயன்றி நாம் வெளியிலிருந்து சேர்க்கும் விஷய ஞானங்களை அறிவு என்று கருதிக்கொள்வது மடமை.

இந்த அறிவை உணர்ந்து அதனோடு ஒன்றி ஆச்சர்யத்தில் திளைத்துப் போய் நன்றி உணர்வு நம்மிலிருந்து அபரிமிதமாய் பெருகுவதே ஆணவமற்ற நிலை.

சரி.  ஆணவம் முற்றிலும் தேவையற்றதா?

அப்படியல்ல.   புறவாழ்க்கையை சிக்கலின்றி நடத்திக் கொள்ள வெகு நிச்சயமாய் இந்த ஆணவம் தேவை.   நமது பெயர், தொழில் இவை குறித்த நினைவு இருந்தால்தான் இங்கு வாழ்க்கை எளிதாகும்.

ஒரு டாக்டர் தன் மருத்துவ சேவையைச் செய்யும்போது “டாக்டர்” என்ற நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டால்தான் அவரால் சரியான முறையில் மருத்துவம் பார்க்க இயலும்.  

அது போல ஒவ்வொருவரும் தன் தொழிலுக்கு ஏற்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ளும்போதுதான் இங்கு செயல்கள் நடக்கும்.   ராமன் என் பெயருடைய ஒருவர் தன் பெயர் இது என்ற அடையாளத்தை வைத்துக்கொள்ளும்போதுதான் புற வாழ்க்கை குழப்பமில்லாமல் நடக்கும்.   ஆக புற வாழ்க்கைக்கு இந்த ஈகோ என்ற ஆணவம் அவசியம்தான்.

அக வாழ்க்கையைப் பொறுத்த வரையில் நமக்கு எந்த அடையாளங்களும் தேவையில்லை.   நாம் ஒரு விழிப்புணர்வு.  இந்த முழுமையின் ஒரு அங்கம் அவ்வளவே.

ஒரு ஞானியும் கூட தன் சிஷ்யர்களிடையே சொற்பொழிவு நடத்தும்போது ஒரு ‘குரு’ என்கிற நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டால்தான் அந்தச் சொற்பொழிவை நிகழ்த்த இயலும்.   ஆகையால் ஆணவம் குறித்து குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.  

புற வாழ்க்கைக்கான செயல்களில் ஈடுபடும்போது நீங்கள் வெளியிலிருந்து சேகரித்துக் கொண்ட விசய ஞானங்களைப் பயன்படுத்தித்தான் அச்செயல்களைச் செய்ய இயலும்.   அப்போது மனம் என்ற ஒன்று கண்டிப்பாய் இயங்கித்தான் ஆக வேண்டும். ஆனால் இப்போது மனம் ஒரு கருவி மட்டுமே.   அதை வேண்டியபோது மட்டுமே உபயோகிக்கிறோம்.   ஆகையால் ஆணவம் நம் விழிப்புணர்வில் நிகழ்கிறது.

இது போன்ற விழிப்புணர்வு நிலையில் இருந்துதான் மகரிஷி போன்ற ஞானிகள்……

“நான் ஒரு சாம்யம் வகுத்திருக்கிறேன்.   நான் ஒரு தியானப் பயிற்சியை வடிவமைத்திருக்கிறேன்”  எனக் கூறுகிறார்கள்.

இங்கு உபயோகப்படுத்தப் பட்ட “நான்” என்பது அவர்களின் விழிப்புணர்வில் இருந்து வெளிப்படுவது.   அது எளிமையாய் புரிந்துகொள்வதற்காக மட்டுமே.  அதில் வேறு எந்த உட்கருத்தும் இல்லை.  
ஏனெனில்….

“சுத்தவெளி ஒரு பயிற்சியை வடிவமைத்தது.   சுத்தவெளி வருகிறது”

என்று சொன்னால் புற வாழ்க்கையில் குழப்பங்களே மிஞ்சும்.

இந்தக் குழப்பங்களை தவிர்க்கும் ஒரே நோக்கத்தில்தான் ஞானிகள் “நான்” என்ற வார்த்தையைத் தங்கள் விழிப்புணர்விலிருந்து கையாளுகிறார்கள்.

இவ்வாறான முறையில் ஆணவம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டால் பிறகு ஆணவத்தைக் கடந்துவருதல் அதாவது மனதைக் கடந்து செல்லுதல் எளிதாகும்.

ஐயமிருப்பின் அல்லது முரண்பாடுகள் இருப்பின் தயக்கமின்றி சுட்டிக்காட்டலாம்.

நன்றி

#ராகவேந்தர்ஈகோ என்றால் என்ன?

என்னளவில் நான் ஓஷோவிடமிருந்து கற்று உணர்ந்ததை என்னுடைய வார்த்தைகளில் தர முயற்சிக்கிறேன்.

இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் ஒரு சார்பு நிலையிலேயே அதாவது ஒன்றையொன்று சார்ந்தே இயங்கிக்கொண்டிருக்கிறது.

இதை பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றல் என்று மகரிஷி குறிப்பிடுகிறார்.

ஈகோவைப் பற்றிப் புரிந்துகொள்ள இந்த சார்பு நிலையைப் பற்றி சற்று ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

பல்வேறு உதாரணங்கள் மூலம் இந்த சார்பு நிலையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

இந்தியாவில் ஒரு காலத்தில் பஞ்சம் நேர்ந்தது.  பஞ்சத்திற்கு என்ன காரணம் என விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.  அந்தக் காலத்தில் அமெரிக்கர்கள் தவளை சூப்பை விரும்பி அருந்துவர்.  ஆதலால் இந்தியாவில் தவளை ஏற்றுமதி வியாபாரம் மிகவும் செழிப்பாக நடைபெற்று வந்தது.

பஞ்சத்தின் காரணத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் தவளை ஏற்றுமதி வியாபாரம்தான் பஞ்சத்திற்குக் காரணம் எனக் கண்டறிந்தனர்.

இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதைப் போல சம்பந்தமில்லாமல் இருப்பதாகத் தோன்றும்.  தவளை ஏற்றுமதிக்கும், பஞ்சத்திற்கும் என்ன சம்பந்தம்?

சம்பந்தம் உண்டு.   பயிரினங்களை அழிக்கும் பூச்சியினங்கள்தான்  தவளையின் உணவு.  பூச்சியினங்கள் பெருகாமல் அதன் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தவளைக்கு இயற்கை கொடுத்த வேலை.  தவளை இனங்கள் அருகி விட்டால் பூச்சியினங்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
பயிரினங்கள் அழிக்கப்படும்.  பஞ்சம் நேரும்.

மற்றொரு காலத்தில் இந்தியாவில் வெறிநாய்க்கடி (Rabies)  வைரஸ் அதிகமாகப் பரவியது.   இதன் காரணத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு விதமான கழுகு இனங்களை மனிதன் வேட்டையாடிக் கொன்றதுதான் ரேபிஸ் வைரஸ் பரவக் காரணம் எனக் கண்டறிந்தனர்.

கழுகு இனங்கள் அழிந்ததற்கும் ரேபிஸ் வைரஸ் பரவுவதற்கும் என்ன தொடர்பு?  ரேபிஸ் வைரஸ் தாக்கிய நாய், பன்றி போன்ற விலங்குகள் இறந்து கிடக்கையில் அதன் உடலிலுள்ள ரேபிஸ் வைரஸ் இறப்பதில்லை.   அந்த உடல்களை நாம் சரியான முறையில் அப்புறப்படுத்துவதில்லை.  அதனால் அந்தப் பகுதியில் வரும் மனிதர்களையும், பிற விலங்குகளையும் ரேபிஸ் வைரஸ் தொற்றிக்கொள்கிறது.

கழுகு இனங்கள் இந்த இறந்த உடல்களை உண்டு வாழ்பவை.  ரேபிஸ் வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் அவைகளுக்கு இயற்கையாகவே உண்டு.  அந்த கழுகு இனங்களை வேட்டையாடி அழித்துவிட்டதால் ரேபிஸ் வைரஸ் தாக்கி இறந்த உடல்களை உண்டு அழிப்பதற்கு யாருமில்லை.  எனவே வெறி நாய்க் கடி நோய் பரவியது.

அதேபோல தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் நாய், பூனை போன்ற விலங்குகள் உடல் சிதறி இறந்துகிடக்கின்றன.  அவற்றையெல்லாம் நாம் முறையாக அப்புறப்படுத்துவதில்லை.  அவை அப்படியே இருந்தால் வைரஸ் கிருமிகள் பரவி தொற்று நோய் ஏற்படும்.  ஆனால் அந்த உடல்களை உண்டு சுத்தப்படுத்துவது காகம்.  அதனால்தான் அது ஆகாயத் தொட்டி என்றழைக்கப்படுகிறது.  காகம் மட்டும் இல்லையானால் நாம் இங்கு ஆரோக்கியமானதொரு வாழ்க்கையை வாழ்தல் சாத்தியமே இல்லை.

ஒரு சாரைப் பாம்பு ஒரு நாளில் மூன்று எலிகளை உணவாகக் கொள்கிறது.  இதனால் எலிகளின் எண்ணிக்கை கட்டுப்படுகிறது.   பாம்புகளே இல்லையானால் எலிகளின் எண்ணிக்கை பெருகி எந்த தானியங்கிடங்கிலும் தானியங்களை இருப்பு வைக்க இயலாது போகும்.

இப்படி ஆயிரமாயிரம் உதாரணங்களைக் கூறலாம்.

அமேசான் காடுகளில் ஒரு புலி, மானை வேட்டையாடுவதற்கும் நம் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.  புலி மானை வேட்டையாடவில்லையெனில் மானின் எண்ணிக்கை பெருகும்.  மானின் எண்ணிக்கை பெருகினால் தாவரங்களின் எண்ணிக்கை குறையும்.  தாவரங்களின் எண்ணிக்கை குறைந்தால் மழை குறையும்.   பயிர் விளையாது.   பஞ்சம் நேரும்.

தசாவதாரம் திரைப்படத்தில்….ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பில் ஏற்படும் அதிர்வுக்கும் பூகம்பத்திற்கும் தொடர்பு உண்டு என்ற ஒரு வசனம் வரும். இதை கேயாஸ் (Chaos) தியரி என்கிறோம்.  ஆக இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்து இயக்கங்களும் ஒன்றையொன்று சார்ந்தே நடைபெறுகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

நம் முன்னோர்கள் இதை உணர்ந்திருந்தனர்.  இதை அனுபவமாக உணரும்போது அதன் விளைவாக நம்மிலிருந்து நன்றியுணர்வு ஊற்றெடுக்கும்.  அந்த நன்றியுணர்வினால்தான் அவர்கள் மலையை, மரங்களை, பஞ்சபூதங்களை, நாயை, பன்றியை, பாம்பை என அனைத்தையும் வழிபட்டனர்.  இந்த வழிபாடுகள் உச்சகட்ட நன்றியுணர்வின் வெளிப்பாடு.

மனிதனுக்கு என்று தனியான மையம் இல்லை.  இந்தப் பிரபஞ்சத்திற்கு என்று ஒரு மையம் உண்டு.  அதை பிரபஞ்ச மையம் என்கிறார் ஓஷோ.  முன்னோர்கள் அதை தம்மா, தாவோ என்று அழைத்தனர்.  இந்த பிரபஞ்ச மையமே ஒவ்வொரு மனிதனுக்கும் மையமாக அமைந்துள்ளது. ஒரு அமைதியான ஏரியில் ஒரு கல்லை எறிந்தால் கல்லை எறிந்த மையத்திலிருந்து வட்ட வடிவில் அலைகள் பிறக்கும்.  நூற்றுக்கணக்கான வட்ட வடிவ அலைகள் பிறந்து கொண்டேயிருக்கும்.  அத்துணை வட்டங்களுக்கும் மையம் ஒன்றுதான்.  தனித்தனியான மையங்கள் என்பது கிடையாது.   ஒவ்வொரு தனி வட்டமும் தன் மையம் கல் விழுந்த இடம்தான் என்று உரிமை கொண்டாடலாம்.   ஒருவிதத்தில் அது சரியும் கூட.   ஆனால் அந்த மையம் எல்லா வட்டங்களுக்கும் பொதுவானது.   எந்தத் தனி வட்டமும் அந்த மையத்தை தனது என்று உரிமை பாராட்ட முடியாது.

இதை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் சூரியன், சந்திரன் போன்றவற்றை எடுத்துக்கொள்வோம்.  இந்த பூமி வாழ் உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் அவை பொதுவானவை.  தனிப்பட்ட மனிதன் சந்திரனைப் பார்த்து அது தன்னுடையது என உரிமை கொண்டாடலாம்.  ஆனால் அது ஒரு கற்பனையே.  அது பூமிவாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவானது என்பதே உண்மை.

இதை மகரிஷி அவர்கள் ஒவ்வொரு உயிரினத்தின் கருமையமும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளதோடு மட்டுமில்லாமல் அனைத்துக் கருமையங்களும் பிரபஞ்சத்தின் கருமையத்தோடு இணைந்துள்ளன என்கிறார்.

ஆக மனிதன் முழுமையான இயற்கையின் ஒரு அங்கம். அவன் தனித்து இயங்குபவனல்ல. அவனால் தனித்து இயங்க இயலாது.

ஆனால் அவன் தன்னை முழுமையிலிருந்து பிரித்துக் கொண்டு, தனியாகச்  செயல்படத்தொடங்கும் அந்த விநாடியில்தான் ஆணவம் (Ego) என்பது பிறக்கிறது. அதுவே ஆணவத்தின் வேர். எல்லோருக்கும் பொதுவான அந்த மையத்தை தன் மையம் என்று உரிமை கொண்டாடத்தொடங்கும் இடம் ஆணவத்தின் பிறப்பிடம்.

இதை மகரிஷி அவர்கள் குறிப்பிடும்போது….
”தான் இறைநிலையிலிருந்து வந்தவன் என ஒரு மனிதன் நினைப்பது மிகச்சரியானதுதான்.   ஆனால் தன்னைப் போலவே சக மனிதனும் இறைநிலையிலிருந்து வந்தவன் என்பதை மறந்துவிடும்போதுதான் தன்முனைப்பு தலைதூக்குகிறது” என்பார்.

ஒரு இசையமைப்பாளர் அற்புதமான ஒரு பாடலுக்கு இசை அமைக்கிறார் என்று சொன்னால் அது அவரால் மட்டுமே செய்யப்பட்டதன்று.   அதற்கு இசைக் கருவியை வடிவமைத்தவன், இன்னும் பல்வேறு இசைக்கலைஞர்களின் உள்ளிட்ட பலரின் பங்களிப்பு உண்டு.   இந்த சார்பு நிலை விளங்கிவிடுமானால் அங்கு ஆணவத்திற்கு இடமில்லை.

இன்னும் ஆணவமற்ற நிலை ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியமா?  அது சாதாரண மனிதர்களுக்கு வாய்ப்பதில்லையா? சாதாரண மனிதன் ஆணவமற்று இருந்த தருணங்களே இல்லையா?  என்ற கேள்விக்கு விடைகாண்பதின் மூலம் ஆணவம் என்றால் என்ன என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ளலாம்.

ஒரு மனிதன் கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கத்தில் சஞ்சரிக்கும்போது அவன் ஆணவமற்ற நிலையில் பிரவேசிக்கிறான்.  ஆழ்ந்த தூக்கத்தில் மனம் என்பது இல்லை.  மனம் இல்லாத இடத்தில் ஆணவம் என்பதும் இல்லை.  மனம் செயல்படும்போது மட்டுமே ஆணவம் பிறக்கும்.   மனமற்ற நிலையில் ஆணவம் இல்லை.  ஆனால் ஆழ்ந்த தூக்கத்தில் விழிப்புணர்வு என்பதும் இல்லாமல் போகிறது.   ஆகையால் இறையோடு, இயற்கையோடு ஒன்றிய ஆணவமற்ற நிலையை அனுபவத்தில் உணர முடியாது போகிறது.

தூக்கத்திற்கு அடுத்தாற்போல காமம்.  எந்தவிதமான குற்ற உணர்வுமின்றி காமத்தில் ஈடுபடும்போது அதன் உச்சகட்டப் பரவசத்தில் “நான்” என்பதற்கான அனைத்து அடையாளங்களும் தொலைந்து போய் அத்வைத நிலையை தரிசிக்கிறோம்.  ஆனால் ஒரு சில விநாடிகளில் மீண்டும் “தொப்’ என்று ஆணவத்தில் விழுந்துவிடுகிறோம்.

அதைத் தவிர நமை மறந்து பூக்களை, சூர்யோதயத்தை, சூர்ய அஸ்தமனத்தை, பௌர்ணமி நிலாவை, தென்றல் காற்றை, மலையை, அருவியை இன்னும் இதுபோன்ற பல்வேறு இயற்கை அதிசயங்களை ரசிக்கும் போது நம் அடையாளங்கள் தொலைந்துபோய் இயற்கையோடு ஒன்றி விடுகிறோம்.   அப்போதெல்லாம் நாம் மனமற்ற தன்மையில் அதாவது ஆணவமற்ற தன்மையில் இயற்கையோடு இயற்கையாய் கலந்து முழுமையாய் இருக்கிறோம்.

ஒரு பூவை ரசித்துப் பார்த்து அதன் பெயர் போன்ற அடையாளங்களை மறந்து அதனோடு ஒன்று கலந்து நிற்கும் அந்தத் தருணம் ஆணவமற்ற நிலை.   “அட….. அந்தப் பூ எவ்வளவு அழகு” எனத் தோன்றிய அந்த மைக்ரோ விநாடியில் மனம் உள்ளே வந்துவிடுகிறது.  ஆணவம் துவங்கிவிடுகிறது.

திடீரென ஒரு அதிர்ச்சியை, ஆபத்தை சந்திக்கும்போது மனமற்ற நிலை வாய்க்கிறது.   அந்த சமயங்களில் நாம் ஆணவமின்றி அதாவது மனமின்றி இருக்கிறோம்.

இன்னும் எளிமையாய் ஒரு உதாரணம்.
உங்கள் இரு சக்கர வாகனத்தில் நீங்கள் பயணம் செய்துகொண்டிருக்கும்போது உங்களை கடந்து செல்லும் ஒரு பெண்ணின் சேலை சக்கரத்திற்குள் மாட்டிக்கொள்ளும் நிலையில் உள்ளதை நீங்கள் கவனிக்கிறீர்கள்.  அந்தப் பெண்மணிக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  ஆனால் உங்களை அறியாமல் உங்கள் வாகனத்தின் வேகத்தைக் கூட்டி அந்தப் பெண்ணை எச்சரிக்கிறீர்கள்.  

இந்தச் செயல் நடக்கும் அந்த நிமிடங்களில் உங்களை நீங்கள் கவனித்ததுண்டா?  அந்த நிமிடங்களில் உங்கள் பெயர், உங்கள் ஜாதி, மதம், அஸ்தஸ்து, பதவி, அதிகாரம் என நீங்கள் வெளியிலிருந்து சேர்த்துக்கொண்ட அடையாளங்கள் எதாவது உங்கள் மனதிலிருந்ததா?   அங்கு நீங்கள் இல்லை.   அந்தப் பெண்ணுக்கு நேரப்போகும் ஆபத்து குறித்து எச்சரிக்கும் உங்கள் செயல் மட்டுமே இருந்தது.

உண்மையில் அது உங்கள் செயல் இல்லை.  எங்கே நீங்கள் இல்லையோ…….அதாவது உங்கள் அடையாளங்கள் இல்லையோ……அதாவது உங்கள் மனம் இல்லையோ……அங்கே இறை உங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறது.   இப்போது அது இறையின் செயல்.   அது குறித்து அகங்காரம் கொள்ள ஏதுமேயில்லை.  இதை ஓஷோ…..

“When you are not there…. God will take possession of you” என்று கூறுகிறார்.

வள்ளலார் ஒரே இரவில் 1590 வரிகள் கொண்ட அகவலை ஒரே இரவில் எழுதி முடித்தார்.  அது அவருடைய செயல் அல்ல.   மனமற்ற நிலையில் இறை அவரை ஆட்கொண்டு…..அவரது உடலை ஒரு கருவியாக்கி….அகவலாக வெளிப்பட்டது.

இது போன்ற ஆணவமற்ற தருணங்கள் ஏதோ ஞானிகளுக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல.

எங்கெல்லாம் செய்பவன் மறைந்து செயல் மட்டுமே நடைபெறுகிறதோ அங்கெல்லாம் மனிதன் முழுமையாகிய இயற்கையோடு, இறையோடு ஒன்றுகிறான்.   ஒரு இசையமைப்பாளர் இசையில் ஒன்றும்போது அவரையும் அறியாமல் ஒரு அற்புதமான இசை வெளிப்படுவது அந்த ஆணவமற்ற தருணத்தில்தான்.  

ஒரு பேராசிரியர் தன்னை மறந்து மாணவர்களோடு ஒன்றி உரைநிகழ்த்தும்போது அந்த உரையில் அவரது தயாரிப்பில் இல்லாத பல அற்புதமான விஷயங்கள் வெளிப்படுகின்றன.  அது குறித்து பிற்பாடு அவருக்கே கூட ஆச்சர்யம் ஏற்படுவதுண்டு.   இவையெல்லாம் இறை நமை ஆட்கொண்ட ஆணவமற்ற தருணங்கள்.  

இன்னும் நடனமாடும்போது,  சிரிக்கும்போது என எந்தச் செயல்களில் எல்லாம் நாம் வெளியிலிருந்து ஏற்றுக்கொண்ட அடையாளங்களுக்கு வேலையில்லையோ அப்போதெல்லாம் நாம் ஆணவமற்ற தன்மையில்தான் வசிக்கிறோம்.

ஆனால் சாதாரண மனிதன் இதுபோன்ற ஆணவமற்ற தன்மையில் பிரவேசித்து இயற்கையோடு ஒன்றுபடுவது அரிதாகவே நிகழ்கிறது.   ஞானிகள் 24 மணி நேரமும் அதே தன்மையில்தான் வாழ்கின்றனர்.  இதுவே ஒரு ஞானிக்கும், சாதாரண மனிதனுக்கும் உள்ள வித்தியாசம்.  

வெளித் தேடலை நிறுத்தி மெல்ல மெல்ல ஆணவமற்ற தன்மையில் சஞ்சரிக்கும் நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இதையே உணர்வுகளை வாழுங்கள் என ஓஷோ கூறுகிறார்.   உணர்வுகளை வாழும்போது அந்த உணர்வாகவே மாறிவிடும்போது மனமற்ற நிலை சாத்தியமாகிறது.  ஒரு பௌர்ணமியன்று மொட்டைமாடியில் அமர்ந்து நிலாவை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும்போது அது “நிலா” என்ற பெயரும் கூட மறந்துபோய்,  நம்முடைய அடையாளங்கள் தொலைந்துபோய் அதனோடு ஒன்றிவிடக்கூடிய வாய்ப்பு அமையும்.

இங்கு அறிவு, மனம் என்பதற்கெல்லாம் இடமில்லை.   அது ஒரு உணர்வு அவ்வளவே.   எண்ணங்களில் தானாக எழுந்து அலையும் எண்ணங்கள் என்பது உண்டு.  அதேபோல நாமாய் விரும்பி இயக்கும் எண்ணங்கள் என்பதும் உண்டு.   உதாரணமாய் இறைத்துகள்பற்றி, சுத்தவெளி பற்றி நீங்கள் எண்ண ஆரம்பிக்கிறீர்கள்.   ஆழமாய் எண்ணுகிறீர்கள்.   இது தானாக எழுந்து அலையும் எண்ணம் அல்ல.  அதனால் இது சிந்தனை என்ற சிறப்புப் பெயரைப் பெறுகிறது.

 சிந்தனையாய் இருந்தாலும் எண்ணம் எண்ணம்தான்.   எங்கு எண்ணம் இருக்கிறதோ அங்கு மனம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.   இதில் அறிவு, மனம் என்பதெல்லாம் கிடையாது.

‘4 மணிக்கு எழு’ என்று சொல்வது அறிவு.  ‘இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு’ என்று சொல்வது மனம்.   இப்போது உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உண்டு.  மனம் சொன்னபடி கொஞ்ச நேரம் தூங்கலாம்.  அல்லது அறிவு சொன்னபடி எழுந்துகொள்ளலாம்.   இப்போது நீங்கள் எழுந்து கொண்டீர்களானால் உங்களைப் பற்றி உங்களுக்கே ஒரு பெருமை உண்டாகும்.   அறிவு சொன்னதை நீங்கள் கேட்டுவிட்டதற்காக உங்களுக்கு ஒரு நிறைவு ஏற்படும்.  ஆனால் அதுவும் ஒரு விதமான ஆணவமே என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளுதல் சற்றுக் கடினம்தான்.

அதிகாலையில் துயிலெழு என்று காலங்காலமாய் உங்களுக்குப் போதனைகள் நிகழ்ந்திருக்கின்றன.  அப்படித் துயில்எழும்போது உங்கள் தன்முனைப்பு திருப்திப் பட்டுக்கொள்கின்றது.   தவறும்போது குற்றமனப்பான்மை உங்களை ஆக்ரமித்துக் கொள்கிறது.   ஆனால் இரண்டுமே ஆணவத்தின் வெளிப்பாடுகளே.   ஏனெனில் இரண்டுமே வெளியிலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் நிகழ்பவை.

இரண்டுமே மனதிலிருந்து நிகழ்பவை.   ஒழுக்கக் கருத்துக்கள், அற நெறி சிந்தனைகளால் உருவேற்றப்பட்ட மனதின் ஒரு பகுதியை நீங்கள் அறிவென்று கருதிக் கொண்டிருக்கிறீர்கள்.  அதன் படி செயல்பட்டுவிட்டால் உவகை கொண்டு பெருமையடைகிறீர்கள்.   இது ஒரு நேர்மறையான ஆணவம். அவ்வளவுதானேயொழிய ஆணவமற்ற நிலையல்ல.  ஆணவமற்ற நிலை என்பது மனமில்லாதபோது நிகழ்வது.   ஆதலால் சிந்தனையை அறிவு என்றும் ஆணவமற்ற நிலை என்பதும் கருதிக்கொள்வது தவறு.

ஆனால் அறிவு என்று மகரிஷி குறிப்பிடுவது முற்றிலும் வேறானது.  அது பேரறிவு.  அறிவே தெய்வம் என்று குறிப்பிடப்படுவது நீங்கள் வெளியிலிருந்து சேர்த்துக்கொண்ட கொள்கைகளை, கோட்பாடுகளை, விஷய ஞானங்களை அல்ல.   அது முற்றிலும் வேறுபட்ட பரிணாமம் உடையது.  

ஒரு தேங்காயை கீழே போட்டால் உடைந்துவிடுகிறது.   ஆனால் 100 அடி உயரமுள்ள தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் விழும்போது அது உடைவதில்லை.   அது உடையக்கூடாது என்பதற்காய் தென்னை மரத்தின் அறிவு அற்புதமாய் செயல்பட்டு அதற்கு மட்டையைத் தருகிறது.   சாதாரண மட்டையல்ல.   தண்ணீரில் விழுந்தாலும் கூட தண்ணீர் உட்செல்லாதவாறு அமைக்கப்பட்ட வாட்டர் ப்ரூப் மட்டை.  

மட்டையை உரித்து தேங்காயை உடைக்கும் போது அது எளிதாக உடைபடும் விதமாக அதில் மூன்று கோடுகள் உள்ளன.   அந்தக் கோட்டில் அடித்தால் சரிபாதியாக உடைகிறது.  இதுவெல்லாம் தென்னைமரத்தின் அறிவு.   மனிதனில் உண்ட உணவை ஏழு தாதுக்களாக மாற்றும் விதமாய், இன்னும் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தும் விதமாய் அறிவு செயல்படுகிறது.   அதையே பேரறிவு.  அந்த அறிவே தெய்வம் என்றுதான் ஞானிகள் குறிப்பிட்டனரேயன்றி நாம் வெளியிலிருந்து சேர்க்கும் விஷய ஞானங்களை அறிவு என்று கருதிக்கொள்வது மடமை.

இந்த அறிவை உணர்ந்து அதனோடு ஒன்றி ஆச்சர்யத்தில் திளைத்துப் போய் நன்றி உணர்வு நம்மிலிருந்து அபரிமிதமாய் பெருகுவதே ஆணவமற்ற நிலை.

சரி.  ஆணவம் முற்றிலும் தேவையற்றதா?

அப்படியல்ல.   புறவாழ்க்கையை சிக்கலின்றி நடத்திக் கொள்ள வெகு நிச்சயமாய் இந்த ஆணவம் தேவை.   நமது பெயர், தொழில் இவை குறித்த நினைவு இருந்தால்தான் இங்கு வாழ்க்கை எளிதாகும்.

ஒரு டாக்டர் தன் மருத்துவ சேவையைச் செய்யும்போது “டாக்டர்” என்ற நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டால்தான் அவரால் சரியான முறையில் மருத்துவம் பார்க்க இயலும்.  

அது போல ஒவ்வொருவரும் தன் தொழிலுக்கு ஏற்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ளும்போதுதான் இங்கு செயல்கள் நடக்கும்.   ராமன் என் பெயருடைய ஒருவர் தன் பெயர் இது என்ற அடையாளத்தை வைத்துக்கொள்ளும்போதுதான் புற வாழ்க்கை குழப்பமில்லாமல் நடக்கும்.   ஆக புற வாழ்க்கைக்கு இந்த ஈகோ என்ற ஆணவம் அவசியம்தான்.

அக வாழ்க்கையைப் பொறுத்த வரையில் நமக்கு எந்த அடையாளங்களும் தேவையில்லை.   நாம் ஒரு விழிப்புணர்வு.  இந்த முழுமையின் ஒரு அங்கம் அவ்வளவே.

ஒரு ஞானியும் கூட தன் சிஷ்யர்களிடையே சொற்பொழிவு நடத்தும்போது ஒரு ‘குரு’ என்கிற நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டால்தான் அந்தச் சொற்பொழிவை நிகழ்த்த இயலும்.   ஆகையால் ஆணவம் குறித்து குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.  

புற வாழ்க்கைக்கான செயல்களில் ஈடுபடும்போது நீங்கள் வெளியிலிருந்து சேகரித்துக் கொண்ட விசய ஞானங்களைப் பயன்படுத்தித்தான் அச்செயல்களைச் செய்ய இயலும்.   அப்போது மனம் என்ற ஒன்று கண்டிப்பாய் இயங்கித்தான் ஆக வேண்டும். ஆனால் இப்போது மனம் ஒரு கருவி மட்டுமே.   அதை வேண்டியபோது மட்டுமே உபயோகிக்கிறோம்.   ஆகையால் ஆணவம் நம் விழிப்புணர்வில் நிகழ்கிறது.

இது போன்ற விழிப்புணர்வு நிலையில் இருந்துதான் மகரிஷி போன்ற ஞானிகள்……

“நான் ஒரு சாம்யம் வகுத்திருக்கிறேன்.   நான் ஒரு தியானப் பயிற்சியை வடிவமைத்திருக்கிறேன்”  எனக் கூறுகிறார்கள்.

இங்கு உபயோகப்படுத்தப் பட்ட “நான்” என்பது அவர்களின் விழிப்புணர்வில் இருந்து வெளிப்படுவது.   அது எளிமையாய் புரிந்துகொள்வதற்காக மட்டுமே.  அதில் வேறு எந்த உட்கருத்தும் இல்லை.  
ஏனெனில்….

“சுத்தவெளி ஒரு பயிற்சியை வடிவமைத்தது.   சுத்தவெளி வருகிறது”

என்று சொன்னால் புற வாழ்க்கையில் குழப்பங்களே மிஞ்சும்.

இந்தக் குழப்பங்களை தவிர்க்கும் ஒரே நோக்கத்தில்தான் ஞானிகள் “நான்” என்ற வார்த்தையைத் தங்கள் விழிப்புணர்விலிருந்து கையாளுகிறார்கள்.

இவ்வாறான முறையில் ஆணவம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டால் பிறகு ஆணவத்தைக் கடந்துவருதல் அதாவது மனதைக் கடந்து செல்லுதல் எளிதாகும்.

ஐயமிருப்பின் அல்லது முரண்பாடுகள் இருப்பின் தயக்கமின்றி சுட்டிக்காட்டலாம்.